Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ ஆட்சிக்கு இடமளியோம் - மரிக்கார்

Featured Replies

(செ.தேன்மொழி)

நாட்டுக்கும், மக்களுக்கும் நலனை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன்,நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியில் டைக்கோட் மற்றும் சால்வை அணிந்த மோசடிதாரர்கள் கிடையாது. அதனால் யாருக்கும் துணைப்போக வேண்டிய தேவை எமக்கில்லை என்றும் அடக்குனுமுறை ஆட்சிக்கு எதிராக குறல் எழுப்புவதற்கு ஒருபோதும் அச்சமாட்டோம் என்றும் கூறினார்.

marikar.jpg

 

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

புண்ணியத்திற்காக தோன்றிய ஜனாதிபதியாகவே கோதாபய ராஜபக்ஷ காண்பிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆட்சியைக் கைப்பற்றிய தருணத்திலிருந்து இன்று வரை கொரோனா வைரஸ் பரவல்இ எலிக்காய்ச்சல் மற்றும் வெள்ளப் பெருக்கு என்று அழிவுகளே ஏற்பட்டு வருகின்றன.
எமது ஆட்சிக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது எந்தவித விண்ணப்பங்களும் பூர்த்திச் செய்யப்படாமல் அனைவருக்கும் உடனே நிவாரணத்தை பெற்றுக் கொடுத்தோம். ஆனால். தற்போதைய அரசாங்கம் கொரேனா நெருக்கடியால் பாதிப்புற்றுள்ள மக்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்தும் இன்னமும் முழுமையாக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

வைரஸ் பரவலினால் நாடுமூடப்பட்டதை அடுத்து மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலே இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. இந்தக்காலப்பகுதியில் சிலர் அவர்களது வீடுகளிலிருந்தே தொழில் செய்யவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இதனால் வழமைக்கு மாறாக நீர் மற்றும் மின்சாரம், தொலைபேசி பாவனைகள் அதிகரித்துள்ளன. இதனால் கட்டணமும் அதிகரித்துள்ளது.

இதேவேளை சிலருக்கு ஊதியம்கிடைக்கப்படாமளும் இன்னும் சிலருக்கு அரைவாசி ஊதியமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்கள் அவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத கழிவையோ அல்லது ஆறு மாதகால கால அவகாசத்தையோ பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஓமாகம பகுதியில் சர்வதேச கிரிக்கட் விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு முன்னர் கொரோனா காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதி, உற்பத்தி நிலையங்கள் என்பவற்றை முன்னேற்றுவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.வீட்டுத்தோட்டங்கள் அமைப்பது எக்காலத்திற்கும் உகந்த செயற்பாடுகளாகும். ஆனால் அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றமுடியும் என்று கூறுவது மூடத்தனமானதாகும். அரசாங்கம் மக்களின் நலரனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் நன்மைத்தரும் விடயங்களை முன்னெடுத்தால் எதிர்கட்சி என்ற வகையில் அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுப்போம். அதனை விடுத்து எமது ஆட்சிகாலத்தில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த பேச்சு சுகந்திரம் ஊடகசு தந்திரம், சுயாதீனமான நசீதித்துறை என்பறை ஒழித்து அடக்குமுறைஆட்சி, அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படுதல் மற்றும் இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தால். அதற்கு எதிராக குறல் எழுப்புவோம்.

அரசாங்கத்தின் துணையில் இருக்க வேண்டிய தேவை எமக்கில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்குள் டைக்கோட் அணிந்த மோசடிதாரர்களோ, சால்வை அணிந்த மோசடிகாரர்களோ கிடையாது. நாட்டிலர் இதுவரையிருந்த ஆட்சிமுறைக்க மாறுப்பட்ட முறையிலான மக்களின் நலனைமட்டும் கருத்திற்கொண்ட ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

https://www.virakesari.lk/article/82434

எதோ இவரை கேட்டு விட்டு தான் இராணுவம் ஆட்சியை பிடிக்குமாக்கும்; 

மரிக்கார் எந்த நாட்டுல இருந்து பேசுறார்?

நிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.

  • தொடங்கியவர்
18 minutes ago, Vankalayan said:

நிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.

