Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம யார் வம்பு தும்புக்கும் போறதில்லை, யார் பக்கமும் இல்லை - அப்படி போடு அரிவாளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே

பஞ்சசீல கொள்கை

இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது. இந்திராவின் காலத்தில் அரசியல் தலைவர்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர்; ராஜீவ் காலத்தில் அதிகாரிகளே வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர். இதனால்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை சந்தித்தது.

ராஜபக்சேவின் சீனா சார்பு

ராஜபக்சேவின் சீனா சார்பு என்னதான் தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்தியா உதவி இருந்த போதும் சீனாவுக்கே மகிந்த ராஜபக்சே முக்கியத்துவம் அளித்தார். சீனாவுக்காக ஒட்டுமொத்த இலங்கையையே குறிப்பாக சிங்களர் வாழும் தென்னிலங்கையையே ராஜபக்சே திறந்துவிட்டார் அல்லது தாரைவார்த்தார். இந்த ராஜதந்திர கோபத்தில்தான் ராஜபக்சே தேர்தலில் மண்னைக் கவ்வி மைத்திரி பால சிறிசேனா அதிபரானார் என்பது தென்னாசியாவின் வரலாறு.

நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள் இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ராஜபக்சே நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதை அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நியூஸ் 18 சேனலும் மகிந்த ராஜபக்சேவிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை எடுத்திருக்கிறது. நியூஸ்18.காம் மூத்த செய்தி ஆசிரியர் டிபி சதீஷூக்கு ராஜபக்சே அளித்த நேர்காணலில் சீனாவுடனான உறவுகள் குறித்த கேள்விக்கு ராஜபக்சே அளித்த பதில்:

இலங்கை அணி சேரா கொள்கை

இலங்கை அணி சேரா கொள்கை இலங்கையானது அனைத்து நாடுகளுடனும் அணிசேரா கொள்கையை கடைபிடிக்கிறது. இந்தியாவும் சீனாவும் எங்களது மதிப்பிற்குரிய நட்பு நாடுகள். இந்தியாவின் ஜவஹர்லால் நேருவும் சீனாவின் சூ என்லாயும் பிற நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதிக்கும் விதமாக, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாத, பஞ்சசீலக் கோட்பாட்டை உருவாக்கினர்.

பஞ்சசீல கொள்கை இந்த பஞ்சசீலக் கோட்பாட்டை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். இனிவரும் காலங்களிலும் இந்த பஞ்சசீலக் கோட்பாடுகளின் அடிப்படையில் பயணிப்போம். பிராந்திய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமானது. சார்க் போன்ற அமைப்புதான் இந்த ஒத்துழைப்பை மேலும் வலிமையாக்கும். உறுப்பு நாடுகளிடையே இருக்கும் பிரச்சனைகளால் சார்க் அமைப்பு இயங்காமல் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகள் இருக்கின்றன. பேச்சுகளைத் தொடங்குவதற்கான பாதைகள் திறந்தே இருக்கின்றன. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

Edited by Nathamuni

இந்தியனுக்கு இன்னொரு தரம் ஆப்பு இருக்கியாச்சு!

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார்

.கடன் கொஞ்சம் தேவையாக உள்ளது. அது தான் நடுவால் ஓடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே

சிங்கள அரசியல் வாதிகள்  மேல்,  எவ்வளவு... வெறுப்பு இருந்தாலும்.
அவர்களின் ராஜ தந்திரத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

எங்களின் தமிழ் அரசியல் வாதிகள், வாயால் வடை சுட்டுக் கொண்டு...
தன்னுடைய இனத்தையே... விற்றுக் கொண்டு இருக்கிறாகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இவர், சொதப்பல், ஊழல் புகழ் இந்தியாவை பத்தி சும்மா அவிச்சு இறக்கிறார் போல கிடக்குது.:grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இவர், சொதப்பல், ஊழல் புகழ் இந்தியாவை பத்தி சும்மா அவிச்சு இறக்கிறார் போல கிடக்குது.:grin:

இப்படி அவிச்சு விட்டாத் தானே அவருடைய கடையில் வியாபாரம் நடக்கும்.

2 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

என்னப்பா வடை போச்சா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இப்படி அவிச்சு விட்டாத் தானே அவருடைய கடையில் வியாபாரம் நடக்கும்.

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

இந்தியா... மற்ற ஆட்களை, நம்பி கெடப்  போகுது.
நமக்கென்ன... பார்த்து,  "எஞ்ஜாய்"  பண்ண வேண்டியதுதான். :)

இவர்கள் கெதியில், போரை ஆரம்பித்தால் நல்லது,
நெடுக... கொரோனா செய்திகளை வாசித்து,  "அலுப்பு" அடிக்குது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா... மற்ற ஆட்களை, நம்பி கெடப்  போகுது.
நமக்கென்ன... பார்த்து,  "எஞ்ஜாய்"  பண்ண வேண்டியதுதான். :)

இவர்கள் கெதியில், போரை ஆரம்பித்தால் நல்லது,
நெடுக... கொரோனா செய்திகளை வாசித்து,  "அலுப்பு" அடிக்குது. :grin:

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா வடை போச்சா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

ஈழப்பிரியர், ஏதோ சொல்ல வந்தவர், பேரன் கூப்பிட்டு விட்டான் போல கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஈழப்பிரியர், ஏதோ சொல்ல வந்தவர், பேரன் கூப்பிட்டு விட்டான் போல கிடக்குது.

