Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் திடீரென இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_9407.jpg

யாழில் திடீரென இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு!

யாழில் திடீரென இராணுவப் பிரசன்னம் அதிகமாக காணப்படுவதுடன், கெடுபிடிகளும் அதிகரித்துள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, வீதியில் செல்வோரின் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். நகர் பகுதி, கலட்டி, நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதியில் செல்வோரின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை மோட்டார் சைக்கிள்களில் குழுக்களாகவும் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

நீண்ட காலத்தின் பின்னர் இராணுவத்தினர் வீதிகளில் குவிக்கப்பட்டு பதிவு நடவடிக்கைகளை முன்னெடுப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://athavannews.com/யாழில்-திடீரென-இராணுவப்/

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஆட்சியாளர்கள்.. இராணுவத்தை தான் வீதியில் இறக்குவார்கள்.

மைத்திரியை நல்லாட்சி நாயகன் ஆக்கி இந்த இனப்படுகொலை இராணுவ ஆட்சியாளர்களை காப்பாற்றிய சம் சும் மாவை கும்பல் தான் இந்த நிலைக்கு காரணம். 

3 hours ago, தமிழ் சிறி said:

யாழ். நகர் பகுதி, கலட்டி, நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதியில் செல்வோரின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

முக கவசங்களை போடாமல் கொரோனாவை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி அரச பயங்கரவாதத்தில் ஈடுபட வைத்திருப்பார்கள். #இனவழிப்பு  #தமிழ் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nedukkalapoovan said:

இராணுவ ஆட்சியாளர்கள்.. இராணுவத்தை தான் வீதியில் இறக்குவார்கள்.

மைத்திரியை நல்லாட்சி நாயகன் ஆக்கி இந்த இனப்படுகொலை இராணுவ ஆட்சியாளர்களை காப்பாற்றிய சம் சும் மாவை கும்பல் தான் இந்த நிலைக்கு காரணம். 

எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு திறமையும் கரிசனையும் இருந்தால் இந்த இராணுவ நிலைப்பாடுகளை வைத்தே சிங்களத்திற்கு உதவிகள் வழங்கும் சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்லி அழுத்தங்களை கொடுக்கலாம்.

42 minutes ago, குமாரசாமி said:

எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு திறமையும் கரிசனையும் இருந்தால் இந்த இராணுவ நிலைப்பாடுகளை வைத்தே சிங்களத்திற்கு உதவிகள் வழங்கும் சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்லி அழுத்தங்களை கொடுக்கலாம்.

எங்க சொகுசு வீடு கிடைக்கும் என்டு அலையும் சம்பந்தனும், எங்க அமைச்சுப்பதவி கிடைக்கும் என்டு அலையும் சுமந்திரனும், எப்பிடி குடும்பத்துக்கு வசதி வாய்ப்புகளை பெறலாம் என் அலையும் சகல கூட்டமைப்பு உறுப்பினர்களும் இருக்கும் வரைல எந்த உருப்படியான வேலையையும் கூட்டமைப்பு செய்யாது.

மற்றாக்கள் செய்யவும் விடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு திறமையும் கரிசனையும் இருந்தால் இந்த இராணுவ நிலைப்பாடுகளை வைத்தே சிங்களத்திற்கு உதவிகள் வழங்கும் சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்லி அழுத்தங்களை கொடுக்கலாம்.

இலங்கையில் வடகிழக்கில் அதிகரிக்கும் கொலைகள் கொள்ளைகளை பிடிப்பதற்க்காகவும் இருக்கலாம் அண்மையில் யாழ்ப்பாணம் , மட்டக்களப்பில் இரு குழுக்கள் பிடிக்கப்பட்டிருக்கிறது பல களவு சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் வடகிழக்கில் அதிகரிக்கும் கொலைகள் கொள்ளைகளை பிடிப்பதற்க்காகவும் இருக்கலாம் அண்மையில் யாழ்ப்பாணம் , மட்டக்களப்பில் இரு குழுக்கள் பிடிக்கப்பட்டிருக்கிறது பல களவு சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்

அதற்கு இராணுவமா??

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

அதற்கு இராணுவமா??

தற்போது எல்லாவற்றுக்கும் ராணுவம் தானே பயன்படுத்தப்படுகிறது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது எல்லாவற்றுக்கும் ராணுவம் தானே பயன்படுத்தப்படுகிறது 

பொலிஸ் எங்கை?
அடை காக்குதோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

பொலிஸ் எங்கை?
அடை காக்குதோ?

பொலிஸ் என்றால் பயம் இல்லாமல் போனது ராணுவம் என்றால் பயம்தான் இந்த கொரானோ காலத்தில் மாஸ்க் போடுங்கள் என்றால் யாரும் போட்டமாதிரி தெரியல ஆனால் ராணுவம் கையில் பிரம்புடன் அலைவதால் கனபேர் மாஸ்க் போட்டுக்கொண்டே திரிகிறார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பொலிஸ் என்றால் பயம் இல்லாமல் போனது ராணுவம் என்றால் பயம்தான் இந்த கொரானோ காலத்தில் மாஸ்க் போடுங்கள் என்றால் யாரும் போட்டமாதிரி தெரியல ஆனால் ராணுவம் கையில் பிரம்புடன் அலைவதால் கனபேர் மாஸ்க் போட்டுக்கொண்டே திரிகிறார்கள் 

ஒரு காலத்திலை ஆமிக்கும் சனம் பயமில்லாமல் இருந்தவையள் தானே...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

ஒரு காலத்திலை ஆமிக்கும் சனம் பயமில்லாமல் இருந்தவையள் தானே...:grin:

இப்ப காலம் மாறிப்போச்சு தானே 😉

Image

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.