Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Featured Replies

In இலங்கை     April 9, 2020 10:50 am GMT     0 Comments     1989     by : Litharsan

Mannar-Parappankandal-Accident.jpg

மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர்.

சகோதரிகளான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா (வயது-40) என்பவரும் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வரும் சந்தியோகு டெரன்சி (வயது-25)  ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, கெப் வண்டியின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயிலங்குளம் மற்றும் மன்னார் பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mannar-Parappankandal-Accident-2.jpg

Mannar-Parappankandal-Accident-3.jpg

Mannar-Parappankandal-Accident-5.jpg

Mannar-Parappankandal-Accident-6.jpg

Mannar-Parappankandal-Accident-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் விபத்தில் உயிரிழந்த சகோதரிகளின் உடல்கள் நல்லடக்கம்

April 10, 2020

92631336_2866557053393507_29253905470130

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (9)   மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும்,முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இரு பெண்களும்; உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா (வயது-40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றியுள்ளார். மற்றையவர் சந்தியோகு டெரன்சி (வயது-25) மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றியுள்ளார்.

குறித்த இருவரும்   மன்னாரில் இருந்து கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

-இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த இரு உடல்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.

குறித்த பிரதேச மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதோடு,இறுதி நல்லடக்கத்தின் போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் #மன்னார்  #சகோதரிகள்   #நல்லடக்கம்

92352280_685171162228433_736248042396162
 

பெரிய வெள்ளி அன்று கடமைகளை முடித்து  வீடு திரும்பிய போது நடந்த அநியாய உயிர்ப்பலிகள்.

கண்ணை மூடிக்கொண்டு பெரிய வாகனங்களை அசுர வேகத்தில் செலுத்தி முந்துவதற்கு முயலுவதால் ஏற்படும் விபத்துக்கள்.

  • தொடங்கியவர்

மன்னார் விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகள்! பிரதேச மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (9) மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களுடைய சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கட்டையடம்பன் பகுதியில் நல்லடக்கம் செய்வதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்திய நபர் மன்னார் பதில் நீதவானினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து அக்கிராம மக்களும் குடும்ப உறவுகளும் ஆதங்கம் தெரிவித்துள்ளர்.

நேற்று முன் தினம் வியாழக்கிழமை மாலை மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டல் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு சகோதரிகளும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் குறித்த இரு பெண்களின் இறுதி கிரிகைகள் நேற்று வெள்ளிக்கிழமை (10) மாலை 5 மணியளவில் கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் இடம் பெற்று பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எனினும் குறித்த இரு சகோதரிகளின் இறுதி அஞ்சலி மற்றும் நல்லடக்கம் செய்வதற்கு முன் விபத்தை ஏற்படுத்திய குறித்த நபரை மன்னார் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது..

மன்னார் நீதி மன்ற பதில் நீதவான் வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மத குரு ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் இணைந்து குறித்த நபருக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டதாகவும் குறித்த பிணை வழங்குவது தொடர்பாக மன்னார் பிரந்திய பொலிஸ் மற்றும் பொறுப்பதிகாரி கடும் எதிர்பு தெரிவித்திருந்தனர்.

எனினும் அந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாது குறித்த நபருக்கு பதில் நீதவான் பிணை வழங்கி உள்ளார்.

குறித்த இரு சகோதரிகளின் இறுதிக் கிரிகைகள் இடம் பெறுவதற்கு முன்னதாகவே விபத்தை ஏற்படுத்திய நபருக்கு பொலிஸாரின் கடும் எதிர்ப்பை மீறியும் மதகுரு ஒருவரின் ஆதரவுடன் பிணை வழங்கப்பட்டமையால் இறந்த பெண்களின் குடும்பத்தினர் பல்வேறு விதமான எதிர்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் உயிரிழந்த குறித்த இரு பெண்களும் அரச ஊழியர்களாக உள்ள போதும் அவர்களின் மரணத்திற்கு ஆரம்பத்திலேயே நீதி கிடைக்கவில்லை என குடும்ப உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/141026

  • 1 month later...
  • தொடங்கியவர்

மன்னார் விபத்தில் உயிரிழந்த சகோதரிகளுக்கு நீதி கோரி போராட்டம்

விபத்தில் உயிரிழந்த சகோதரிகளுக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் கடந்த ஏப்பிரல் மாதம் 9 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட முன்னதாகவே பதில் நீதவான் முன்னிலையில் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இரு சகோதரிகளின் மரணத்திற்கும் நீதி கோரி குடும்ப உறவுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாட்டின் தற்போதைய சூழ் நிலையை கருத்தில் கொண்டு மக்கள் ஒன்று கூடி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. எனவே இவ்விடத்தை விட்டு உடனடியாக செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.

