Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kaalee said:

அக்காவின் கற்பித்தல் பற்றியும்  அவாவின் பண்புகள் பற்றியும், அவாவின் மாணவர்களின் கருத்துக்களை  பார்த்தேன். மிகவும் பெருமையாக இருந்தது, இப்படிப்படட ஒரு சிறந்த ஆசானுடன் தொடர்பில் இருப்பதுபற்றி 

அக்கா  உங்களை போன்றவர்களின்  சேவை தமிழ் சமூகத்துக்கு தேவை , உங்களின்   ஓய்வுக்காலத்தில், தமிழ்ச்சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம்..

அக்காவை பற்றி மாணவர்களின் கருத்துக்கள் 

BIOL4100
😎awesome
Aug 5th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Grade: A
Textbook: Yes
By far the best Biology professor I have had at AUM. She truly cares about you understanding the information and welcomes questions. I would take her again without any questions asked. My understanding of Developmental Biology has expanded thanks to Dr. V. If there is one thing I want you to take from this rating would be to take her!

 

BIO2110
😎awesome
Aug 24th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Textbook: No
I love love love love love love love Dr. V. If I could take her for the rest of my classes that I needed to graduate, I would! She is so caring and sweet. She is VERY helpful! She will meet with you outside of class and she's easy accessible. She really wants her students to achieve. She really knows how to explain what you need to know also!

வணக்கம். உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி. மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த நிலையை அடைய நிறைய உழைத்தேன்.மிகச்சில மாணவர்களே மினக்கெட்டு  ஒன்லைனில் போடுவார்கள். 2017 முடிய மருத்துவ  கல்லூரியில் சேர்ந்ததால் ஒன்லைன் review கள்  இல்லாமல் போய்விட்டது. அல்லது இன்னும் நிறைய வந்திருக்கும்  மற்றவர்கள் எல்லாம் பல்கலை கழக internal website இல் தான் போடுவார்கள். நிறைய ஈமெயில் அனுப்புவார்கள். பூக்கள், வாழ்த்து மடல்கள், கைவேலைகள் எல்லாம்  எல்லாம் கொண்டுவந்து தருவார்கள். தமக்கு உள்ள கஷ்டங்களை, மனக்குறைகளை சொல்லி ஆறுதல் கேப்பார்கள். அமெரிக்க மாணவர்கள் நன்றாக படித்து உழைப்பவர்கள் . நல்ல  படிப்பிக்கும் ஆசிரியர்களை பெரிதும் மதிப்பார்கள். வேளைக்கு போனால் எனக்கு நேரம் போவதே தெரியாது. மனம் அவ்வளவு சந்தோசமாக இருக்கும். இப்பவும் பழுகாமம் இல்லது சிறுமியர்களுக்கு Skype வகுப்புகள் எடுக்கிறேன் . அநாதை ஏழை சிறுமியர் என்பதால் self confidence வளரவும்  தமது சோசியல்ஸ்டாட்ஸ் ஐ பற்றி களவழி படாமலும் இருக்க professional மற்றும் personal development  சொல்லிக்கொடுக்கிறேன். நிச்சயம்  யாழ்ப்பாணத்தில் கொஞ்சக்காலம் இருந்து எமது மக்களுக்கு ஏதவாது வகையில் உதவ வேண்டும் என்று ஒரேய ஆர்வம். நேற்றுகூட ஒரு யாழ் பத்திரிகை ஆசிரியரோடு இதைப்பற்றி கதைத்தேன். 

அக்கா உங்களின் பசிதீர்க்கும் பணியும் தொடரட்டும் 

 

  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 07:33, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!

தினசரி சுடு தண்ணீர் பருகுவதால் உடலுக்கும் மூட்டு வலிகளுக்கும் நல்லதென பல வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள். இது எந்தளவிற்கு உண்மை?
அத்துடன் மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் சுடு தண்ணீர் அருந்தலாமா?
மருந்துகள் பாவிப்பவர்கள் மஞ்சள், இஞ்சி போன்றவற்றை உண்ணலாமா?

