Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image result for coronavirus

 

கொரோனா என்னும் கொடுநோய்
காணுமிடமெங்கும் கரகமாடுகிறது
கொள்ளைபோல் வந்து மனங்களை  
கொதிநிலையில் கதிகலங்க வைக்கிறது

கூட்டம்கூட முடியவில்லை
கொஞ்சிப்பேசவும் முடியுதில்லை
குடும்பமாய்க் கூட நாமெல்லாம்
குதூகலிது மகிழ்ந்திருக்க முடியாது
கொடுங்கோல் ஆட்சியாளனாய்
கொத்துக்கொத்தாய் மனிதர்களை
கொன்றேதான் குவிக்கின்றது

வைரஸ் என்னும் விழியில் தெரியா சிறுகிருமி
வல்லவர்களைக் கூட விழிபிதுங்க வைக்கிறது
மானிடர்கள் கண்ட மதி நுட்பமெல்லாம்
பேரிடரில்க் கூடக் கைகொடுக்க மறுக்கிறது
மாளிகையில் வாழும் மகாராணி கூட
மனங்கலக்கம் இன்றி இருக்கவா விடுகிறது   
வீதியில் இருப்போரும் வீடுகளில் இருப்போரும்
வேறில்லை என்றேயது வினைகூறி நிற்கிறது

வீதியெங்கும் வாகனம் விரைந்து செல்கின்றது
கடைக்கண்ணி எங்கும் கலவரமாய் இருக்கிறது
காணும் பொருள்கள் எல்லாம் கூடையில் நிறைகின்றது
கண்மண் தெரியாமல் காசும் கரைகின்றது
வீடுகள் எங்கணும் விளைபொருளால் நிறைகின்றது
பள்ளிகள் இல்லாது பிள்ளைகளில் கூச்சலில்
பக்கத்து வீடும் பரிதவித்து நிற்கின்றது  

விண்ணுந்துப் பறப்பற்று வானம் இருக்கிறது  
தொடருந்துத் தடமோ அதிர்வற்று இருக்கின்றது
வேகச் சாலைகளில் வேறெதுவும் செல்லவில்லை
அலைமோதும் கடைகளில் ஆளரவம் எதுவுமில்லை    
காணுமிடமெங்கும் கதவடைத்தே இருக்கின்றது
போர்க்கால நிகழ்வாய் புதுமையாய் இருக்கிறது

ஆனாலும்

இணையத்தளங்களும் இணையற்ற முகநூலும்   
தொலைபேசி என்னும் தொடர்பாடற் கருவியும்
திக்குத் திசையற்று நேர காலமற்று எப்போதும்
எல்லைகள் தாண்டியும் எதிரொலித்தபடியே
எண்ணிலடங்காது இயங்கிக்கொண்டே இருக்கின்றன

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொரோனா பற்றிய வாழ்வியல் கவிதை நன்றாக இருக்கின்றது.

கடவுள் இருக்கான் குமாரு....😎

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை சகோதரி ....அழகாக எழுதியுள்ளீர்கள்.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

கொரோனா பற்றிய வாழ்வியல் கவிதை நன்றாக இருக்கின்றது.

கடவுள் இருக்கான் குமாரு....😎

நன்றி குமாரசாமி

 

1 hour ago, suvy said:

நல்ல கவிதை சகோதரி ....அழகாக எழுதியுள்ளீர்கள்.....!  👍

நன்றி சுவி அண்ணா

நன்றி பச்சை  தந்த உடையார், மருது இருவருக்கும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 9:30 PM, பாலபத்ர ஓணாண்டி said:

கொக்காமக்கா கொரனோ கவிதை அருமை.

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஓணாண்டி

பச்சைகள் தந்த  இணையவன், கண்மணி அக்கா ஆகிய உறவுகளுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக்கு நன்றி தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 3:42 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொஞ்சிப்பேசவும் முடியுதில்லை

ஆஆஆ
அபத்தம் அபத்தம்
இந்த கொரோனா விடுமுறையுடன் உலக சனத்தொகை கூடப் போகுதாம்.
நீங்க மட்டும் எப்படி?இப்படி அழலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ
அபத்தம் அபத்தம்
இந்த கொரோனா விடுமுறையுடன் உலக சனத்தொகை கூடப் போகுதாம்.
நீங்க மட்டும் எப்படி?இப்படி அழலாம்.

மனிசனின் தொல்லைதான் பெருந்தொல்லை 😎

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை சகோதரி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

நல்ல கவிதை சகோதரி 

வருகைக்கு நன்றி நில்மினி

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 11:42 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விண்ணுந்துப் பறப்பற்று வானம் இருக்கிறது  
தொடருந்துத் தடமோ அதிர்வற்று இருக்கின்றது
வேகச் சாலைகளில் வேறெதுவும் செல்லவில்லை
அலைமோதும் கடைகளில் ஆளரவம் எதுவுமில்லை    
காணுமிடமெங்கும் கதவடைத்தே இருக்கின்றது
போர்க்கால நிகழ்வாய் புதுமையாய் இருக்கிறது

 

நன்று. பாராட்டுகள்.

புதுமைகளைக்கூட நான் நிதானமாக நின்றால்தான்  என்று இப்போது இயற்கை மனிதனை நோக்கிக் கேட்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்த கண்மணி அக்கா, ரதி, இணையவன், பையன், சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி

20 hours ago, nochchi said:

நன்று. பாராட்டுகள்.

புதுமைகளைக்கூட நான் நிதானமாக நின்றால்தான்  என்று இப்போது இயற்கை மனிதனை நோக்கிக் கேட்கிறது.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2020 at 22:42, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கூட்டம்கூட முடியவில்லை
கொஞ்சிப்பேசவும் முடியுதில்லை

பார்க்கும் படங்களில் கூட்டமாக இருப்பதையும், உரசியும், கொஞ்சியும் பழகுவதையும் பார்க்க இப்படி உலகம் இருந்ததா என்று தோன்றுகின்றது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

பார்க்கும் படங்களில் கூட்டமாக இருப்பதையும், உரசியும், கொஞ்சியும் பழகுவதையும் பார்க்க இப்படி உலகம் இருந்ததா என்று தோன்றுகின்றது!

இன்று கடைக்குப் போனால் பலர் முகக்  கவசமோ கையுறையோ கூட இல்லாமல் வந்திருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று கடைக்குப் போனால் பலர் முகக்  கவசமோ கையுறையோ கூட இல்லாமல் வந்திருக்கின்றனர்.

சனம் இப்பொழுது துணிந்து விட்டது போல தெரிகின்றது ...இங்கும் சனம் சகஜமாக திரியத் தொடங்கிவிட்டனர்....
கவிதைக்கு பாராடுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, putthan said:

சனம் இப்பொழுது துணிந்து விட்டது போல தெரிகின்றது ...இங்கும் சனம் சகஜமாக திரியத் தொடங்கிவிட்டனர்....
கவிதைக்கு பாராடுக்கள்

நன்றி புத்தன். நானும் கூட இன்று ஆடிப்பாடி 45 நிமிடம் சாமான்கள் எடுத்தது. 8 மணிக்குத் திறக்கிற கடைக்கு முதல் ஆளா 7.40 இக்குப் போய் நின்று வீடடை வர 8.30. கடை 5 நிமிடநடையில் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.