அவர்கள் அவ்விடத்தில் இருந்து செல்லாத நிலையில் பொலிஸாரின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 16 பேர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் அஞ்சல் அதிபராக கடமையாற்றிய சந்தியோகு ரெறன்சியா(வயது-25), வைத்தியசாலை பெண் பரிசோதகராக கடமையாற்றும் லின்ரா கோபிநாதன்(வயது-42) ஆகிய இரு சகோதரிகளும் கடந்த ஏப்பிரல் மாதம் 9 ஆம் திகதி மதியம் மன்னார் பரப்பான் கண்டல் வீதியூடாக மோட்டார் சைக்கிலில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பகுதியில் விபத்து ஏற்பட்டது.

இரண்டு சகோதரிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிர் இழந்த சகோதரிகளின் சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்திய நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனவே உறவுகளாகிய எமக்கு எதுவித உதவிகளும் தேவை இல்லை. உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும். இப்படியான ஒரு சம்பவம் இனி இடம் பெறக்கூடாது.

பணம் இருந்தால் எதனையும் செய்ய முடியும் என்பதற்காக ஏழைகளுக்கு அநீதி இடம் பெறக்கூடாது. எனவே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே குறித்த சகோதரிகளின் குடும்ப உறவுகாளாகிய நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/143282

இது ஒரு விபத்து என்றுதான் கூறப்பட்டுள்ளது। இவர்களை கொலை செய்ய வேண்டுமென்று அங்கு வந்து மோதவில்லை। எனவே சடடப்படி பிரச்சினைகளை தீர்க்கலாம்। சிலவேளைகளில் இதுக்காக நஷட ஈடு கொடுத்து வழக்கை முடிக்கலாம்। இருந்தாலும் இவர்கள் நஷட ஈடு பெறுவதைவிட தண்டனை பெற்றுக்கொடுப்பதில்தான் ஆவலாக இருப்பதாக தெரிகின்றது। இதனால் இருவருக்குமே நஷடம்மாதான்। இங்கு ஒரு win - win நிலைமையை உருவாக்கினால் நல்லது। அருட் தந்தையரும் அதே முயட்சியைத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறேன்। இவர்கள் தண்டனை பெற்றுக்கொடுப்பதினூடாக இறந்த உயிர்களை மீட்டுக்கொள்ளலாம் என்றால் பிரச்சினை இல்லை। 

அபாயகரமான காலகட்டத்தில் கடமைகளை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சிங்கள மதவெறியர்களின் செல்வாக்கைப் பெற்ற ஒருவர் அசுர வேகத்தில் பின்னால் இடித்துத் தள்ளி இரண்டு சகோதரிகளையும் கொலை செய்த கொலையாளிக்கு சார்பாக, பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்து பாதிரிகள் சிலர் செயற்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது.

பெரிய வெள்ளியன்று இருவரை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தை ஏற்படுத்தி விட்டு , கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் அந்த பெண்களது பூதவுடல்  தகனம் செய்வதற்கு முன்னால் அவர் வெளியே பிணையில் வந்து விட்டார் என்பது தான் உறவுகளது கோபம் ...பணமிருந்தால் குற்றம் செய்தவரை பிணை எடுக்க பாதிரிமார் கூட வருவார் 😟
 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரதி said:

விபத்தை ஏற்படுத்தி விட்டு , கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் அந்த பெண்களது பூதவுடல்  தகனம் செய்வதற்கு முன்னால் அவர் வெளியே பிணையில் வந்து விட்டார் என்பது தான் உறவுகளது கோபம் ...பணமிருந்தால் குற்றம் செய்தவரை பிணை எடுக்க பாதிரிமார் கூட வருவார் 😟
 

வடகிழக்கில் நடக்கும் விபத்துகளில் பாதிக்கு  மேல் திட்டமிடப்பட்ட கொலைகளே  நேற்றும் கிழக்கில் ஒரு ஊடகவியலளார்  கொல்லப்பட்டு  உள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Vankalayan said:

