Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்!

கம்போடியா - அங்கோர் வாட் 

 

 
  • Replies 71
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்களுக்கு முன்னால் எம்மால் நடாத்தப்பட்ட  30 ஆண்டுகாலப் போரையே மறந்த எமக்கு இவை எம்மாத்திரம் ? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்!

கம்போடியா - அங்கோர் வாட் 

 

 

இந்தா - வந்திடமில்ல - வரலாற்று புனைவாசிரியர்கள்😂 

அங்கொர்வட்டை கட்டிய கெமெர் அரசு தமிழர் அரசு என்பதற்கு ஒரு குண்டு மணியளவுக்கும் ஆதாரமில்லை.

அந்த காலத்தில் தென்கிழக்காசியாவின் பிரதான மதங்களாக சைவமும், வைணவமும் இருந்தன. 

இப்போ நாம் மேற்கத்திய கலாச்சாரம் உயர்வானது என சிந்திந்து பிள்ளைகளுக்கு ருசான், ரிசான், ரைஹானா என்றெல்லம் பெயர் வைக்கிறோமே? அப்படி அந்த நாளில் தென் கிழக்கு ஆசியா எங்கெனிம் விரும்பபட்ட நாகரீகம், இந்திய, தென்னிந்திய நாகரீகம். ஆகவே ராஜ வம்சத்தினர் - வர்மன் என்ற பெயரை பாவித்தனர்.

இந்திய மதங்களையும் பின்பற்றினர்.

உணவு, கலாச்சார வழக்கங்களையும் கூட.

ஆனால் அவர்கள் தமிழர் இல்லை. எப்படி சால்ஸ் அன்ரனி என்ற பெயருடைய சீலன் ஒரு ஐரோப்பியர் இல்லையோ அப்படி.

வர்மன் என்ற பெயர் கூட தமிழ் இல்லை. வர்மாவின் தமிழ் திரிபே வர்மன். வட இந்தியா எங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக பாவனையில் இருந்த அரச பெயர் வர்மா.

பின்னாளில்தான் இதை தமிழ் மன்னர்கள் சூடத் தொடங்கினர்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை என்றான் பாரதி.

 உண்மையான பழங்கதைகளை பேசினாலும் கூட பரவாயில்லை, இட்டு கட்டிய பொய்களை பரப்பி, எம் அடுத்த, குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் வாழும் பிள்ளைகளையும் மொக்கு கூட்டமாக்குகின்றோம்.

இதை விட பழமையான நாகரிகத்துக்கு சொந்தகாரர்கள் நாங்கள் என்பதை கீழடி சொல்கிறது. 

தேவையில்லாமல் இரவல் கெத்துக்கு ஆசைபட்டு, எம் வரலாறு பற்றிய உண்மையான பதிவுகளை கூட உலகம் உதாசீனம் செய்யவே இது வழிகோலும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்தா - வந்திடமில்ல - வரலாற்று புனைவாசிரியர்கள்😂 

அங்கொர்வட்டை கட்டிய கெமெர் அரசு தமிழர் அரசு என்பதற்கு ஒரு குண்டு மணியளவுக்கும் ஆதாரமில்லை.

அந்த காலத்தில் தென்கிழக்காசியாவின் பிரதான மதங்களாக சைவமும், வைணவமும் இருந்தன. 

இப்போ நாம் மேற்கத்திய கலாச்சாரம் உயர்வானது என சிந்திந்து பிள்ளைகளுக்கு ருசான், ரிசான், ரைஹானா என்றெல்லம் பெயர் வைக்கிறோமே? அப்படி அந்த நாளில் தென் கிழக்கு ஆசியா எங்கெனிம் விரும்பபட்ட நாகரீகம், இந்திய, தென்னிந்திய நாகரீகம். ஆகவே ராஜ வம்சத்தினர் - வர்மன் என்ற பெயரை பாவித்தனர்.

இந்திய மதங்களையும் பின்பற்றினர்.

உணவு, கலாச்சார வழக்கங்களையும் கூட.

ஆனால் அவர்கள் தமிழர் இல்லை. எப்படி சால்ஸ் அன்ரனி என்ற பெயருடைய சீலன் ஒரு ஐரோப்பியர் இல்லையோ அப்படி.

வர்மன் என்ற பெயர் கூட தமிழ் இல்லை. வர்மாவின் தமிழ் திரிபே வர்மன். வட இந்தியா எங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக பாவனையில் இருந்த அரச பெயர் வர்மா.

பின்னாளில்தான் இதை தமிழ் மன்னர்கள் சூடத் தொடங்கினர்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை என்றான் பாரதி.

 உண்மையான பழங்கதைகளை பேசினாலும் கூட பரவாயில்லை, இட்டு கட்டிய பொய்களை பரப்பி, எம் அடுத்த, குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் வாழும் பிள்ளைகளையும் மொக்கு கூட்டமாக்குகின்றோம்.

இதை விட பழமையான நாகரிகத்துக்கு சொந்தகாரர்கள் நாங்கள் என்பதை கீழடி சொல்கிறது. 

தேவையில்லாமல் இரவல் கெத்துக்கு ஆசைபட்டு, எம் வரலாறு பற்றிய உண்மையான பதிவுகளை கூட உலகம் உதாசீனம் செய்யவே இது வழிகோலும்.

இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா அல்லது அனுமானத்தின் (யூகம் அல்ல) அடிப்படையில் சொல்கிறீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா அல்லது அனுமானத்தின் (யூகம் அல்ல) அடிப்படையில் சொல்கிறீர்களா ?

1. இது தமிழர் தொன்மம் என்பவர்கள்தான் அதை நிறுவ ஆதாரம் தரவேண்டும். ஒரு தமிழ் கல்வெட்டுத்தானும் அங்கே இல்லாத இடத்து,   அங்கே இருக்கும் சான்றுகள் எல்லாம் வேறு ஒரு கதையை சொல்லுமிடத்து, கடாரத்தை பற்றி, ஶ்ரீ விஜய கடலரசை பற்றி குறிப்பாவது கொடுக்கும் தமிழ்நாட்டின் புராதன ஆதாரங்கள், இந்த அரசை தமிழ் அரசாக அடையாளம் காணாதவிடத்து, பெயர் ஒற்றுமை (அந்த பெயரே தமிழர்கள் இரவல் வாங்கியது), சமயம் (அதுவும் இரவல்) இரண்டையும் வைத்து மட்டும் இப்படி ஒரு urban myth ஐ கட்டி எழுப்பி வளர்ப்பவர்கள்தான் அதற்கு ஆதாரமும் தரவேண்டும்.

2. வராலாற்றுக்கு முந்திய காலத்தில் துணைகண்டத்தில் இருந்து வெளியேறிய ஒரு இனக்குழுமம்- பல ஆயிரம் ஆண்டுகளாக அங்கே தங்கி, அதன் வாரிசுகளாக கெமெர் அரசு அமைந்தது எனும் ஒரு எடுகோள் உளது.  

ஹிகின்ஸ் என்பார் எழுதிய The Origins of the Civilization of Angkor என்ற புத்தகத்தில் எழுதியதன் அடிப்படையிலும், மேலும் நான் வாசித்து அறிந்த மட்டிலும் - சீனாவில் இருந்து, கெமெர் அரசு எழுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்த பகுதிக்கு வந்த சீன யாதிரிகர் இருவர், இந்த பகுதியில் ஒரு “இந்திய” குடிகளின் அரசு இருப்பதாக குறித்துளனர். 

3. ஆனால் இதை மட்டுமே வைத்து இதை தமிழரசு என சொல்லுவது அபத்தம்.

4. பாரம்பரிய நியாபகம் என்பது ஒரு அரும் பொக்கிசம். இப்படி ஒரு தமிழர் அரசு இருந்த செய்தியை தமிழ் கூறும் நல்லுலகு அடியோடு மறந்து போகும் என நான் நினைகவில்லை. கதைகளாக, யுத்த காண்டங்களாக, இலக்கியமாக எங்கோ ஒரு சிறு குறிபேனும் இருந்திருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, Kapithan said:

இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா அல்லது அனுமானத்தின் (யூகம் அல்ல) அடிப்படையில் சொல்கிறீர்களா ?

தமிழருக்கும் சைவர்களுக்கும் எதுவுமே இருக்கக்கூடாது. எதுவுமே அவர்கள் கலாச்சாரம் இல்லை / இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.இலங்கை இந்தியாவில் சைவ தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்த தைப்பொங்கலுக்கும் ஆப்பு. உலகத்திலே தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் அந்த மிருகவதை அதுதான் சல்லிக்கட்டுக்கும் ஆப்பு. மதுவும் மாதுவும் பணமும் என தவமிருந்த தமிழே ஒழுங்காக உச்சரிக்கத்தெரியாத ஆன்மீக பச்சைத்தமிழன் இப்ப தமிழினத்துக்கு துரும்பாம் தும்பாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. இது தமிழர் தொன்மம் என்பவர்கள்தான் அதை நிறுவ ஆதாரம் தரவேண்டும். ஒரு தமிழ் கல்வெட்டுத்தானும் அங்கே இல்லாத இடத்து,   அங்கே இருக்கும் சான்றுகள் எல்லாம் வேறு ஒரு கதையை சொல்லுமிடத்து, கடாரத்தை பற்றி, ஶ்ரீ விஜய கடலரசை பற்றி குறிப்பாவது கொடுக்கும் தமிழ்நாட்டின் புராதன ஆதாரங்கள், இந்த அரசை தமிழ் அரசாக அடையாளம் காணாதவிடத்து, பெயர் ஒற்றுமை (அந்த பெயரே தமிழர்கள் இரவல் வாங்கியது), சமயம் (அதுவும் இரவல்) இரண்டையும் வைத்து மட்டும் இப்படி ஒரு urban myth ஐ கட்டி எழுப்பி வளர்ப்பவர்கள்தான் அதற்கு ஆதாரமும் தரவேண்டும்.

