Jump to content

கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

coronavirus-south-korea-720x450.jpg

கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன

இவற்றில் சில நிலையங்கள் இம் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், ஏனையவை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் மே மாதமளவில் சுமார் ஒன்பதரைக் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/கொரோனாவின்-தாக்கம்-சுமா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கைக்கு வேறு எந்த நாடும் எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாது. ஒரு நாட்டின் மீது பொருளாதார தடையை மனித உரிமை ஆணைக்குழுவால் விதிக்க முடியாது.

என்னால் முடியும் -  கொரோனா 🤪

4 hours ago, தமிழ் சிறி said:

மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன

 

Link to comment
Share on other sites

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

ஊடகங்கள மட்டும் இல்லை இலங்கைக்கு வெளியில் வாழும் இனப்பற்றார்களும் அடக்கம்.

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேவைகள் குறையும் பொழுது இறக்குமதி / உற்பத்தி குறைந்துதான் ஆகவேண்டும். 

மேலை நாடுகளில், மக்கள் வெளியில் செல்வது குறைந்துள்ளது. வீட்டில் இருந்தும் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஆகவே அவர்களின் உடுப்பிற்கான தேவைகள் குறைந்திருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:

தேவைகள் குறையும் பொழுது இறக்குமதி / உற்பத்தி குறைந்துதான் ஆகவேண்டும். 

மேலை நாடுகளில், மக்கள் வெளியில் செல்வது குறைந்துள்ளது. வீட்டில் இருந்தும் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஆகவே அவர்களின் உடுப்பிற்கான தேவைகள் குறைந்திருக்கும்.  

இந்தியாவில்... வாகனம் வைத்திருக்கும்  மக்கள் அதிகம் வீட்டில் இருப்பதால்....
பெற்றோலின்  தேவை குறைந்து.... விலை மலிந்துள்ளதாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

 

12 minutes ago, சுவைப்பிரியன் said:

ஊடகங்கள மட்டும் இல்லை இலங்கைக்கு வெளியில் வாழும் இனப்பற்றார்களும் அடக்கம்.

அந்த 'கிளுகிளுப்பு' கொள்ளும் 'இனப்பற்றாளர்களில்' நானும் ஒருவன்   🙂 

அதற்கான காரணம், சிங்கள தேசத்தின் பொருளாதாரம் முழுமையாக சிதைய வேண்டும் என்பது அல்ல. அங்கு எமது உறவுகளும் உள்ளார்கள் என்பது தெரியும். சிங்களவ மக்களின் பொருளாதாரமும் சரியாய் வேண்டும் என்பதல்ல. 

ஆனால், அரசின் பொருளாதாரம் அவரகளின் இராணுவ இயந்திரத்திற்கு தீனி போடுவதை இல்லமால் செய்யும் அளவிற்கு சரிய வேண்டும் என்பது எனது விருப்பம்.   

Link to comment
Share on other sites

இலங்கையை விட்டு ஓடும் வெளிநாட்டு முதலீடு / பணம் 

COVID-19 hits Lanka’s economy; outflows of Rs. 19.6bn in two weeks

By S. Rubatheesan
View(s): 1069

With the coronavirus (COVID-19) slowing down the global economy, foreigners have rushed to encash Treasury Bonds and Bills held by them in Sri Lanka, resulting in an outflow of Rs 19.6 billion in two weeks, the Central Bank said.

According to Central Bank statistics, Rs 8.23 billion of foreign outflow was recorded this week by Friday while last week Rs 11.42 billion government securities were encashed.

Monthly Monetary Policy Review issued by the Central Bank of Sri Lanka (CBSL) said this week that the escalation of the coronavirus (COVID-19) outbreak to a ‘global health emergency’ was likely to affect Sri Lanka’s economic performance.