பொதுவாகவே சுடுதண்ணீர் உடம்புக்கு நல்லம் என்று எல்லோருக்கும் தெரியும். தடிமன், சைனஸ்,தொண்டை நோ, சமிபாடு, உடல் நிறை குறைய (தேன்  சேர்த்து விடிய வெள்ளன குடிக்கலாம், அல்லது சூடான  கிறீன் டீ ( நச்சுப்பொருட்கள் உருவாவதை குறைக்கும் - Freeradicals ), செமிக்க உதவும். சுடுநீர் ( தேசிக்காய் புளி சேர்க்கலாம்) வியர்க்க வைக்கும். அதனுடன் சேர்ந்து நச்சு வாயுக்கள், கழிவுகள் வெளியேறும். சுடுதண்ணி குடிக்கும்போது உடனே தசை சுருங்கும் ஆனால் ரத்த ஓட்டம் அதிகரித்து தசைகள் தளர்வடைந்து ,  தசை , மூட்டு வலிகள் சுகமாகும். எமது ரத்தக்குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் சுருங்கி விரிவதாலேயே இரத்த ஓட்டம் ஒழுங்காக நடக்கிறது. சுடுநீர் இதனை சீராக்கி ரத்த அழுத்தத்தை சரிப்படுத்தும். படுக்கபோகும்போது  சுடுநீர் குடித்தால் நிம்மதியான  நித்திரை வரும், இரவில் வரும் food cravings வராது. பொதுவாகவே இளஞ்சூட்டு நீர் தான் உடலுக்கு மிகவும் உவந்தது . எனது அனுபவத்தில் ஓரளவு சுடுதண்ணீர் ஒவ்வொரு நாளும் குடித்தால் நல்லா செமிக்கும் , ஓரளவு மெலியலாம்.  மருந்துகள் எடுப்பவர்கள் கொதிநீரை ஒவ்வொருநாளும் குடிப்பது கூடாதென ஆய்வுகள் கூறுகின்றன.  சுடுதண்ணி குடிப்பவர்கள் இளமையான தோற்றத்துடனும் , நல்ல குணம் படைத்தவர்காளாகும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன (இது எனது தந்தைக்கு பொருந்தும்)

இஞ்சி மஞ்சள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் (Zingiberaceae family). Blood pressure diabetes மருந்துகள்  எடுக்கும்போது வயிற்றில் கொஞ்சம் அமிலத்தன்மையை தன்மையை கூட்டும் . ஆனால்  நாங்கள் சிறு வயதில் இருந்தே இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிடுபவர்கள். எமது உடல் இதற்கு பழகி இருக்கும். அத்துடன் உணவில் சேர்த்து சமைப்பதால் இந்த மருந்துகளுடன் interfere பண்ணாது. வெள்ளைகள்  Turmeric , ginger capsules குடிப்பது வழக்கம். அவர்களுக்குத்தான் இவ்வாறான பிரச்சனைகள் வரும். மஞ்சள் இஞ்சியினால் மிகக்கூடிய பலன்கள் உண்டு. அதனால் விலை கூடினாலும் பரவாயில்லை என்று Organic மஞ்சள் இஞ்சி நித்தமும் சமையலில்  பாவிப்பது நன்று.