இது ஒரு விபத்து என்றுதான் கூறப்பட்டுள்ளது। இவர்களை கொலை செய்ய வேண்டுமென்று அங்கு வந்து மோதவில்லை। எனவே சடடப்படி பிரச்சினைகளை தீர்க்கலாம்। சிலவேளைகளில் இதுக்காக நஷட ஈடு கொடுத்து வழக்கை முடிக்கலாம்। இருந்தாலும் இவர்கள் நஷட ஈடு பெறுவதைவிட தண்டனை பெற்றுக்கொடுப்பதில்தான் ஆவலாக இருப்பதாக தெரிகின்றது। இதனால் இருவருக்குமே நஷடம்மாதான்। இங்கு ஒரு win - win நிலைமையை உருவாக்கினால் நல்லது। அருட் தந்தையரும் அதே முயட்சியைத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறேன்। இவர்கள் தண்டனை பெற்றுக்கொடுப்பதினூடாக இறந்த உயிர்களை மீட்டுக்கொள்ளலாம் என்றால் பிரச்சினை இல்லை। 

இதே நிலைப்பாட்டை முள்ளிவாய்க்கால் அழிவிலும் எடுப்பீர்களா ? ☹️

அல்லது அதற்கு வேறு நிலைப்பாடா (Stand)

😜

14 hours ago, Kapithan said:

இதே நிலைப்பாட்டை முள்ளிவாய்க்கால் அழிவிலும் எடுப்பீர்களா ? ☹️

அல்லது அதற்கு வேறு நிலைப்பாடா (Stand)

😜

யுத்தத்துக்கும், சாலை விபத்துக்கும் வித்தியாசம் புரிந்து கொண்டால் இந்த கேள்வி எழாது. எனவே இதட்கும் அதட்கும் சம்பந்தம் இல்லை. இங்கு ஒரு யுத்தமல்ல ஒரு விபத்துதான் நடைபெற்றுள்ளது.

எனவே இதை இருவருக்கும் இடையில் தீர்த்துக்கொள்ளுவதும் , அதனால் வரும் தீமைகளைவிட நன்மைகளை பெற்றுக்கொள்ளுவதும் அறிவுடையோருக்கு நல்லது.

மற்றப்படி குற்றமா சாட்டுவோர் குற்றம் பிடித்துக்கொன்டே இருப்பார்கள். அவர்களுக்கு என்ன பாதிக்கப்படப்போவது அவர்கள் இல்லைதானே. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Vankalayan said:

யுத்தத்துக்கும், சாலை விபத்துக்கும் வித்தியாசம் புரிந்து கொண்டால் இந்த கேள்வி எழாது. எனவே இதட்கும் அதட்கும் சம்பந்தம் இல்லை. இங்கு ஒரு யுத்தமல்ல ஒரு விபத்துதான் நடைபெற்றுள்ளது.

எனவே இதை இருவருக்கும் இடையில் தீர்த்துக்கொள்ளுவதும் , அதனால் வரும் தீமைகளைவிட நன்மைகளை பெற்றுக்கொள்ளுவதும் அறிவுடையோருக்கு நல்லது.

மற்றப்படி குற்றமா சாட்டுவோர் குற்றம் பிடித்துக்கொன்டே இருப்பார்கள். அவர்களுக்கு என்ன பாதிக்கப்படப்போவது அவர்கள் இல்லைதானே. 

நீங்கள் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். 👍

கொலைக்கும் விபத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு எல்லோருக்குமே தெரியும். இங்கே நான் தொட்டுச் செல்ல விரும்பியது பொறுப்புக் கூறலும் தண்டனையும் என்கின்ற விடயத்தை. 🙂

இங்கே உறவினர்கள் கேட்பது நீதி. இது நீதிமன்றத்தினூடாகத்தான் பெற முடியும்.  👍

நீங்கள் கூறியது நட்ட ஈடு தொடர்பானது. அதற்கு நீதி மன்று தேவையில்லை. மத்தியஸ்தர் (Mediator / Negotiator ) மட்டுமே தேவை 🤥

இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதனூடாக தண்டனையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.  காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பத்தினர் கேட்பது அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலும் அதனூடாக நட்ட ஈடு இரண்டுமே. அதனால்தான் அரசு பொறுப்புக் கூறலிலிருந்து தப்பிக்க விரும்புகிறது. 👍

ஆனால்நீதிமன்றின் ஊடாக இவை இரண்டையுமே பெற முடியும். 👍

உங்களின் வாதத்தை சரி எனக் கொண்டால் பண வசதியுடையோர் எல்லோருமே நட்ட ஈட்டைச் செலுத்துவதன் ஊடாக சட்ட நடவடிக்கையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். பொறுப்புக் கூறலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது சரியான அணுகுமுறை அல்ல.🤥

நட்ட ஈட்டினைக் கொடுத்தலுடன் தப்பித்துக்கொள்ள முடியுமென்றால், உலக செல்வந்தர்களுக்கு எந்த ஒரு சட்டமும் பொருந்தாமல் போய்விடும் சாத்தியம் ஏராளமுண்டு. 😡