2. வராலாற்றுக்கு முந்திய காலத்தில் துணைகண்டத்தில் இருந்து வெளியேறிய ஒரு இனக்குழுமம்- பல ஆயிரம் ஆண்டுகளாக அங்கே தங்கி, அதன் வாரிசுகளாக கெமெர் அரசு அமைந்தது எனும் ஒரு எடுகோள் உளது.  

ஹிகின்ஸ் என்பார் எழுதிய The Origins of the Civilization of Angkor என்ற புத்தகத்தில் எழுதியதன் அடிப்படையிலும், மேலும் நான் வாசித்து அறிந்த மட்டிலும் - சீனாவில் இருந்து, கெமெர் அரசு எழுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்த பகுதிக்கு வந்த சீன யாதிரிகர் இருவர், இந்த பகுதியில் ஒரு “இந்திய” குடிகளின் அரசு இருப்பதாக குறித்துளனர். 

3. ஆனால் இதை மட்டுமே வைத்து இதை தமிழரசு என சொல்லுவது அபத்தம்.

4. பாரம்பரிய நியாபகம் என்பது ஒரு அரும் பொக்கிசம். இப்படி ஒரு தமிழர் அரசு இருந்த செய்தியை தமிழ் கூறும் நல்லுலகு அடியோடு மறந்து போகும் என நான் நினைகவில்லை. கதைகளாக, யுத்த காண்டங்களாக, இலக்கியமாக எங்கோ ஒரு சிறு குறிபேனும் இருந்திருக்கும். 

" இந்திய " என்று கூறியுள்ளீர்கள். இச் சொல் குறிப்பாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறதா அலது அதற்கு நிகரான வேறு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா ?

ஏனென்றால் இந்தியா என்கின்ற பதம் எதனைக் குறிக்கிறது ? தெளிவில்லாமல் இருக்கிறது. துணைக் கண்டமா அல்லது துணைக் கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியையா ? அல்லது ஏதேனும் ஒரு நாகரீகத்தைக்  குறிக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழருக்கும் சைவர்களுக்கும் எதுவுமே இருக்கக்கூடாது. எதுவுமே அவர்கள் கலாச்சாரம் இல்லை / இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.இலங்கை இந்தியாவில் சைவ தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்த தைப்பொங்கலுக்கும் ஆப்பு. உலகத்திலே தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் அந்த மிருகவதை அதுதான் சல்லிக்கட்டுக்கும் ஆப்பு. மதுவும் மாதுவும் பணமும் என தவமிருந்த தமிழே ஒழுங்காக உச்சரிக்கத்தெரியாத ஆன்மீக பச்சைத்தமிழன் இப்ப தமிழினத்துக்கு துரும்பாம் தும்பாம் 🤣

பெரியவர்,

இதுவரை எங்களுக்கு சொல்லப்பட்டு வந்ததெல்லாம் செவிவளி கதைகளாகவும் புனைகதைகளாகவும் மற்றும் கிடைத்த மிகக் குறைந்த ஆதாரங்களை மூலமாகக் கொண்டு எழுதப்பட்ட (பொன்னியின் செல்வன்) வரலாற்றுக் நாவல்களாகவுமே இருந்துள்ளன. ஆனால் விஞ்ஞானபூர்வமாக நிருவப்பட்ட விடயங்களே உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். தெளிவுபெறுதல் சாலச் சிறந்ததே. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழருக்கும் சைவர்களுக்கும் எதுவுமே இருக்கக்கூடாது. எதுவுமே அவர்கள் கலாச்சாரம் இல்லை / இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.இலங்கை இந்தியாவில் சைவ தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்த தைப்பொங்கலுக்கும் ஆப்பு. உலகத்திலே தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் அந்த மிருகவதை அதுதான் சல்லிக்கட்டுக்கும் ஆப்பு. மதுவும் மாதுவும் பணமும் என தவமிருந்த தமிழே ஒழுங்காக உச்சரிக்கத்தெரியாத ஆன்மீக பச்சைத்தமிழன் இப்ப தமிழினத்துக்கு துரும்பாம் தும்பாம் 🤣

தமிழ் என்ற காளையின் முதுகில் ஏறிக் குந்திய காகம் சைவம். இதைபோல இஸ்லாம், கிறீத்தவம் என பல காகங்கள் தமிழின் முதுகில் சவாரி செய்துள்ளன. செய்கிறன.

ஆகவே சைவத்துக்கு ஒன்றும் இல்லை என்பதால் தமிழுக்கு ஒன்றும் இல்லை என்றாகாது.

மேலும் இப்படி சில்லறைதனமான செயல்பாடுகளால் தன்னை உலகுக்கு எடுத்துக்காட்டும் நிலையிலும் தமிழ் இல்லை.

ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய முதல் ஹோமோசேப்பியன் தொகுதிகளில் ஒன்று, இந்தியாவின் தமிழகம் வழியே 4000 ஆண்டுகளுக்கு முன்  அவுஸ்ரேலியாவை அடைந்தது அதன் வழித்தோன்றல்களே அபொர்ஜினிகள் என்பதாக பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு எடுகோள் உண்டு. அபொர்ஜினிகளில் இருக்கும் ஒரு வகை y குரோமச்சோம் பிறழ்வு - தென்னிந்திய திராவிட மக்களுடையதே:

https://www.nationalgeographic.com.au/australia/four-thousand-years-ago-indians-landed-in-australia.aspx 

தமிழின் தொன்மை, மனித நாகரீகத்தின் தொன்மையில் இருந்து சற்றுப் பின்னே, இந்திய தீபகற்பத்தில் மனித நடமாட்டம் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து ஆரம்பிக்கிறது. 

எமது மொழியே இந்திய துணைக் கண்டத்தின் முதல் மொழி. ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய மனித இனம், மத்திய கிழக்கில் தரித்த இடங்களில் பேசப்பட்ட, இப்போ வழக்கொழிந்த பல மொழிகள் (சுமேரிய மொழி, அரைமைக் மொழி) எம் மொழியின் சகோததரங்கள். தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி - நாம் இப்போ தமிழ் என இனம் காணும் மொழியின் மிக மூத்த வடிவம்.

இதுதான் எம் தொன்மம். நம் மொழி குறைந்த பட்சம் 5000 வருடச் செழுமை உடையது. மதங்களற்ற, ஆனால் இறையியல் உடைய ஒரு ஆரம்பம் எமக்கு இருந்தது.

நான் உங்களிடம் முன்பே கேட்டதுதான் - எனக்கு பதில் தெரியும் - ஆனால் உங்கள் தேடுதலை அதிகரிக்க வேண்டி கேட்கிறேன் - தமிழ் இலக்கியம் காதலை, வீரத்தை இன்னும் எதை எதையோ எல்லாம் பாடியது, ஆனால் சிவன் என்ற பெயர் எப்போ முதன் முதலில் தமிழ் இலக்கியத்தில் கையாளப்பட்டது?

தமிழின் தொன்மையை உலகம் ஒரு போதும் மறுத்ததில்லை. மண்ணை போட்டு மூடினாலும், மறைக்க முடியா உண்மை அது.

பின்னாளில் நம்மில் பிரம்மணிய மத சிந்தனைகள் கலந்த காலத்திலும், நம்மிடைய பெளத்தம் தலைதூக்கிய காலத்திலும்;

நாம் இந்திய தீபகற்பகத்துள் பேரரசுகளை எழுப்பியதும், தென்கிழக்காசியா எங்கினும் கப்பல்படை கொண்டு கடல் ஆளுமை செய்ததும். கடாரத்தை கைப்பற்றியதும். இன்றைய மலேசியா, இந்தோனேசிய தீவுகளில் தமிழர் நகரங்கள் அல்லது, அந்தந்த அரசுகள் அங்கீகரித்த தமிழர் வர்த்தக குடியமைப்புகள் ( trading chambers) இருந்ததும் உண்மை. இதை மறுப்போரும் இல்லை.

ஆனால் இந்திய துணைக் கண்டம், இலங்கைக்கு அப்பால், ஒரு தமிழ் அரசு, அல்லது தமிழ் அரச வம்சம் நீடித்த ஆட்சி அமைத்த வரலாறு இல்லை.

தமிழர்களுக்கு அது தேவைப்பட்டதே இல்லை. பிரிதானியர்கள் இடம் பிடித்தார்கள். ஆனால் அமெரிக்கர்கள்? ஈராக்கில், ஆப்கானில் படை நடத்தினார்கள் ஆனால் இடம் பிடிக்கவில்லை. 

