Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேவிபியை அடக்கிய வெற்றிவிழா நடப்பதில்லை; தமிழர்களிற்கு எதிரான வெற்றிவிழாவே கொண்டாடப்படுகிறது; கோட்டா நாட்டை படுகுழிக்குள் தள்ளுவார்: விக்னேஸ்வரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது. இந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, வளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவல் க.வி்.விக்னேஸ்வரன்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் (மே 18) அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன் –

‘ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசாங்கம் முற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ள நிலையில், ஐ. நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.”

இந்த நிலைமை மிக விரைவில் ஏற்படப் போகின்றது என்று நினைத்தாரோ என்னவோ ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச அவர்கள் இம்மாதம் 19ம் திகதி நடைபெற்ற யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் பின்வருமாறு கூறியுள்ளார் –

‘எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக் கொள்ள நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை”.

எனவே இலங்கை குற்றம் புரிந்து கொண்டிருப்பதை உலகம் அறிந்துள்ளது என்று கண்டே வீராப்பாகக் கதைக்கத் தொடங்கியுள்ளார் ஜனாதிபதி அவர்கள் என்று புலப்படுகிறது. வரப் போவதைத் தடுக்க அவருக்கு வேறு வழி தெரியவில்லை போலும்.

அவர் ஆற்றிய உரை போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் சம்பந்தமாக இடப்பட்ட கட்டளை பீல்ட் மார்ஷல் பொன்சேகா அவர்களால் இடப்பட்டிருந்தால் இவ்வாறான வீராப்பு வெளிவந்திருக்குமோ தெரியாது.

யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஆற்றியுள்ள உரை வரலாற்றின் அடிப்படையில் புரையோடிப்போயிருக்கும் இந்த நாட்டின் இன முரண்பாட்டை கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம் செய்து, வெற்றிக் கோசம் எழுப்பி, படையினருக்கு எதிராக செயற்பட்டால் சர்வதேச நிறுவனங்களில் இருந்து வெளியேற போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளமை எத்தகைய ஒரு துன்பத்துக்குள் இலங்கை எதிர்காலத்தில் சிக்கி தவிக்கப்போகின்றது என்பதையே காட்டுகின்றது.

ஆனால் போர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது. இந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, வளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. அத்தகையவர்களிடம் இருந்து இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.

பாதிக்கப்பட்ட நாம் கூட இலங்கையை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்துவதனுடாக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். அதனால் தான், இலங்கையை ஜ. நா உறுப்புரிமையை இருந்து நீக்கும்படி சர்வதேச சமூகம் மற்றும் ஐ. நா வை நான் வலியுறுத்தி வருகின்றேன்.

ஆனால், இலங்கையை சர்வதேச அரங்கில் இருந்து தனிமைப்படுத்துமாறு நாம் கோரும் நிகழ்ச்சி நிரலுக்கும் அரசாங்கம் சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று விடுத்துள்ள எச்சரிக்கையின் பின்னால் இருக்கக்கூடிய நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதியை பெற்று அதன் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்த நாம் முயற்சிக்கிறோம். ஆனால், தாம் நிகழ்த்திய இனப்படுகொலையில் இருந்து தப்புவதற்கும் தொடர்ந்து எமக்கு எதிராக கட்டமைப்பு சார் இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கும் அரசாங்கம் முயலுகின்றது. சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை கடப்பாடுகளில் இருந்து விலகுவன் மூலம் இவற்றை அடையலாம் என்பது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு.

சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் பணித்தமை நினைவுக்கு வருகின்றது. சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றிவிட்டு சாட்சி இல்லா யுத்தம் ஒன்றை நடத்தி எமது மக்களை அரசாங்கம் இன அழிப்புக்கு உள்ளாக்கியது. அரசாங்கம், அப்போது சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றியபோது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை Responsibility to Protect (R2P) கோட்பாடுகளுக்கு அமைவாக உரிய முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே இன அழிப்பு நடைபெறுவதற்கு வழிகோலியது.