ஆகவே பொறுப்புக் கூறாமல் இழப்பீட்டை மட்டும் கொடுத்தல் ஏற்கத்தக்க வாதம் அல்ல. 🙂

இதனைத்தான் நான் கூற விரும்பியது. 👍

22 hours ago, Kapithan said:

நீங்கள் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். 👍

கொலைக்கும் விபத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு எல்லோருக்குமே தெரியும். இங்கே நான் தொட்டுச் செல்ல விரும்பியது பொறுப்புக் கூறலும் தண்டனையும் என்கின்ற விடயத்தை. 🙂

இங்கே உறவினர்கள் கேட்பது நீதி. இது நீதிமன்றத்தினூடாகத்தான் பெற முடியும்.  👍

நீங்கள் கூறியது நட்ட ஈடு தொடர்பானது. அதற்கு நீதி மன்று தேவையில்லை. மத்தியஸ்தர் (Mediator / Negotiator ) மட்டுமே தேவை 🤥

இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதனூடாக தண்டனையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.  காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பத்தினர் கேட்பது அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலும் அதனூடாக நட்ட ஈடு இரண்டுமே. அதனால்தான் அரசு பொறுப்புக் கூறலிலிருந்து தப்பிக்க விரும்புகிறது. 👍

ஆனால்நீதிமன்றின் ஊடாக இவை இரண்டையுமே பெற முடியும். 👍

உங்களின் வாதத்தை சரி எனக் கொண்டால் பண வசதியுடையோர் எல்லோருமே நட்ட ஈட்டைச் செலுத்துவதன் ஊடாக சட்ட நடவடிக்கையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். பொறுப்புக் கூறலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது சரியான அணுகுமுறை அல்ல.🤥

நட்ட ஈட்டினைக் கொடுத்தலுடன் தப்பித்துக்கொள்ள முடியுமென்றால், உலக செல்வந்தர்களுக்கு எந்த ஒரு சட்டமும் பொருந்தாமல் போய்விடும் சாத்தியம் ஏராளமுண்டு. 😡

ஆகவே பொறுப்புக் கூறாமல் இழப்பீட்டை மட்டும் கொடுத்தல் ஏற்கத்தக்க வாதம் அல்ல. 🙂

இதனைத்தான் நான் கூற விரும்பியது. 👍

யுத்தம் என்பது யுத்த தர்மத்தை கடைபிடித்து நடக்க வேண்டிய ஒன்று. இங்கு அப்படி நடந்தா என்பது வேறு விடயம். அதட்குரிய வழக்குகள் நாஷ்டா ஈடு, தண்டனைகள் சடடப்படி எடுக்கப்படும்.

இந்த விபத்து தாட்செயலாக நடந்தது. இவரும்கூட அடைபட்டு இருக்கும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும்போதுதான் இந்த விபத்து நடந்தது. எனவே இவருக்கு நீதிக்கு புறம்பாக காப்பாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை . இப்போதும்கூட நீதிமன்றம்தான் பிணை வழங்கி உள்ளது.

எனது கருத்து என்னவென்றால் இவரை சிறைக்கு அனுப்புவதால் இரண்டு உயிரும் வந்துவிடுமா? அல்லது இரண்டு குடும்பமும் இதனால் மேலும் பாதிக்கப்பட வேண்டுமா? ஒரு நல்ல தீர்வு  இருக்கும்போது அதை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது. இங்கு கருத்து எழுதுபவர்களுக்கு சில வேளைகளில் அது விளங்குவது கடினமாக இருக்கிறது.


மேலும் சில நாடுகளில் இப்படியான விபத்து நடக்கும்போது அதட்குரிய நஷட ஈடடை கொடுப்பதன்மூலம் விடுதலையாகலாம். முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இந்த சடடம் நடைமுறையில் இருக்கிறது. எனவே இது ஒன்றும் புதிய விடயம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Vankalayan said:

யுத்தம் என்பது யுத்த தர்மத்தை கடைபிடித்து நடக்க வேண்டிய ஒன்று. இங்கு அப்படி நடந்தா என்பது வேறு விடயம். அதட்குரிய வழக்குகள் நாஷ்டா ஈடு, தண்டனைகள் சடடப்படி எடுக்கப்படும்.

இந்த விபத்து தாட்செயலாக நடந்தது. இவரும்கூட அடைபட்டு இருக்கும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும்போதுதான் இந்த விபத்து நடந்தது. எனவே இவருக்கு நீதிக்கு புறம்பாக காப்பாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை . இப்போதும்கூட நீதிமன்றம்தான் பிணை வழங்கி உள்ளது.