தமிழ் அரசுகள், குறிப்பாக சோழர் அமெரிக்கா இன்று கைபிடிக்கும் உத்தியையே அன்றே கடைபிடிதார்கள். அன்றைய தென்கிழக்காசிய கடலில் சோழர் வைத்ததே சட்டம். சோழர் வியாபாரிகள் தடையின்றி வியாபாரம் செய்தனர். ஆகவே நாடு பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தவறி ஏதாவது ஒரு சிற்றரசு சோழ ஆளுமையை எதிர்த்தால், படை கொண்டு போய் துவம்சம் செய்தனர். 
 

அங்கோர்வாட் கட்டப்பட்டது 12ம் நூற்றாண்டில்- அதாவது 1ம் குலோதுங்க சோழனதும், 3ம் குலோதுங்க சோழனதும் ஆட்சி தமிழகத்தில் நடை பெற்ற காலத்தில்.

இன்னொரு வகையில் சொன்னால் -சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதிய காலம். 

இவ்வளவு செழுமையுடன் தமிழும், தமிழரும், தமிழ் இலக்கியமும் செழித்து வளர்ந்த அந்த காலப்பகுதியில், 2000 மைல்லுக்குள், இன்னொரு மிகப் பெரும் தமிழரசு இருந்தது என்பதும், அதை பற்றி, அதனூடான உறவுகள் பற்றி, மன்னர்களின் மெய்க்கீர்தி பற்றி, சோழனுக்கு திறை கொடுத்ததார்களா என்பது பற்றி ஒரு சிறு குறிப்பு கூடவா எமது 12ம் நூற்றாண்டு அரும்பொருட்களில், இலக்கியங்களில் கிடைக்காது?

 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kapithan said:

" இந்திய " என்று கூறியுள்ளீர்கள். இச் சொல் குறிப்பாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறதா அலது அதற்கு நிகரான வேறு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா ?

ஏனென்றால் இந்தியா என்கின்ற பதம் எதனைக் குறிக்கிறது ? தெளிவில்லாமல் இருக்கிறது. துணைக் கண்டமா அல்லது துணைக் கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியையா ? அல்லது ஏதேனும் ஒரு நாகரீகத்தைக்  குறிக்கிறதா?

மன்னிக்கவும் இந்திய என்ற சொல்லை பயன்படுத்தியது, பிற்கால ஆராய்சியாளர்கள். 

கெமர் மொழியின் பயன்பாடு 9ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது. 

கெமர் பேரரசு கிபி 802-1432 வரையானது.

அங்கோர்வாட் அண்ணளவாக 1150 இல் கட்டப்பட்டது.

கெமர் பேரரசு எழ முன்னர், கெமர் மொழி உருவாகும் முன்னர்;

சென்லா என்ற அரசும் (கிபி 550-850)

(F)புனான் என்ற அரசும் (கிபி 50 -550)

இன்றைய தாய்லாந்து, கம்போடிய, வியட்நாம் நாடுகளை உள்ளடக்கி இருந்ததாக சீன பயணக் குறிப்புகள் சொல்கிறன.

புனானும், சென்லாவும் கிரந்த மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிரதத்தை ஆட்சி மொழியாகவும், இந்து சமய வழிபாட்டை கொண்டிருந்ததாயும் நம்பப் படுகிறது.

இங்கே வாழ்ந்த மக்கள் யார் என்பதில் யாருக்கும் தெளிவில்லை. அவர்கள் பல இனக் குழுக்களா அல்லது ஒரே இனக் குழுவா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த மக்களிடம் இருந்தே இன்நாளைய கம்போடிய மக்களும் வியட்நாமிய மக்களும் வந்துள்ளார்கள்.

புன்னானுக்கு 4ம் 5ம் நூற்றாண்டுகளில் இந்திய தொடர்புகள் அதிகரித்து, குப்தர்கள் மற்றும் பல்லவர்களின் தாக்கம் அங்கே அதிகரித்தது. பின்னநாளில் இது வலுவடைந்து சென்லா காலத்திலும் தொடர்ந்தது.

பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட சமஸ்கிரத குறிப்புகள் புனான் பற்றி உள்ளன ஆனால் அங்கே வாழ்ந்த மக்கள் பற்றி தகவல் இல்லை.

ஆனால் நிச்சயமாக பல்லவர்களுக்கும் புனான், சென்லாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பது மறுக்கவியலாது. 

ஆனால்;

1. இவ்வளவற்றையும் வைத்து 12ம் நூற்றாண்டில் ஆண்ட சூர்யவர்மன் தமிழன் என சொல்ல முடியாது.

2. பல்லவர்கள் தமிழ் மன்னர்களா? என்பதே விவாதத்துக்குரியதல்லவா? சேர, சோழ பாண்டியர்கள் தானே தமிழ் மூவேந்தர்கள்? பல்லவர்கள், சமஸ்கிரத, தெலுங்கு, தமிழ் மும்மொழி வேந்தர்கள். நிச்சயமாக சீமானின் வரையறையில் பல்லவர்கள் தமிழர்கள் கிடையாது. 

ஆக, இங்கே அடைய கூடிய துணிபுதான் என்ன?

1. அங்கர்வோட் எழுந்த காலத்தில் (12ம் நூற்றாண்டு) அங்கே இருந்தது கெமர் மொழி பேசும், சைவ/வைஸ்ணவ/பெளத்த கெமர் பேரரசு. தமிழ் அரசல்ல.

2. கெமர் பேரரசு எழ முன்னர் - அந்த பெருநிலப்பரப்பில் பல்லவர்கள், குப்தர்களுடன் மிக நெருங்கிய உறவை பேணிய இரு அரசுகள் இருந்தன. இதனால் ஏற்பட்ட தாக்கங்கள் கெமர் பேரரசிலும் இருந்தன (பெயரிடும் முறை, மதம்). 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு குமாரசாமி இதைப் போட்டவுடன் சிரிப்புத்தான் வந்தது. இதுபற்றி எழுதவேண்டும் என எண்ணினேன். அதற்குள் கோசான் விபரமாக எழுதிவிட்டார். இப்போதெல்லம் இணையத்தில் நம்பகத்தன்மை அல்லாத பல விடயங்கள் வருகின்றன. நானும் கம்போடியா சென்று அதைப் பார்க்கும்போதுதான் தமிழர்கள் பொய்யாகப் புழுகுவதில் வல்லவர்கள் என்பதையும் அறிந்தேன்.

இந்தியாவில் உள்ள அ . ராமசாமி என்னும் பேராசிரியரிடம் இதுபற்றிக் கேட்டபோது இதற்கான எந்தவித ஆதாரமுமில்லை. தமிழ் மன்னர்கள் கம்போடியாவரை சென்று ஆண்டிருக்கின்றனர்.ஆனால் பெண்வழித் திருமணத் தொடர்புகள் தான் இருந்தன. போன மன்னர்களும் நிலையாக அங்கு தங்கியதற்கான ஆதாரம் இல்லை. அங்கு சென்று அவ்வினப் பெண்களை மணந்து சிறிதுகாலம் ஆட்சி செய்தபின் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியிருக்கின்றனர். சோழர்களு ம் நாடுபிடித்திருக்கின்றனர். மீண்டும் வந்துள்ளனர்.

பெருவாரியாகத் தமிழர்கள் சென்று அக் கோவில்களைக் கட்டியிருக்கவும் முடியாது என்கிறார். அங்கு தமிழ் மன்னர்கள் சென்று தமிழினம் பெருகியிருந்தால் இப்போதும் அவர்கள் பரம்பரை அங்கே இருக்கவேண்டும். மொழி கலாச்சாரம், சடங்குகள் என்பன தமிழரினதாக  இருக்கவேண்டும். அவை எவையுமே அங்கு இல்லை என்கிறார். கம்போடியக் கட்டடக் கலை ஒரிசா, பீகார் மாநிலத்தவரின் கட்டடக்கலைகளை ஒத்தவையாகவே இருக்கின்றன. அத்தோடு வர்மன் என்ற பெயர் தமிழர்களது இல்லை என்பதும் அவர் வாதம்.

இந்தியாவில் உள்ள எத்தனை அழிந்துகொண்டுவரும் கோவில்களைக் கூடக் காப்பாற்ற  முடியாமல் கைவிட்டுவிட்டு எங்கோ இருக்கும் கோவில் உலகப் பிரசித்தி பெற்றவுடன் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எம்மவர் கட்டியது தான் என்று கூறுவது மகா தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

உண்மையான பழங்கதைகளை பேசினாலும் கூட பரவாயில்லை, இட்டு கட்டிய பொய்களை பரப்பி, எம் அடுத்த, குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் வாழும் பிள்ளைகளையும் மொக்கு கூட்டமாக்குகின்றோம்.

இதை விட பழமையான நாகரிகத்துக்கு சொந்தகாரர்கள் நாங்கள் என்பதை கீழடி சொல்கிறது. 

தேவையில்லாமல் இரவல் கெத்துக்கு ஆசைபட்டு, எம் வரலாறு பற்றிய உண்மையான பதிவுகளை கூட உலகம் உதாசீனம் செய்யவே இது வழிகோலும்.

இப்போது எங்களுக்கு இது மிகவும் உபயோகமான அறிவுரை .வாழ்த்துக்கள்.

மற்ற பக்கம் எகிப்திற்கும் போகிறார்கள் 😣

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கோ இருக்கும் கோவில் உலகப் பிரசித்தி பெற்றவுடன் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எம்மவர் கட்டியது தான் என்று கூறுவது மகா தவறு.