ஏற்கனவே அங்கு இராணுவ ஆட்சிதானே நடக்கின்றது: பேராசிரியர் சொல்கிறார் 

http://www.ft.lk/columns/Defence-re-defined-The-military-as-first-resort/4-700510

 

7 minutes ago, ampanai said:

ஏற்கனவே அங்கு இராணுவ ஆட்சிதானே நடக்கின்றது: பேராசிரியர் சொல்கிறார் 

http://www.ft.lk/columns/Defence-re-defined-The-military-as-first-resort/4-700510

 

இல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Vankalayan said:

அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

ஓ அதுதான் கொரோனாவை விடுதலை புலிகளுடன் ஒப்பிட்டு , வைத்தியர்கள் ,மருத்துவ பணியாளர்களை தவிர்த்து கடற்படையை அனுப்பி போராட விட்டவைகளோ, இந்த கைங்கரியத்தால் தான் ஆயிரத்திற்குள் மட்டுப்பட வேண்டிய தொற்று தற்போது மீறியுள்ளது. அதுசரி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய வியாத்மக புத்திஜீவி யாரோ ....?

10 hours ago, ampanai said:

நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்

இடமளிப்பதற்கும் இடமளிக்காமலிருப்பதற்கும் நீங்க யாரு மரைக்கார்  ..? 
பியூஸ் போன கூட்டமெலாம் பண்ணும் அலப்பறைகள் தாங்கமுடியலடா சாமி 

  • தொடங்கியவர்
5 hours ago, Vankalayan said:

இல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

புத்த கோவிலில் ஒரு பிரச்சனை என்றால் அதில் வந்து தலையிட வேண்டியது காவல்துறை - அது சனநாயக நாடு.

ஒரு பொது சுகாதார பிரச்சனை என்றால் அங்கே தலையிடவேண்டியது சுகாதார துறையும் அதுசார் வல்லுனர்களும். மாறாக, இங்கே எல்லாமே முப்படை, அதலான் தான் அதிகளவில் கடற்படை பாதிப்பு 

அங்கே வந்து இராணுவம் தலையிட்டால் ? அது இராணுவ ஆட்சி நடக்கும் நாடு 

99090656_10158068616556855_46833268288389120_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=ri0rbdouAQIAX8j5wQ4&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=0ae8a1cc66b2f4b03bcc24e156407d7d&oe=5EEBC6CC

 

22 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓ அதுதான் கொரோனாவை விடுதலை புலிகளுடன் ஒப்பிட்டு , வைத்தியர்கள் ,மருத்துவ பணியாளர்களை தவிர்த்து கடற்படையை அனுப்பி போராட விட்டவைகளோ, இந்த கைங்கரியத்தால் தான் ஆயிரத்திற்குள் மட்டுப்பட வேண்டிய தொற்று தற்போது மீறியுள்ளது. அதுசரி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய வியாத்மக புத்திஜீவி யாரோ ....?

 

வித்தகம அமைப்பானது பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பொருளியலாளர்கள், நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட ஒரு அமைப்பு. எனவே அங்கு குறிப்பிட்டு யாரையும் கூற முடியாது. அவர்களுடைய 100 % ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட விடடாலும் பெரும்பாலான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே இங்கு ராணுவம் மட்டும் எல்லாவற்றையும் தீர்மானிப்பதோ, நடைமுறை படுத்துவதோ இல்லை.

 கோரோனோ இலங்கையில்  இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

கோரோனோ இலங்கையில்  இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.

இது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்களை வைத்து கூறும் கூற்று ,
கொரானா நோய்த்தொற்று தொற்றியுள்ள அநேக இளவயதுடையோர் அறிகுறிகளை காட்டாமலே குணமடைவதாக WHO தெரிவித்திருந்தது ஆனால்  அவர்கள் பலபேருக்கு காவிகளாக செயற்பட்டிருக்கலாம்.

உண்மையான இலக்கம் செய்யப்படும் Swab டெஸ்ட் அடிப்படையிலேயே வெளித்தெரியும் அதனடிப்படையில் இலங்கை ஒரு மில்லியன் தொகைக்கு 930 சோதனைகள் ,சிங்கப்பூரோ 51,600 சோதனைகள்.