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2020 at 10:48, ரதி said:

சாப்பிட்ட உடனே கிறீன் டீ குடிப்பது உடம்பிற்கு நல்லதா /கூடாதா  என்றும் சொல்லுங்கள் நில்மினி 

தேயிலையில் இருக்கும்  Tannin என்னும் மூலப்பொருள்  எமது சாப்பாட்டில் இருக்கும் புரதம் மற்றும் மாப்பொருட்கள் , அவற்றை சமிபாடடைய செய்யம் நொதியங்கள் இவற்றுடன் தாக்கமடைந்து உணவு செமிப்பதை குறைக்கும். இதனால் செமிக்க மிகவும் நேரம் எடுப்பதுடன் மிகவும் அசௌகரியமாகவும் இருக்கும். என்றபடியால் எந்த தேநீரும் சாப்பிட 2 மணித்தியாலத்துக்கு முன் அல்லது பின் தான் குடிக்க வேணும் ரதி 

Edited by nilmini
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

பொதுவாகவே சுடுதண்ணீர் உடம்புக்கு நல்லம்

நேரம் எடுத்து விரிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி நில்மினி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2020 at 06:26, உடையார் said:

 

மன்னிகவும் நில்மினி, உங்கள் பதிவை தவறவிட்டுவிட்டேன். நன்றி பயனுள்ள தகவல்களுக்கு. நான் இப்ப காலை எழுந்தவுடன்  முருங்கை வல்லாரை இலைகளை பொடி செய்து குளிசைகளாக எடுக்கின்றேன், பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றேன். இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா? குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் கிடைக்கா, அதனால் இப்படி எடுக்க நினைத்தேன். வீட்டுக்குள் தான் காய வைத்தது 

20200506-155202.jpg

 

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

உடையார் வீட்டிலேயே செய்கிறார் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

 

குமாரசாமி, இவை நான் வீட்டில் காய வைத்து பவுடரக்கி செய்தவை. குளிசை செய்யும் இயந்திரமும் குளிசைகளும் ebay இல் வாங்கினேன். கடைசி மகனிடம் கொடுத்தேன் செய்ய சொல்லி, அவர்தான் கிழமைக்கு 200nos செய்வார். நீங்கள் காய்ந்த வல்லாரை முருங்கை இலைகளை தமிழ்கடைகளில் வாங்கி பவுடராக செய்யலாம், இவை கடைகளில் வாங்க முடியாது. அங்கு இல்லாவிட்டால், தேவை என்றால் தனிமடலில் விலாசம் அனுப்புங்கள், என்னிடம் முருங்கை இலை குளிசைகள் அதிகமிருக்கு அனுப்பிவிடுகின்றேன்

குளிசை:

https://www.ebay.com.au/sch/i.html?_nkw=Empty Vegetable Capsules

இயந்திரம்:

https://www.ebay.com.au/itm/100-Holes-Capsule-Filler-Pill-filler-Filling-Machine-for-size-0/164184578360?hash=item263a29d938:g:e-oAAOSwS51er4Dv

https://www.youtube.com/watch?v=uvSkshSX520

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

இவை தொடர்ந்து மூன்று கிழமைக்கு மேல் எடுக்கின்றேன், எடுத்து சிறிது நேரத்தில் உடம்பில் ஒரு புத்துணர்வு. நன்றாக வேலை செய்கின்றது. பிள்ளைகளும் விரும்பி எடுக்கின்றார்கள் காலையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இவை தொடர்ந்து மூன்று கிழமைக்கு மேல் எடுக்கின்றேன், எடுத்து சிறிது நேரத்தில் உடம்பில் ஒரு புத்துணர்வு. நன்றாக வேலை செய்கின்றது. பிள்ளைகளும் விரும்பி எடுக்கின்றார்கள் காலையில்

பதில் போட மிகுந்த நாட்கள் எடுத்துவிட்டேன். மன்னிக்கவும். எனக்குத்தெரிந்து முறைப்படி காயவைத்து பவுடர் பண்ணவேணும் என்று கேள்விப்பட்டேன். அப்படி முறையை பின்பற்றாவிட்டால் அதன் பலன் அவ்வளவு கிடைக்காது என்று. ஆனால் உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கிறது. என்றபடியால் இந்த குளுசைகளை எடுப்பது நன்மைதான். பொதுவாக பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைத்து விற்கப்படும் எதுவும் கூடாது. மற்றம்படி Frozen மற்றும் காயவைத்த உணவுகள் பவுடர்கள் எல்லாமே நல்லம் தான் 

11 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் வீட்டிலேயே செய்கிறார் போல.