உண்மை தான் மற்றவர்கள் கேலிசெய்யவும், கிண்டலாக பார்க்கவே வழிசெய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவை  ஆராயப்படணும்

மேலே எழுதியவற்றில் 2  விடயங்கள் தவிர்க்கப்படணும்

ஆதாரமற்ற வரலாற்றுடன்  பொருந்தாத அறிவுப்புக்கள்

மற்றும்  எம் சுற்றுலாப்பயணிகளின்  கணிப்புக்கள்

எமது  பிள்ளைகளிடம்  வரலாறு  சார்ந்துபேசும்  போது கவனமாக  இருக்கணும்

ஒன்றை  சொல்லப்போக

உள்ளதும்  போய்விடும் ஆபத்துள்ளது

அவர்களுக்கு  எம்மைவிட கூகிள் ஆண்டவர்  நம்பிக்கைக்குரியவராகி  பல  வருடங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஈழத்தின் வடக்குக் கிழக்கை எடுத்தாலே.. பெளத்த விகாரைகள் தான் அதிகம். எனி வரும் காலத்தில் எம்மவர்களே... அது பெளத்த பூமி என்று நிறுவி விடுவார்கள். அந்தளவுக்கு எம்மவர்கள் அறிவு மிக கூர்மையானது கண்டியளோ.

எதையுமே ஆராய்வது கிடையாது. அவன் சொன்னான்.. இவன் சொன்னான் என்று மாறி மாறி கதை அளக்கிறார்கள்.. யாழிலும் தான்.

அதுசரி.. கோசான்.. மற்றும் சுமே ஆன்ரியின் இந்தக் காணொளிக்கான மறுப்பறிக்கை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வெளிவந்த நடுநிலை ஆய்வுகளின் பிரகாரம் வருகிறது.

ராமசாமி சொன்னார்.. கந்தசாமி சொன்னார் என்பதற்காக எல்லாம் ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே முதலில்.. இதை நிராகரிப்பவர்கள்.. அதற்கான ஆதார ஆய்வறிக்கைகளை முன் வையுங்கள். 

இங்கு அதிமேதாவிகள் தோறணையில் அலையும் சிலர் காண வேண்டிய காணொளி கீழ் வருகிறது...

 

On 1/26/2020 at 1:22 PM, குமாரசாமி said:

தமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்!

கம்போடியா - அங்கோர் வாட் 

 

 

ஆராயப்பட வேண்டிய ஒன்று. தவிர்த்து ஒதுக்க முடியாதது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

தமிழ் என்ற காளையின் முதுகில் ஏறிக் குந்திய காகம் சைவம். இதைபோல இஸ்லாம், கிறீத்தவம் என பல காகங்கள் தமிழின் முதுகில் சவாரி செய்துள்ளன. செய்கிறன.

ஆகவே சைவத்துக்கு ஒன்றும் இல்லை என்பதால் தமிழுக்கு ஒன்றும் இல்லை என்றாகாது.

மேலும் இப்படி சில்லறைதனமான செயல்பாடுகளால் தன்னை உலகுக்கு எடுத்துக்காட்டும் நிலையிலும் தமிழ் இல்லை.

ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய முதல் ஹோமோசேப்பியன் தொகுதிகளில் ஒன்று, இந்தியாவின் தமிழகம் வழியே 4000 ஆண்டுகளுக்கு முன்  அவுஸ்ரேலியாவை அடைந்தது அதன் வழித்தோன்றல்களே அபொர்ஜினிகள் என்பதாக பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு எடுகோள் உண்டு. அபொர்ஜினிகளில் இருக்கும் ஒரு வகை y குரோமச்சோம் பிறழ்வு - தென்னிந்திய திராவிட மக்களுடையதே:

https://www.nationalgeographic.com.au/australia/four-thousand-years-ago-indians-landed-in-australia.aspx 

தமிழின் தொன்மை, மனித நாகரீகத்தின் தொன்மையில் இருந்து சற்றுப் பின்னே, இந்திய தீபகற்பத்தில் மனித நடமாட்டம் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து ஆரம்பிக்கிறது. 

எமது மொழியே இந்திய துணைக் கண்டத்தின் முதல் மொழி. ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய மனித இனம், மத்திய கிழக்கில் தரித்த இடங்களில் பேசப்பட்ட, இப்போ வழக்கொழிந்த பல மொழிகள் (சுமேரிய மொழி, அரைமைக் மொழி) எம் மொழியின் சகோததரங்கள். தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி - நாம் இப்போ தமிழ் என இனம் காணும் மொழியின் மிக மூத்த வடிவம்.

இதுதான் எம் தொன்மம். நம் மொழி குறைந்த பட்சம் 5000 வருடச் செழுமை உடையது. மதங்களற்ற, ஆனால் இறையியல் உடைய ஒரு ஆரம்பம் எமக்கு இருந்தது.

நான் உங்களிடம் முன்பே கேட்டதுதான் - எனக்கு பதில் தெரியும் - ஆனால் உங்கள் தேடுதலை அதிகரிக்க வேண்டி கேட்கிறேன் - தமிழ் இலக்கியம் காதலை, வீரத்தை இன்னும் எதை எதையோ எல்லாம் பாடியது, ஆனால் சிவன் என்ற பெயர் எப்போ முதன் முதலில் தமிழ் இலக்கியத்தில் கையாளப்பட்டது?

தமிழின் தொன்மையை உலகம் ஒரு போதும் மறுத்ததில்லை. மண்ணை போட்டு மூடினாலும், மறைக்க முடியா உண்மை அது.

பின்னாளில் நம்மில் பிரம்மணிய மத சிந்தனைகள் கலந்த காலத்திலும், நம்மிடைய பெளத்தம் தலைதூக்கிய காலத்திலும்;

நாம் இந்திய தீபகற்பகத்துள் பேரரசுகளை எழுப்பியதும், தென்கிழக்காசியா எங்கினும் கப்பல்படை கொண்டு கடல் ஆளுமை செய்ததும். கடாரத்தை கைப்பற்றியதும். இன்றைய மலேசியா, இந்தோனேசிய தீவுகளில் தமிழர் நகரங்கள் அல்லது, அந்தந்த அரசுகள் அங்கீகரித்த தமிழர் வர்த்தக குடியமைப்புகள் ( trading chambers) இருந்ததும் உண்மை. இதை மறுப்போரும் இல்லை.

ஆனால் இந்திய துணைக் கண்டம், இலங்கைக்கு அப்பால், ஒரு தமிழ் அரசு, அல்லது தமிழ் அரச வம்சம் நீடித்த ஆட்சி அமைத்த வரலாறு இல்லை.

தமிழர்களுக்கு அது தேவைப்பட்டதே இல்லை. பிரிதானியர்கள் இடம் பிடித்தார்கள். ஆனால் அமெரிக்கர்கள்? ஈராக்கில், ஆப்கானில் படை நடத்தினார்கள் ஆனால் இடம் பிடிக்கவில்லை. 

தமிழ் அரசுகள், குறிப்பாக சோழர் அமெரிக்கா இன்று கைபிடிக்கும் உத்தியையே அன்றே கடைபிடிதார்கள். அன்றைய தென்கிழக்காசிய கடலில் சோழர் வைத்ததே சட்டம். சோழர் வியாபாரிகள் தடையின்றி வியாபாரம் செய்தனர். ஆகவே நாடு பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தவறி ஏதாவது ஒரு சிற்றரசு சோழ ஆளுமையை எதிர்த்தால், படை கொண்டு போய் துவம்சம் செய்தனர். 
 

அங்கோர்வாட் கட்டப்பட்டது 12ம் நூற்றாண்டில்- அதாவது 1ம் குலோதுங்க சோழனதும், 3ம் குலோதுங்க சோழனதும் ஆட்சி தமிழகத்தில் நடை பெற்ற காலத்தில்.

இன்னொரு வகையில் சொன்னால் -சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதிய காலம். 

இவ்வளவு செழுமையுடன் தமிழும், தமிழரும், தமிழ் இலக்கியமும் செழித்து வளர்ந்த அந்த காலப்பகுதியில், 2000 மைல்லுக்குள், இன்னொரு மிகப் பெரும் தமிழரசு இருந்தது என்பதும், அதை பற்றி, அதனூடான உறவுகள் பற்றி, மன்னர்களின் மெய்க்கீர்தி பற்றி, சோழனுக்கு திறை கொடுத்ததார்களா என்பது பற்றி ஒரு சிறு குறிப்பு கூடவா எமது 12ம் நூற்றாண்டு அரும்பொருட்களில், இலக்கியங்களில் கிடைக்காது?

 

இந்த கால எல்லைகளும் தகவல்களும் கொஞ்சம் முரண்பாடு உடையவை 

இதே கால எல்லையில்தான் மாவல்லபுரம்  பல்லவர்களால் எழுந்துகொண்டு இருந்தது 
பல்லவர்கள் பற்றிய குறிப்புகளும் அவர்களுடைய எழுச்சிகளும் ... பின்னாளில் சோழர்களால் குறிப்பாக ஆதித்ய சோழனால் அழிக்கபட்டு விட்டதால் ... பலது எம்மிடம் இல்லை.
பல்லவர்களை தெலுங்கர்கள் என்றுதான் பதிவு செய்துகொள்கிறோம்  அதேநேரம் தெலுங்கு மொழியே இந்த கால எல்லைக்கு பின்பாடுதான் வருகிறது (இங்கே பல முரண்பாடு இருக்கிறது) 

அங்கோர்வார்ட் பற்றி விவாதம் பண்ண நிறைய இருக்கிறது 
எழுந்த மாத்திரத்தில் அங்கே தமிழ் இல்லை ஆகவே அதுக்கும் தமிழ் மன்னர்களுக்கும் தொடர்பில்லை 
என்பதுவும் எழுந்த மாத்திரத்தில் விஞ்ஞான ஆதாரம் இல்லை என்பதும் குழந்தைப்பிள்ளை பேச்சு.

