Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணி சுவீகரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95.jpg

புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணி சுவீகரிப்பு!

புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன.

14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள உரிமையாளர்களின் விபரம்:

குமாரவேலு பொன்னம்மா, சின்னத்தம்பி இராசேந்திரன், சுப்பிரமணியம் மகேஸ்வரி, அண்ணாமலை கங்காசபை, ஐயம்பிள்ளை பாக்கியம், வேலாயுதபிள்ளை செல்லம்மா, கந்தையா தியாகராசா, இராசையா கோணேசலிங்கம், பஞ்சாசரம் தயாபரன, செல்வராசு அம்பிகா

கடந்த மூன்று வருடங்களாக மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமின் பொறுப்பாளர்களாக கடமையாற்றியவர்களும் இந்தக் காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயிலையும் உள்ளடக்கி ஆக்கிரமிப்பதற்காக கடும் முயற்சிகளை எடுத்திருந்தனர்.

எனினும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

766745.jpg

http://athavannews.com/புங்குடுதீவில்-கடற்படை-ம/

 

image_2fe519226e.jpg

-எம்.றொசாந்த்

புங்குடுதீவில், கடற்படை கட்டளை முகாம் நிர்மாணிப்பதற்கு, அப்பகுதியில் உள்ள 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளனவென, வேலணை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்தரைத்த அவர், புங்குடுதீவு கிழக்கில் உள்ள 9ஆம் வட்டாரம், வல்லன், மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே, இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளனவெனவும் கூறினார்.

கடந்த மூன்று வருடங்களாக, மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமின் பொறுப்பாளர்களாக கடமையாற்றியவர்களும் இணைந்து, மலையடி நாச்சிமார் கோயிலையும், அதற்கருகில் இருக்கும் காணிகளையும் ஆக்கிரமிப்பதற்கு முயற்சித்து வந்தனரெனவும், பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டடு ஒரு வாரங்களுக்குள் (நவம்பர் 22ஆம் திகதி ) வேலணை பிரதேச செயலகத்தினர் ஊடாக, குறித்த காணிகள் கடற்படை கட்டளை முகாம் நிர்மாணிப்பதற்கு சுவீகரிக்கப்பட்டுள்ளதாக, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

எனவே, பாதிக்கப்பட்டோர், 14 நாள்களுக்குள் தங்களது ஆட்சேபனைகளை அறியத்தருமாறும், பிரதேச செயலாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பஙகடதவல-கண-சவகரபப/71-242054

  • கருத்துக்கள உறவுகள்

எனி ஏக்கர் ஏக்கரா தமிழற்ற காணியை பிடிச்சு.. இராணுவக் கூடாரங்களும்.. புத்த விகாரைகளும் அமைக்கச் சரி. அதுக்கும் நம்மில் சிலதுகள் வெளிநாட்டில் இருந்து கொண்டு... நன்றி சொல்லுங்கள். 

19 hours ago, தமிழ் சிறி said:

புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொக்கெற்றுக்களை நிரப்ப மகிந்தவின் காலடியில் தவமிருக்கும் சுமந்திரன் என்ன செய்யப்போகிறார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

தமிழினத்துக்கு எதிரான அரச பயங்கரவாதம் அரங்கேற்றும் புதிய நாடகம்! 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, போல் said:

தமிழினத்துக்கு எதிரான அரச பயங்கரவாதம் அரங்கேற்றும் புதிய நாடகம்! 

இப்படி சொல்லி சொல்லி திவதுதான் மிச்சம் மாறாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை சிந்திக்க மறுக்கிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி சொல்லி சொல்லி திவதுதான் மிச்சம் மாறாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை சிந்திக்க மறுக்கிறோம் 

நாம  ஏதும் சொன்னா

வேண்டுமென்றால் நீ  வந்து  இரு  பார்ப்போம்  என்கிறார்களப்பு

நாம்  என்ன  பண்ணும்???

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

நாம  ஏதும் சொன்னா

வேண்டுமென்றால் நீ  வந்து  இரு  பார்ப்போம்  என்கிறார்களப்பு

நாம்  என்ன  பண்ணும்???

பல இடங்களில் விடுபட்ட காணியை ராணுவம் எடுக்க சொல்லியும் அங்கு தண்ணி இல்ல கரண்டு இல்ல இருக்க முடியாது என்ற சொன்ன ஆட்களும் உண்டு  அவங்களும் என்னதான் செய்வது டெங்கு பிடிக்கும் இடங்களை தாங்கள் பிடித்து முகாம் அமைக்கிறார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.