நான் முருங்கை, வல்லாரை, வேப்பம் பவுடர் capsule களை   ISHA யோகா ஆஸ்ரமத்தில் வாங்கினேன் (அமெரிக்காவிலும் (Mcminville, TN), இந்தியாவிலும் (Coimbatore)  https://www.ishalife.com/usa/catalogsearch/result/?q=+Capsule  https://www.ishalife.com/in/neem-turmeric-powder-in-veg-caps-combo-pack-100nos/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:

பதில் போட மிகுந்த நாட்கள் எடுத்துவிட்டேன். மன்னிக்கவும். எனக்குத்தெரிந்து முறைப்படி காயவைத்து பவுடர் பண்ணவேணும் என்று கேள்விப்பட்டேன். அப்படி முறையை பின்பற்றாவிட்டால் அதன் பலன் அவ்வளவு கிடைக்காது என்று. ஆனால் உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கிறது. என்றபடியால் இந்த குளுசைகளை எடுப்பது நன்மைதான். பொதுவாக பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைத்து விற்கப்படும் எதுவும் கூடாது. மற்றம்படி Frozen மற்றும் காயவைத்த உணவுகள் பவுடர்கள் எல்லாமே நல்லம் தான் 

நான் முருங்கை, வல்லாரை, வேப்பம் பவுடர் capsule களை   ISHA யோகா ஆஸ்ரமத்தில் வாங்கினேன் (அமெரிக்காவிலும் (Mcminville, TN), இந்தியாவிலும் (Coimbatore)  https://www.ishalife.com/usa/catalogsearch/result/?q=+Capsule  https://www.ishalife.com/in/neem-turmeric-powder-in-veg-caps-combo-pack-100nos/

நன்றி நில்மினி உங்கள் பதிலிற்கு. நான் நிழலில் முறையாகதான் காயவைத்தேன், வெயிலில் வைக்கவில்லை. 

20 minutes ago, nilmini said:

 

 

Jogger's Lungs Collapsed After Running With Facemask. Here Is Why You Should Avoid Working Out With Masks

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/joggers-lungs-collapsed-after-running-with-facemask-here-is-why-you-should-avoid-working-out-with-masks/photostory/75860611.cms?picid=75860645.

முக கவசம் அணிவதனால் சுவாசப்பைக்கு பிரச்சனை உண்டா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

51 minutes ago, nilmini said:

நான் முருங்கை, வல்லாரை, வேப்பம் பவுடர் capsule களை   ISHA யோகா ஆஸ்ரமத்தில் வாங்கினேன் (அமெரிக்காவிலும் (Mcminville, TN), இந்தியாவிலும் (Coimbatore)  https://www.ishalife.com/usa/catalogsearch/result/?q=+Capsule  https://www.ishalife.com/in/neem-turmeric-powder-in-veg-caps-combo-pack-100nos/

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான் 

Organic Neem Capsules

20200522-111020.jpg

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நன்றி நில்மினி உங்கள் பதிலிற்கு. நான் நிழலில் முறையாகதான் காயவைத்தேன், வெயிலில் வைக்கவில்லை. 

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/joggers-lungs-collapsed-after-running-with-facemask-here-is-why-you-should-avoid-working-out-with-masks/photostory/75860611.cms?picid=75860645.

முக கவசம் அணிவதனால் சுவாசப்பைக்கு பிரச்சனை உண்டா? 