இன அழிப்பின் பின்னரும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் நிலையில், எதிர்காலத்தில் மிக மோசமான கட்டமைப்பு சார் இனப்படுகொலை ஒன்றும் ஏனைய மனித உரிமை மீறல்களும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறப்போவதற்கான ஒரு முன் அறிகுறியாகக் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் போர் வெற்றி நாள் அறிவிப்புக்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆகவே, முன்னர் போல அல்லாமல் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் இந்த அறிவிப்பு குறித்து தீவிரமான கவனம் செலுத்தவேண்டும். இதனை அலட்சியம் செய்யாமல் தமிழ் மக்களை பாதுகாக்கும் முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதேவேளை, நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச ரீதியில் சுயாதீனமாக விசாரணை செய்வதற்கும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடைபெறுமானால் எமது அப்பாவி சிங்களச் சகோதரர்களுக்கு இறுதியுத்தத்தில் என்ன நடந்தது என்பதை உணர்த்தி அவர்களின் பௌத்த தர்மம் காட்டும் வழியில் எமக்கான பரிகார நீதியை பெற்று இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றினை காணமுடியும் என்று நம்புகின்றேன். இதன் மூலம், சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பலாம். ஆனால், எமது சில சிங்களச் சகோதரர்கள் நாம் தனிநாட்டை உருவாக்க எத்தனித்து வருவதாக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். உண்மையில் சிங்கள ஆட்சியாளர்களே வட-கிழக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றுமாக இருவேறு ஆட்சி நிர்வாகங்களை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் வட-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதினத்திற்கும் தெற்கில் நடைபெற்ற போர் வெற்றி தினத்திற்கும் இடையேயான முரண்நிலையினுடாக தெட்டத்தெளிவாக இதனை புரிந்துகொள்ளலாம்.

தெற்கில் இரண்டு தடவைகள் இளைஞர் கிளர்ச்சிகள் நடைபெற்றிருப்பதுடன் இராணுவத்தினால் மூர்கத்தனமாக கொடூரமான முறையில் பல்லாயிரம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு அவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இதன்போது உயிர்நீத்த இளைஞர்கள் இன்றுவரை வருடாவருடம் தென் இலங்கையில் நினைவு கூரப்படுகின்றார்கள். ஆனால், போர் வெற்றி விழாக்கள் நடைபெறுவதில்லை. ஆனால், தமிழ் மக்களின் யுத்தத்தை பொறுத்தவரையில், நினைவுகூரல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதுடன் யுத்த வெற்றி விழா தென் இலங்கையில் அதே காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்றது. நீதித்துறையின் சட்டம் கூட இருவேறாக தென் இலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்கும் பிரயோகிக்கப்படுகின்றது. நினைவு கூரல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது கொறோனா தனிமைப்படுத்தல் விதி முறைகள் பாய்கின்றன. ஆனால், தென் இலங்கையில் யுத்த வெற்றி விழா கொண்டாடுபவர்கள் மீது எந்த சட்டமும் பாய்வதில்லை. ஆகவே, இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார் என்று கேள்வி கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தற்போது தாம் இராணுவத்தில் இல்லை என்பதையும் இந்த நாடு முழுவதற்கும் அதில் வாழும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய ஒரு உன்னத பதவியை அவர் வகிக்கின்றார் என்பதையும் தயவுசெய்து இனியாவது மனதில் நிலை நிறுத்துவாராக!

https://www.pagetamil.com/125848/

18 minutes ago, பெருமாள் said:

சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் பணித்தமை நினைவுக்கு வருகின்றது. 

கோத்தா பல கூறிய விடயங்களை செய்தும் வருகிறார். தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் நிச்சயம் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து, அப்படி ஒன்றை சர்வதேசம் முன்னெடுக்குமானால், காப்பாற்ற சகல நடவடிக்கைகளையும் எடுப்பார். 

ஆக, அப்படி ஒன்றை முன்னெடுக்கும் சர்வதேசமே எமது மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ......  என நாம் முழுமையாக நம்பி இருந்துவிடவும் முடியாது. 

அப்டியானால் என்ன நடவடிக்கைகளை தற்பொழுதே நாம் செய்யவேண்டும் ?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

கோத்தா பல கூறிய விடயங்களை செய்தும் வருகிறார். தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் நிச்சயம் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து, அப்படி ஒன்றை சர்வதேசம் முன்னெடுக்குமானால், காப்பாற்ற சகல நடவடிக்கைகளையும் எடுப்பார். 

ஆக, அப்படி ஒன்றை முன்னெடுக்கும் சர்வதேசமே எமது மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ......  என நாம் முழுமையாக நம்பி இருந்துவிடவும் முடியாது. 

