Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Guyana நாட்டு ஜனாதிபதி Donald Ramotar தொடக்கி வைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மத்திய அமெரிக்காவின்  Guyana நாட்டின் ஜனாதிபதி Donald Ramotar , போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர்  Stephen J. Rapp  உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.

மே22ம் நாள் வெள்ளிக்கிழமை (அமெரிக்கா) நியூ யோர்க் நேரம் காலை 8 மணிக்கு தொடங்க இருக்கின்ற இந்நிகழ்வினை www.tgte.tv வலைக்காட்சி , https://www.facebook.com/tgteofficial சமூகவலைத்தளம் உட்பட தமிழர் ஊடகப்பரப்பெங்கும் உலகத்தமிழர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணக்கம் சகோதர சகோதரிகளே,
கடந்த மே18ம் நாள் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் ஜனாதிபதி  Dr. Jose Ramos-Horta  அவர்கள் வழங்கியிருந்த நிலையில், தற்போது இந்நிகழ்வில் Guyana  நாட்டு ஜனாதிபதி Hon Donald Ramotar பங்கெடுத்திருப்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியமானதொரு நகர்வாக உள்ளதோடு, அமெரிக்காவின் ஓபமா நிர்வாகத்தில் போர்குற்ற விவகாரங்களுக்கா தூதுவராக ( United States Ambassador-at-Large for War Crimes Issues  ) இருந்த  Stephen J. Rapp  அவர்கள் பங்கெடுப்பதும் முக்கியமானதொரு விடயமாகவுள்ளது.

இத்தொடக்க நிகழ்வில் அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழக (  Director,Peace-building and Rights Program    Institute for the study of Human Rights- Columbia University,U.S.) Aதலைவர்  Professor David.L .Phillips   அவர்கள் பங்கெடுப்பதோடு, தமிழகத்தில் இருந்தும் பேராளர்கள் பங்கெடுக்கின்றனர்.

தொடர்ந்து மதியம் 13 மணிக்கு தொடங்க இருக்கின்ற அரசவை அமர்வில் நாடுகடந்த அரசியல், அதன் கோட்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் அது கடந்து வந்த பாதை, அதன் எதிர்காலம் என்ற தொனிபொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெற இருக்கின்றது.

இதேவேளை புதிதாக நியமனம் பெற்றுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் மேலவை உறுப்பினர்களுக்கும் Dr. Jeyalingam (Physician and Former President Illankai Tamil Sangam, USA), Prof. Saraswathy - (Human Rights Activist, Tamil Nadu,India), Mrs. Usha Sriskandarajah (Yoga Teacher, Poet, Writer and Columnist, Canada), Mr. Satya (Journalist, Human Rights and Public Health Activist based in New Delhi, India), Mr. Rathakrishanan (Political Analyst, Legal Expert, Human Rights Activist, Writer and Columnist, Tamil Nadu, India), Mr. Ravikumar (President of World Thamil Organaization (WTO), USA), Mr. Roy Chetty (Human Rights Activist, South Africa) அரசவை உறுப்பினர்களுக்கு இடையிலான கருத்தாடல் ஒன்றும் இடம்பெற இருக்கின்றது.

தொடர்ந்து அமைச்சர்களினால் சமர்பிக்கப்பட இருக்கின்ற செயற்பாட்டு அறிக்கை தொடர்பிலான விவாதமும் இடம்பெற இருக்கின்றது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அரசவை அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையவழி தொழில்நுட்பம் மூலம், இந்நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போரே வாழ்வாகவும் வாழ்வே போராகவும் கொண்ட எமது விடுதலைப் பாதையில் கொரோனா வைரஸ் போன்ற எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டவாறு ;கான நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரவித்துள்ளது.
மின்னஞ்சலில் வந்தபடியால் இணைப்பு இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ செய்தி  , எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாய் அமைந்தால் ம‌கிழ்ச்சி /
 

Guyana நாடும் கிரிக்கெட்டில் வெஸ்சின்டீஸ் அணிக‌ளுட‌ன் இருக்கும் ஒரு அணி  

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கிழக்குத்திமோர் நாட்டின் விடுதலை வீரரும்.. முன்னாள் அதிபருமானவர்.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து.. நாடு கடந்த தமிழீழ அரசின் அழைப்பின் பெயரில்.. இணையச் செய்தி ஒன்றை வழங்கி இருந்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசு.. தனி அரசுப் பிரகடனம் நோக்கி பயணிப்பது காலத் தேவையாகி விட்டது. உலகத் தமிழினமும்.. இதை நோக்கி ஒத்த சக்திகளோடு ஒன்றுபட்டு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வழிகாட்டுதல் நன்று. 

