Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று மதத்தவர்களுக்கும் ஒரே கோவில்”: ராகவா லோரன்ஸின் புது முயற்சி

Featured Replies

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மும்மதத்தினரும் வழிபடும் வகையில் ஒரு கோவிலைக் கட்டவுள்ளதாக நடிகரும் இயக்குனருமான ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், நடிகராகவும் இயக்குனராகவும் தனி முத்திரை பதித்துள்ள ராகவா லோரன்ஸ் பல விதமான சமூக பணிகளிலும் ஈடுபட்டு அனைவரின் மனதிலும் நீங்கா நன்மதிப்பை பெற்றுள்ளார். மேலும், அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் வசிக்க இல்லம் நடத்துகிறார். அவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்குகிறார். ஏழைகளுக்கு வைத்திய  சிகிச்சைக்காக நிதி உதவியும் அளிக்கிறார். திருநங்கைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார்.

 

202003040845096746_1_lare52s._L_styvpf.j

 

இந்த நிலையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை ஒன்றிணைக்கும் வகையில் புது முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளார். மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் வகையில் ஓரு ஆலயம் அமைக்க இருப்பதாக அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விடுத்திருந்த அறிக்கையில், மதங்களாலும், சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இந்த முயற்சி. நெருப்பிற்கும், பசிக்கும் சாதி மதம் தெரியாது. அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

lorance.jpg


         https://www.virakesari.lk/article/77038

  • தொடங்கியவர்
3 hours ago, ampanai said:

இது தொடர்பாக நடிகர் விடுத்திருந்த அறிக்கையில், மதங்களாலும், சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இந்த முயற்சி. நெருப்பிற்கும், பசிக்கும் சாதி மதம் தெரியாது. அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

திட்டம் நல்லாத்தான் இருக்கின்றது. வெற்றிபெறட்டும். மதக்கலவரங்கள் சாகட்டும் !

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மும்மதத்தினரும் வழிபடும் வகையில் ஒரு கோவிலைக் கட்டவுள்ளதாக நடிகரும் இயக்குனருமான ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், நடிகராகவும் இயக்குனராகவும் தனி முத்திரை பதித்துள்ள ராகவா லோரன்ஸ் பல விதமான சமூக பணிகளிலும் ஈடுபட்டு அனைவரின் மனதிலும் நீங்கா நன்மதிப்பை பெற்றுள்ளார். மேலும், அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் வசிக்க இல்லம் நடத்துகிறார். அவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்குகிறார். ஏழைகளுக்கு வைத்திய  சிகிச்சைக்காக நிதி உதவியும் அளிக்கிறார். திருநங்கைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார்.

 

202003040845096746_1_lare52s._L_styvpf.j

 

இந்த நிலையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை ஒன்றிணைக்கும் வகையில் புது முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளார். மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் வகையில் ஓரு ஆலயம் அமைக்க இருப்பதாக அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விடுத்திருந்த அறிக்கையில், மதங்களாலும், சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இந்த முயற்சி. நெருப்பிற்கும், பசிக்கும் சாதி மதம் தெரியாது. அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

lorance.jpg


         https://www.virakesari.lk/article/77038

நடிச்சது ஒரு சொதப்பல் படம். இதில் எங்கே பெரிதாய் முத்திரை பதித்தார் என்கின்றனர்.

ஒரு வழிபட்டு முறைக்கே எத்தனையோ இடர். இதில் எல்லோரும் ஒன்றாக .... சரி பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

 

மூன்று மதத்தவர்களுக்கும் ஒரே கோவில்”: ராகவா லோரன்ஸின் புது முயற்சி

தவறான  முயற்சி

அவனவன் தள்ளி  தள்ளி இருக்கும்  போதே அடித்துக்கொள்கிறான்

ஒரே வீட்டுக்குள்ள விட்டால்????

மதத்துக்கு மதம் பிடித்த நாட்டில்??????

Edited by விசுகு

  • தொடங்கியவர்
43 minutes ago, விசுகு said:

தவறான  முயற்சி

அவனவன் தள்ளி  தள்ளி இருக்கும்  போதே அடித்துக்கொள்கிறான்

ஒரே வீட்டுக்குள்ள விட்டால்????

மதத்துக்கு மதம் பிடித்த நாட்டில்??????