“Sri Lanka’s economic links with China could be directly affected as significant volumes of consumer goods, intermediate goods and investment goods are imported from China. The likely slowdown of the global economy and disruptions to the supply chain could affect Sri Lanka’s merchandise and service exports as well as related logistics,” the CBSL Policy Review said while stressing that the slowdown in global tourist movements would affect Sri Lanka’s tourism sector, in addition to the direct impact of lower arrivals from China.

http://www.sundaytimes.lk/200308/news/covid-19-hits-lankas-economy-outflows-of-rs-19-6bn-in-two-weeks-395801.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

  உண்மைதான், நாமெல்லாம் போராட்ட காலத்தில் இல்லை, போராடி தோற்ற காலத்திலிருக்கிறோம் என்பதை  நமது சில ஊடகங்களும், பொழுதுபோக்கு தேச பற்றாளர்களும் மறந்து ஒரு மயக்கத்திலிருக்கிறார்கள்.

இலங்கையின் பொருளாதாரம் சரிகின்றது எனும்போதெல்லாம்  எம்மையும் அறியாமல் ஒரு வலி ஏற்படுகிறது,

தமிழகத்தில் கர்நாடகா அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரிநீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் ,அதுவரை தமிழகத்தில் கால்நடை,சம்பாபயிர், அது இரண்டையும் தாங்கி சுமக்கும் தமிழக விவசாயி எவன் செத்தாலும் எமக்கு கவலையில்லை என்பதுபோல் கர்நாடகம் நடந்து கொள்ளும் நிலையில்தான்  இலங்கை தமிழர் பகுதியின் வாழ்வியலும் 2009இன் பின்னர்  சிங்களவனில் தொங்கி கொண்டிருக்கிறது.

இலங்கை பொருளாதாரம்  கொஞ்சம் நிமிர்ந்தால்தான், ஏதாவது கொஞ்சம் சிங்களவன் நமக்கும் கிள்ளி போடுவான் என்ற நிலையில்  மானத்துக்காய் போராடிய ஒரே குற்றத்தால் மானம் கெட்ட நிலையில்...எம்மினம்.

கால் கிலோ மீனை வாங்கி ஏழுபேர் சாப்பிட்டும்  ஒரு கோழியை மாசத்தில் ஒரு தடவைகூட வாங்க பத்துமுறை யோசித்தும் வாழும் தாயக தமிழர் பற்றி,

ஒரு கிலோ மீனை ஒவ்வொருநாளும் ஒரு மனிதனே சாப்பிட்டு கொண்டும்,  ஒரு நாள்    போத்தல் விஸ்கி பார்ட்டிக்கு 5 கோழிகளை வறுத்து தின்னும்  நாமெல்லாம் எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாத   எம்மினம்  எப்படிதான் வாழ்க்கை செலவை சமாளிக்கிறது  என்பதை எப்போதான் புரிந்து கொள்ள போகிறோமோ?

சோற்றுக்காக சுதந்திரத்தை இழக்ககூடாது என்று  சிந்தனை நமக்கு வரலாம், நாங்கள் வயிறுமுட்ட பிரியாணி திண்டுகொண்டு அவர்களை மட்டும் சுதந்திரத்தை கவனிக்க சொல்லி யாரும் சிந்திக்ககூடாது அது தவறு.

Link to comment
Share on other sites

18 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார்.

சில தரவுகளை ஆதாரங்களுடன் பார்க்கலாம், முடிவை நீங்களே ஏற்படுத்தி கொள்ளலாம்: 

a) எங்கே இந்த ஆடை உற்பத்தி ஆலைகள் உள்ளன? இதனால் யாருக்கு அதிகம் இலாபம் ??

- The Board of Investment in Sri Lanka’s interactive map showing the location of Export Processing Zones in Sri Lanka in 2014* Source: BOI (2014) *Reproduced with the Board of Investment (BOI’s) permission in February 2014. The status of Industrial Parks (IPs) have been redefined as EPZs, although IPs are referred to on the BOI website) Investment (BOI, 2010). 

மூலம் : https://www.researchgate.net/figure/The-Board-of-Investment-in-Sri-Lankas-interactive-map-showing-the-location-of-Export_fig1_292881969

 

b) இலங்கையில் ஒருவரின் சராசரி வருமானம் ஆண்டு ஒன்றிற்கு எவ்வளவு? 