அப்டியானால் என்ன நடவடிக்கைகளை தற்பொழுதே நாம் செய்யவேண்டும் ?  

பலர் விபத்துக்கள் .தற்கொலைகள் எனும் பெயரில் போட்டு தள்ளப்படுவார்கள் தமிழ்  கொலைகள் அதிகரிக்க சந்தர்ப்பம் கூட .

42 minutes ago, பெருமாள் said:

பலர் விபத்துக்கள் .தற்கொலைகள் எனும் பெயரில் போட்டு தள்ளப்படுவார்கள் தமிழ்  கொலைகள் அதிகரிக்க சந்தர்ப்பம் கூட .

அதற்கு அவசியம் இல்லை என நினைக்கின்றேன்.

தமிழ் தலைமைகளின் வங்குரோத்து அரசியலையும், பதவி மோகத்தையும், ராச(அ)தந்திர அறிவையும் எம்மை விட சிங்களம் / முக்கியமாக கோத்தா அணியினர் மிக நன்கு புரிந்து வைத்து இருக்கின்றனர். எனவே இருக்கும் தமிழ் கட்சிகளை இன்னும் பல சிறு கட்சிகளாக உடைத்து பலவீனமாக்கும். அதே நேரத்தில் வடக்கில் சைவ மக்களுக்கும் கிறீஸ்தவ மக்களுக்கும் இடையில் மேலும் விரோதத்தையும், குரோதத்தையும் வளர்த்து தமிழ் தேசியத்தின் பால் மக்களை ஒன்றுபட விடாது பார்த்துக் கொள்ளும். கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கி சிறுபான்மையினரின் ஒன்றுபடலை இல்லாதொழிக்கும்.

போரின் மூலம் ஏற்பட்ட இழப்பு உயிர் / உடல் / உடமை சேதம் என்றால் இதனால் ஏற்படப் போகும் சேதம் தமிழ் இனத்தின் அடையாளங்களை சிதைத்து நீர்கொழும்பு, சிலாபம் போன்ற பகுதிகளில் வாழும் மக்களை போல சிங்களத்தை அண்டி வாழும் சமூகமாக ஆக்குவதாக அமையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

அதே நேரத்தில் வடக்கில் சைவ மக்களுக்கும் கிறீஸ்தவ மக்களுக்கும் இடையில் மேலும் விரோதத்தையும், குரோதத்தையும் வளர்த்து தமிழ் தேசியத்தின் பால் மக்களை ஒன்றுபட விடாது பார்த்துக் கொள்ளும். கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கி சிறுபான்மையினரின் ஒன்றுபடலை இல்லாதொழிக்கும்.

ஏற்கனவே தொடங்கிட்டினம் .

ஆனாலும் உலக்கத்துக்கு  நேரே சொல்ல முடியாத கொலைகளும் அவர்களுக்கு அவசியம் விக்கியர் போன்றவைகள் கவனமாக இருப்பது நல்லது .

2 hours ago, பெருமாள் said:

போர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது. இந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, வளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவல் க.வி்.விக்னேஸ்வரன்.

யதார்த்தமான கருத்துக்கள்!
விக்கியருக்கு ஒரு சபாஷ்!

5 hours ago, நிழலி said:

அதற்கு அவசியம் இல்லை என நினைக்கின்றேன்.

தமிழ் தலைமைகளின் வங்குரோத்து அரசியலையும், பதவி மோகத்தையும், ராச(அ)தந்திர அறிவையும் எம்மை விட சிங்களம் / முக்கியமாக கோத்தா அணியினர் மிக நன்கு புரிந்து வைத்து இருக்கின்றனர். எனவே இருக்கும் தமிழ் கட்சிகளை இன்னும் பல சிறு கட்சிகளாக உடைத்து பலவீனமாக்கும். அதே நேரத்தில் வடக்கில் சைவ மக்களுக்கும் கிறீஸ்தவ மக்களுக்கும் இடையில் மேலும் விரோதத்தையும், குரோதத்தையும் வளர்த்து தமிழ் தேசியத்தின் பால் மக்களை ஒன்றுபட விடாது பார்த்துக் கொள்ளும். கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கி சிறுபான்மையினரின் ஒன்றுபடலை இல்லாதொழிக்கும்.