பல நாடுகளிலும் தங்கள் தேவைகள் சரிவர, முதலில் அரசை வழிக்கு கொண்டுவர பார்ப்பார்கள் அமெரிக்கர்கள். 

அது சரிவராவிட்டால், எதிர்க்கட்சி ஊடாக முயலுவார்கள். இலங்கையில் அது பலவீனமாக உள்ளது. 

அதுவும் சரிவராவிட்டால், நாட்டிற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். அதற்கு சிறுபான்மை மக்களையும் அவரகள் கட்சிக்களையும் உபயோகிப்பார்கள். இலங்கையில் அதுவும் பலவீனமாக உள்ளது.

சில வேளைகளில் ஒட்டுகுழுக்களை உபயோகிப்பார்கள். அதுக்கு இலங்கையில் இடமே தற்பொழுது இல்லை.  

ஒரு சர்வசன வாக்கெடுப்பை நோக்கி நாடு கடந்த அரசு பயணிப்பதாக தெரிகின்றது. அதுவே சிறப்பு. 

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ampanai said:

பல நாடுகளிலும் தங்கள் தேவைகள் சரிவர, முதலில் அரசை வழிக்கு கொண்டுவர பார்ப்பார்கள் அமெரிக்கர்கள். 

அது சரிவராவிட்டால், எதிர்க்கட்சி ஊடாக முயலுவார்கள். இலங்கையில் அது பலவீனமாக உள்ளது. 

அதுவும் சரிவராவிட்டால், நாட்டிற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். அதற்கு சிறுபான்மை மக்களையும் அவரகள் கட்சிக்களையும் உபயோகிப்பார்கள். இலங்கையில் அதுவும் பலவீனமாக உள்ளது.

சில வேளைகளில் ஒட்டுகுழுக்களை உபயோகிப்பார்கள். அதுக்கு இலங்கையில் இடமே தற்பொழுது இல்லை.  

ஒரு சர்வசன வாக்கெடுப்பை நோக்கி நாடு கடந்த அரசு பயணிப்பதாக தெரிகின்றது. அதுவே சிறப்பு. 

 

அம்பனை, வித்தியாசமான கோணத்தில்... சிந்தித்து இருக்கின்றீ ர்கள். அது, நடந்தால் நல்லது.

தமிழீழ நாடு கடந்த அரசில் சில குறைகள் இருக்கலாம்..இருக்கின்றது. 

கனடிய நாடு உட்பட பல நாடுகளால் பதிவு செய்யப்பட்ட  அமைப்புத்தான்  இது. 

கடந்த பதினோரு ஆண்டுகளாக எமது போராட்டத்தை இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில், உலக வரைபுகளுக்கு (World Order) இணங்க, நடாத்தி செல்பவர்கள் இவர்களே.  

==================================================================

நடக்கும் கோவிட் 19 என்ற தொற்றால் உலகம் மீண்டும் ஒரு ஆரம்ப நிலைக்குள் (reset) சென்றுகொண்டு இருக்கின்றது.

அதில் வர இருக்கும் போட்டி, மேற்குலகம் ( இந்தியா சார்ந்து) சீனாவிற்கு எதிராக வடிவம் பெற்று வருகின்றது. சீனாவும், தனக்கு ஆதரவாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளை ( சந்தைகளை) கடன் கொடுத்து வளைத்துப்போடுகின்றது.  

அப்படியான ஒரு இந்த புதிய ஒழுங்கில் இந்தியாவின் கிழக்கு கரையோரங்கள் புதிய பொருளாதார மையங்களாக உருப்பெற்றால், அதனால் வங்ககடலும் கடல்சார் பயணங்களும் பாதுகாப்பும் மேற்குலக - இந்திய பொருளாதார நலன்களுக்கு தேவையாகின்றது, அதுவே, வட-கிழக்கு இலங்கை (தமிழர் தாயகம்). 