ஆளுக்கு பத்து இலட்சம் / வருடத்திற்கு என்கிறது ஆகக் குறைந்த மதிப்பு ( வரிக்கு பின்னர்). இந்த தொகையை இப்பெறுபவர்கள் எத்தனை பேர் தமிழர் தாயகத்தில் உள்ளனர்? மேலாக மலையக உறவுகள்?? 

மூலம் :: https://www.averagesalarysurvey.com/sri-lanka

 

Link to comment
Share on other sites

 

c) மலையக மக்களின் குருதியை 72 வருடங்களாக குடிக்கும் சிங்கள நாடு 

மொத்த தேசிய உற்பத்தி ~ 82 அமெரிக்க பில்லியன்கள் 
இதில் தேயிலை ஊடாக வருவது - 1.4 அமெரிக்க பில்லியன்கள் 

ஆனால், அந்த மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்ததாக இல்லை 

மூலம் ::   http://www.colombopage.com/archive_17B/Dec24_1514124607CH.php

d) இராணுவ செலவு : வருடத்திற்கு 2.2 அமெரிக்க பில்லியன்கள் !

மூலம் :: https://www.janes.com/article/87729/sri-lanka-raises-defence-budget

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

சில தரவுகளை ஆதாரங்களுடன் பார்க்கலாம், முடிவை நீங்களே ஏற்படுத்தி கொள்ளலாம்: 

a) எங்கே இந்த ஆடை உற்பத்தி ஆலைகள் உள்ளன? இதனால் யாருக்கு அதிகம் இலாபம் ??

- The Board of Investment in Sri Lanka’s interactive map showing the location of Export Processing Zones in Sri Lanka in 2014* Source: BOI (2014) *Reproduced with the Board of Investment (BOI’s) permission in February 2014. The status of Industrial Parks (IPs) have been redefined as EPZs, although IPs are referred to on the BOI website) Investment (BOI, 2010). 

மூலம் : https://www.researchgate.net/figure/The-Board-of-Investment-in-Sri-Lankas-interactive-map-showing-the-location-of-Export_fig1_292881969

 

b) இலங்கையில் ஒருவரின் சராசரி வருமானம் ஆண்டு ஒன்றிற்கு எவ்வளவு? 

ஆளுக்கு பத்து இலட்சம் / வருடத்திற்கு என்கிறது ஆகக் குறைந்த மதிப்பு ( வரிக்கு பின்னர்). இந்த தொகையை இப்பெறுபவர்கள் எத்தனை பேர் தமிழர் தாயகத்தில் உள்ளனர்? மேலாக மலையக உறவுகள்?? 

மூலம் :: https://www.averagesalarysurvey.com/sri-lanka

 

இது கிளிநொச்சியில் இருக்கிறது;இது தென் இலங்கை குஜராத்தி வம்சாவளியினரின் நிறுவனமானாலும், புலம் பெயர் தமிழர் சிலரின் கூட்டு முயற்சியிலேயே தொடங்கப்பட்டது.

கடந்த 10 வருடங்களில் எம்மமவ்ர்கள் நினைத்திருந்தால் இப்படியான முதலீடுகளை மேற்கொண்டு வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்திருக்கலாம்,ஆனால் ஆளுக்கு 15000 தொடக்கம் 20000 பவுண்ஸ் வரை செலவளித்து வெளி நாட்டுக்கு அழைத்து அங்கிருப்பவர்களுக்கு வெளிநாட்டு ஆசையை காட்டி அவர்களையும் இங்களைத்து எமது இனத்தை பலவீனப்படுத்தியது தான் மிச்சம்.  

இவற்றை செய்ய மாட்டீனம் ஆனால்

1. ஊரில் சிறிதாக இருந்த  கோவிலகளை எல்லம் பெருப்பித்தல்

2.தாங்கள் படித்த பெரிய அரச பாடசாலைக்கு கணனி வாங்குதல்/ மதில் கட்டல்

3.புலம்பெயர் நாட்டில் சாமத்திய சடங்கு செயதல் (செலவு £ 100,000 வரை)

4. எமது கலாச்சாரத்தில் இல்லாத கல்யாண மண்டபம் கட்டுதல.

