Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அடிச்சால் தாங்க மாட்டாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

73-DF10-BD-AE7-D-4-BE6-BB06-FEEA8-E2263-

சொத்துப் பிரிக்கும் போது குடும்பங்களுக்குள் அடிதடி, வெட்டுக்குத்து என்று  சண்டைகள் நடப்பதுண்டு. அதற்காக நீதிமன்றம் போய் அங்கே ஒரு தீர்ப்புக் கிடைத்தாலும் அதன் பிறகும் அவர்களது சண்டைகள் சில இடங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

வாதியும் பிரதிவாதியும் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தால் கூட அது நீதிமன்ற வளாகமானாலும் வாய்த் தர்க்கமோ அல்லது கைகலப்போ அல்லது ஒருவருக்கு ஒருவர் முறைத்துக் கொள்ளும்  நிலையோ கண்டிப்பாக இருக்கும். இதையெல்லாம் தமிழக சினிமாக்களில் காட்சிகளாகவும் அடிக்கடி நாங்கள் பார்ப்பதால் எங்களுக்கு இது பழகிப் போன ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் பார்க்கும் யேர்மனியருக்கு இது புதிதாக இருக்கும். பொதுவாக அவர்கள் வெளிப்படையாக சட்டத்தை மதிப்பவர்கள் மட்டுமல்ல சட்டத்துக்கு மதிப்பளித்து நடப்பவர்களும் கூட.

யேர்மனியில்  உள்ள நீதிமன்றத்தில் 17.01.2020 அன்று நடந்த ஒரு சம்பவம் பலருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் நிருபர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.  “பல வருடங்களாக நான் ஒரு நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்படியான ஒரு சம்பவத்தை நான் எனது பணி அனுபவத்தில் இதுவரை சந்தித்தது இல்லைநீதிமன்றத்திலேயே இப்படியென்றால் அவர்களுக்கு நீதியின் நிழலே தெரிந்திருக்க வாய்ப்பில்லை

வெவ்வேறு குடும்பங்களில் இருந்து வந்த லெபனான் நாட்டைச் சேர்ந்த 16 இல் இருந்து 21 வயதிலான பாடசாலை மாணவர்களுக்குள் அவர்கள் நாட்டைச் சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  குறிப்பிட்ட  ஒரு பெண்ணுடன் தொடர்பை வைத்திருக்க வேண்டாம் என்ற அவர்களது எச்சரிப்பை அந்த இளைஞன் அசட்டை செய்தமையால் 2019 யூலையில் ஒருநாள் அவனை மற்றைய இளைஞர்கள் அடித்து, துவைத்து விட்டார்கள்.

அத்தோடு விட்டிருந்தால் பிரச்சனை எதுவும் வந்திருக்காது. அந்த இளைஞனைக் கேவலப்படுத்திக் காட்டுவதற்காக  அடித்து, உதைத்ததை எல்லாம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டு தங்களது வீரத்தைக் காட்டப் போனதால் சிக்கலாகிப் போனது.

பாடசாலை மாணவர்களின் இந்த நடவடிக்கை ஒரு பெரிய அலையைக் கிளப்பிவிட  பொலீஸ், வழக்கு, விசாரணை  என்றாகிப் போனதுவழக்குக்கு முக்கிய சாட்சியாக இருந்ததே அவர்கள் சமூகத் தளத்தில் தரவேற்றிய அந்த வீடியோதான். இந்த வழக்குதான் அன்று நடந்தது.

வழக்கு விசாரணையின் பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மூன்று வருடங்களும் மூன்று மாதங்களும் தண்டனை கொடுத்து நீதிபதி  தீர்ப்பளித்திருந்தார். அதன் பிறகே நீதிமன்றம் அல்லோலகல்லோலப் பட்டது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே இளைஞர்களும் பார்வையாளர்களான லெபனானியர் சிலரும் ஒருவரோடொருவர் வெறித்தனமாக மோதிக் கொண்டார்கள். ஆனாலும் நிலைமை மோசமாவதற்குள்  20 பொலிஸார் மற்றும் நீதிமன்றப் பாதுகாவலர்கள் இணைந்து  சிறிது நேரத்துக்குள்  எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இப்பொழுது இன்னும் ஒரு வழக்கு அந்த இளைஞர்களுக்குச் சேர்ந்திருக்கிறது.

இளைஞர்கள் படிப்பதற்கு இன்னமும்  நிறைய இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

 

73-DF10-BD-AE7-D-4-BE6-BB06-FEEA8-E2263-

வழக்கு விசாரணையின் பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மூன்று வருடங்களும் மூன்று மாதங்களும் தண்டனை கொடுத்து நீதிபதி  தீர்ப்பளித்திருந்தார். அதன் பிறகே நீதிமன்றம் அல்லோலகல்லோலப் பட்டது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே இளைஞர்களும் பார்வையாளர்களான லெபனானியர் சிலரும் ஒருவரோடொருவர் வெறித்தனமாக மோதிக் கொண்டார்கள். ஆனாலும் நிலைமை மோசமாவதற்குள்  20 பொலிஸார் மற்றும் நீதிமன்றப் பாதுகாவலர்கள் இணைந்து  சிறிது நேரத்துக்குள்  எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இப்பொழுது இன்னும் ஒரு வழக்கு அந்த இளைஞர்களுக்குச் சேர்ந்திருக்கிறது.

