Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவணம்

எங்கள் குமாரசாமித் தாத்தா அவர்களே தற்போது தங்கள் பதிவுகள். கருத்துக்களைக் குடும்பத்தோடு பார்ப்பதற்குச் சங்கடப்படவேண்டி உள்ளது, உங்கள் கோமணம் அப்படிக் கண்களை உறுத்துகிறது. மாற்றிவிடுங்கள் மாற்றாவிட்டால் பரிமளா அன்ரியிடம் சொல்லிவிடுவேன்.

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்  எதற்காகவோ  கோவித்து கொண்டு போவது போல  இருக்கு 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

மாவீர‌ நாளுக்கு முன்னுக்கு நிக்கும் த‌மிழ் அன்ரி , இங்க‌த்த‌ காசுக்கு ஒரு மில்லிய‌ன் காசை ப‌ழ‌கின‌ உற‌வுக‌ளிட‌ம் இருந்து சுட்டு கொண்டு ஓடி விட்டா இர‌ண்டு மாத‌த்துக்கு முதல்  , இல‌ங்கை காசுக்கு பார்த்தா , 2கோடியும் 50லச்ச‌மும் , 

என‌து நொருங்கிய‌ ந‌ண்ப‌னின் அம்மாவும் அவாவிட‌ம் சீட்டு க‌ட்டி ஏமாந்து போய் இருக்கிறா , 

இப்ப‌டியான‌வ‌ர்க‌ளால் எம் போராட்ட‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் /  

தொட்டில் ப‌ழ‌க்க‌ம் சுடுகாடு வ‌ரைக்கும் / 

இப்ப‌டியான‌வ‌ர்க‌ளை ஒரு போதும் திருத்த‌ முடியாது 😉 /

அந்த‌ உத்த‌மியின் ப‌ட‌த்தை இணைப்ப‌தில் ஒரு த‌ய‌க்க‌மும் இல்லை , யாழ் நிர்வாக‌ம் அத‌ அனும‌திக்குமோ தெரியாது  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Paanch said:

கோவணம்

எங்கள் குமாரசாமித் தாத்தா அவர்களே தற்போது தங்கள் பதிவுகள். கருத்துக்களைக் குடும்பத்தோடு பார்ப்பதற்குச் சங்கடப்படவேண்டி உள்ளது, உங்கள் கோமணம் அப்படிக் கண்களை உறுத்துகிறது. மாற்றிவிடுங்கள் மாற்றாவிட்டால் பரிமளா அன்ரியிடம் சொல்லிவிடுவேன்.

ஐயா அது ஒரு ஏழை விவசாயியின் வறுமையை காட்டுகின்றது. 
அது சரி அந்தப்படம் அவ்வளவு செக்ஸியாகவா தெரியுது? 😁

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

கோவணம்

எங்கள் குமாரசாமித் தாத்தா அவர்களே தற்போது தங்கள் பதிவுகள். கருத்துக்களைக் குடும்பத்தோடு பார்ப்பதற்குச் சங்கடப்படவேண்டி உள்ளது, உங்கள் கோமணம் அப்படிக் கண்களை உறுத்துகிறது. மாற்றிவிடுங்கள் மாற்றாவிட்டால் பரிமளா அன்ரியிடம் சொல்லிவிடுவேன்.

அட.... அவர் டாய்லெட்டுக்கு போய் கொண்டிருக்கிறார்.... பனை மரம் வரைக்கும் நடக்க வேணும்...விடுங்கோ..... 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அட.... அவர் டாய்லெட் போய் கொண்டிருக்கிறார்.... விடுங்கோ..... 😎

பார்த்தீர்களா சாமி நாதமுனி அவர்கள்கூடப் போற்றவில்லை. தேயிலை கொய்யும் தொழிலாளப் பெண்ணின் படத்தைப் போட்டு இதுதான் தமிழ்ப்பெண் என்றும், சினிமா கதாநாயகியின் படத்தைப்போட்டு இதுதான் சிங்களப்பெண் என்றும் உலகத்துக்குப் படம்காட்டியவர்கள் வாய்க்கு அவல் போட்டதுபோல் இருக்காதா.😟

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2020 at 12:26, satan said:

இவரின் நண்பரின் தாயார் லண்டனில்தான் இருக்கிறார். என்று சொல்கிறார் என்று நினைக்கிறன். அவருக்கு வேலைக்கு வந்த பெண் லண்டனில் கொள்ளை அடித்த பணத்தை ஊருக்கு அனுப்பி அங்கே வீடு கட்டிவிட்டார் என்றே நான் விளங்கிக் கொள்கிறேன். அப்படித்தானே முடியாரே?

அதே அதே.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vanangaamudi said:

அதே அதே.

பதிலுக்கு நன்றி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பதியை கட்டிவைத்து துணிகரக் கொள்ளை!

யாழ்ப்பாணம் – கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்து விட்டு 7 அரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளது.

வீட்டில் வயோதிபத் தம்பதி ஒன்று வசித்து வரும் நிலையில் கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவர்கள் இருவரையும் மிரட்டி கட்டிவைத்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

https://newuthayan.com/தம்பதியை-கட்டிவைத்து-துண/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலம் 

மாத வருவாயாக சில ஆயிரங்கள் வருமானம் பெறுவது  என்பது  மிக பெரும் சமுதாய அந்தஸ்து,

புதிதாக சைக்கிள் வைத்திருந்தால் எகத்தாளம்  அதிகம்.

அதிலும் லுமாலா ஹீரோ, பிளைஜிங் பிகன்,ஏசியா ,ரல்லி என்ற வகையறாக்களில்

ஏசியா வைத்திருந்தால் அவர் வசதிக்காரர், ரல்லி வைத்திருந்தால் அவர் முன்னாள் வசதிக்காரர்.

ஆனால் எல்லோரும் உடலை வருத்தி  கஷ்டப்பட்டே அந்த நிலையை அடைந்தார்கள் என்பதால் கெளரவமான சூழல் அங்கே நிலவியது.

ஆனால் இன்று நிலமை அப்படியா? உடலில் சிறு வலி வந்து வேலை செய்ய பழகாதவர்களிடம்கூட

உயர்தர மோட்டார் சைக்கிள்கள்,  பத்து ரூபாய் பொக்கெற் மணிகூட பெரும் ஆச்சரியமாக இருந்த யாழ்ப்பாண தமிழர்கள் வாழ்வில் இன்று எந்த வேலைக்கும் போகாத மனிதர்களிடம் மணி பேர்ஸ் பிதுங்க பிதுங்க லட்சக்கணக்கில் ரூப்பாய் நோட்டுக்கள்...

இதனால் எந்த வேலைக்கும் போகாத ஒரு குழுவிடம் லட்சக்கணக்காய் பணம் புழங்கும்போது, எந்த வேலையும் கிடைக்காத ஒரு குழு வேலைக்கு போகுமா?

உலகின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல சமுதாயம்  வறுமையில் வாடியிருக்கு,

ஒப்பீட்டளவில் யுத்த பாதிப்பால் தான் சார்ந்த சமூகத்தை அளவுக்கு அதிகமாக பணக்காரர்கள் ஆக்கியது யாழ் சமூகமே.

இந்த சமூகம்  வெறிகொண்டு வசதியாய் உள்ளவனை பார்த்து தானும் அப்படி வாழ வெறி கொண்டு அலையும்,

அதுக்கு பலிகடா ஆகபோவது அதே களவாணி  சமூகத்தை ஊட்டி வளர்த்த புலம்பெயர்  மஸ்தானுகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.