 

இப்படியான தேவை இல்லாத வேலைகள் செய்யவது என்றால் முன்னுக்கு நிப்பீனம்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

இது கிளிநொச்சியில் இருக்கிறது;இது தென் இலங்கை குஜராத்தி வம்சாவளியினரின் நிறுவனமானாலும், புலம் பெயர் தமிழர் சிலரின் கூட்டு முயற்சியிலேயே தொடங்கப்பட்டது.

கடந்த 10 வருடங்களில் எம்மமவ்ர்கள் நினைத்திருந்தால் இப்படியான முதலீடுகளை மேற்கொண்டு வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்திருக்கலாம்,ஆனால் ஆளுக்கு 15000 தொடக்கம் 20000 பவுண்ஸ் வரை செலவளித்து வெளி நாட்டுக்கு அழைத்து அங்கிருப்பவர்களுக்கு வெளிநாட்டு ஆசையை காட்டி அவர்களையும் இங்களைத்து எமது இனத்தை பலவீனப்படுத்தியது தான் மிச்சம்.  

இவற்றை செய்ய மாட்டீனம் ஆனால்

1. ஊரில் சிறிதாக இருந்த  கோவிலகளை எல்லம் பெருப்பித்தல்

2.தாங்கள் படித்த பெரிய அரச பாடசாலைக்கு கணனி வாங்குதல்/ மதில் கட்டல்

3.புலம்பெயர் நாட்டில் சாமத்திய சடங்கு செயதல் (செலவு £ 100,000 வரை)

4. எமது கலாச்சாரத்தில் இல்லாத கல்யாண மண்டபம் கட்டுதல.

 

இப்படியான தேவை இல்லாத வேலைகள் செய்யவது என்றால் முன்னுக்கு நிப்பீனம்.

தகவலுக்கு நன்றி 

தேடிப்பார்த்ததில், இந்த நிறுவனம் பல நாடுகளில் கிளைகளை கொண்டிருந்தாலும், கொழும்பில் தலைமையகத்தை கொண்டுள்ளது; மகிந்தவுடன் நெருக்கத்தை கொண்டுள்ளது; பல வரி சலுகைகளை அவரிடம் பெற்று இரண்டு தொழிற்சாலைகளை வடக்கில் ஆரம்பித்தது, அண்ணளவாக 4000 பேரை வேலைக்கமர்த்தியுள்ளது. நல்ல விடயம். 

https://www.masholdings.com/global-presence.html#global-presence-overview

இந்த நிறுவனத்தின் மொத்த பெறுமதி 2பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். அதனுடன் தனிப்பட்ட தமிழர்களை ஒப்பிட முடியாது, பலரும் 1983ன் பின்னர் அகதிகளாக இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள்.

ஆக, ஒரு முதலீடாக செய்வதற்ககு பாரிய தொகை தேவை, மேலாக அரசியல் செல்வாக்கு தேவை. 

அது இல்லாத இடத்தில் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறன வழிகளில் தான் உதவிட முடியும். இல்லை என்றால் வேறு எவ்விதமாக புலம்பெயர் தமிழர் உதவிட முடியும் என்பதினை தெளிவுபடுத்துங்கள்  

 

Link to comment
Share on other sites

யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சராசரியாக  அண்ணளவாக 6%/வருடத்திற்கு வளர்ந்துள்ளது. அப்படியானால், பாதிக்கப்பட்ட, மீட்கப்பட்ட  தமிழர்களின் பொருளாதாரம் அதை விடவும் அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும். வளர்ந்திருக்கின்றதா? இல்லை என்றால் யார் காரணம்:  புலம்பெயர் செல்வந்தர்கள்? இல்லை பகுதிநேர / பொழுதுபோக்கு தேச பற்றாளர்கள் ??

