Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

new.jpg

கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் (கோவிட் -19) காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம்(புதன்கிழமை) மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸினால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புக்கள் தினமும் அதிகரித்து வருவது சீன அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயிலேயே 242 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

அத்துடன், நேற்றைய 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 840 பேர் புதிதாக நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, மொத்தமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-ஒரே-நாளில்-242-ப/

14 hours ago, தமிழ் சிறி said:

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயிலேயே 242 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன

அடுத்தடுத்த மாநிலங்களுக்கும் பரவுகின்றது.

தொடரும் இந்த இறப்புக்கள் சீனாவின் மருத்துவம் சார்ந்த இயலாமையை  காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நோயாளிகளை  துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்றை  சீன நண்பர் ஒருவர் காட்டினார்.  நோயை மாற்ற முடியாத நிலை வரும் போது கொல்லும் படி சட்டம்  இயற்றப்பட்டுள்ளதாக கூறினார். 🤨

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

நோயாளிகளை  துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்றை  சீன நண்பர் ஒருவர் காட்டினார்.  நோயை மாற்ற முடியாத நிலை வரும் போது கொல்லும் படி சட்டம்  இயற்றப்பட்டுள்ளதாக கூறினார். 🤨

ஓ... கடவுளே.  இதன் மூலம்  இந்த நோய் தொற்றின், வீரியத்தை கணிக்க முடிகின்றது.
சிங்கப்பூரிலும்... இந்த வைரஸ் உள்ளவர்களை கண்டறிந்துள்ளார்கள்.
அப்படி யென்றால்... நமது நாட்டு வாசலுக்கு, வந்து கொண்டு இருக்கின்றது போல் தெரிகின்றது.

3 hours ago, nunavilan said:

நோயாளிகளை  துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்றை  சீன நண்பர் ஒருவர் காட்டினார்.  நோயை மாற்ற முடியாத நிலை வரும் போது கொல்லும் படி சட்டம்  இயற்றப்பட்டுள்ளதாக கூறினார். 🤨

 

செய்திகளைப் பார்ககும் போது சீன அரசு தன்னாலானவரை சிறப்பாகத்தான் முயற்சிக்கின்றது. ஆனாலும் அரச எந்திரத்தால் இதை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவது சாத்தியமில்லை. கோடிக்கணக்கான மக்கள் நெருக்கமாக வாழும்  இடத்தில் நோய்க் கிருமி தொற்றி பதினைந்து நாளுக்கு பிறகுதான் அறிகுறி தெரியும் என்னும் போது என்ன செய்ய முடியும்.  அரசை விமர்சித்து என்ன பயன். இனி பெருந்தொகையான மக்களை கொல்லும் நிலை ஏற்படவும் வாய்புள்ளது  இந்தியா இலங்கையில் இது பரவ தொடங்கினால் மிக பெரிய அழிவுகள் எற்படலாம்.

 

4 hours ago, nunavilan said:

நோயாளிகளை  துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்றை  சீன நண்பர் ஒருவர் காட்டினார்.  நோயை மாற்ற முடியாத நிலை வரும் போது கொல்லும் படி சட்டம்  இயற்றப்பட்டுள்ளதாக கூறினார். 🤨

பணக்கார சீனர்களுக்கு ஒரு வைத்தியமும் வறுமையில் உள்ளவர்களுக்கு இன்னொரு 'வைத்தியமும்' வழங்கப்படுவதாயும் ஒரு செய்தி உலாவுகின்றது. 

மா வோ சே துங் கண்ட சீன கம்யூனிசம்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

நோயாளிகளை  துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்றை  சீன நண்பர் ஒருவர் காட்டினார்.  நோயை மாற்ற முடியாத நிலை வரும் போது கொல்லும் படி சட்டம்  இயற்றப்பட்டுள்ளதாக கூறினார். 🤨

சீனா சிறீலங்காவிடமிருந்து பாடம் கற்றுள்ளதுபோல் தெரிகிறது. தனது மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாதவிடத்து அந்த மக்களை சுட்டு, அடித்து, வெட்டி, அமிலக்குண்டுகளும் போட்டுக் கொன்றுவிட்டால் பிரச்சனை தீர்ந்தது.🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

சீனா சிறீலங்காவிடமிருந்து பாடம் கற்றுள்ளதுபோல் தெரிகிறது. தனது மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாதவிடத்து அந்த மக்களை சுட்டு, அடித்து, வெட்டி, அமிலக்குண்டுகளும் போட்டுக் கொன்றுவிட்டால் பிரச்சனை தீர்ந்தது.🤔

பாஞ்ச்  அண்ணை...  
மாணவனிடம்  இருந்து, பாடம் கற்ற... ஆசிரியர் தான்... சீனா. 😛

கரன்சி மூலமும் பரவும் கொரோனா வைரஸ்..?

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும்பொருட்டு பயன்படுத்தப்பட்ட கரன்சிகள் சுத்தம் செய்யப்பட்டு பெட்டிகளில் தனிமைப்படுத்தப்படுகின்றன.

சீனாவில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மக்களுக்கு இடையேயான தொடர்பை குறைப்பது, பொது இடங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கரன்சி மூலம் வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சீன மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புற ஊதா ஒளி அல்லது அதிக வெப்பநிலையை பயன்படுத்தி யுவான் நோட்டுகளில் உள்ள கிருமிகளை நீக்கிய பின்பு தனிப்பெட்டிகளில் அடைத்து சீல் வைத்து 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

https://www.polimernews.com/dnews/100587/கரன்சி-மூலமும்-பரவும்கொரோனா-வைரஸ்..?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

கரன்சி மூலமும் பரவும் கொரோனா வைரஸ்..?

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும்பொருட்டு பயன்படுத்தப்பட்ட கரன்சிகள் சுத்தம் செய்யப்பட்டு பெட்டிகளில் தனிமைப்படுத்தப்படுகின்றன.

சீனாவில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மக்களுக்கு இடையேயான தொடர்பை குறைப்பது, பொது இடங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கரன்சி மூலம் வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சீன மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புற ஊதா ஒளி அல்லது அதிக வெப்பநிலையை பயன்படுத்தி யுவான் நோட்டுகளில் உள்ள கிருமிகளை நீக்கிய பின்பு தனிப்பெட்டிகளில் அடைத்து சீல் வைத்து 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

https://www.polimernews.com/dnews/100587/கரன்சி-மூலமும்-பரவும்கொரோனா-வைரஸ்..?

பொதுவாகவே மலசல கூடத்தை விட பணம் அசுத்தமானது...எத்தனை பேரின் கை மாறி ,வாயில் வைத்திருப்பார்கள் ,வைக்க கூடாத இடத்தில் வைத்திருப்பார்கள்...கட்டாயம் காசை  தொட்டால் கையை சுத்தமாய் கழுவ வேண்டும்  

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.