புலம்பெயர் நாடுகளில் பொதுவாக :
ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பல மதத்தவர்கள் இருப்பது போன்று;
ஒரு பாடசாலையில் பல மதத்தவர்கள் கல்வி கற்பது போன்று;

ஏன் ஒரு பாத வழிபாட்டு இடத்தில் பல மாதவழிபாடுகள் நடக்க முடியாது? முடியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

 

மூன்று மதத்தவர்களுக்கும் ஒரே கோவில்”: ராகவா லோரன்ஸின் புது முயற்சி

தவறான  முயற்சி

அவனவன் தள்ளி  தள்ளி இருக்கும்  போதே அடித்துக்கொள்கிறான்

ஒரே வீட்டுக்குள்ள விட்டால்????

மதத்துக்கு மதம் பிடித்த நாட்டில்??????

கோ மாதா ஜுஸ் குடிக்க வற்புறுத்தாதவரை எல்லாம் சரிதான் 😀.

47 minutes ago, ampanai said:

புலம்பெயர் நாடுகளில் பொதுவாக :
ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பல மதத்தவர்கள் இருப்பது போன்று;
ஒரு பாடசாலையில் பல மதத்தவர்கள் கல்வி கற்பது போன்று;

ஏன் ஒரு பாத வழிபாட்டு இடத்தில் பல மாதவழிபாடுகள் நடக்க முடியாது? முடியலாம்.

புலம் பெயர்ந்த நாடுகளில் மக்கள் சட்டத்திற்குப் பயம். சட்டமும் ஒழுங்கும் முடிந்தவரை பேணப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இது மிகக் கடினமான ஆனால்   நல்ல முயற்சி.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

மூன்று மதத்தவர்களுக்கும் ஒரே கோவில்”: ராகவா லோரன்ஸின் புது முயற்சி

தவறான  முயற்சி

அவனவன் தள்ளி  தள்ளி இருக்கும்  போதே அடித்துக்கொள்கிறான்

ஒரே வீட்டுக்குள்ள விட்டால்????

மதத்துக்கு மதம் பிடித்த நாட்டில்??????

தேடித்திரிய வேண்டியதில்லை.
இருந்த இடத்திலேயே நுளம்பு அடித்த மாதிரி அடித்துப் போட்டு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும்.. கைலாசா சனாதிபதி போல் ஆகனுன்னு ஆசை வந்திட்டுது. ஆசை வரலாம்.. ஆனால்.. ஆகனுன்னா.. அவரைப் போலாகனுமே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ampanai said:

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மும்மதத்தினரும் வழிபடும் வகையில் ஒரு கோவிலைக் கட்டவுள்ளதாக நடிகரும் இயக்குனருமான ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

உதென்ன புது விளையாட்டாய் கிடக்கு....😎

  • தொடங்கியவர்
Just now, குமாரசாமி said:

உதென்ன புது விளையாட்டாய் கிடக்கு....😎

கலப்பு மதத்தில் திருமணம் செய்த இருமனங்ளுக்கும் ஒரு ஆறுதலாக இருக்கட்டுமே   😆

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ampanai said:

திட்டம் நல்லாத்தான் இருக்கின்றது. வெற்றிபெறட்டும். மதக்கலவரங்கள் சாகட்டும் !

மதக்கலவரம் வரணும் இந்தியா எனும் நாடு சிதறணும் அப்போதுதான் இந்திய அமைதிப்படையால் அழிக்கப்பட்ட  எமது சகோதரஉயிர்களின்  ஆத்மாக்கள் சாந்தியடையும் .அவர்கள் செய்த செயலுக்கு இன்றுவரை மன்னிப்பாவது கோரினார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

இவருக்கும்.. கைலாசா சனாதிபதி போல் ஆகனுன்னு ஆசை வந்திட்டுது. ஆசை வரலாம்.. ஆனால்.. ஆகனுன்னா.. அவரைப் போலாகனுமே. 

ராகவா லாரன்ஸ் ஒரு பிராடு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவு போல் அணுகி பின் எதிராக செயல் பட்ட பச்சோந்தி இவர் எதுக்கெடுத்தாலும் ஒரு கோடி தருவன்  என்பார் உண்மையில் கொடுக்கப்படுதா என்றால் இல்லை . ஏன் மும்மதத்துக்கு கோவில் இலங்கையில் நாலுமதத்தவர்களும் வழிபடும்  கோவில் உள்ளது மதக்கலவரம் வராமலா உள்ளது ? அந்த கோவிலின் பெயர் சிவனொளிபாத மலை என்பதும் இங்குள்ளவர்களுக்கு தெரியும் ஒரு கூத்தாடியின் கூச்சலுக்கு இவ்வளவு தம் பிடிப்பு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.