தாயக மக்களுக்கு முயற்சி இல்லை என்றால், எவ்வாறு புலம்பெயர்ந்த அவர்களின் அதே உறவுகள் ஒப்பீட்டளவில் முன்னேறி இருக்கின்றார்கள்? ஆக, சிங்களம் தான் முன்னேற்றத்தை  தாயகத்தில் கட்டுப்படுத்துகின்றது என்பது உண்மையாகின்றது. 

புலம்பெயர் மக்களால் பொதுவாக புறக்கணிக்கப்படும் மலையக மக்களை பாருங்கள். அவர்கள் முன்னேறவில்லையா ? இல்லை முன்னேற்றம் மறுக்கப்படுகின்றதா? இல்லை அதற்கும் புலம்பெயர் தமிழர்கள் மீது தான் குறை சொல்ல முடியுமா???

Link to comment
Share on other sites

இலங்கையில் வறுமைக்கோடு என்பது நாள் ஒன்றிற்கு 900 ரூபாய்களை ஆளுக்கு உழைப்பது என்பது என சர்வதேச நிதி அமைப்புக்கள் கணக்கிடுகின்றன (2018/19 தரவு),

மேலும், 40% மக்கள்  இந்த வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆக, சிங்கள மக்களும் கூட பலரும் வறுமைக்கோட்டிற்கு கீழே தான் வாழுகின்றனர்.

ஆனால், இன்றும் இராணுவத்திற்கு 2.2 அமெரிக்க பில்லியன்களை செலவழிப்பது என்பது தமிழ் மக்களை ஒரு இராணுவ அடக்குமுறைக்குள், ஒரு உளவியல் அழுத்தத்திற்குள் வைத்திருக்கும் ஒரே நோக்கம். அதை முறிபடிக்க இன்று எம்மிடம் எந்த வழியோ இல்லை அரசியல் பலமோ இல்லை.

இவ்வாறான உலக பொருளாதார நெருக்கடிகளே மக்களை அரசிற்கு எதிராக போராட வைக்கும் வறுமைக்கோட்டின் கீழே வாழும் மக்களை அரசிற்கு எதிராக போராட வைக்கும். சர்வாதிகார, குடும்ப மற்றும் இராணுவ ஆட்சிகளை கூட பொருளாதார மந்தம் தடுக்கும்.

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இலங்கையில் வறுமைக்கோடு என்பது நாள் ஒன்றிற்கு 900 ரூபாய்களை ஆளுக்கு உழைப்பது என்பது என சர்வதேச நிதி அமைப்புக்கள் கணக்கிடுகின்றன (2018/19 தரவு),

மேலும், 40% மக்கள்  இந்த வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆக, சிங்கள மக்களும் கூட பலரும் வறுமைக்கோட்டிற்கு கீழே தான் வாழுகின்றனர்

image_a49eb5b83b.jpg 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 3/9/2020 at 10:47 AM, ampanai said:

தகவலுக்கு நன்றி 

தேடிப்பார்த்ததில், இந்த நிறுவனம் பல நாடுகளில் கிளைகளை கொண்டிருந்தாலும், கொழும்பில் தலைமையகத்தை கொண்டுள்ளது; மகிந்தவுடன் நெருக்கத்தை கொண்டுள்ளது; பல வரி சலுகைகளை அவரிடம் பெற்று இரண்டு தொழிற்சாலைகளை வடக்கில் ஆரம்பித்தது, அண்ணளவாக 4000 பேரை வேலைக்கமர்த்தியுள்ளது. நல்ல விடயம். 

https://www.masholdings.com/global-presence.html#global-presence-overview

இந்த நிறுவனத்தின் மொத்த பெறுமதி 2பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். அதனுடன் தனிப்பட்ட தமிழர்களை ஒப்பிட முடியாது, பலரும் 1983ன் பின்னர் அகதிகளாக இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள்.

ஆக, ஒரு முதலீடாக செய்வதற்ககு பாரிய தொகை தேவை, மேலாக அரசியல் செல்வாக்கு தேவை. 