Mask போட்டுகொண்டு ஓடும்போது சாதாரணமாக உள்ளெடுக்கும் மூச்சை எடுப்பதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். அதன்போது இதயத்துடிப்பு அதிகமாகும். அந்தாளுக்கு ஏதாவது இருதய பிரச்சனை இருந்திருக்கலாம். ஏனென்றால் கஸ்ரப்பட்டு மூச்சை எடுக்கும்போது ஏலாமல் போய்விட்டால் ஓடாமல் நின்றுவிடுவார்கள். இந்த jogger  இப்படி  ஆகி விழுமட்டும் ஓடியிருக்கமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மலை ஏறுபவர்கள் , SCUBA diving செய்பவர்கள் மாஸ்க்கை போட்டுகொண்டு பயிற்சி செய்வார்கள். அப்படி செய்யும் போது  அவர்களின் நுரையீரல் வலுப்பெற்று  கொஞ்ச ஒட்ஸிசன் இருக்கும்போதும் வலுவாக வேலை செய்யும். மலையில் ஏறும்போது காற்றின் அளவு குறைந்து 8000 மீட்டர் அளவில் மனிதர்களுக்கு தேவையான ஒட்சிசன் அளவு உயிர் வாழ போதாதமல் இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடங்களில் வாசிக்கியும் மக்களின் ரத்தத்தில் செங்குருதி  கலங்கள் அளவு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் Hb  தான் ஒட்சிசனை நுரை ஈரலில் இருந்து உடல் முழுதும் கொண்டு செல்லும். எனவே உயர இடங்களில் போய் வாழ்ந்தால் நாளடைவில் செங்குருதி கலங்கள் அதிகமாகிவிடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, உடையார் said:

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான்

 

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nilmini said:

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

உங்கள் இடத்தில் எல்லா வகையான மரங்களும் வைக்கக் கூடிய காலநிலை தானே? அப்புறம் என்ன தொடங்க வேண்டியது தானே.

47 minutes ago, உடையார் said:

 

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான் 

Organic Neem Capsules

20200522-111020.jpg

 

 

 

உடையார் எதுக்கும் மனைவியிடம் சொல்லி ஒரு நாவூறு பார்க்கிறது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் இடத்தில் எல்லா வகையான மரங்களும் வைக்கக் கூடிய காலநிலை தானே? அப்புறம் என்ன தொடங்க வேண்டியது தானே.

உடையார் எதுக்கும் மனைவியிடம் சொல்லி ஒரு நாவூறு பார்க்கிறது நல்லது.

அலபாமா tropical பெல்ட்டுக்கு நல்ல மேல இருக்கு. என்றபடியால் 3, 4 வருசத்துக்கு ஒருக்கா snow வே வரும். 3 மாசம் நல்ல குளிர். ஒரு மரமும் தப்பாது. என்றாலும் எரிச்சல் பழக்கம் கூடாதுதான்😀

உடையார் வேப்பிலையாலேயே  சுத்திப்போடச்சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nilmini said:

உடையார் வேப்பிலையாலேயே  சுத்திப்போடச்சொல்லுங்கோ 

அப்புறம் ஆடத் தொடங்கினால் என்னவாம் செய்யிறது?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

Mask போட்டுகொண்டு ஓடும்போது சாதாரணமாக உள்ளெடுக்கும் மூச்சை எடுப்பதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். அதன்போது இதயத்துடிப்பு அதிகமாகும். அந்தாளுக்கு ஏதாவது இருதய பிரச்சனை இருந்திருக்கலாம். ஏனென்றால் கஸ்ரப்பட்டு மூச்சை எடுக்கும்போது ஏலாமல் போய்விட்டால் ஓடாமல் நின்றுவிடுவார்கள். இந்த jogger  இப்படி  ஆகி விழுமட்டும் ஓடியிருக்கமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மலை ஏறுபவர்கள் , SCUBA diving செய்பவர்கள் மாஸ்க்கை போட்டுகொண்டு பயிற்சி செய்வார்கள். அப்படி செய்யும் போது  அவர்களின் நுரையீரல் வலுப்பெற்று  கொஞ்ச ஒட்ஸிசன் இருக்கும்போதும் வலுவாக வேலை செய்யும். மலையில் ஏறும்போது காற்றின் அளவு குறைந்து 8000 மீட்டர் அளவில் மனிதர்களுக்கு தேவையான ஒட்சிசன் அளவு உயிர் வாழ போதாதமல் இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடங்களில் வாசிக்கியும் மக்களின் ரத்தத்தில் செங்குருதி  கலங்கள் அளவு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் Hb  தான் ஒட்சிசனை நுரை ஈரலில் இருந்து உடல் முழுதும் கொண்டு செல்லும். எனவே உயர இடங்களில் போய் வாழ்ந்தால் நாளடைவில் செங்குருதி கலங்கள் அதிகமாகிவிடும் 

