Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ மக்களுக்கு எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் – மன்னார் ஆயர் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ மக்களுக்கு எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் – மன்னார் ஆயர் எச்சரிக்கை

முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழும்பிப் போய் உள்ளது. இந்த நிலையில் மிகுந்த ஞானத்தோடும் நிதானத்தோடும் நாம் இந்தப் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.சமய அடிப்படையில் கட்சியாகவோ சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாக சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடும். இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களாகிய நாம் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றோம். இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களாகிய எமக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் எமது வாக்களிக்கும் உரிமைதான்.கத்தோலிக்கர்களாகிய நாம் நாட்டின் நலனையும் எமது இனத்தின் நலனையும் முன்னிறுத்தி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். எனவே கத்தோலிக்க சமயம் சார்பாக கட்சியாகவோ அல்லது சுயேட்சையாகவோ இந்த தேர்தலில் போட்டியிடுவது மன்னார் மறை மாடவட்டத்தின் கொள்கை அல்ல என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சமய அடிப்படையில் கட்சியாகவோ சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாக சிதைத்து சின்னாபின்னமாக்கி விடும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/சமய-அடிப்படையில்-தேர்தலி/

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவரை இந்து, ஆனால் தமிழர் ( இந்து கிறிஸ்தவர் என்ற பிரிந்தால். அவ்வளவு தான், சிங்களவன் சும்மா இருந்து வேடிக்கை பார்க்க, தமிழரெல்லாம் அடிபட்டு சாகவேண்டியதிதான். 

சிங்Dகளவனின்iற divide and conquer trap இல விழுந்து அழுந்த வேண்டியதுதான்

3 hours ago, கிருபன் said:

இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆதலால், கூட்டமைப்பிற்கு வாக்களீப்பீர் 😆

மன்னாரில் உள்ள இந்துக்களுக்கும் தென்மராட்சியில்  உள்ள  விஷ்வா இந்து பரிஷத் அடியாள் சச்சிதானந்துக்கும் விளங்கினாள் சரி। இல்லாவிட்ட்தால் அம்போதான்।

43 minutes ago, Vankalayan said:

மன்னாரில் உள்ள இந்துக்களுக்கும் தென்மராட்சியில்  உள்ள  விஷ்வா இந்து பரிஷத் அடியாள் சச்சிதானந்துக்கும் விளங்கினாள் சரி। இல்லாவிட்ட்தால் அம்போதான்।

இது புத்த பீடங்களுக்கும் தெரிகின்றது. அண்மையில் அவர்களும் பல தடவைகள் தேரர்கள் அரசியலில் போட்டியிட கூடாது என்கிறார்கள். ஆனால், சிங்கள அரசியல் தலைமைகள் புத்த பீடாதிபதிகளை மீறி அரசியலில் பிரகாசிக்க முடியாது.

இலங்கை அரசியல் சாசனத்தில் புத்த மதம் முதன்மை மதமாக கொண்டாடப்படும்வரை,  சிறுபான்மை மதங்களில் சில 'வன்முறையாளர்கள்' தோன்றத்தான் செய்வார்கள். ஏனெனில், அவர்களின்  பார்வையில் தமது மதத்தின் பாதுகாவர்களாக எண்ணுகிறார்கள்.

இங்கே தோற்றுப்போனது இலங்கை சனநாயகம். இன; மொழி; மத சுதந்திரங்கள் பறிக்கப்படும்பொழுது மக்கள் போராடுவதே இயற்கையே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இல்லாவிட்டால் சிங்களவனுக்கு அரசியல்  பிரச்சாரத்துக்கு கருப்பொருள் இல்லை. அரசியலும் இல்லை முடங்கிக் கிடக்க வேண்டியவன். 

  • கருத்துக்கள உறவுகள்

 

89781910_2708715252581009_68636262689532

6 hours ago, nunavilan said:

 

89781910_2708715252581009_68636262689532

இப்போது மாட்டுத்தலைமைகளுக்குள் ஏட்பட்டிருக்கும் பிரச்சினை என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்। அதனாலதான் இந்த கருத்தை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் எண்டு நினைக்கிறேன்।

மாட்டுத்தலைவர் விக்கி அவர்கள் கிறிஸ்தவ , கத்தோலிக்க வேட்ப்பாளர்களை தங்கள் கூட்டணியில் இணைக்கக்கூடாதென்று விடாப்பிடியாக நிக்கிறாராம்। விஷ்வா இந்து பரிசித்தும் , சின்மய மிஷனும் இதில் உறுதியாக இருக்கிறார்களாம்। எனவே மாட்டுதலைமை கட்சி இப்போது உடையும் நிலைமைக்கு வந்து விடடதாம்।

விக்கியும் , மண்டையன் சுரேசும் ஒரு அணியாகவும் , அனந்தியும் சிவாஜியும் ஒரு அணியாகவும் பிரிந்திருப்பதாக அரியக்கக்கிடைக்கிறது।

இவர்களுக்கெல்லாம் போராடவும் , சர்வதேசத்துக்கு பிரச்சினைகளை கொண்டு செல்லவும் கத்தோலிக்க/கிறிஸ்தவ மத குருமாரும் , கிறிஸ்தவ போராளிகளும் தேவை।

சுகபோகம் அனுபவிக்க இந்து குருமாரும் , இந்து வேடமணிந்த அரசியல் வாதிகளுக்கும் முன்னுரிமை। இதுதாண்டா தமிழனுடைய ஒற்றுமை।

சிங்களவனுக்கு தெரியும் தமிழன் இப்படியே அடிபட்டு செத்துப்போயிருவான் எண்டு। இந்த கத்தோலிக்க பிஷப்மாரும், பாதிரியார்களும் இனியும் இந்த ஒற்றுமை , மத நல்லிணக்கம் பற்றி பேசுவதையும் கத்தோலிக்கர்/ கிறிஸ்தவர்களை அடகு வைப்பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்। நீங்கள் கிறிஸ்தவ மக்களுக்காக குரல் கொடுக்கவிடடாள் , மக்கள் தகுந்த தீர்ர்மானத்தை எடுப்பார்கள்।

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மதம் சாா்ந்த வேட்பாளரை நியமிக்க சீ.வி.விக்னேஸ்வரன் இணக்கமாம்..! கூட்டணி உடையும் என விசம பிரச்சாரம் நடக்கிறதாம்.!

cm-vikkenes-vikkei-_1080.jpg

தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் உருவாகவிருந்த பிளவு தவிா்க்கப்பட்டுள்ளதுடன், கிறிஸ்தவ  வேட்பாளா் ஒருவரை களமிறக்க இணக்கம் கணப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற தோ்தலில் கிறிஸ்த்தவ வேட்பாளா் ஒருவரை களமிறக்க முடியாது. என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி எதிா்த்ததாகவும், அதனால் சுரேஸ் அணி மற்றும் சிறிகாந்தா அணி கூட்டணியை உடைத்து வெளியேற முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடா்பாக இன்று மாலை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளின் முக்கியஸ்த்தா்களுக்கிடையிலான அவசர கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கிறிஸ்தவ வேட்பாளா் ஒருவரை களமிறக்க இணக்கம் காணப்பட்டது. இந்நிலையில் சந்திப்பின் நிறைவில் கருத்து கூறிய சிவாஜிலிங்கம், கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாக விசமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக கூறியிருக்கின்றாா்.

https://jaffnazone.com/news/16317

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.