போரின் மூலம் ஏற்பட்ட இழப்பு உயிர் / உடல் / உடமை சேதம் என்றால் இதனால் ஏற்படப் போகும் சேதம் தமிழ் இனத்தின் அடையாளங்களை சிதைத்து நீர்கொழும்பு, சிலாபம் போன்ற பகுதிகளில் வாழும் மக்களை போல சிங்களத்தை அண்டி வாழும் சமூகமாக ஆக்குவதாக அமையும்.

நீங்கள் கூறிய கருது உண்மையாக இருந்தாலும் , சிறுபான்மையாக உள்ள சமூகம் இன்னொரு சிறுபான்மை சமூகத்தை அடிமைப்படுத்த நினைத்தால் அதை எதிரிகள் பயன்படுத்த முனைவார்கள் என்பதை மறக்கக்கூடாது.

எனவே அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்கள் மனதை வெல்ல முயட்சிக்க வேண்டும். இல்லாவிடடாள் இந்த கதை தொடர்கதையாகவே இருக்கும். இப்போதும் இது எல்லைம்மீறி செல்வதட்குமுன்னர் செய்லபடடாள் நல்லது. 

6 hours ago, பெருமாள் said:

‘ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசாங்கம் முற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ள நிலையில், ஐ. நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.”

"இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" - 

காரியத்தில் காட்டுங்கள். 

சீன - அமெரிக்க தொலைபேசி அழைப்புகள்; பட்டுவழிப்பாதை; இந்தோ-பசிபிக் பிராந்தியமும் கோவிட் 19ம்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபட் ஓ பிறைன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரது அழைப்புக்கள் சிங்கள நாட்டை,  அதன் எதிர்காலத்தை மாற்றும். 
 
சீனா பக்கம் மேலும் சாய்ந்தால் அது அமெரிக்க தரப்புக்களை எதுவரை கொண்டுசெல்லும்?
 
இந்த வர உள்ள புதிய உலக ஒழுங்கில் தமிழர் எவ்வாறு அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் ?
  • கருத்துக்கள உறவுகள்

எமது அரசியல்வாதிகள் இனப்பிரசினைக்கான தீர்வு பற்றிய செயற்பாடுகளில் பகுதி நேரமாகவோ அல்லது தமக்கு வேண்டிய நேரங்களிலோதான் ஈடுபட்டுவருகிறார்கள்.
அரசியல் தலையீடு இல்லாமல்  தமிழர் விவகாரங்களை கவனித்து 24 மணி நேரமும் வேலைசெய்யும் நிரந்தரமான செயற்குழு ஒன்று எம்மிடம் இல்லை.

தமிழர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை சர்வதேச அரங்கில் மட்டுமல்ல உள் நாட்டிலும்கூட  தீர்க்கதரிசனத்துடனும், இராஜதந்திரத்துடனும், இனப்பற்றுடனும் அணுகி சேவை செய்யும் ஆற்றலும் அறிவும்  எந்த தமிழ் அரசியல்வாதிக்கும் இல்லை. மாறாக தேர்தலில் வென்றால் மட்டும் அவர்களிடம் அரசியல் பலம் இருக்கும் என்பது தெரிந்து பதவிகாலம் முடிந்ததும் இதே காரணத்தை கூறி தங்களை மீண்டும் தெரிவுசெய்தால் தீர்வு பெற்றுதருவதாக கூறி மீண்டும் மீண்டும் பதவிக்கு வருவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். அவர்கள் செய்யும் கொஞ்ச நஞ்ச வேலையிலும் தொடர்ச்சி இல்லாமல் போகும்.

அரசியல்வாதிகளை உள்ளடக்காத தமிழர் விவகாரத்திற்கான நிரந்தர அரசியல் செயற்ப்பாட்டுகுழு ஒன்று இஸ்தாபிக்கப்படவேண்டும். சர்வதேச நீதித்துறை, அரசியல் அமைப்பு, இராஜதந்திர கோட்பாடுகள் ஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்கள் இதில் இணைந்து தீர்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயலாற்றவேண்டும்.

11 hours ago, vanangaamudi said:

சர்வதேச நீதித்துறை, அரசியல் அமைப்பு, இராஜதந்திர கோட்பாடுகள் ஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்கள் இதில் இணைந்து தீர்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயலாற்றவேண்டும்.

இதுக்கும் நல்லதொரு தலைமை வேணும்.
இல்லை என்றால் நெல்லு விதைக்க போன ஆட்கள் புல்லை விதைச்சு போட்டு நிப்பீனம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.