எனது கருத்து என்னவென்றால் இவரை சிறைக்கு அனுப்புவதால் இரண்டு உயிரும் வந்துவிடுமா? அல்லது இரண்டு குடும்பமும் இதனால் மேலும் பாதிக்கப்பட வேண்டுமா? ஒரு நல்ல தீர்வு  இருக்கும்போது அதை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது. இங்கு கருத்து எழுதுபவர்களுக்கு சில வேளைகளில் அது விளங்குவது கடினமாக இருக்கிறது.


மேலும் சில நாடுகளில் இப்படியான விபத்து நடக்கும்போது அதட்குரிய நஷட ஈடடை கொடுப்பதன்மூலம் விடுதலையாகலாம். முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இந்த சடடம் நடைமுறையில் இருக்கிறது. எனவே இது ஒன்றும் புதிய விடயம் இல்லை. 

நீங்கள் நட்ட ஈட்டை மட்டும் கதைக்கிறீர்கள்.   👎

நீதிமன்று நட்ட ஈட்டை வழங்குவதுடன் பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்கும். 👍

மத்திய கிழக்கு நாடுகளை இங்கே உதாரணம் காட்டுகிறீர்கள். உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளின் சட்ட அமைப்பு முறைகள் தனியே நட்ட ஈட்டுடன் நின்றுவிடுவதில்லை. பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்கின்றன. 👍

விபத்தை ஏற்படுத்தியவர் பொருளாதார ரீதியில் பலமில்லாதவராக இருந்தால் உங்கள்   பார்வை எப்படி இருக்கும் ? 🤔

உங்களுக்கான சிறு கேள்வி;

1) உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டால் உங்களது தெரிவு நட்ட ஈட்டை மட்டுமே வரவேற்குமா அல்லது நீதிமன்றை நாடுவீர்களா 🤥

இரு மரணத்துடன் தொடர்புடைய விடயத்தை மிக இலகுவாக நட்ட ஈட்டுடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவு தருகிறீர்கள். விபத்தை ஏற்படுத்தியவர் உங்களுக்கு பரீட்டயமானவர் இல்லையென்று நம்புகிறேன். ☹️

23 hours ago, Kapithan said:

நீங்கள் நட்ட ஈட்டை மட்டும் கதைக்கிறீர்கள்.   👎

நீதிமன்று நட்ட ஈட்டை வழங்குவதுடன் பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்கும். 👍

மத்திய கிழக்கு நாடுகளை இங்கே உதாரணம் காட்டுகிறீர்கள். உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளின் சட்ட அமைப்பு முறைகள் தனியே நட்ட ஈட்டுடன் நின்றுவிடுவதில்லை. பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்கின்றன. 👍

விபத்தை ஏற்படுத்தியவர் பொருளாதார ரீதியில் பலமில்லாதவராக இருந்தால் உங்கள்   பார்வை எப்படி இருக்கும் ? 🤔

உங்களுக்கான சிறு கேள்வி;

1) உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டால் உங்களது தெரிவு நட்ட ஈட்டை மட்டுமே வரவேற்குமா அல்லது நீதிமன்றை நாடுவீர்களா 🤥

இரு மரணத்துடன் தொடர்புடைய விடயத்தை மிக இலகுவாக நட்ட ஈட்டுடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவு தருகிறீர்கள். விபத்தை ஏற்படுத்தியவர் உங்களுக்கு பரீட்டயமானவர் இல்லையென்று நம்புகிறேன். ☹️

இதட்கு ராக்கெட் விஞ்சானம் தேவை இல்லை. என்னைப்பொறுத்த வரையும் இது ஒரு விபத்து. தவறுதலாக நடந்த ஒன்று. இறந்தவர்கள்மீண்டும் வரப்போவதில்லை. நிச்சயமாக அவர்களுக்கு கோபம், தண்டனை பெற்றுக்கொடுக்கும் எண்ணம் இருக்கும். இதட்கு எண்ணெய் ஊற்றுபவர்களும் இருப்பார்கள்.

இவரை சிறையில் அடைப்பதால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை அத்துடன் மரித்த இருவரும் மீண்டும் வரப்போவதில்லை. எனவே இரு பக்கமும் பாதிப்பே ஒழிய , நன்மை இல்லை. எனவே இருவரும் இணங்கி போவதில் இருவருக்குமே நன்மைக்கு உண்டாகும் என்பது எனது தனிப்படட கருத்து.

இதனால் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. எனவே சமாதானம் பண்ணுகிறவங்கள் பாக்கியவான்கள் என்பதிறக்கினாங்க எனது கருத்தை வைத்தேன்.