நன்றி விளக்கத்திற்கு. இப்ப விளங்குகின்றது. 

1 hour ago, nilmini said:

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

உங்கள் இடத்தில் எல்லா வகையான மரங்களும் வைக்கக் கூடிய காலநிலை தானே? அப்புறம் என்ன தொடங்க வேண்டியது தானே.

உடையார் எதுக்கும் மனைவியிடம் சொல்லி ஒரு நாவூறு பார்க்கிறது நல்லது.

 

47 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் ஆடத் தொடங்கினால் என்னவாம் செய்யிறது?

ஆமாம் நில்மினி, இது நான் தேடி வாங்கி வைத்தது. எல்லா வீடுகளிலுமில்லை. முதலிருந்த வீட்டில் வேம்பு வைத்து பூ பிடுங்கி வடகமே செய்தனான்😀😃.  இப்ப வைத்தது இன்னும் சில வருடம் செல்லும்போலிருக்கு பூப்பதற்கு. 

சுத்திப்போடுகின்றேன் மனைவியிடம் சொல்லி  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

 

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான் 

Organic Neem Capsules

20200522-111020.jpg

 

 

 

"உடையார்".... மெல்ல மெல்ல,  "பரியாரியார்"  ஆகிக் கொண்டு வருகிறார். வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

 

குமாரசாமி, இவை நான் வீட்டில் காய வைத்து பவுடரக்கி செய்தவை. குளிசை செய்யும் இயந்திரமும் குளிசைகளும் ebay இல் வாங்கினேன். கடைசி மகனிடம் கொடுத்தேன் செய்ய சொல்லி, அவர்தான் கிழமைக்கு 200nos செய்வார். நீங்கள் காய்ந்த வல்லாரை முருங்கை இலைகளை தமிழ்கடைகளில் வாங்கி பவுடராக செய்யலாம், இவை கடைகளில் வாங்க முடியாது. அங்கு இல்லாவிட்டால், தேவை என்றால் தனிமடலில் விலாசம் அனுப்புங்கள், என்னிடம் முருங்கை இலை குளிசைகள் அதிகமிருக்கு அனுப்பிவிடுகின்றேன்

குளிசை:

https://www.ebay.com.au/sch/i.html?_nkw=Empty Vegetable Capsules

இயந்திரம்:

https://www.ebay.com.au/itm/100-Holes-Capsule-Filler-Pill-filler-Filling-Machine-for-size-0/164184578360?hash=item263a29d938:g:e-oAAOSwS51er4Dv

https://www.youtube.com/watch?v=uvSkshSX520

உடையார்!   உங்கள் நல்ல மனதிற்கு மிக்க நன்றி.எல்லோருக்கும் இந்த மனது வராது.
கடவுளின் கிருபை உங்களுக்கு என்றும் இருக்க வேண்டுகின்றேன்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

நான் இதை முதலே எழுதி விட்டேன்....எல்லாம் அவரின் வீட்டு  வளவுக்குள் இருப்பதால் தான்  அவருக்கு ஊருக்கு போக வேண்டிய தேவையில்லை 🙂
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

"உடையார்".... மெல்ல மெல்ல,  "பரியாரியார்"  ஆகிக் கொண்டு வருகிறார். வாழ்த்துக்கள். :)

உடையார் கிராம வாசனை உள்ள ஆள் எண்டு நான் நினைக்கிறன்.

