Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர் -அனந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர் -அனந்தி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை  முன்னெடுக்கின்றனர் -அனந்தி

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புதிதாகத் தோற்றம் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியாக இருக்கின்ற நிலையில் பலதரப்பட்ட விமர்சனங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த புதிய கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாமை காரணமாக பல விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர் என ஈழமக்கள் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தம்மிடம் சில இளையோர்கள் முகநூலில் இருக்கின்றார் என்பதை வைத்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுடைய விமர்சனங்களுக்கு எம்மால் விளக்கம் சொல்வதற்கு அப்பால், எங்களுக்கு ஒரு பொதுவான எதிரியாக இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டவேண்டிய அரசாக இலங்கை அரசு இருக்கின்ற படியால் அது என்ன செய்கின்றது அதன் நடவடிக்கைகளுக்கு எதிராக எவ்வாறு போராடலாம் என்பதைச் சிந்திக்கின்றவர்களாகத்தான் நாம் இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு மேலாக தாம் தேசியத்தில் கொள்கைப் பற்றுள்ளவர்களாக இருந்திருந்தால் ஓர் போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாவை 2010ஆம் ஆண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எவ்வாறு கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டு ஆதரித்திருந்தார்.போர்க்குற்றவாளியான மகிந்தவையும் ஆதரிக்கமாட்டேன், மைத்திரியையும் ஆதரிக்கமாட்டேன் என்று 2015ஆம் ஆண்டு நான் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுதான் என்னை கட்சியிலிருந்து விலக்குவதற்கு தீர்மானம் எடுக்கவைத்தது.

அதேபோன்று 2010ஆம் ஆண்டு வெளியாகிய விக்கிலீக்ஸில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தான் சர்வதேச விசாரணையைக் கோரவில்லை என்ற செய்தியையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.நான், விக்னேஸ்வரன் ஐயா எல்லோருமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்ளை ஒன்றாகவும் செயற்பாடு ஒன்றாகவும் உள்ளபடியால்தான் வெளியேறினோமே தவிர, ஆசனப் பங்கீட்டுக்காக அந்தக் கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் அல்ல.

மீண்டும் நாம் தெளிவாகக் கூறுகின்றோம் 2010 ஆம் ஆண்டு கொள்கை, கொள்கை… என்று பேசிக்கொண்டிருக்கின்ற இதே முன்னணியினர், தங்களுக்கு இருந்த நாடாளுமன்ற ஆசனப் பங்கீடு காரணமாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தியடைந்து கட்சியிலிருந்து வெளியேறினர். அவ்வாறு கொள்கை காரணமாக வெளியேறாமல் ஆசனப் பங்கீட்டுக்காக வெளியேறியவர் இன்று எம்மை சில முகநூல்கள் ஊடாக விமர்சிப்பதும் ஊடகங்கள் வாயிலாக விமர்சிப்பதும் மிகவும் மனவருத்தத்தை தருகின்றது.

ஏனென்றால் ஜனாநாயக ரீதியாக யாருமே அரசியலில் இறங்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. ஏன் எதற்காக இவர்கள் குத்தி முறிந்துகொண்டு இருக்கின்றார்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை.ஆனால் நான்கு, ஐந்து பேர் கொண்ட கூட்டாக எம்மைக் கூறுவதும் இந்தக் கூட்டணி மக்கள் மத்தியில் நிலைக்கப் போவதில்லை, தாங்கள்தான் மக்கள் மத்தியில் நிற்கப் போகின்ற கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியினராக தங்களை சித்தரித்துக் கொண்டு எங்களை விமர்சித்துக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பலவாறாகப் பேசி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-மக்கள்-முன்ன-6/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோதாரியும் விழங்க வில்லை

54 minutes ago, சுவைப்பிரியன் said:

ஒரு கோதாரியும் விழங்க வில்லை

அவர்களுக்கே விளங்கவில்லை என்ன பேசுகிறார்களென்று। அப்படி இருக்கும் போது உங்களுக்கு / எங்களுக்கு எங்க விளங்கப்போகுது। இப்படியே ஆளாளுக்கு சேறு பூசிக்கொண்டு கதை விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்। எல்லோருக்கும் வாய்தான் பெரிதாக இருக்கிறதே ஒழிய செயலில் ஒண்டையும் காணோம்।

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு கோதாரியும் விழங்க வில்லை

அதுதான் நல்லதும் ஆரோக்கியமானதும் கூட........😎

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழ் மக்கள் மீதும் ஈழத்தாயகம் மீதும் பற்றுறுதி இருந்தால்..

இந்தக் கூட்டணிக் கட்சிகள் எல்லாம்.. ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட... ஒரு பொது உடன்படிக்கையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டி இட்டு சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் நாம் பிரிக்கப்பட முடியாத சக்திகள் எமது மக்களுக்கான கொள்கையில் நாம் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை தான் கொண்டிருக்கிறோம்.. அது புலிகள் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன.. எமது மக்களின் அரசியல் உரிமை என்பது இந்த மண்ணில் எமக்கு முக்கியம் என்பதைச் சொல்ல வேண்டும்.

செய்வார்களா..??!