ஒட்டுமொத்த கட்டிட வடிவமைப்பே பல்லவர்களின் கட்டிடவம்தான் 
அத்திவாரம் முதல்  முடிவரை பல்லவர்களின் கைஅடையாளத்தை கட்டிடம் இன்றுவரை 
சுமந்து நிற்கிறது.

இதுக்குள் இன்னொரு வரலாறை கால கோட்டில் பார்த்தால் 
இந்த கோவில்  கட்டிய காலத்தில் அங்கே கெமர் அரசு எழுச்சி பெறவே இல்லை  
இதை கெமர்களின் எழுச்சி வீழ்ச்சி பற்றிய யூ டூப் வீடியோக்களிலேயே கெமர்கள் பற்றிய 
வரலாற்றில் எளிதாக காணலாம்.

இந்த கோவிலுக்குள் புத்தமதம்  வந்தது கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் பின்னாளில் 
புகுத்த பட்டு இருக்கிறது.
 800ஆம் ஆண்டு கால பகுதியில் சீனர்களுக்கும்  பல்லவர்களுக்கும் நிறைய தொடர்பு இருந்து இருக்கிறது 
பல்லவர்கள் கன்னட ஆந்திர  பகுதியில் சமஸ்கிருதத்தையும் கரந்தவையும்  தமிழ் கலந்து பாவித்து இருக்கிறார்கள்  இவர்கள் காலத்தில்தான் சம்ஸ்கிருத தமிழ் கலப்பில் தெலுங்கு  கன்னடம் உருவாகி இருக்கிறது 

அன்கோவாட் கோவில் கட்டிய காலப்பகுதியில்  
தென்னிந்தியாவை  மகேந்திரவர்மன் ஆண்டுகொண்டு இருக்கிறான் தொடர்ச்சியாக பரமேசுவரவர்மன் தொடர்கிறான்.... இவர்களுக்கு பிற்பகுதியில்தான்  கெமர் அரசே உருவாக்குகிறது 
அன்கோவார்ட் கோவிலுக்கு முன்பு கெமர்களுக்கு என்று தனி வராலாற்று குறிப்பு ஒன்றும் இல்லை 
802இல் உருவாக்கியதாக பதிவு இருக்கிறது  .... அன்கோவார்டுக்கு முன்பு 
893இலேயே (இப்போது பிராய கோ) என்று அழைக்கப்படும் பிறையே முற்றுமுழுதாக பல்லவர்களின் வடிவமைப்பில் கட்டிமுடிக்க பட்டு இருக்கிறது  அது இந்திரவர்மனின் காலத்தில் அவனின் ஆளுமைக்கு உட்பட்டு  இருந்தது.


உங்களுடன் முரண்படும் எண்ணத்தில் எழுதவில்லை  
எல்லவற்றையும் ஒரே நேர்கோட்டில் வைத்து இதுவரையில் யாராலும் ஒரு ஆய்வு 
மேற்கொள்ள படவில்லை ஆதலால்  ... தமிழ் வேறாகவும்  .... கெமர்கள் வேறாகவும் வைத்துதான் 
ஆய்வுகள் சொல்கின்றன. இரண்டையும் ஒன்றாக வைத்து அதே கால் பகுதியில் இங்கே என்ன மாற்றம் அங்கே என்ன மாற்றம் நிகழ்ந்த்த்து என்று யாரும் இன்னமும் பார்க்கவில்லை.
சோழர்கள் எழுச்சி பெற்று பல்லவர்கள் சோழர்களிடம் வீழ்ச்சி உற்ற அதே கால நேர்கோட்டில்தான்  கெமர் அரசும்   விரிகிறது ........... நீங்கள் சொல்வதுபோல  இரண்டாம் சூர்யவர்மனும்  7ஆம் ஜெயவர்மனும்  எஞ்சிய  பெயர்களின்  எச்சங்களாக  கெமர்களிடம் இருந்து இருக்கலாம் 1100-1400க்கும் இடைப்பட்ட பகுதிதான்  கெமர் பேரரசின்  ஆதிக்கம் இருந்த கால பகுதிகள் (பதிவில் இருக்கிறது அல்லது ஆதாரத்துடன் இருப்பது) 
அதற்கு முன்பு அவர்கள் சொல்லுவதும் செவிவழி கதைகள்தான்.

இப்படி ஒரு கோவிலை ஒரு சிற்றரசு 1100இல் கட்டி இருக்கும் என்பதுவே முதன்மையான சந்தேகம். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

மன்னிக்கவும் இந்திய என்ற சொல்லை பயன்படுத்தியது, பிற்கால ஆராய்சியாளர்கள். 

கெமர் மொழியின் பயன்பாடு 9ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது. 

கெமர் பேரரசு கிபி 802-1432 வரையானது.

அங்கோர்வாட் அண்ணளவாக 1150 இல் கட்டப்பட்டது.

கெமர் பேரரசு எழ முன்னர், கெமர் மொழி உருவாகும் முன்னர்;

சென்லா என்ற அரசும் (கிபி 550-850)

(F)புனான் என்ற அரசும் (கிபி 50 -550)

இன்றைய தாய்லாந்து, கம்போடிய, வியட்நாம் நாடுகளை உள்ளடக்கி இருந்ததாக சீன பயணக் குறிப்புகள் சொல்கிறன.

புனானும், சென்லாவும் கிரந்த மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிரதத்தை ஆட்சி மொழியாகவும், இந்து சமய வழிபாட்டை கொண்டிருந்ததாயும் நம்பப் படுகிறது.

இங்கே வாழ்ந்த மக்கள் யார் என்பதில் யாருக்கும் தெளிவில்லை. அவர்கள் பல இனக் குழுக்களா அல்லது ஒரே இனக் குழுவா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த மக்களிடம் இருந்தே இன்நாளைய கம்போடிய மக்களும் வியட்நாமிய மக்களும் வந்துள்ளார்கள்.

புன்னானுக்கு 4ம் 5ம் நூற்றாண்டுகளில் இந்திய தொடர்புகள் அதிகரித்து, குப்தர்கள் மற்றும் பல்லவர்களின் தாக்கம் அங்கே அதிகரித்தது. பின்னநாளில் இது வலுவடைந்து சென்லா காலத்திலும் தொடர்ந்தது.

பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட சமஸ்கிரத குறிப்புகள் புனான் பற்றி உள்ளன ஆனால் அங்கே வாழ்ந்த மக்கள் பற்றி தகவல் இல்லை.

ஆனால் நிச்சயமாக பல்லவர்களுக்கும் புனான், சென்லாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பது மறுக்கவியலாது. 

ஆனால்;

1. இவ்வளவற்றையும் வைத்து 12ம் நூற்றாண்டில் ஆண்ட சூர்யவர்மன் தமிழன் என சொல்ல முடியாது.

2. பல்லவர்கள் தமிழ் மன்னர்களா? என்பதே விவாதத்துக்குரியதல்லவா? சேர, சோழ பாண்டியர்கள் தானே தமிழ் மூவேந்தர்கள்? பல்லவர்கள், சமஸ்கிரத, தெலுங்கு, தமிழ் மும்மொழி வேந்தர்கள். நிச்சயமாக சீமானின் வரையறையில் பல்லவர்கள் தமிழர்கள் கிடையாது. 

ஆக, இங்கே அடைய கூடிய துணிபுதான் என்ன?

1. அங்கர்வோட் எழுந்த காலத்தில் (12ம் நூற்றாண்டு) அங்கே இருந்தது கெமர் மொழி பேசும், சைவ/வைஸ்ணவ/பெளத்த கெமர் பேரரசு. தமிழ் அரசல்ல.

2. கெமர் பேரரசு எழ முன்னர் - அந்த பெருநிலப்பரப்பில் பல்லவர்கள், குப்தர்களுடன் மிக நெருங்கிய உறவை பேணிய இரு அரசுகள் இருந்தன. இதனால் ஏற்பட்ட தாக்கங்கள் கெமர் பேரரசிலும் இருந்தன (பெயரிடும் முறை, மதம்). 

நான் மேலே எழுதிய பொது இந்த கருத்தை வாசித்து இருக்கவில்லை 
உங்கள் கருத்தை முதல் பக்கத்தில் பார்த்தவுடன் அதுக்கு பதில் எழுதி இணைத்த்துவிட்டு 
மேல் நோக்கி பார்க்கும்போது இதை நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் ...........