=====================================================================

ஆப்கானிஸ்தானில் ஹமீட் கர்ஸாய் என்ற அமெரிக்க ஆஃப்கானியை அமெரிக்க நாடு அதிபராக நியமித்து தனது விருப்பங்களை சில காலம் வெற்றிகரமாக நிறைவேற்றியது 

 

1 hour ago, தமிழ் சிறி said:

அம்பனை, வித்தியாசமான கோணத்தில்... சிந்தித்து இருக்கின்றீ ர்கள். அது, நடந்தால் நல்லது.

சில வருடங்களுக்கு முன்னராக ஒரு நாடு கடந்த அரசின் பிரதிநிதியை சந்தித்தேன். அப்பொழுது நான் அவருக்கு கூறிய சில கருத்துக்கள் :

- நாடு நடந்த அரசு சட்ட ரீதியாக அமெரிக்க / இந்திய அரசுகளுடன் பொருளாதாரத்தை முன்வைத்து பேச்சுக்களை நடாத்த வேண்டும் 

- எங்கள் தாயக பிரதேசத்தில் நாம் நிலம், பாதுகாப்பு, பொருளாதரம் ஆகியவனவற்றை ஆளும் அதிகாரம் தரப்பட்டல் வேண்டும் 

- நாம் பொருளாதர வலயங்களை, துறைமுகங்களை உங்களுக்கு தருவோம் 

- இவற்றை நிறுவ, உலகளாவிய ரீதியில் தமிழர்கள் மத்தியில் தமிழீழ அரசின் பதிவுசெய்யப்பட்ட திறைசேரிகளை விற்று நிதி திரட்டுவோம் (~ 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 

- அதன் மூலம் மற்றும் புலம்பெயர் வாழ் மக்களை உள்வாங்கி நவீன பொருளாதார வலயங்களை உருவாக்குவோம் 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஈழத் தமிழினத்திற்காக உலக ராசதந்திரிகளுடன் பேசக்கூடிய சக்தியையும், சந்தர்ப்பங்களையும் நாடுகடந்த தமிழீழ அரசுமட்டுமே கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

==================================================================

நடக்கும் கோவிட் 19 என்ற தொற்றால் உலகம் மீண்டும் ஒரு ஆரம்ப நிலைக்குள் (reset) சென்றுகொண்டு இருக்கின்றது.

அதில் வர இருக்கும் போட்டி, மேற்குலகம் ( இந்தியா சார்ந்து) சீனாவிற்கு எதிராக வடிவம் பெற்று வருகின்றது. சீனாவும், தனக்கு ஆதரவாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளை ( சந்தைகளை) கடன் கொடுத்து வளைத்துப்போடுகின்றது.  

அப்படியான ஒரு இந்த புதிய ஒழுங்கில் இந்தியாவின் கிழக்கு கரையோரங்கள் புதிய பொருளாதார மையங்களாக உருப்பெற்றால், அதனால் வங்ககடலும் கடல்சார் பயணங்களும் பாதுகாப்பும் மேற்குலக - இந்திய பொருளாதார நலன்களுக்கு தேவையாகின்றது, அதுவே, வட-கிழக்கு இலங்கை (தமிழர் தாயகம்). 

=====================================================================

 

தொடர்ச்சியாகத் தமிழினத்தை அழிவுக்குள்ளாக்கிவரும் கொள்கையைக் கொண்டுள்ள இந்தியா எப்படித் தமிழருக்குச் சாதகமாக நிலையெடுக்கும். தமிழரைத் தலையெடுக்கவிடக்கூடாது என்ற கொள்கையுடையதே அவர்களது வெளியுறவுக் கொள்கையெனும்போது இவை சாத்தியமா? இந்தியாவை  நம்பமுடியுமா? பூமாலையென்று வந்து பேரழிவுகளை விதைத்தவர்கள். அதன்தொடர்ச்சியாகவே இன்றுவரை செயற்படும் நிலையில் இவை சாதகமா பாதகமா என்றும் சிந்திக்க வேண்டும். இங்கு அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை .நிரந்தர எதிரியும் இல்லை என்று கூறலாம். ஆனால் இந்தியா என்ற கொடுமரசு தனது ஒன்றியத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களத்தால்கடலிலே சுட்டுப்படுகொலைசெய்யும்போதே பேசாதிருக்கும் அரசை எப்படி நம்புவது. நல்லது நடந்தால் மாற்றம் நிகழ்ந்தால் நல்லதே.பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by nochchi

1 hour ago, nochchi said:

இங்கு அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை .நிரந்தர எதிரியும் இல்லை என்று கூறலாம்.