சும்மா அக்கால ஒருத்தர்.. இது புலிகளால் உருவான கூட்டணி என்கிறார்.. அது அப்படியே கட்டிக்காக்கப்படுகிறது என்கிறார்.. அவர் ஒருத்தரும் இல்லை.. மாவீரர் தினமே கொண்டாடக் கூடாது என்றவர்.. சிவஞானம் என்றவர்..

இவா.. இப்படிச் சொல்லுறா..

அங்கால கஜேந்திரகுமார் தான் தான் தமிழ் மக்களுக்காக உழைக்கின்றன் என்கிறார்..

உங்கள் எல்லோரினதும் குரல் தமிழ் மக்களுக்கானது என்றால்.. ஏன் ஒரே அணியில் நிற்க முடியாது.. வெவ்வேறு கட்சிகள் கூட்டணிகளைக் கொண்டிருந்தாலும்..

டக்கிளசை.. வரதராஜப்பெருமாளை.. முரளிதரனை.. விடுங்கள்.. அதுகள் திருந்தாத ஜென்மங்கள்.. திருந்தப் போறதும் இல்லை.. அதேபோல்.. சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு வால்பிடிப்போரும்.. அவர்களின் சுயலாபம் தான் நோக்கு.. அவர்களும் திருந்தமாட்டார்கள். 

மற்றவர்கள் இணையலாம் தானே. 

7 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு கோதாரியும் விழங்க வில்லை

 

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
ஈழமக்கள் சுயாட்சிக் கழகம்

இந்த பெயர்களுக்கிடையில் 6 வித்தியாசங்களாவது கண்டு பிடிக்க முடிகின்றதா? என்னால முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது. ஒவ்வொருவரும் தமிழ் மக்களை விழுங்கி ஏப்பமிட வெளிக்கிட்டுவிட்டார்கள் என்பது. ஒரு குட்டியில் ஊறி தேறியவர்கள் இவர்கள்.

16 hours ago, nedukkalapoovan said:

உண்மையில் தமிழ் மக்கள் மீதும் ஈழத்தாயகம் மீதும் பற்றுறுதி இருந்தால்..

இந்தக் கூட்டணிக் கட்சிகள் எல்லாம்.. ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட... ஒரு பொது உடன்படிக்கையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டி இட்டு சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் நாம் பிரிக்கப்பட முடியாத சக்திகள் எமது மக்களுக்கான கொள்கையில் நாம் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை தான் கொண்டிருக்கிறோம்.. அது புலிகள் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன.. எமது மக்களின் அரசியல் உரிமை என்பது இந்த மண்ணில் எமக்கு முக்கியம் என்பதைச் சொல்ல வேண்டும்.

செய்வார்களா..??!

சும்மா அக்கால ஒருத்தர்.. இது புலிகளால் உருவான கூட்டணி என்கிறார்.. அது அப்படியே கட்டிக்காக்கப்படுகிறது என்கிறார்.. அவர் ஒருத்தரும் இல்லை.. மாவீரர் தினமே கொண்டாடக் கூடாது என்றவர்.. சிவஞானம் என்றவர்..

இவா.. இப்படிச் சொல்லுறா..

அங்கால கஜேந்திரகுமார் தான் தான் தமிழ் மக்களுக்காக உழைக்கின்றன் என்கிறார்..

உங்கள் எல்லோரினதும் குரல் தமிழ் மக்களுக்கானது என்றால்.. ஏன் ஒரே அணியில் நிற்க முடியாது.. வெவ்வேறு கட்சிகள் கூட்டணிகளைக் கொண்டிருந்தாலும்..

டக்கிளசை.. வரதராஜப்பெருமாளை.. முரளிதரனை.. விடுங்கள்.. அதுகள் திருந்தாத ஜென்மங்கள்.. திருந்தப் போறதும் இல்லை.. அதேபோல்.. சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு வால்பிடிப்போரும்.. அவர்களின் சுயலாபம் தான் நோக்கு.. அவர்களும் திருந்தமாட்டார்கள். 

மற்றவர்கள் இணையலாம் தானே. 

நீங்கள் எல்லா தமிழ் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு ஒன்றாக போராடவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்। எங்களது எதிர்பார்ப்பும் அதுதான்। இங்கு உள்ள அநேகமான அரசியல்வாதிகள் சுய லாபத்துக்காக , தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கட்சிகளை நடாத்துபவர்களே ஒழிய வேறொன்றுமில்லை। எல்லோரும் ஒற்றுமை, தமிழர் உரிமை என்று பேசுவார்கள் ஆனால் ஒற்றுமையக்கமாட்டார்கள்। இதுதான் தமிழர்களின் சாபக்கேடு।

  • கருத்துக்கள உறவுகள்

(தமிழ் தேசியக்) காதலர்தினம்

11-ED040-D-8-DFA-481-B-AC30-8-FB8-C966-C

18 hours ago, நிழலி said:

 

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
ஈழமக்கள் சுயாட்சிக் கழகம்

இந்த பெயர்களுக்கிடையில் 6 வித்தியாசங்களாவது கண்டு பிடிக்க முடிகின்றதா? என்னால முடியவில்லை

இதெல்லாம் ஒற்றுமையின் சின்னங்கள்.
அதான் உங்களால வித்தியாசத்தை கண்டு பிடிக்க முடியல்ல.  
தமிழர்களுக்கு ஒற்றுமை இல்லை என்கிற ஆக்கள் ஏமாந்து போவினம். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.