உங்களுக்கு அப்படி ஒன்று நடந்தால் உங்கள் கருத்து என்ன என்பதை தெரிவியுங்கள், அப்போது எனது கருத்தை தெரிவிக்கிறேன். 

  • தொடங்கியவர்
On 16/5/2020 at 08:51, போல் said:

அபாயகரமான காலகட்டத்தில் கடமைகளை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சிங்கள மதவெறியர்களின் செல்வாக்கைப் பெற்ற ஒருவர் அசுர வேகத்தில் பின்னால் இடித்துத் தள்ளி இரண்டு சகோதரிகளையும் கொலை செய்த கொலையாளிக்கு சார்பாக, பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்து பாதிரிகள் சிலர் செயற்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது.

பெரிய வெள்ளியன்று இருவரை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

இந்தப் பாதிரிமார் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதிமன்றில் உறுதியான சட்ட உதவி குடுத்து கிடைக்க வேண்டிய முழுநிவாரணத்தையும் பெற்று குடுக்க முயலாமல் பாதிக்கப்பட்ட குடும்பம் அரைகுறை நிவாரணங்களை பெற நிர்பந்திப்பது கேவலமானது.

விபத்தில் ஒருவர் மரணமாய்ந்தால் அந்த குடும்பத்துக்கு தவறிழைத்த வாகன உரிமையாளர் பெருமளவு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்கிற தீர்ப்புகள் பல இருக்கு. அந்த நிவாரணம் அந்த வாகனத்தின் பெறுமதியை விட அதிகமாகவும் இருந்த சந்தர்ப்பங்கள் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இதட்கு ராக்கெட் விஞ்சானம் தேவை இல்லை. என்னைப்பொறுத்த வரையும் இது ஒரு விபத்து. தவறுதலாக நடந்த ஒன்று. இறந்தவர்கள்மீண்டும் வரப்போவதில்லை. நிச்சயமாக அவர்களுக்கு கோபம், தண்டனை பெற்றுக்கொடுக்கும் எண்ணம் இருக்கும். இதட்கு எண்ணெய் ஊற்றுபவர்களும் இருப்பார்கள்.

இவரை சிறையில் அடைப்பதால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை அத்துடன் மரித்த இருவரும் மீண்டும் வரப்போவதில்லை. எனவே இரு பக்கமும் பாதிப்பே ஒழிய , நன்மை இல்லை. எனவே இருவரும் இணங்கி போவதில் இருவருக்குமே நன்மைக்கு உண்டாகும் என்பது எனது தனிப்படட கருத்து.

இதனால் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. எனவே சமாதானம் பண்ணுகிறவங்கள் பாக்கியவான்கள் என்பதிறக்கினாங்க எனது கருத்தை வைத்தேன்.

உங்களுக்கு அப்படி ஒன்று நடந்தால் உங்கள் கருத்து என்ன என்பதை தெரிவியுங்கள், அப்போது எனது கருத்தை தெரிவிக்கிறேன். 

1) உறவினர்கள் நீதி வேண்டும் என்கின்றபோது ஏன் நட்ட ஈடு மட்டுமே போதும் என்கிறீர்கள் ? 🤔

2) விபத்துக்களுக்கு நீதிமன்று போகத் தேவை இல்லை  நட்ட ஈடு போதுமானது. என்பது உங்கள் பொதுவான கருத்தா அல்லது இந்த விஅத்திற்கு மட்டும் இந்த நிலைப்பாடா ? 🤔

3) விபத்தை ஏற்படுத்தியவர் பொருளாதார வசதியற்றவர் என்றால் பாதிக்கப்பட்டவருக்கு நீங்கள் பொருத்தமானதாகக் கருதும் முன்மொழிவுதான்  suggestion என்ன ? 🤔

 

21 hours ago, Kapithan said:

1) உறவினர்கள் நீதி வேண்டும் என்கின்றபோது ஏன் நட்ட ஈடு மட்டுமே போதும் என்கிறீர்கள் ? 🤔

2) விபத்துக்களுக்கு நீதிமன்று போகத் தேவை இல்லை  நட்ட ஈடு போதுமானது. என்பது உங்கள் பொதுவான கருத்தா அல்லது இந்த விஅத்திற்கு மட்டும் இந்த நிலைப்பாடா ? 🤔

3) விபத்தை ஏற்படுத்தியவர் பொருளாதார வசதியற்றவர் என்றால் பாதிக்கப்பட்டவருக்கு நீங்கள் பொருத்தமானதாகக் கருதும் முன்மொழிவுதான்  suggestion என்ன ? 🤔

 

எப்படியான நீதியை எதிர்பார்க்கிறீர்கள். இவரை உள்ளுக்கு தள்ளுவதா? அல்லது பணத்துடன் உள்ளுக்கு தள்ளுவதா? அல்லது பணத்துடன் வெளியேறுவதா? என்னைப்பொறுத்தவரை ஒரு வின் வின் நிலைமையை உருவாக்கினால் நல்லது.