பல்லவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லுவது  ஆரியர்கள்தான் இந்தியாவின் ஆதிக்குடிகள் 
என்று சொல்லுவது போல் ஆகும்.
பல்லவர்கள் தமிழ்மொழியை மட்டும் உள்வாங்கி இருக்கவில்லை என்பதுதான் நாம் காணக்கூடியது 
எங்கு எங்கு எல்லாம் அரசுஅமைத்தார்களோ அங்கு இருந்த மொழிகளை முதன்மை கொண்டார்கள் என்பதுதான் உண்மை 
இப்போது நாம் கீழடிக்கு சென்றால் ... அல்லது சேர பேரசின் வரலாறுக்கு சென்றால் தென் இந்தியாவில் தமிழர் தாண்டி இன்னொருவர் கி மு  1000 -கி பி 300 வரை இருந்து இருக்க வாய்ப்பில்லை  சம்ஸ்கிருதம்  
பின்னாளின்  விஜயநகர ஊடாக பல்லலர்களிடம் வந்திருக்கலாம் என்பதிலும் விட சம்ஸ்கிருத மொழியையே பல்லவர்கள்தான்  உருவாக்கி இருக்கலாம் என்றுதான் தனிப்பட நான் நம்புகிறேன் இவர்கள் ஆந்திர பகுதியில் ஒரு தனித்த குழுமமாக  நெடும்காலம் வாழ்ந்தும் இருந்து இருக்கலாம் சம்ஸ்கிருதம்  தென் இந்தியாவில் இருந்து  மேல்நோக்கி சென்றது என்பதுதான் சாத்தியமானது. 

கிரந்தம் தமிழ் மொழியின் பிரிவுதான் இது இப்போதும்  தமிழ் நாட்டு எல்லையோடுதான் இருக்கிறது 
இவர்களுடைய எழுத்த்து வடிவம்தான் வேறு தவிர  ஒலி வடிவம் தமிழ்தான் 
கிரந்தம் பற்றிய  தெளிவான ஆய்வு பல முடிச்சுக்களை அவிழ்க்கும் காரணம்  
மலையாளம் ... சிங்களம் .... தெலுங்கு ...... தாய் (தாய்லாந்து)  ஜவானிஷ் (இந்தோனேசிய) திகளாரி (திகார்)  போன்ற எல்லா மொழிகளும் எழுத்துருவை கிரந்தத்தில் இருந்தே பெற்று இறுக்கின்றன. 

வெற்றி வேல்.....   வீர வேல்..... எல்லாம் தமிழ் எங்கும் தமிழ் 
என்பது எனது எண்ணம் இல்லை  ........ நான் நீண்ட நாள்களாக இவை பற்றி மிகவும் 
ஆவலுடன் வாசித்து அறிந்து வருகிறேன்  ... தமிழ் மொழிமன்னர்கள் அரசுகள் பற்றி அறிவதில்  ஆர்வம் உண்டு. நீங்கள் தெளிவாக  எழுத்துவதால்தான் உங்களுடன் இதுபற்றி பதில் எழுத விரும்பினேன்.
எங்கள் யாரிடமும் எந்த ஆதாரமும் இப்போது கையில் இல்லை 
சாத்தியமானது 
சாத்தியம் இல்லாதது 
என்ற நிலைப்பாட்டில் எங்கள் எண்ணங்களை வடிவமைக்கிறோம் என்றுதான் எண்ணுகிறேன். 

இங்கு மேலேயும் சிலர் அங்கு தமிளுமில்லை  ஒன்றும் இல்லை என்று எழுந்த மாத்திரத்தில்தான் எழுதுகிறார்கள்  அது எமது  அரசியல் பற்றி எழுதுவது என்றால் தங்களை நியாவாதிகள்  நடுநிலையாளர்கள்  என்று தங்களுக்குள்ளேயே ஒரு பெருமிதம் கொண்டவர்கள்  எழுத தொடங்கும்போது   
புலிகளும் கல்விமான்கள்  கவரிமான்கள் கஸ்தூரிமான்களை சுட்டார்கள் என்று தொடங்குவதுபோல.
புலிகள் சுட்ட நாலு மான்களின் பெயரை எழுதுங்கள்  அவர்கள் என்ன மான்கள் என்று பாப்போம் என்றால் எழுத மாடார்கள். 

அங்கோர்வார்டு கோவில் பல்லவர்களின் வடிவைப்பு என்பதை ஆர்க்கிடெக்ட் (மற்றும் வரலாறு) தெரிந்த எவனும் மறுக்க மாட்டான்  மறுக்கவும் முடியாது ......... எப்படி? என்பதுதான் தெளிவற்றது  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இப்ப ஈழத்தின் வடக்குக் கிழக்கை எடுத்தாலே.. பெளத்த விகாரைகள் தான் அதிகம். எனி வரும் காலத்தில் எம்மவர்களே... அது பெளத்த பூமி என்று நிறுவி விடுவார்கள். அந்தளவுக்கு எம்மவர்கள் அறிவு மிக கூர்மையானது கண்டியளோ.

எதையுமே ஆராய்வது கிடையாது. அவன் சொன்னான்.. இவன் சொன்னான் என்று மாறி மாறி கதை அளக்கிறார்கள்.. யாழிலும் தான்.

அதுசரி.. கோசான்.. மற்றும் சுமே ஆன்ரியின் இந்தக் காணொளிக்கான மறுப்பறிக்கை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வெளிவந்த நடுநிலை ஆய்வுகளின் பிரகாரம் வருகிறது.

ராமசாமி சொன்னார்.. கந்தசாமி சொன்னார் என்பதற்காக எல்லாம் ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே முதலில்.. இதை நிராகரிப்பவர்கள்.. அதற்கான ஆதார ஆய்வறிக்கைகளை முன் வையுங்கள். 

இங்கு அதிமேதாவிகள் தோறணையில் அலையும் சிலர் காண வேண்டிய காணொளி கீழ் வருகிறது...

 

ஆராயப்பட வேண்டிய ஒன்று. தவிர்த்து ஒதுக்க முடியாதது. 

Fletcher, R., Evans, D., Pottier, C., & Rachna, C. (2015). Angkor Wat: An introduction. Antiquity. 

Briggs, L.P. 1999 [1951]. The ancient Khmer Empire. Bangkok: White Lotus.

Evans, D.H., Pottier, C., Fletcher, R.J., Hensley, S., Tapley, I., Milne, A. & Barbetti, M.. 2007. A comprehensive archaeological map of the world's largest pre-industrial settlement complex at Angkor, Cambodia. Proceedings of the National Academy of Sciences of the USA 104.

Higham, C. 2001. The civilisation of Angkor. London: Weidenfeld & Nicolson.

Maxwell, S.T. 2008. The stele inscription of Preah Khan, Angkor: text with translation and commentary. UDAYA, Journal of Khmer Studies 8: 1–114

 

மேலே உள்ளவை சில ஆய்வுத்தாள்களும், ஆய்வின் பேறாக வந்த புத்தகங்களும். நான் மேலே சொன்ன அத்தனை கருத்துக்களுக்கும் இவற்றில் ஆதாரம் உண்டு.

தெய்வநாயகம் ஐயாவின் வீடியோவை பார்தால் தெரியும் அவர் என்ன சொல்கிறார் என்பது.

நான் மேலே கூறியவற்றில் ஒன்றைத்தானும் அவர் மறுக்கவில்லை.

இந்த காணொளியில் ஒரு இடத்தில்தானும் அவர் கம்போடியாவையோ, கெமர் பேரரசையோ, சூர்ய வர்மனையையோ பற்றி ஒரு வார்தைதானும் பேசவில்லை.

ரஜேந்திரன் மட்டுமே இந்தியாவின் ஒற்றை சக்கரவர்தி என்கிறார் ஐயா. உண்மை.

கடாரம் (தற்போதைய மலேசியாவின் கெடாய்), ஜாவா, சுமாத்திரா எங்கும் சோழ ஆதிக்கம் நிறைந்தது என்கிறார். இதைதான் நான் முன்பே அமெரிக்காவுடன் சோழரை ஒப்பிட்டு எழுதினேன். தெற்காசியா எங்கினும் சோழ chambers of trade இருந்தது என்றும் எழுதினேன். இதையே சொல்லும் ஐயா, இதே போல் ரோமில் தமிழர் குடியிருப்பு இருந்தது என்கிறார். தாய்லாந்திலும் சோழ பாதிப்பு இருந்தது என்கிறார் ஆனால், சீயம் மன்னர்கள் தமிழர்கள் என பேய் கதை கதைக்கவில்லை.

ரஜேந்திரன் 1014 அரியணை ஏறும் போது, கெமர் அரசு தமிழ் அரசாக இருந்ததா? 1044 ரஜேந்திரன் இறக்கும் போதாவது இருந்தததா? இல்லை? ஏன்? ஏனென்றால் கோல்கொண்டா, கங்கை, கடாரம், ஈழம் என பட்டியலிட்ட ராஜேந்திரனின் மெய்கீர்தியில் மருந்துக்குதானும் அங்கவோர்ட் இல்லை.

இன்னுமொன்றையும் நினைவில் கொள்ளுங்கள். இப்போ KFC மெக்டொனால்ட்ஸ் கடை இருக்கும் நாடுகள் எல்லாம் அமெரிக்கா ஆட்சிக்குட்பட்ட நாடுகள் இல்லையே? அது போலத்தான் சோழர் பொற்காலத்தில் தமிழர் கலாசாரமும், மதமும், வாழ்வியலும். தெற்காசிய அரசகுடிகள் சோழனை கொப்பி அடிப்பதை ஒரு வழமையாக கொண்டிருந்தனர்.

