Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் வங்குரோத்து அடைந்துள்ளது

Featured Replies

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள முற்படுவது அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையை எடுத்துகாட்டுவதாக, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, அதனை ஜனாதிபதி செயலாளரின் தனிப்பட்ட கோரிக்கையாக கருத முடியாதென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார்அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது  தேர்தலை நடத்த அரசாங்கம் முற்படும் நிலையில் இவ்வாறு அரச ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை கேட்பது தேர்தலுக்கான செலவீனத்தை ஈடு செய்யவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசாங்கம்-வங்குரோத்து-அடைந்துள்ளது/175-249997

  • தொடங்கியவர்

“அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகளுக்கு மாதம் 100 பில். ரூபா செலவு என்பது பொய் : 54 பில். ரூபா என்பதே உண்மை“

(செ.தேன்மொழி)

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 100 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தர வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

ஆனால் மத்தியவங்கி மற்றும் நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமைய பார்க்கையில் 54 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டு வருவதாக கணக்கறிக்கை தெரிவிப்பதாக கூறிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தற்போது மேலதிக கொடுப்பனவும், விசேட கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதனால் 34 பில்லியன் ருபாய் அளவிலே செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
 

இதேவேளை உலகச்சந்தையில் எண்ணை விலை குறைந்துள்ளமையினால் அதனூடாக ஈட்டிய வருமாணம் 200 பில்லியன் ரூபாய் மத்திய வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளதாக மத்தியவங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான நிதி கிடைக்கப் பெற்றுள்ளன.
 

இந்நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை தடுத்துவைக்காமல் பொருளாதார செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தர தனது தனிப்பட்ட கருத்தை ஜனாதிபதி செயலகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கடித உறையில் வெளியிட்டிருந்தமை தவறாகும். இருந்த போதிலும் அவரது வேண்டுகோளுக்கிணங்க யார் வேண்டும் என்றாலும் அவர்களின் சம்பளத்தை தியாகம் செய்யலாம். ஆனால் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளது.

 

இந்நிலையில் கொவிட் -19 வைரஸ் பரவலின் மூலம் பாடமொன்றைக் கற்றுக் கொண்டோம் என்றால் அரச துறையினர் முதல் நிலையிலும் தனியார் துறையினர் அவர்களுக்கு பின்னாலுமே இருப்பதாகவே. இந்த நாட்டை பொறுத்தமட்டில் அரச துறையில் தொழில் புரிபவர்கள் 1.2 மில்லியன் பேரே, 8.2 மில்லியன் பேர் தனியார் துறையிலேயே தொழில் புரிந்து வருகின்றனர்.

அதற்கமைய தனியார் துறையைச் சேர்ந்த 7 மில்லியன் பேர் எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக முயற்சித்து வருகின்றனர்.
 

இதேவேளை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவுகளுக்காக 100 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

ஆனால் மத்தியவங்கி மற்றும் நிதி அமைச்சின் அறிக்கமைக்கமைய 54 பில்லியன் ரூபாவே செலவிடப்படுகின்றது. அதுவும் இந்த நெருக்கடியான நிலைமையில் மேலதிக கொடுப்பனவு மற்றும் விசேட கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதனால் 34 பில்லியன் வரையிலான நிதியே அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு செலவிடப்படுகின்றது.
 

இந்நிலையில் வருடத்திற்கு மத்திய பிரிவு அரச ஊழியர்களுக்கு 232 பில்லியன் ரூபாவும், இராணுவத்தினருக்கு 199 பில்லியன் ரூபாவும் , பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு 53 பில்லியனும் செலவிடப்படுவதுடன் ஏனையதொகை மாகாண சபை ஊழியர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த தொகையை 12 மாதங்களுக்கு வகுத்துப்பார்த்தால் 54 பில்லியயே செலவிடப்படுகின்றது. அதனால் அரச ஊழியர்களின் கொடுப்பனவுக்காக 100பில்லியன் செலவிடப்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.
 

இதேவேளை சேவை ஒழுங்கு சங்கத்தினரிடம் கலந்துரையாடி தொழிலுக்கு சமூகமளிக்க முடியாமல் இருக்கும் ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தில் 50 வீதத்தை மாத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களின் நாளாந்த சம்பளமே அவர்களது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட போதுமானதாக இல்லை.
 