 இந்த விபத்து மட்டுமல்ல , எந்த விபத்துக்கு இரு பக்கமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இருந்தால் அதட்கு செல்வதே நல்லது. 

பொதுவாக ஏழையாக இருந்தால் ஒன்று நடந்து போயிருப்பான் அல்லது புஷ் பைக்கில் போயிருப்பான். அவனுக்குத்தான் விபத்து நடந்திருக்கும். எனவே அந்த கேள்வி வருவதட்கு அவசியப்படாது. உத்தேசமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

எப்படியான நீதியை எதிர்பார்க்கிறீர்கள்.

1) இவரை உள்ளுக்கு தள்ளுவதா? அல்லது பணத்துடன் உள்ளுக்கு தள்ளுவதா? அல்லது பணத்துடன் வெளியேறுவதா?

2) என்னைப்பொறுத்தவரை ஒரு வின் வின் நிலைமையை உருவாக்கினால் நல்லது.

 இந்த விபத்து மட்டுமல்ல , எந்த விபத்துக்கு இரு பக்கமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இருந்தால் அதட்கு செல்வதே நல்லது. 

3) பொதுவாக ஏழையாக இருந்தால் ஒன்று நடந்து போயிருப்பான் அல்லது புஷ் பைக்கில் போயிருப்பான். அவனுக்குத்தான் விபத்து நடந்திருக்கும். எனவே அந்த கேள்வி வருவதட்கு அவசியப்படாது.

4) உத்தேசமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை. 

1) நீதிமன்று இருக்கும்போது நானோ நீங்களோ தீர்ப்புக் கூறத் தகுதியற்றவர்கள் என்பது எனது கருத்து

2) அதனை நீதிமன்று தீர்மானம் செய்யட்டும். ஏன் பொலிசாரும் சமயக் குருக்களும் கட்டப் பஞ்சாயத்து செய்ய முனைகின்றனர் ? 

3) வாகனம் செலுத்தும் எல்லோரும் சொந்த வாகனமா செலுத்துகின்றனர் ☹️

4) அப்படியா 😂 

விபத்தை ஏற்படுத்தியவர் மீது தவறில்லை என (உத்தேசமாகக்) கருதுவது நான் இல்லையே 😜

 

நான் கூறுவது very very simple 

விபத்தை ஏற்படுத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதில் எந்தவித இடையூறும் தகாது . அம்புட்டுதே 😀

21 hours ago, Kapithan said:

1) நீதிமன்று இருக்கும்போது நானோ நீங்களோ தீர்ப்புக் கூறத் தகுதியற்றவர்கள் என்பது எனது கருத்து

2) அதனை நீதிமன்று தீர்மானம் செய்யட்டும். ஏன் பொலிசாரும் சமயக் குருக்களும் கட்டப் பஞ்சாயத்து செய்ய முனைகின்றனர் ? 

3) வாகனம் செலுத்தும் எல்லோரும் சொந்த வாகனமா செலுத்துகின்றனர் ☹️

4) அப்படியா 😂 

விபத்தை ஏற்படுத்தியவர் மீது தவறில்லை என (உத்தேசமாகக்) கருதுவது நான் இல்லையே 😜

 

நான் கூறுவது very very simple 

விபத்தை ஏற்படுத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதில் எந்தவித இடையூறும் தகாது . அம்புட்டுதே 😀

இலங்கையில் சடடம், நீதி  இருப்பதை ஏற்றுக்கொண்டதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றம் இருக்கிறது அதை பார்த்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் அவருக்கு சடடத்திட்க்குட்பட்டு பிணையும் வழங்கி உள்ளது. நல்லது.


எல்லோரும் சொந்த வாகனம் செலுத்தவிடடாலும் அவை எல்லாம் முழு காப்புறுதி செய்யப்பட்டிருக்கும். 

இருந்தாலும் இலங்கை நீதி துறையில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையிட்டு மீண்டும் ஒரு நன்றி. அநேகமாக இந்த விபத்து சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுவிடும். யாரும் அதிகமாக கவலைப்பட தேவை இல்லை. 