அது இல்லாத இடத்தில் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறன வழிகளில் தான் உதவிட முடியும். இல்லை என்றால் வேறு எவ்விதமாக புலம்பெயர் தமிழர் உதவிட முடியும் என்பதினை தெளிவுபடுத்துங்கள்  

 

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

உதாரணமாக  100 வறியவர்களுக்கு உதவும் போது ஆளுக்கு ஒரு தையல் இயந்திரம் வேண்டி கொடுக்காமல் அதையெல்லம் சேர்த்து ஒரு தொழிற்சாலையாக அமைத்தால் அதனூடு வருமானம் வருமல்லவா

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

உதாரணமாக  100 வறியவர்களுக்கு உதவும் போது ஆளுக்கு ஒரு தையல் இயந்திரம் வேண்டி கொடுக்காமல் அதையெல்லம் சேர்த்து ஒரு தொழிற்சாலையாக அமைத்தால் அதனூடு வருமானம் வருமல்லவா

உண்மை. ஆனால், இன்றுள்ள மத்திய அரசியல் முறையால் அது பெரியளவில் சாத்தியமில்லை. 

குறைந்தபட்சம், மாகாண ஆட்சிக்குள், நேரடி வெளிநாட்டு முதலீடு வேறு அழுத்தங்களுக்கு ஆகாமல் அமுலாக்க முடியும் என்றால் சாத்தியமாகலாம். 

அதுவரை, சிறிய அளவிலேயே உதவிகளை செய்ய முடியும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Dash said:

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

பார்ரா ........ அண்ணன்  கிளம்பிட்டாறு தங்களுக்கு தெரிந்த  பொருளாதாரத்தை சொல்லி தருவதுதானே .  சொறிலங்கா புலம்பெயரை நேரடியாய் உதவி செய்ய விடமாட்டார்கள் எனும் அரசியலையும் புரியனும் .அம்பானி விழுந்து விழுந்து சொல்வது உங்களுக்கு  புரியவில்லையா ?