இதனாலேயே சிங்கப்பூரில் அதிக நோயாளிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் , இவர்களில் 
அதிகமான Foreign Dom களில் தங்கியிருந்தவர்கள் மிக அரிதான மற்றும் அறிகுறிகளே வெளித்தெரியாமல் இருந்தவர்கள் ஆனால் சோதனைகளில் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டவர்கள். இலங்கையில் இப்படி பலபேர் 
அவர்களாகவே நோய்களை பரப்பி குணமடைகின்றனர். இலங்கையின் இந்த கணக்கெல்லாம் வியாத்மக கப்ரால் ஒரு காலத்தில் அடித்துவிட்ட பொருளாதார வளர்ச்சி 8-9% புருடா வகையறா  தான்   

Edited by அக்னியஷ்த்ரா

22 hours ago, அக்னியஷ்த்ரா said:

இது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்களை வைத்து கூறும் கூற்று ,
கொரானா நோய்த்தொற்று தொற்றியுள்ள அநேக இளவயதுடையோர் அறிகுறிகளை காட்டாமலே குணமடைவதாக WHO தெரிவித்திருந்தது ஆனால்  அவர்கள் பலபேருக்கு காவிகளாக செயற்பட்டிருக்கலாம்.

உண்மையான இலக்கம் செய்யப்படும் Swab டெஸ்ட் அடிப்படையிலேயே வெளித்தெரியும் அதனடிப்படையில் இலங்கை ஒரு மில்லியன் தொகைக்கு 930 சோதனைகள் ,சிங்கப்பூரோ 51,600 சோதனைகள்.

இதனாலேயே சிங்கப்பூரில் அதிக நோயாளிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் , இவர்களில் 
அதிகமான Foreign Dom களில் தங்கியிருந்தவர்கள் மிக அரிதான மற்றும் அறிகுறிகளே வெளித்தெரியாமல் இருந்தவர்கள் ஆனால் சோதனைகளில் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டவர்கள். இலங்கையில் இப்படி பலபேர் 
அவர்களாகவே நோய்களை பரப்பி குணமடைகின்றனர். இலங்கையின் இந்த கணக்கெல்லாம் வியாத்மக கப்ரால் ஒரு காலத்தில் அடித்துவிட்ட பொருளாதார வளர்ச்சி 8-9% புருடா வகையறா  தான்   

இள வய்துள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு குணமடைதிருக்கலாம். அப்படி என்றால் நிறைய வயதானவர்கள் மரணித்திருக்க வேண்டுமே. கணக்கு எங்கயோ பிழைக்குதே.

இலங்கையில் உள்ள வயோதிபர்கள் எல்லாம் வாலிபர்களாக மாறிவிடடார்களோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2020 at 22:00, Vankalayan said:

நிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.

எப்படி ? அமெரிக்காவுக்குப் போன்போட்டா 😂

On 20/5/2020 at 22:39, Vankalayan said:

இல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

ஐயா

வெள்ளையடிப்பதுதான் உங்கள் தொழிலோ 🤔

On 21/5/2020 at 21:52, Vankalayan said:

வித்தகம அமைப்பானது பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பொருளியலாளர்கள், நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட ஒரு அமைப்பு. எனவே அங்கு குறிப்பிட்டு யாரையும் கூற முடியாது. அவர்களுடைய 100 % ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட விடடாலும் பெரும்பாலான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே இங்கு ராணுவம் மட்டும் எல்லாவற்றையும் தீர்மானிப்பதோ, நடைமுறை படுத்துவதோ இல்லை.

 கோரோனோ இலங்கையில்  இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.

கொயபல்ஸ் என்று ஒருவர் ஜேர்மனியில் இருந்ததாக நினைவில் உள்ளது. அவரை உங்களுக்குத் தெரியுமா 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2020 at 12:39, Vankalayan said:

ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள்.

ஜனாதிபதியாக வீற்றிருப்பவர், ஒரு இனத்தை அழித்த போர்க்குற்றவாளி.  மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளை, அதி உயர் பதவிகளுக்கு நியமிப்பவரும் அவர். இதன் பின்னும் வேறு எதை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறீர்கள்?   வெகு விரைவில் இதற்கு பதில் கிடைக்கும். அதுவரை பொறுத்திருங்கள்.

On 22/5/2020 at 11:52, Vankalayan said:

மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது

மற்றய நாடுகளுக்குள் கொரோனா கொண்டு செல்லப்பட்டது. நமது நாடு தேடிப்போய் வாங்கி வந்ததனால், முன்னேறி இருக்கிறது. முழுவதுமாக  அழித்து விட்டால்  சந்தோசம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Vankalayan said:

இள வய்துள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு குணமடைதிருக்கலாம். அப்படி என்றால் நிறைய வயதானவர்கள் மரணித்திருக்க வேண்டுமே. கணக்கு எங்கயோ பிழைக்குதே.