இந்நிலையில் 50 வீதத்தை கழித்தால் அவர்கள் எவ்வாறு தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஒருவார செலவிற்காகவே 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தோம். ஆனால் ஏழு வாரங்களுக்கு 5000 ரூபாவே வழங்கியுள்ளனர்.முதற்கட்டமாகவே அது வழங்கப்பட்டுள்ளது,

இரண்டாவது சுற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தாலும் , சில பகுதிகளில் இன்னும் முதற் சுற்றே ஆரம்பிக்கப்படவில்லை.
 

சில தொழிற்சாலைகள் ஊழியர்களுக்கு ஊதியம் பெற்றுக் கொடுப்பதற்காக வங்கி கடனுக்கு விண்ணம்பம் அனுப்பியுள்ள போதிலும் அவை இது வரையிலும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. வங்கி கடன்களை வழங்குவதற்காக 50 பில்லியன் ரூபாவே வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த தொகை இந்த கடன்களைபெற்றுக் கொடுப்பதற்கு போதுமனதாக இல்லை என்றும் வங்கி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

இந்நிலையில் அரசாங்கம் தம்மிடம் நிதி இல்லை என்று தெரிவித்து வருகின்றது. மத்தியவங்கியின் அறிக்கையின் படி உலக சந்தையில் எண்ணை விலை குறைந்துள்ளமையினால் மாத்திரம் 200 பில்லியன் ரூபாய் சேமிப்பில் இருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சீனா, ஜப்பான் , ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருந்தொகையான நிதி கிடைக்கப் பெற்றுள்ளது.

அதேவேளை உலக வங்கியிலிருந்து 126 பில்லியன் டொலர் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றைக் கொண்டு அரசாங்கம் சிறந்தமுறையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யமுடியும்.
 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொள்ளாமல் ஜனாதிபதி நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது அரசியலமைப்புற்கு புறம்பான செயற்பாடு என்று அறிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஜனாதிபதி அதனை கருத்திற் கொள்ளாது, கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான செலவுகள் தொடர்பில் இடைக்கால கணக்கறிக்கைக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் இயங்காத பட்சத்தில் இவர் யாரிடம் இந்த அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளார். அவர் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்பட முடியாது. இதன் மூலம் அவர் முழு நாட்டையும் தனது தனிப்பட்ட தீர்மானத்திற்கிணங்க செயற்படுத்துவதாகவே காண்பித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/81668

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமை இப்போ.. வெனிசுலா.. கியூபா.. சீனா.. போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தால்... மேற்குலக ஊடகங்கள் ஆட்சியாளர்களை போட்டு பென்டெடுத்திருப்பார்கள்.. அவர்களுக்கு வேண்டிய ஆட்சியாளர்களை புகுத்த. ஆனால்.. சொறீலங்காவில் எல்லாமே மேற்குலகின் பாராமுகத்தோடு நடந்தேறும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

இந்த நிலைமை இப்போ.. வெனிசுலா.. கியூபா.. சீனா.. போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தால்... மேற்குலக ஊடகங்கள் ஆட்சியாளர்களை போட்டு பென்டெடுத்திருப்பார்கள்.. அவர்களுக்கு வேண்டிய ஆட்சியாளர்களை புகுத்த. ஆனால்.. சொறீலங்காவில் எல்லாமே மேற்குலகின் பாராமுகத்தோடு நடந்தேறும். 

கோத்தா பதவியேறின சகுனம் சூப்பர் இன்னும் சில வருடங்களில் ஊர் போறவை  ரூபா நோட்டுக்களை வைத்து உருட்ட ஒரு ரோலி  ஒண்டு வாங்கிக்கொண்டு போவது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கோத்தா பதவியேறின சகுனம் சூப்பர் இன்னும் சில வருடங்களில் ஊர் போறவை  ரூபா நோட்டுக்களை வைத்து உருட்ட ஒரு ரோலி  ஒண்டு வாங்கிக்கொண்டு போவது நல்லது .