சிறித்தம்பி! ஊர்மனகளிலை இருக்கிற சனங்கள் கூடுதலாய் சாப்பிடுற சாப்பாடே கிட்டத்தட்ட மருந்து போலதான்.
வேலியிலை படருற தூதுவளை தொடக்கம் குப்பையிலை முளைக்கிற குப்பைக்கீரை வரைக்கும் மருந்துதான்.
தேங்காய்ப்பூ கீரை எண்டு ஒரு கீரை இருக்கு.அதை அவிச்சு குடிச்சாலே வயித்திலை இருக்கிற அத்தனை கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.:cool:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

ஏனென்றால் கஸ்ரப்பட்டு மூச்சை எடுக்கும்போது ஏலாமல் போய்விட்டால் ஓடாமல் நின்றுவிடுவார்கள். இந்த jogger  இப்படி  ஆகி விழுமட்டும் ஓடியிருக்கமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

உடற் பயிற்சியை உரிய முறையில் செய்வதற்ககான முறைகள் விளக்கத்துடன், படத்துடனும், வீடியோ உடனும்.

UK இன் public health and  medical service ஆல் வெளியிடப்பட்டது. 

அநேகமான அறிவுறுத்தல்கள், பயிற்சிகள் lock down வரைக்கும் update பண்ணி உள்ளார்கள்.

உள் சென்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, ஆரம்பிப்பது நன்று.  

https://www.nhs.uk/live-well/exercise/

ற்றும் உடல் நலத்தை பொதுபவாக பராமரிக்க வேண்டிய பொது அறிவுறுத்தல்கள்.

https://www.nhs.uk/live-well

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உடையார் கிராம வாசனை உள்ள ஆள் எண்டு நான் நினைக்கிறன்.

சிறித்தம்பி! ஊர்மனகளிலை இருக்கிற சனங்கள் கூடுதலாய் சாப்பிடுற சாப்பாடே கிட்டத்தட்ட மருந்து போலதான்.
வேலியிலை படருற தூதுவளை தொடக்கம் குப்பையிலை முளைக்கிற குப்பைக்கீரை வரைக்கும் மருந்துதான்.
தேங்காய்ப்பூ கீரை எண்டு ஒரு கீரை இருக்கு.அதை அவிச்சு குடிச்சாலே வயித்திலை இருக்கிற அத்தனை கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.:cool:

சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும் ... 

நச்சுக்கள் :

குமாரசாமி அண்ணா.... உடையாருக்கு, ஊரில் உள்ள மரங்களை... 
வளர்க்கக் கூடிய, கால நிலை உள்ள நாட்டில் வாழ்வதும்...
எமது மூலிகை உணவுகள்  மீது, ஆர்வம் இருப்பதும்... நன்றாக அமைந்துள்ளது.

தேங்காய்ப்பூ கீரை...  எமது வளவிலும், தன்னுடைய பாட்டில் வளரும் ஒரு தாவரம்.
அதனை அப்பா... அடிக்கடி அவித்து குடிப்பார். அப்போது அதன் அருமை தெரியவில்லை.
இப்போ... அதனை நினைத்து ஏங்க வேண்டி உள்ளது.

தேங்காய்ப்பூ கீரையை... தமிழ்நாட்டில்  பொங்கல் பூ என்றும்,  சிறுபீளைச் செடி என்றும் சொல்வார்கள்.  சிறுநீரக பிரச்சினைக்கு.. நல்ல மருந்தாம். :)

அங்கு,  இப்போ... இதனை பெரும் தோட்டப் பயிராகவே செய்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உடையார் கிராம வாசனை உள்ள ஆள் எண்டு நான் நினைக்கிறன்.