இலங்கையில் உள்ள வயோதிபர்கள் எல்லாம் வாலிபர்களாக மாறிவிடடார்களோ தெரியவில்லை.

அதுதான் திடீர் மரணம் ,சும்மா இருந்தவர் கீழே விழுந்து மரணம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறதே ..இப்பவே அவசரப்பட்டால் எப்படி 
கொஞ்சம் பொறுங்கோ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் 

20 hours ago, Kapithan said:

எப்படி ? அமெரிக்காவுக்குப் போன்போட்டா 😂

ஐயா

வெள்ளையடிப்பதுதான் உங்கள் தொழிலோ 🤔

கொயபல்ஸ் என்று ஒருவர் ஜேர்மனியில் இருந்ததாக நினைவில் உள்ளது. அவரை உங்களுக்குத் தெரியுமா 😂

சிலவேளைகளில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள கஷ்ட்டமாகத்தான் இருக்கும். கோயபல்சை போன்றவர்கள் கோயபல்சை மறக்க மாடடார்கள்.

13 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுதான் திடீர் மரணம் ,சும்மா இருந்தவர் கீழே விழுந்து மரணம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறதே ..இப்பவே அவசரப்பட்டால் எப்படி 
கொஞ்சம் பொறுங்கோ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் 

அப்படி என்றால் எவ்வளவு காலம் செல்லும்? வருடக்கணக்காகுமா ? அப்படி என்றால் வெளி நாடுகளில் அவர்களை கண்டுபிடித்தும் நிறைய மரணங்கள் சம்பவிக்குதே? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

சிலவேளைகளில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள கஷ்ட்டமாகத்தான் இருக்கும். கோயபல்சை போன்றவர்கள் கோயபல்சை மறக்க மாடடார்கள்.

 

ஒரு இனத்தைக் கருவறுத்தவர்களுக்குகொஞ்சமும் மனச்சாட்சி இல்லாமல் எப்படி உங்களால் வெள்ளையடிக்க முடிகிறது ☹️

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

அப்படி என்றால் எவ்வளவு காலம் செல்லும்? வருடக்கணக்காகுமா ? அப்படி என்றால் வெளி நாடுகளில் அவர்களை கண்டுபிடித்தும் நிறைய மரணங்கள் சம்பவிக்குதே?

எல்லாமே நிகழ்தகவு தான் .. தொற்றுபவர்கள் எல்லோரும் நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்றால் கொரோனாவால் கூட ஒன்றும் செய்யமுடியாது.
சிங்கப்பூரின் தொகை 31600 ஐ தொடுகிறது மரணமடைந்த வர்கள்
வெறும் 23 பேர் தான் 
ஆக பாதிக்கப்பட்டோரில் இது 0.0686 வீதம்.
சிங்கப்பூர் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தாலே இவர்களில் அநேகர் தாங்களாகவே குணம்டைந்திருப்பர் 
சோதனைேயே உண்மை நிலவரத்தை வெளிக்காட்டியது.
நான் கூற வருவதும் இதைத்தான் ஏற்கனவே அண்டப் புளுகுகளுக்கு பெயர் போன இலங்கை அரசாங்கம் சொல்லும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை

  • கருத்துக்கள உறவுகள்

Vankalayan,

இலங்கையில் கொரோனா உறுதி செய்யபட்டவர்கள் வெறும் 1106 இறப்பு தொகை வெறும் 9.
இலங்கையின் கைலிலாகாத கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை
இலங்கை கொரோனா இறப்பு தொகையில் அமெரிக்கா,  இங்கிலாந்தை  முந்துகின்றது    என்று பத்திரிக்கைகளில் செய்தி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்களேன் 😂

16 hours ago, Kapithan said:

ஒரு இனத்தைக் கருவறுத்தவர்களுக்குகொஞ்சமும் மனச்சாட்சி இல்லாமல் எப்படி உங்களால் வெள்ளையடிக்க முடிகிறது ☹️

யாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை மறைக்க முடியாது. பொய்களை எழுதி மற்றவர்களை சந்தோசப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை. 