அல்லது வழக்கம்போல் புலம்பெயர் மீதான சேறடிப்பா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி 13703 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் மூன்றாமிடமும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா நான்காமிடமும் பெற்றுள்ளனர்.     விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 221257 பெற்று பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 228091 வாக்குகளுடன் முதலிடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 96485 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 44712 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.      
    • ஒரு பாரம்பரிய பத்திரிகையாம் வீரகேசரி இப்படி தமிழை  வதைக்குது .
    • இந்தப் போட்டியில் என்னை ஒருத்தரும் வெல்லமாட்டினம் போல இருக்கு! வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நன்றி!
    • 4 ஜூன் 2024, 10:50 GMT புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை       என்டிஏ* 295   என்டிஏ (பாஜக கூட்டணி) 295 seats இந்தியா** 231   இந்தியா (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) 231 seats மற்றவை 17   மற்றவை 17 seats *பாஜக கூட்டணி **எதிர்க்கட்சிகளின் கூட்டணி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 5:11 PM அண்மைத் தகவலைப் பார்க்க பக்கத்தைப் புதுப்பிக்கவும் முழு முடிவுகளையும் பார்க்க  தற்போது வரை வெளியாகியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மொத்தம் 40 தொகுதிகளில் வேட்பாளர்களின் நிலவரம் என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.   பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சசிகாந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாலகணபதி, வி.பொன் (பாஜக) மூன்றாம் இடம்: நல்லதம்பி (தேமுதிக) 2. வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கலாநிதி வீராசாமி (திமுக) இரண்டாம் இடம்: ஆர். மனோகர் (அதிமுக ) மூன்றாம் இடம்: ஆர்.சி. பால் கனகராஜ் (பாஜக) படக்குறிப்பு,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌர்ந்தரராஜன் (பாஜக) 3. தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) இரண்டாம் இடம்: தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) மூன்றாம் இடம்: ஜெ. ஜெயவர்தன் (அதிமுக) 4. மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தயாநிதிமாறன் (திமுக) இரண்டாம் இடம்: வினோஜ் (பாஜக) மூன்றாம் இடம்: எல் . பார்த்தசாரதி (தேமுதிக) 5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.ஆர் பாலு (திமுக) இரண்டாம் இடம்: ஜி பிரேம்குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: வி.என் வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்) 6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வம் ஜி (திமுக) இரண்டாம் இடம்: ராஜசேகர் இ (அதிமுக) மூன்றாம் இடம்: ஜோதி. வி (பாமக) 7. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜெகத்ரட்சகன் (திமுக) இரண்டாம் இடம்: எல். விஜயன் (அதிமுக) மூன்றாம் இடம்: கே.பாலு (பாமக) 8. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.எம் கதிர் ஆனந்த் (திமுக) இரண்டாம் இடம்: ஏசி சண்முகம் (பாஜக) மூன்றாம் இடம்: எஸ் பசுபதி (அதிமுக) 9. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கோபிநாத் கே (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ஜெயப்பிரகாஷ் வி (அதிமுக) மூன்றாம் இடம்: நரசிம்மன் சி (பாஜக)   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்பு படம் 10. தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மணி. எ (திமுக) இரண்டாம் இடம்: சௌமியா அன்புமணி (பாமக) மூன்றாம் இடம்: அசோகன். ஆர் (அதிமுக) 11. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அண்ணாதுரை சி.என். (திமுக) இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக) 12. ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக) இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக) மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக) 13. விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக) இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக) மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக) 14. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மலையரசன் டி (திமுக) இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி) 15. சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக) இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக) மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக) 16. நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக) மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக) 17. ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக) இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி ) 18. திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக) 19. நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஆ.ராசா (திமுக) இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக) மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக)   படக்குறிப்பு,கோயம்புத்தூர் வேட்பாளர்கள், அண்ணாமலை (பாஜக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), கணபதி ராஜ்குமார் (திமுக) 20. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக) இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக) மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக) 21. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக) இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக) மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக) 22. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக) இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக) மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக) 23. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக) 24. திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: துரை வைகோ (மதிமுக) இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன். பி (அமமக) 25. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அருண் நேரு (திமுக) இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக) மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக) 26. கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக) மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக) படக்குறிப்பு,சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), மா.சந்திரகாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக) 27. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக) இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக) 28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக) மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக) 29. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி) 30. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: முரசொலி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக) 31. சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக) மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக)   பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 32. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: வெங்கடேசன் எஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக) மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக) 33. தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக) இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக) மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக) 34. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக) மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக) படக்குறிப்பு,ராமநாதபுரம் வேட்பாளர்கள் நவாஸ் கனி (திமுக கூட்டணி), ஜெய பெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை) 35. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்) இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை) மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக) 36. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக) இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ரோவெனா ரூத் ஜேன் ஜே (நாம் தமிழர் கட்சி) 37. தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக) இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக) மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக)   படக்குறிப்பு,திருநெல்வேலி வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜான்சி ராணி (அதிமுக), ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்) 38. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராபர்ட் பிரூஸ் சி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக) மூன்றாம் இடம்: சத்யா (நாம் தமிழர் கட்சி) 39. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக) மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக) 40. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக) மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி) https://www.bbc.com/tamil/articles/c51137wpdpvo
    • இவ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் திமுக்கா கூட‌ தொங்காம‌ இருந்தால் இவ‌ர்க‌ளுக்கும் பிஜேப்பி நிலை தான்.............என்ன‌ பிஜேப்பிய‌ விட‌ இவ‌ர்க‌ளுக்கு கூடுத‌லான‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இருக்கு அம்ம‌ட்டும் தான்   த‌னித்து நின்று இருந்தால் சில‌ தொகுதிக‌ளை இவ‌ர்க‌ள் வெல்வ‌தே சிர‌ம‌ம்...................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.