5 hours ago, Vankalayan said:

இலங்கையில் சடடம், நீதி  இருப்பதை ஏற்றுக்கொண்டதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றம் இருக்கிறது அதை பார்த்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் அவருக்கு சடடத்திட்க்குட்பட்டு பிணையும் வழங்கி உள்ளது. நல்லது

எல்லாம் பெயரளவில் தான். 

பணம், அரசியல் செல்வாக்கு உள்ளவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு இன்னொரு சட்டம் 

சிங்களம் பேசும் புத்தனுக்கு ஒரு சட்டம்., மற்றைய சிறுபான்மையினருக்கு இன்னொரு சட்டம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

இலங்கையில் சடடம், நீதி  இருப்பதை ஏற்றுக்கொண்டதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றம் இருக்கிறது அதை பார்த்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் அவருக்கு சடடத்திட்க்குட்பட்டு பிணையும் வழங்கி உள்ளது. நல்லது.


எல்லோரும் சொந்த வாகனம் செலுத்தவிடடாலும் அவை எல்லாம் முழு காப்புறுதி செய்யப்பட்டிருக்கும். 

இருந்தாலும் இலங்கை நீதி துறையில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையிட்டு மீண்டும் ஒரு நன்றி. அநேகமாக இந்த விபத்து சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுவிடும். யாரும் அதிகமாக கவலைப்பட தேவை இல்லை. 

ஓம் பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது 
 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Vankalayan said:

இலங்கையில் சடடம், நீதி  இருப்பதை ஏற்றுக்கொண்டதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றம் இருக்கிறது அதை பார்த்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் அவருக்கு சடடத்திட்க்குட்பட்டு பிணையும் வழங்கி உள்ளது. நல்லது.


எல்லோரும் சொந்த வாகனம் செலுத்தவிடடாலும் அவை எல்லாம் முழு காப்புறுதி செய்யப்பட்டிருக்கும். 

இருந்தாலும் இலங்கை நீதி துறையில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையிட்டு மீண்டும் ஒரு நன்றி. அநேகமாக இந்த விபத்து சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுவிடும். யாரும் அதிகமாக கவலைப்பட தேவை இல்லை. 

இலங்கையில் நீதி இருக்கின்றதோ இல்ல்லையோ நீதி மன்றம் இருக்கிறது. அதற்கென ஒழுங்கு இருக்கிறது.  🙂

காலத்திற்கேற்ப எழுதப்பட்ட சட்டமும் ஒழுங்கும் ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கு மிக முக்கியமானவை. அதனை நடைமுறைப்படுத்துவது காவற்றுறை (Enforcement agencies). அவற்றிற்கு அதிகாரம் வழங்கப்படுவது அதனால்தான். காவல்துறை நீதிமன்றங்களின் ஓர் அங்கம். 

சற்று சிந்தித்துப் பாருங்கள். விடுதலைப் புலிகளின் சட்டத்துறையையும்  காவல்துறையையும் உருவாக்க வேண்டிய தேவை என்ன ? அதற்கு முன்னிருந்த சூழல் என்ன ?

சட்டம் என்பது ஒரு ஒழுங்கு, ஒழுக்கம் Order, discipline.   தன்னிச்சையாக எவரும் அதனை மீறுவது இலங்கையில் ஏற்கனவே உருக்குலைந்துள்ள சட்டமும், அதனை நடைமுறைப்படுத்துதலையும் மேலும் சிக்கலாக்குமே தவிர, அதனை ஒழுங்குபடுத்தாது 🙂

 

குறிப்பு: இலங்கை நீதித்துறையையிட்டு அதிகம் பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள். ஏமாற்றம் அடைய நேரிடும். 😂

 

 

3524182467599210

சாதாரண சிங்களவனுக்கு ஒரு சட்டம் ... கொத்தாவிற்கு 

எல்லோரையும் ' மாஸ்க்' போடா கேட்க்கும் சிங்கள காவல்துறை 
காவல் துறை அதிகாரி கோத்தா மாஸ்க் போடாமல் எடுத்துக்காட்டாக இருந்ததை ...

Edited by ampanai

இல்லை, இங்கு இலங்கை நீதி துறையில் நம்பிக்கை வைக்கும்படி கேட்டுக்கொண்டபடியாயில்தான் நான் அப்படி எழுதினேன்.

இந்த வழக்கும்கூட நீதிமன்றத்துக்கு அப்பால் இரு தரப்பினரது சம்மதத்துடன் சமாதானமாக முடிக்கப்பட ஏது உருவாகி இருக்கிறது. எனவே, ஆடு நனையுதென்று ஓநாய் அழுதது போல யாருமே கவலைப்பட வேண்டாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.