சிறித்தம்பி! ஊர்மனகளிலை இருக்கிற சனங்கள் கூடுதலாய் சாப்பிடுற சாப்பாடே கிட்டத்தட்ட மருந்து போலதான்.
வேலியிலை படருற தூதுவளை தொடக்கம் குப்பையிலை முளைக்கிற குப்பைக்கீரை வரைக்கும் மருந்துதான்.
தேங்காய்ப்பூ கீரை எண்டு ஒரு கீரை இருக்கு.அதை அவிச்சு குடிச்சாலே வயித்திலை இருக்கிற அத்தனை கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.:cool:

குமாரசாமி, நான் வளர்ந்தது ஒரு அழகிய சிறிய கிராமம் அந்த கிரமத்தை சுற்றி வயலும் காடுதான், எங்கள் ஊரில் ஒரு 20 குடும்பங்கள் இருக்கும், எல்லாரும் சொந்தம் ஒருவர் வீட்டில் ஒருவர் மாறி சாப்பிடுவோம், பெடியள வாசிக சாலையில்தான் முழு நேரமும் இரவு படுப்பது முதல், அப்படியொரு சந்தோஷமான கவலையற்ற வாழ்க்கை, இரவு பன்னிரண்டு மணிக்கு சுட சுட பாண் வாங்கி வந்து சம்பலுடன் சப்பிடுவோம், பனையேறி களவாக கள் இறக்கி குடிப்போம், நான் நன்றாக ஏறுவேன் பனை, ஏறி இருந்து குடித்துவிட்டு, மிகுதியை இறக்கி கொண்டுவருவேன், தேவாமிர்தம். இரவு ........குளத்து விசி கிணற்றில் நில வெளிச்சத்தில் நீச்சல் அடிப்போம், யாரும் எங்களை கேள்வி கேட்கமாட்டார்கள், அப்படி வளர்ந்தோம் ஒற்றுமையாக. அந்த நினைவுகள் இறக்கும்வரை பசுமையாக இருக்கும். கவலையற்ற வாழ்க்கை ஊரோடு.

இப்ப எங்கள் கிராமில்லை, ஒரே காடுதான்.  தனால் எனக்கு அங்கு போக விருப்பமில்லை, இங்கேயே இருக்கப்போகின்றேன், ஆனா, என் மக்களுக்கு ஏதவாது நல்லது செய்துவிட்டுதான் இறப்பேன், அதுதான் என் கடைசி ஆசை. பல திட்டங்களிருக்கு, செயல் வடிவத்திற்க்கு இன்னும் நாட்கள் தேவை. பிள்ளைகளை கரையேற்றிவிட்டால் என் உழைப்பு முழுக்க மக்களின் முன்னேற்றத்திற்குதான் 

5 hours ago, தமிழ் சிறி said:

"உடையார்".... மெல்ல மெல்ல,  "பரியாரியார்"  ஆகிக் கொண்டு வருகிறார். வாழ்த்துக்கள். :)

நான் வளர்ந்த தே ஒரு உடையாருடன்தான், அவர் இயற்க்கையுடன் வாழ்ந்தார், பிள்ளைகளில்லை, நாங்கள்தான் பிள்ளைகள், நல்லதொரு மனிதர், அப்படியொரு ஆசான் கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும்🙏, இப்ப அவரில்லை. 😪😪

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 06:07, nilmini said:

 

வணக்கம்! மீண்டும் ஒரு அலுப்புக் கேள்வியுடன்.......

அக்குபஞ்சர் சிகிச்சை  மூட்டுவலிகளுக்கு பலன் தருமென சொல்கிறார்கள். இதனால் பின்விளைவுகள் ஏதேனும் இருக்கின்றதா?

எனக்கு பதில் சொல்லுறதுக்கு முதல் தேங்காய் எண்ணை நல்லதோ எண்டு கேட்டுப்போட்டு  அங்கை ஒராள்  காய்ஞ்சு போய் நிக்கிறார் அவருக்கு  பதிலை சொல்லீட்டு எனக்கு ஆறுதலாய் சொல்லலாம்.😁

Is Cosmetic Acupuncture The New Botox?

Edited by குமாரசாமி
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். நிலாமதி அக்கா
    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.