இங்கே கோத்தா / மகிந்தா மீண்டும் ஆட்சியில் என்பதும் அவர்கள் சீனா பக்கமே பலமாக சாய்ந்துள்ளார்கள் என்பது புது டெல்லிக்கு நிச்சயம் தெரியும். அவர்களும் கடினமாக ஒன்றில் சகோதரர்களை வளைத்துப்போட இல்லை ரணில் / சஜித் குழுக்களை இணைத்து பலமாக்க முயலுவார்கள். ஆனால், அதையும் சகோக்கள் கணித்தே நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

ஆக, தற்போதைக்கு சிங்கள அரசின் பக்கம் இருந்து புது டெல்லிக்கு சாதகமான தரப்புகள் / வாய்ப்புக்கள் இல்லை. 

இந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும்? இந்த மாற்றம் ( சிங்கள / பௌத்தம் ) ஆழமாக ( சீனாவின் ஆதரவுடன்) தீவில் பதிந்துவிடுமா? , இந்த கேள்விகளுக்கான விடைகளிலேயே புது டெல்லி நிரந்தரமாக தமிழர் பக்கம் சாயலாம். அதாவது அவர்களின் நலன்களும் எமது நலன்களும் ஒரே கோட்டில் வரும் பொழுதே எமக்கு நன்மைகள் கிட்டும். 

அதற்கான சாத்தியங்கள் கோத்தாவின் பலத்தாலும் கோவிட்19 னாலும் அதிகரித்துள்ளன.  

1 hour ago, nochchi said:

தொடர்ச்சியாகத் தமிழினத்தை அழிவுக்குள்ளாக்கிவரும் கொள்கையைக் கொண்டுள்ள இந்தியா எப்படித் தமிழருக்குச் சாதகமாக நிலையெடுக்கும். தமிழரைத் தலையெடுக்கவிடக்கூடாது என்ற கொள்கையுடையதே அவர்களது வெளியுறவுக் கொள்கையெனும்போது இவை சாத்தியமா? இந்தியாவை  நம்பமுடியுமா? பூமாலையென்று வந்து பேரழிவுகளை விதைத்தவர்கள். அதன்தொடர்ச்சியாகவே இன்றுவரை செயற்படும் நிலையில் இவை சாதகமா பாதகமா என்றும் சிந்திக்க வேண்டும்.

உலகின் மிகப்பெரிய யுத்தமான இரண்டாம் உலக மாக யுத்தத்தின் முடிவில், ஜப்பான் சரணடைந்தும் அமேரிக்கா அணு குண்டை வீசியது. வெற்றி பெற்ற நாடுகள் ஜெர்மனியையும் இரண்டாக பிளந்தனர்.

ஆனால், அதே அமெரிக்க நாட்டின் உதவியுடன் இன்று ஒரு மிகப்பெரிய பொருளாதார பலமுள்ள நாடாக இந்த இரண்டு நாடுகளும் வளர்ந்துள்ளன. 1945-1955 காலப்பகுதிகளில் ஜெர்மனியர்களும் ஜப்பானியர்களும்  கூட அமெரிக்காவை சந்தேகத்துடனேயே பார்த்திருப்பார்கள். 

அதற்காக நாமும் கண்ணை மூடிக்கொண்டே இந்தியாவை இல்லை யாரையும் முழுமையாக  நம்ப கூடாது, ஆனால் நம்ப நடப்போம்.  

9 hours ago, பையன்26 said:

ந‌ல்ல‌ செய்தி  , எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாய் அமைந்தால் ம‌கிழ்ச்சி /
 

Guyana நாடும் கிரிக்கெட்டில் வெஸ்சின்டீஸ் அணிக‌ளுட‌ன் இருக்கும் ஒரு அணி  

இந்த நாட்டின் பிரதம மந்திரி தமிழர் வழி வந்தவரே, பெயர் :Hon. Moses Veerasammy Nagamootoo.
இந்த நாட்டில் நிறைய தமிழர்கள் வாழ்கிறார்கள் (இவர்களுக்கு தமிழ் தெரியாது ஆனால் பெயர்கள் மட்டும் அழகான தமிழ் பெயர்கள்) இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் குடியேற்றப்படடவர்கள்.