இளைஞர்கள் படிப்பதற்கு இன்னமும்  நிறைய இருக்கிறது.

இப்போ....  மூன்று வருட தீர்ப்புடன், இந்த அடிபிடி தீர்ப்பும் சேர்ந்து... சிறையில் இருந்து வெளியே வர,
தலைமுடி நரைத்து... படிக்கின்ற கலாமும் கடந்திருக்கும்.
ம்ம்ம்.... வாழ்க்கையை,  வீணாக்கி விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

இளைஞர்கள் படிப்பதற்கு இன்னமும்  நிறைய இருக்கிறது.

இடங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறையால் வெளியே வந்தாப்பிறகு பாகம் இரன்டு தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2020 at 2:23 PM, தமிழ் சிறி said:

இப்போ....  மூன்று வருட தீர்ப்புடன், இந்த அடிபிடி தீர்ப்பும் சேர்ந்து... சிறையில் இருந்து வெளியே வர,
தலைமுடி நரைத்து... படிக்கின்ற கலாமும் கடந்திருக்கும்.
ம்ம்ம்.... வாழ்க்கையை,  வீணாக்கி விட்டார்கள். 

ஐரோப்பிய நீதி மன்றங்களில் தண்டனையுடன்  சேர்த்து  ஒரு  எச்சரிக்கையும் தருவார்கள்

அது  அடுத்தமுறை தவற  செய்யாமல் இருப்பதற்காக  எச்சரிப்பது

மீறினால் தண்டனை  பல  மடங்காகும்

இவர்களுக்கு  கையோட  கம்மாசு....

5 minutes ago, சுவைப்பிரியன் said:

சிறையால் வெளியே வந்தாப்பிறகு பாகம் இரன்டு தொடரும்.

சிறையில்  இருக்கும்போதே உறவுகளுக்குள் தொடரலாம்.....??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த லெபனான் சனம் மோட்டு/முரட்டுக்கூட்டங்கள். இடம் நேரகாலம் இங்கிதம் தெரியாததுகள்

# சொந்த அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

சிறையால் வெளியே வந்தாப்பிறகு பாகம் இரன்டு தொடரும்.

அனேகமாக அவர்கள் சிறையால் வெளியே வந்தபின் அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்பார்க்கலாம். சுவைப்பிரியன் அவர்கள் இரண்டாம்பாகம் எழுத லெபனான் நாட்டுக்குச் செல்லவேண்டி வரலாம். ஆகவே அரபுமொழி தெரியவேண்டும் தெரியாவிட்டால் இப்போதிருந்தே அந்த மொழி பயிலத்தொடங்குவது நல்லது.

arabic%2B%2Bsun-and-moon-letters.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உந்த லெபனான் சனம் மோட்டு/முரட்டுக்கூட்டங்கள். இடம் நேரகாலம் இங்கிதம் தெரியாததுகள்

# சொந்த அனுபவம்.

சட்டியைப் பாத்து பானை கரியெண்டு சொல்லி இளிச்சமாதிரிக் கிடக்கு😜

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

சட்டியைப் பாத்து பானை கரியெண்டு சொல்லி இளிச்சமாதிரிக் கிடக்கு😜

எங்கடையாக்கள் வலு டீசண்ட் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

சிறையால் வெளியே வந்தாப்பிறகு பாகம் இரன்டு தொடரும்.

அவர்கள்  சிறையால்... வெளியே வர, 
சம்பந்தப் பட்ட பெண் வேறொருவரை கலியாணம் கட்டி,
அவரது பிள்ளை,  அதே பாடசாலையில்... படித்துக் கொண்டிருக்கும். :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, கிருபன் said:

சட்டியைப் பாத்து பானை கரியெண்டு சொல்லி இளிச்சமாதிரிக் கிடக்கு😜

18 hours ago, ரதி said:

எங்கடையாக்கள் வலு டீசண்ட் 🤔

இவர்கள் இருவர் மீதும் லெபனான் காற்றுக்கூட படவில்லை என்பது நன்கு புலனாகின்றது.😎

உங்கை ஒரே பாக்கியும் சிங்கும் தானே 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, Paanch said:

அனேகமாக அவர்கள் சிறையால் வெளியே வந்தபின் அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்பார்க்கலாம்.

இவங்களை ஏத்திக்கொண்டு போன பிளைட் திரும்பி வரக்கிடையிலை அவங்கள் இஞ்சை திரும்பி வந்துடுவாங்கள் கண்டியளோ..😂

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

சட்டியைப் பாத்து பானை கரியெண்டு சொல்லி இளிச்சமாதிரிக் கிடக்கு😜

 

21 hours ago, ரதி said:

எங்கடையாக்கள் வலு டீசண்ட் 🤔

லெபனான்காரருடன்.. எங்கடை ஆட்களை ஒப்பிடும் போது,   
எங்கடையாக்கள்....  சரியான டீசண்ட். :) 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

லெபனான்காரருடன்.. எங்கடை ஆட்களை ஒப்பிடும் போது,   
எங்கடையாக்கள்....  சரியான டீசண்ட். :) 

அதைத் தான் நானும் சொன்னேன் 😙

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.