கடலோர அரசுகள் திறையும் கூட செலுத்தினர். ஆனால் இதை வைத்து இவை எல்லாம் தமிழ் அரசுகள் என நிறுவுவது சுத்த பைத்தியக்காரத்தனம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இந்த காணொளியில் ஒரு இடத்தில்தானும் அவர் கம்போடியாவையோ, கெமர் பேரரசையோ, சூர்ய வர்மனையையோ பற்றி ஒரு வார்தைதானும் பேசவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

மன்னிக்கவும் இந்திய என்ற சொல்லை பயன்படுத்தியது, பிற்கால ஆராய்சியாளர்கள். 

கெமர் மொழியின் பயன்பாடு 9ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது. 

கெமர் பேரரசு கிபி 802-1432 வரையானது.

அங்கோர்வாட் அண்ணளவாக 1150 இல் கட்டப்பட்டது.

கெமர் பேரரசு எழ முன்னர், கெமர் மொழி உருவாகும் முன்னர்;

சென்லா என்ற அரசும் (கிபி 550-850)

(F)புனான் என்ற அரசும் (கிபி 50 -550)

இன்றைய தாய்லாந்து, கம்போடிய, வியட்நாம் நாடுகளை உள்ளடக்கி இருந்ததாக சீன பயணக் குறிப்புகள் சொல்கிறன.

புனானும், சென்லாவும் கிரந்த மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிரதத்தை ஆட்சி மொழியாகவும், இந்து சமய வழிபாட்டை கொண்டிருந்ததாயும் நம்பப் படுகிறது.

இங்கே வாழ்ந்த மக்கள் யார் என்பதில் யாருக்கும் தெளிவில்லை. அவர்கள் பல இனக் குழுக்களா அல்லது ஒரே இனக் குழுவா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த மக்களிடம் இருந்தே இன்நாளைய கம்போடிய மக்களும் வியட்நாமிய மக்களும் வந்துள்ளார்கள்.

புன்னானுக்கு 4ம் 5ம் நூற்றாண்டுகளில் இந்திய தொடர்புகள் அதிகரித்து, குப்தர்கள் மற்றும் பல்லவர்களின் தாக்கம் அங்கே அதிகரித்தது. பின்னநாளில் இது வலுவடைந்து சென்லா காலத்திலும் தொடர்ந்தது.

பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட சமஸ்கிரத குறிப்புகள் புனான் பற்றி உள்ளன ஆனால் அங்கே வாழ்ந்த மக்கள் பற்றி தகவல் இல்லை.

ஆனால் நிச்சயமாக பல்லவர்களுக்கும் புனான், சென்லாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பது மறுக்கவியலாது. 

ஆனால்;

1. இவ்வளவற்றையும் வைத்து 12ம் நூற்றாண்டில் ஆண்ட சூர்யவர்மன் தமிழன் என சொல்ல முடியாது.

2. பல்லவர்கள் தமிழ் மன்னர்களா? என்பதே விவாதத்துக்குரியதல்லவா? சேர, சோழ பாண்டியர்கள் தானே தமிழ் மூவேந்தர்கள்? பல்லவர்கள், சமஸ்கிரத, தெலுங்கு, தமிழ் மும்மொழி வேந்தர்கள். நிச்சயமாக சீமானின் வரையறையில் பல்லவர்கள் தமிழர்கள் கிடையாது. 

ஆக, இங்கே அடைய கூடிய துணிபுதான் என்ன?

1. அங்கர்வோட் எழுந்த காலத்தில் (12ம் நூற்றாண்டு) அங்கே இருந்தது கெமர் மொழி பேசும், சைவ/வைஸ்ணவ/பெளத்த கெமர் பேரரசு. தமிழ் அரசல்ல.

2. கெமர் பேரரசு எழ முன்னர் - அந்த பெருநிலப்பரப்பில் பல்லவர்கள், குப்தர்களுடன் மிக நெருங்கிய உறவை பேணிய இரு அரசுகள் இருந்தன. இதனால் ஏற்பட்ட தாக்கங்கள் கெமர் பேரரசிலும் இருந்தன (பெயரிடும் முறை, மதம்). 

Grantha Vowels.svg

கிரந்தம் எழுத்து வடிவம் 

Grantha Consonants.svg

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Maruthankerny said:

நான் மேலே எழுதிய பொது இந்த கருத்தை வாசித்து இருக்கவில்லை 
உங்கள் கருத்தை முதல் பக்கத்தில் பார்த்தவுடன் அதுக்கு பதில் எழுதி இணைத்த்துவிட்டு 
மேல் நோக்கி பார்க்கும்போது இதை நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் ...........

பல்லவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லுவது  ஆரியர்கள்தான் இந்தியாவின் ஆதிக்குடிகள் 
என்று சொல்லுவது போல் ஆகும்.
பல்லவர்கள் தமிழ்மொழியை மட்டும் உள்வாங்கி இருக்கவில்லை என்பதுதான் நாம் காணக்கூடியது 
எங்கு எங்கு எல்லாம் அரசுஅமைத்தார்களோ அங்கு இருந்த மொழிகளை முதன்மை கொண்டார்கள் என்பதுதான் உண்மை 
இப்போது நாம் கீழடிக்கு சென்றால் ... அல்லது சேர பேரசின் வரலாறுக்கு சென்றால் தென் இந்தியாவில் தமிழர் தாண்டி இன்னொருவர் கி மு  1000 -கி பி 300 வரை இருந்து இருக்க வாய்ப்பில்லை  சம்ஸ்கிருதம்  
பின்னாளின்  விஜயநகர ஊடாக பல்லலர்களிடம் வந்திருக்கலாம் என்பதிலும் விட சம்ஸ்கிருத மொழியையே பல்லவர்கள்தான்  உருவாக்கி இருக்கலாம் என்றுதான் தனிப்பட நான் நம்புகிறேன் இவர்கள் ஆந்திர பகுதியில் ஒரு தனித்த குழுமமாக  நெடும்காலம் வாழ்ந்தும் இருந்து இருக்கலாம் சம்ஸ்கிருதம்  தென் இந்தியாவில் இருந்து  மேல்நோக்கி சென்றது என்பதுதான் சாத்தியமானது. 

கிரந்தம் தமிழ் மொழியின் பிரிவுதான் இது இப்போதும்  தமிழ் நாட்டு எல்லையோடுதான் இருக்கிறது 
இவர்களுடைய எழுத்த்து வடிவம்தான் வேறு தவிர  ஒலி வடிவம் தமிழ்தான் 
கிரந்தம் பற்றிய  தெளிவான ஆய்வு பல முடிச்சுக்களை அவிழ்க்கும் காரணம்  
மலையாளம் ... சிங்களம் .... தெலுங்கு ...... தாய் (தாய்லாந்து)  ஜவானிஷ் (இந்தோனேசிய) திகளாரி (திகார்)  போன்ற எல்லா மொழிகளும் எழுத்துருவை கிரந்தத்தில் இருந்தே பெற்று இறுக்கின்றன. 

வெற்றி வேல்.....   வீர வேல்..... எல்லாம் தமிழ் எங்கும் தமிழ் 
என்பது எனது எண்ணம் இல்லை  ........ நான் நீண்ட நாள்களாக இவை பற்றி மிகவும் 
ஆவலுடன் வாசித்து அறிந்து வருகிறேன்  ... தமிழ் மொழிமன்னர்கள் அரசுகள் பற்றி அறிவதில்  ஆர்வம் உண்டு. நீங்கள் தெளிவாக  எழுத்துவதால்தான் உங்களுடன் இதுபற்றி பதில் எழுத விரும்பினேன்.
எங்கள் யாரிடமும் எந்த ஆதாரமும் இப்போது கையில் இல்லை 
சாத்தியமானது 
சாத்தியம் இல்லாதது 
என்ற நிலைப்பாட்டில் எங்கள் எண்ணங்களை வடிவமைக்கிறோம் என்றுதான் எண்ணுகிறேன். 

இங்கு மேலேயும் சிலர் அங்கு தமிளுமில்லை  ஒன்றும் இல்லை என்று எழுந்த மாத்திரத்தில்தான் எழுதுகிறார்கள்  அது எமது  அரசியல் பற்றி எழுதுவது என்றால் தங்களை நியாவாதிகள்  நடுநிலையாளர்கள்  என்று தங்களுக்குள்ளேயே ஒரு பெருமிதம் கொண்டவர்கள்  எழுத தொடங்கும்போது   
புலிகளும் கல்விமான்கள்  கவரிமான்கள் கஸ்தூரிமான்களை சுட்டார்கள் என்று தொடங்குவதுபோல.
புலிகள் சுட்ட நாலு மான்களின் பெயரை எழுதுங்கள்  அவர்கள் என்ன மான்கள் என்று பாப்போம் என்றால் எழுத மாடார்கள். 

அங்கோர்வார்டு கோவில் பல்லவர்களின் வடிவைப்பு என்பதை ஆர்க்கிடெக்ட் (மற்றும் வரலாறு) தெரிந்த எவனும் மறுக்க மாட்டான்  மறுக்கவும் முடியாது ......... எப்படி? என்பதுதான் தெளிவற்றது  

நீங்கள் எழுதிய பலவற்றோடு ஒத்துப்போனாலும் நீங்கள் பல்லவரை முழுக்க, முழுக்க தமிழர் என்பதில் எனக்கு போதிய நம்பிக்கை இல்லை. பல தமிழ் சார்பு அறிஞர்கள் கூட பல்லவரை தமிழர் என்பதாக கருதுவதில்லை.