இங்கே கனடாவில் உள்ள எம்மவர்கள் இந்த நாட்டில் காணி வாங்கி பெருமளவில் விவசாயம் செய்கிறார்கள், கனடாவுக்கு  எமது மரக்கறி {கத்தரிக்காய், முறுக்கங்கய் ), மீன் என்பன பெருமளவில்  இந்த நாட்டில் இருந்தே வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள், நன்றாக நடக்க 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் விவகாரத்தில் கொழும்பு தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் : கிழக்குத் திமோரின் முன்னாள் ஜனாதிபதி

5000-2-21-1024x520.jpgதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தக்கு வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேரையில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்று இலண்டன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, கொழும்பில் இடம்பெற்றுள்ள அரசாங்கமும் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழர்களைப் போன்றுக மிகப்பெரும் இன அடையாள உணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட ஒரு தேசிய இன மக்கள் தனித்திருக்க விரும்புவது ஏன்? தம்மைத்தாமே கேட்டுக் கொள்ளும் பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்பதையும் அரசுகள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்;. ஸ்பெயினில் கத்தலோனியர்களும், துருக்கியில் குர்துகளும், ஐக்கிய பிரித்தானிய முடியரசில் ஸ்காட்டுகளும் நடத்தி வரும் நிகழ்காலப் போராட்டங்களைச் சிறப்பு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டவர் தமிழ்மக்களின் போராட்டத்தையும் அதே வரிசையில் வைத்து கருத்துரைத்தார்.

இலங்கையில் தமிழர் இனவழிப்பு என்பதை குறிப்பிட்ட அவர், சென்ற நூற்றாண்டில் ஜெர்மனியில் யூதர்கள் இனவழிப்பு, சிரியாவிலும் சூடானிலும் இப்போதும் தொடரும் இனவழிப்பு ஆகியவற்றின் விரிவான சூழலில் பொருத்திக் காட்டினார். தேசிய இனக் குழுக்கள் ஒன்றையொன்று அரக்கராக்கிக் காட்டுவதற்கு மேல் உயர்ந்து, தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க ஆக்கவழியில் உரையாட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

தன்னாட்சிக்கும் தேசியத்துக்குமான போராட்டம் ஒரு வரலாற்று உண்மையாகும், ஒவ்வொரு தேசமும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் அந்த சுதந்திரத்தின் பொருள் பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும். என்பதில்லை என்றார். இந்தோனேசியாவில் தன்னுடைய அவருடைய கிழக்கு திமோரிய மக்களின் போராட்டம் கடந்து சென்ற பாதையை எடுத்துரைத்தவர் எப்படிப் பின்னொரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பியக்கம் ஐநாவின் நடுவாண்மையில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் உரையாடல் என்ற முயற்சியில் ஈடுபட்டது என்பதையும், எப்படி முடிவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அது தங்கள் சுதந்திரத்துக்கு வழிகோலிற்று என்பதையும் குறிப்பிட்டார்.

இந்தோனேசிய அரசு ஒடுக்குமுறை வழிகளைக் கடைப்பிடித்த காலத்தில் எந்தக் கட்டத்திலும் கிழக்கு திமோரியர்கள் தங்கள் ஒடுக்குமுறையாளரை அரக்கராக்கிக் காட்டியதில்லை என்றார்.
சிறிலங்கா அரசாங்கம் கூடுதல் வலுவாற்றலாக இருப்பதால் பௌத்தத்தின் கருணையைக் காட்டி, தமிழ் மக்களைத் தேடிச்சென்று உதவலாம் என்பது முனைவர் ரமோஸ்-ஹோர்தாவின் கருத்து. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீகள், ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்று அவர் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். எது வரினும் வெற்றி உங்களுக்கே என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.

மே18-முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவிற்கொள்ளும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வை ஒழுங்கு செய்து வருகிறது. பலவாறான பின்னணிகள் கொண்டோரும் அமெரிக்கா, கொசோவோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருமான புகழார்ந்த பேச்சாளர்கள் முன்சென்ற ஆண்டுகளில் இந்தப் பேருரை ஆற்றியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

http://thinakkural.lk/article/42885

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.