Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக முஸ்லிம் சமூகத்தை குற்றம் சாட்ட முடியாது.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக முஸ்லிம் சமூகத்தை குற்றம் சாட்ட முடியாது.!

FB_IMG_1587548273141.jpg

முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்த வேளை அம்பாறை மாவட்டம்   கல்முனையில் அமைந்துள்ள  புதன்கிழமை(22) மதியம் தனது  கட்சி ஆதரவாளர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர் ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் ,

உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது  அவசியமாகும்.இதில்  நாங்கள் விசாரித்து தீர்ப்பு வரும்வரை  எவரையும் குற்றம் சாட்ட முடியாது.அத்துடன் புலனாய்வு துறையினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையின் அடிப்படையில் இத்தாக்குதல் சம்பந்தமாக  தொடர்பு பட்டவர்கள்   கைது செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இதில் வீணாக  ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக நாங்கள் எங்கள் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை குற்றஞ்சாட்டுவது முறையல்ல. அவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

துரிதமாக  இந்த விசாரணைகளை மேற்கொண்டு முஸ்லிம் மக்கள் இடத்தில் இருக்கின்ற  ஐக்கியத்தை நாம் உருவாக்க வேண்டும்.  மீண்டும் உறவை அம்மக்களுடன்  சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன் கடந்த கால அரசாங்கங்கள்  உரிய பாதுகாப்பினை மேற்கொள்ளாமை காரணமாகத் தான் இந்த வலிந்த தாக்குதல் நடப்பற்கு காரணமாக அமைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.

இதனால்  பல   மக்களின்  உயிர்கள்  இழக்கப்பட்டு  ஒரு அமைதியற்ற  சூழலில் வாழும் நிலையில் அனைவருக்கும்  இந்த தாக்குதலால் ஏற்பட்டது.
ஆகவே உறவை இழந்த  சொந்த பந்தங்கள் உறவுகள் அனைவருக்கும் இடத்தில் நாங்கள் ஒரு ஆறுதல் கூறி அவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக  பிரார்த்திக்கின்றோம் என கூறினார்.

http://puthusudar.lk/2020/04/22/பயங்கரவாதிகள்-தாக்குதல்/

  • கருத்துக்கள உறவுகள்

இதே குண்டுவெடிப்பு இந்தியாவில் அதுவும் மத்திய பிரதேசத்தில் நடந்து இருக்கணும் அப்ப  தெரியும் வயித்துக்குள் இருக்கும் பிள்ளை கூட தான் எந்த மதம் என்று அறியுமுன் கொல்லப்பட்டு இருக்கும் அங்கெல்லாம் எங்களுக்கு அடித்தால் பெட்ரோல் வராது என்று சொல்லி வாய் மூடமுன் ஆள் உலகத்தை விட்டு போயிருப்பார் சும்மா ஒரு கூட்டம் கூடி நோயை பரப்பி விட்டார்கள் எண்றதுக்குகே முஸ்லிம்களுக்கு விழும் அடிகளை பார்க்கவே முடியலை அவர்களை அப்படி அடிக்கவேண்டாம் என்று எந்த முஸ்லீம் நாடும் கேட்டுக்கொள்வதாய் இல்லை .இங்கு மாத்திரம் கொஞ்சமே கொஞ்சம் இருந்துகொண்டு வாயால் வெருட்டிக்கொண்டு இருக்கினம் .

அவன்கடை கதைக்கு பயந்து இந்த தெறிச்சு ஓடின காட்டுபண்ணியும் ஜால்றா அடிக்குது .

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது

முஸ்லீம் பயங்கரவாதிகள் என்பது ஞாபகப்படுத்தப்படுகிறதா?

அதென்றால் உண்மைதான்। ஒரு சிலர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடடார்கள் என்பதட்காக முழு சமூகத்தையும் குற்றம் சாடட முடியாது।

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

துரிதமாக  இந்த விசாரணைகளை மேற்கொண்டு முஸ்லிம் மக்கள் இடத்தில் இருக்கின்ற  ஐக்கியத்தை நாம் உருவாக்க வேண்டும்.  மீண்டும் உறவை அம்மக்களுடன்  சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன்

சில மாதங்களுக்கு முன் இந்த இனத்துக்கு எதிராக வன்முறைகளை தூண்டும் பேச்சுக்களை இவர் பேசுகிறார், என ஒரு முஸ்லீம் அமைச்சரால் இவருக்கெதிராக கோத்தாவிடம் முறையிடப்பட்டது. நல்லாய் வாங்கிக் கட்டியதால் ஐக்கியம் பற்றி பேசுகிறாரா? அல்லது மாறி மாறிப் பேசும் பழக்க தோஷத்தில் பேசுகிறாரா? ஒன்றும் புரியவில்லை.      

18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதில் வீணாக  ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக நாங்கள் எங்கள் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை குற்றஞ்சாட்டுவது முறையல்ல. அவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

1.  9/11ன் பின்னராக உலக ஒழுங்கு மாறியது. காரணம், 2996 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், இஸ்லாமிய பயங்கரவாதிகளால். இதனால் நடந்த யுத்தங்களால்,  பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் 

2. ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் அழியவில்லை. மாறாக, இன்றும் உலகை பயமுறுத்திடும் பல அமைப்புக்களை கொண்டுள்ளது 

3. முதன்மை காரணம், அவர்களின் சமூகத்தினுள் பயங்கரவாதத்திற்கு மதம் சார்ந்த ஆதரவு உலகளாவிய ரீதியில் உள்ளது. 

அதனால் தான் அந்த சமூகம் குற்றச்சாட்டுகளுக்கு மற்றும் கருத்துவாங்கலுக்கு  உள்ளாகின்றது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.