நான் அறிந்தவரையில் ஆதி பல்லவர்கள் கிரந்தம், சமஸ்கிரதம் மட்டுமே பேசினர். பின்நாளில் நாடு தெற்கு நோக்கி நகர, தமிழ் பகுதிகளில் தமிழ் மற்றும் சமஸ்கிரதத்திகும், இப்போதைய கன்னட, ஆந்திராவில் கிரந்த, சமஸ்கிரததுக்கும் முன்னுரிமை கொடுத்தனர்.

கிரந்தம் என்பது ஒரு தனி மொழி அல்ல, அது பல மொழிகளின் கலவை. பாரசீக மொழியின் வழித்தோன்றல்.

பல்லவர்கள் ஈரானில் இருந்து வந்தவர்கள் என்பதும் ஒரு வகை எடுகோள்.

அங்கொர் வட்டில் இறங்கியதும் என் முகத்தில் அறைந்தது போல இருந்ததது பல்லவ கட்டிட கலையை ஒத்த கட்டிட அமைப்பே. ஆனால் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தால், இதைவிட மத்திய பிரதேச கஜுராஹோ கோவில்களுடனே உருவ ஒற்றுமை அதிகம் என்பதாகவும் பட்டது.

ஆகவே குருடன் யானை பார்த்த கதையாக நாம் அங்கோர்வாட்டை பார்க்க முடியாது.

மருது,

அங்கொர்வாட்டை கட்டிய அரசன் சூர்யவர்மன் என்பதும் அவன் கெமர் மன்னன் என்பதும். கெமர் பேரரசு (சிற்றரசல்ல) இருந்தது என்பதும் உலகம் ஏற்றுகொண்ட, சான்றுகள் அடிப்படையான வரலாறு.

இதை இல்லை என்பவர்கள் ஆதாரத்தை காட்டினால் நாமும் ஏற்போம். தமிழர்களின் உண்மையான பெருமைகளை பேச நான் என்றுமே பின்நின்றதில்லை.

 

38 minutes ago, nedukkalapoovan said:

 

இதில் எங்கே தெய்வநாயகம் ஐயா வாறார்? 

  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, nedukkalapoovan said:

 

ஆராயப்பட வேண்டிய ஒன்று. தவிர்த்து ஒதுக்க முடியாதது. 

தெய்வநாயகம் ஐயா சோழர்கள் வரலாறை மிக அழகாகச் சொல்கிறார். அதைவிட அதிகமாக தன் பெருமையும் பேசுகிறார். ஆனாலும் அவர் அங்கோவாட்டை சோழர்கள் கட்டியதாகச் சொல்கிறாரா ??? எந்த இடத்தில் சொல்கிறார் என்று குறிப்பிட்டால் பார்க்க வசதியாக இருக்கும்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

தெய்வநாயகம் ஐயா சோழர்கள் வரலாறை மிக அழகாகச் சொல்கிறார். அதைவிட அதிகமாக தன் பெருமையும் பேசுகிறார். ஆனாலும் அவர் அங்கோவாட்டை சோழர்கள் கட்டியதாகச் சொல்கிறாரா ??? எந்த இடத்தில் சொல்கிறார் என்று குறிப்பிட்டால் பார்க்க வசதியாக இருக்கும்.

தெய்வநாயகம் ஐயா ஒரு இடத்தில்தானும் அங்கர்வாட்டை பற்றியோ, கெமர், கம்போடியா பற்றியோ பேசவில்லை.

அவரின் இந்த காணொளியை, வன்னியன் பதிந்த அன்றே நான் பார்த்து விட்டேன்.

அதே போல நெடுக்கு பதிந்த இரெண்டாவது ஆங்கில விபரணமும் நான் கூறியவற்றையே கூறுகிறது. ஒரு இடத்திலேனும் இந்த கோயில் தமிழருடையது என சொல்லவில்லை.

ஜி ஜி பொன்னம்பலம், தமிழ் விவாதத்தில் தோக்கிறமாரி நிலை வந்தா, டக்கென்று ஆங்கிலம் பேசி, சேக்ஸ்பியர் அப்படிச் சொன்னார், சாக்ரடீஸ் இப்படிச் சொன்னார் என பேச்சை மாத்துவாராம்😂.

நெடுக்கும் அதுபோல சம்பந்தமே இல்ல்லாத, அல்லது எமது கருத்தை ஆதரிக்கும் 35, 55 நிமிட வீடியோக்களை போட்டால், பாக்கிற பஞ்சியில சனம் அவர் சொல்லுறதுதான் உண்மை என ஏற்கும் என நினகிறார் போல😂.

அவர்ட கெட்டகாலம் உந்த வீடியோ எல்லாம் நான் கம்போடியா போக முதலே பாத்தாச்சு 😂.

பிகு:1 எனது கருத்துக்கு ஆய்வு கட்டுரையில் இருந்து ஆதாரம் கேட்டுவிட்டு, தான் ரெண்டு யுடியூப் வீடியோவை இணைத்தார் பாருங்கள் - அங்கே நிற்கிறது நெடுக்கின் அறிவுசார் நேர்மை 😂

பிகு:2 தெய்வநாயகம் ஐயா ராஜேந்திரனின் மெய்கீர்தியை விட தன் மெய்கீர்தியையே அதிகம் பேசினாலும் - அவர் சொல்வது உண்மையே. ஆள் நிச்சயமாக விசயகாரன். அவரே சொல்வதுபோல intellectual arrogance - ஞானம் உள்ளவர்களிடம் இதை சகித்துகொள்ள நான் எப்போதும் தயார். ஆனா சில யுடியூப் மேதைகள் தாமும் intellectual arrogance காட்ட முனையும் போதுதான் செம கடுப்பாகும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

தெய்வநாயகம் ஐயா ஒரு இடத்தில்தானும் அங்கர்வாட்டை பற்றியோ, கெமர், கம்போடியா பற்றியோ பேசவில்லை.

அவரின் இந்த காணொளியை, வன்னியன் பதிந்த அன்றே நான் பார்த்து விட்டேன்.

அதே போல நெடுக்கு பதிந்த இரெண்டாவது ஆங்கில விபரணமும் நான் கூறியவற்றையே கூறுகிறது. ஒரு இடத்திலேனும் இந்த கோயில் தமிழருடையது என சொல்லவில்லை.

ஜி ஜி பொன்னம்பலம், தமிழ் விவாதத்தில் தோக்கிறமாரி நிலை வந்தா, டக்கென்று ஆங்கிலம் பேசி, சேக்ஸ்பியர் அப்படிச் சொன்னார், சாக்ரடீஸ் இப்படிச் சொன்னார் என பேச்சை மாத்துவாராம்😂.

நெடுக்கும் அதுபோல சம்பந்தமே இல்ல்லாத, அல்லது எமது கருத்தை ஆதரிக்கும் 35, 55 நிமிட வீடியோக்களை போட்டால், பாக்கிற பஞ்சியில சனம் அவர் சொல்லுறதுதான் உண்மை என ஏற்கும் என நினகிறார் போல😂.

அவர்ட கெட்டகாலம் உந்த வீடியோ எல்லாம் நான் கம்போடியா போக முதலே பாத்தாச்சு 😂.

பிகு:1 எனது கருத்துக்கு ஆய்வு கட்டுரையில் இருந்து ஆதாரம் கேட்டுவிட்டு, தான் ரெண்டு யுடியூப் வீடியோவை இணைத்தார் பாருங்கள் - அங்கே நிற்கிறது நெடுக்கின் அறிவுசார் நேர்மை 😂

பிகு:2 தெய்வநாயகம் ஐயா ராஜேந்திரனின் மெய்கீர்தியை விட தன் மெய்கீர்தியையே அதிகம் பேசினாலும் - அவர் சொல்வது உண்மையே. ஆள் நிச்சயமாக விசயகாரன். அவரே சொல்வதுபோல intellectual arrogance - ஞானம் உள்ளவர்களிடம் இதை சகித்துகொள்ள நான் எப்போதும் தயார். ஆனா சில யுடியூப் மேதைகள் தாமும் intellectual arrogance காட்ட முனையும் போதுதான் செம கடுப்பாகும் 😂

இப்படியானவற்றில் எழுதி எப்பயனும் இல்லை என்பது தெரிந்துதான் நான் எழுதாமல் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்படியானவற்றில் எழுதி எப்பயனும் இல்லை என்பது தெரிந்துதான் நான் எழுதாமல் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது.

உண்மைதான். நானும் கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

உண்மைதான். நானும் கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறேன்.

நீங்கள் பொறுமையாக வாசித்து எல்லாம் தெரிந்து வைத்து எழுதுகிறீர்கள். எனக்கு உங்கள் அளவு அறிவு இல்லை. கட்டாயம் நீங்கள் சரியானதை எழுதவேண்டும். பெண்கள் எழுதுவதற்கு நேரம் இன்மை இருக்கிறது. ஆனால் ஆண்களுக்கு நிறைய நேரம் இருக்கும் எழுத.😀

நீங்களும் எழுதாவிட்டால் பலர் எழுதுவது,  போடுவது உண்மை என்று எல்லாரும் நம்பிவிடுவார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.