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

எல்லாமே நிகழ்தகவு தான் .. தொற்றுபவர்கள் எல்லோரும் நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்றால் கொரோனாவால் கூட ஒன்றும் செய்யமுடியாது.
சிங்கப்பூரின் தொகை 31600 ஐ தொடுகிறது மரணமடைந்த வர்கள்
வெறும் 23 பேர் தான் 
ஆக பாதிக்கப்பட்டோரில் இது 0.0686 வீதம்.
சிங்கப்பூர் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தாலே இவர்களில் அநேகர் தாங்களாகவே குணம்டைந்திருப்பர் 
சோதனைேயே உண்மை நிலவரத்தை வெளிக்காட்டியது.
நான் கூற வருவதும் இதைத்தான் ஏற்கனவே அண்டப் புளுகுகளுக்கு பெயர் போன இலங்கை அரசாங்கம் சொல்லும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை

அப்படியென்றால் இதே நிலைமை நியூசிலாந்து, சுவீடன் , நோர்வே , ஜெர்மெனி போன்ற நாடுகளிலும் ஏட்படுமா? இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா? இலங்கையை தவிர மற்ற எல்லா நாடுகளும் உண்மையை கூறுகின்றது என்று கூறுகிறீர்கள். இது ஒரு ஆகாசப்புளுகு இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Vankalayan said:

அப்படியென்றால் இதே நிலைமை நியூசிலாந்து, சுவீடன் , நோர்வே , ஜெர்மெனி போன்ற நாடுகளிலும் ஏட்படுமா? இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா? இலங்கையை தவிர மற்ற எல்லா நாடுகளும் உண்மையை கூறுகின்றது என்று கூறுகிறீர்கள். இது ஒரு ஆகாசப்புளுகு இல்லையா

நல்லா ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை ஓட்டுகிறீர்கள் வங்காலை

இலங்கையின் புள்ளிவிபர ஓட்டையை பற்றிகதைத்தால் ஜெர்மனி பிரான்ஸ் நோர்வெயை தூக்கி கொண்டு வருகிறீர்கள்.
வட பிராந்திய வைத்தியர்களை விட 
கோத்தாவுக்கும் உங்களுக்கும் தான் கன விடயம் தெரியும் போல கிடக்கு
https://www.wsws.org/en/articles/2020/04/29/jaff-a29.html

எப்பிடி இருக்கு இனி இதை வைத்தியர்களின் ஆகாசப்புழுகு என்பீர்கள் போல
 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Vankalayan said:

யாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை மறைக்க முடியாது. பொய்களை எழுதி மற்றவர்களை சந்தோசப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை. 

 

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமானால், அனுபவம்  மேலும் அதிகமாகத் தேவை என்று பொருள். 🙂

Just now, அக்னியஷ்த்ரா said:

நல்லா ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை ஓட்டுகிறீர்கள் வங்காலை

இலங்கையின் புள்ளிவிபர ஓட்டையை பற்றிகதைத்தால் ஜெர்மனி பிரான்ஸ் நோர்வெயை தூக்கி கொண்டு வருகிறீர்கள்.
வட பிராந்திய வைத்தியர்களை விட 
கோத்தாவுக்கும் உங்களுக்கும் தான் கன விடயம் தெரியும் போல கிடக்கு
https://www.wsws.org/en/articles/2020/04/29/jaff-a29.html

எப்பிடி இருக்கு இனி இதை வைத்தியர்களின் ஆகாசப்புழுகு என்பீர்கள் போல
 

அந்த நாடுகளிலும் கொரோனவை ஒழித்துவிடட பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. எனவேதான் அதுவும் உண்மையா என்று கேட்ட்டேன். யாழ்ப்பாண வைத்தியர்கள் ஒன்றும் புதிதாக கூறிவிடவில்லை. 

Just now, Kapithan said:

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமானால், அனுபவம்  மேலும் அதிகமாகத் தேவை என்று பொருள். 🙂

இனி பொய்யய்தான் எழுத வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

அந்த நாடுகளிலும் கொரோனவை ஒழித்துவிடட பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. எனவேதான் அதுவும் உண்மையா என்று கேட்ட்டேன். யாழ்ப்பாண வைத்தியர்கள் ஒன்றும் புதிதாக கூறிவிடவில்லை. 

இனி பொய்யய்தான் எழுத வேண்டும்.

அப்படியென்றால் எழுத வேண்டாம். உம்மை நம்புகிறேன். 🙂

Just now, Kapithan said:

அப்படியென்றால் எழுத வேண்டாம். உம்மை நம்புகிறேன். 🙂

உணமையை மட்டுமே எழுதுவேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.