சிம்பாபே போல சொறீலங்கா விரைவில் ஆகும். டொலர் பாவனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

சிம்பாபே போல சொறீலங்கா விரைவில் ஆகும். டொலர் பாவனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

கொஞ்சநாளைக்கு  முதல் இந்த பொருளாதாரம் முடிவுக்கு போகும் என்று எதிர்வு கூற கம்பு சுற்றிய  வீரர்களை தேடுறன் எல்லா நாடும்தான் கடன் வாங்குது அமெரிக்காவே வாங்குது சிலோன் வாங்குவது பிழையில்லை என்று வாதிட்ட பெருமக்களை காணோம் .

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் எல்லா நாடுகளும் தான் கடன்படுது...இலங்கை கடன் வேண்டும் செய்திகளை மட்டும் தான் நாங்கள் வாசிக்கிறோம் 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உழைச்சு வாழுறவன் தான் வங்குரோத்தைப்பற்றி கவலைப்படவேணும்.
தண்டல்/தண்டி வாழுறவனுக்கு எல்லாம் ஒண்டுதானே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

கோத்தா பதவியேறின சகுனம் சூப்பர் இன்னும் சில வருடங்களில் ஊர் போறவை  ரூபா நோட்டுக்களை வைத்து உருட்ட ஒரு ரோலி  ஒண்டு வாங்கிக்கொண்டு போவது நல்லது .

 

  • தொடங்கியவர்
5 hours ago, ரதி said:

கொரோனாவால் எல்லா நாடுகளும் தான் கடன்படுது...இலங்கை கடன் வேண்டும் செய்திகளை மட்டும் தான் நாங்கள் வாசிக்கிறோம் 
 

இலங்கையின் பொருளாதாரம் வளரும் சாத்தியங்கள் இல்லை. தலைக்கு மேல் கடன். ஆக கடன் சுமையில் மக்களே !

  • தொடங்கியவர்

உலகின் ஒரு பெரிய நிதி முதலீட்டு நிறுவனத்தை வழி நடத்தும் றே பல பொருளாதார விடயங்கள் கூறியுள்ளார். எவ்வாறு நாடுகள் அச்சடிக்கும் பணம் அவர்களின் பொருளாதரத்தை  வளர்க்கும் / சரிக்கும்

வாசிக்க  :: what-i-have-offer-you-ray-dalio-1f

RayDalio

ol06-cLx?format=png&name=small

  • தொடங்கியவர்

Image

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொள்ளாமல் ஜனாதிபதி நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது அரசியலமைப்புற்கு புறம்பான செயற்பாடு என்று அறிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஜனாதிபதி அதனை கருத்திற் கொள்ளாது, கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான செலவுகள் தொடர்பில் இடைக்கால கணக்கறிக்கைக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் இயங்காத பட்சத்தில் இவர் யாரிடம் இந்த அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளார். அவர் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்பட முடியாது. இதன் மூலம் அவர் முழு நாட்டையும் தனது தனிப்பட்ட தீர்மானத்திற்கிணங்க செயற்படுத்துவதாகவே காண்பித்துள்ளார்

இப்படிச் சொன்னால் சுமந்து கோத்தாவுக்காக வாதிடத் தயார்...

  • தொடங்கியவர்

இலங்கை பொருளாதாரா ரீதியாக ஒரு நடுத்தர நிலையில் உள்ளது என்றால், கோவிட் 19ன் முடிவில் எங்கு இருக்கும்? நிச்சயம் ஒரு பணக்கார நாடு என நிலைக்கு வந்து விடாது. ஒன்றில் தொடர்ந்தும் நடுத்த நாடாக இருக்கும் இல்லை வறுமை நாடாக இருக்கும். 

ஆனால், வழமை போல அதை அநேகமாக முடிவு செய்யும் வலு உலக நாடுகளிடம், அவர்கள் முதலீடுகளில் மற்றும் இறக்குமதி, வெளி நாட்டு வேலை வாய்ப்பு வசதிகளில் உள்ளது. 

சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்த நிலையில் மேற்குலககம் சீன அணியை தவிர்க்க எண்ணக்கூடும். அதனால், இலங்கை வறுமை நாடாகும் சாத்தியங்கள் உள்ளன. 

அதுவே, ஒரு மக்கள் புரட்சியாக மாறவும் கூடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.