ஆமா  நாதமுனி,  அவர் எழுத வந்த... கருத்து, என்ன என்று... அறிய ஆவலாக உள்ளது. :)

21 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் இந்தியர்கள் உலகமே தெரியாத முட்டாள்கள் என்பதற்கு இக்காணொளியும் ஓர் உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

இது பற்றி பல வருடம் முன்பு நான் இங்கு ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

சீனா உண்மையிலேயே இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் முழுவதையும் 
வலு கட்டாயமாகவே பிடித்து வைத்திருக்கிறது.

ஆனாலும் இந்தியாவினால் ஒன்றும் செய்ய முடியாது ..காரணம் 1962 ஆண்டு போரின் போது 
உண்மையிலேயே ஒரு சீனாவுக்கு சொந்தமான சிறு பிரதேசம் இந்திய எல்லைக்குள் இருந்தது 
அப்போது அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. சீன பிரதேசத்தை சுற்றி இந்திய இராணுவம் இருந்தததால் பெருமளவு இராணுவ உயிர்பலியை தவிர்க்க சீனா தந்திரோபயாகவே அந்த பிரதேசத்தை விட்டு பின்வாங்கியது ..அதன் பின்பு படை எடுத்து வந்ததுதான் அருணாச்சல பிரதேசம் முழுவதும் கைப்பற்றியது.

ஒவொரு அமெரிக்க ஜனாதிபதி மாற்றம் நடக்கும்போதும் 
அமெரிக்க தூதுவராக இருக்கும் ஒரு சங்கியை அவருடன் நெருக்கமாக பழக விட்டு 
உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நாம் கழுவிவிட தயராக இருக்கிறோம் 
ஆகவே எம்மை பற்றி நீங்கள் அதிகம் யோசிக்க தேவை இல்லை என்ற உறுதிமொழி வழங்குவது 
கடந்த 20 வருடமாக ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

அதுக்கு பதிலாக கிளிண்டன் தொடங்கி எல்லா அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியாவுக்கு சார்பாக ஒரு அறிக்கை விடுவார்கள் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது இதை சீனா கருத்தில் கொள்ளவேண்டும் என்று.

இந்த அறிக்கை வந்ததும் அதை டாலாய் லாமா (நாடு கடந்த தீபெத் அதிபர்) உடனே  சி என் என் னில் தோன்றி  
இந்த பகுதியை எவ்வளவு அடக்குமுறையாக சீனா வலு கட்டாயமாக பிடித்து வைத்திருக்கிறது என்று ஒரு விளக்கம்  கொடுப்பார்.

பின்பு நியூயோர்க்கில் இருக்கும் யூ என் னில் இது பற்றி ஒரு வாதம் நடக்கும்  
பின்பு இறுதி விவாதத்துக்கு சீனாவுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இறுதி விவாதத்துக்கு சீனாவும் வரும்  ........வந்து நாம் என்ன இல்லை என்றா சொல்கிறோம் 
நாம் அருணாச்சல பிரதேசத்தை விடுவிக்கிறோம் அதுபோல இந்தியாவும் எமது பிரதேசத்தை திருப்பி தரவேண்டும்  என்று கூறும். இவர்கள் அதே அளவு நில பரப்பை அருணாச்சல பிரதேசத்தில் சீனா எடுத்து கொள்ளலாம்  என்று கூறுவார்கள். சீனா கண்ணுக்கு கண் என்று ஆடம் பிடிக்கும்  

பின்பு நீங்கள் பகிடியாக எழுதினாலும்  வடிவேல் போலதான் .........
நீயும் இந்தப்பக்கம் வரப்படாது 
நானும் அந்தப்பக்கம் வர மாடடேன் 
என்று இந்திய சார்பு பக்கம் கொஞ்சம் அழுத்தி கூறும் அவ்வளவுதான்.  

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Maruthankerny said:

இது பற்றி பல வருடம் முன்பு நான் இங்கு ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

சீனா உண்மையிலேயே இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் முழுவதையும் 
வலு கட்டாயமாகவே பிடித்து வைத்திருக்கிறது.

ஆனாலும் இந்தியாவினால் ஒன்றும் செய்ய முடியாது ..காரணம் 1962 ஆண்டு போரின் போது 
உண்மையிலேயே ஒரு சீனாவுக்கு சொந்தமான சிறு பிரதேசம் இந்திய எல்லைக்குள் இருந்தது 
அப்போது அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. சீன பிரதேசத்தை சுற்றி இந்திய இராணுவம் இருந்தததால் பெருமளவு இராணுவ உயிர்பலியை தவிர்க்க சீனா தந்திரோபயாகவே அந்த பிரதேசத்தை விட்டு பின்வாங்கியது ..அதன் பின்பு படை எடுத்து வந்ததுதான் அருணாச்சல பிரதேசம் முழுவதும் கைப்பற்றியது.

ஒவொரு அமெரிக்க ஜனாதிபதி மாற்றம் நடக்கும்போதும் 
அமெரிக்க தூதுவராக இருக்கும் ஒரு சங்கியை அவருடன் நெருக்கமாக பழக விட்டு 
உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நாம் கழுவிவிட தயராக இருக்கிறோம் 
ஆகவே எம்மை பற்றி நீங்கள் அதிகம் யோசிக்க தேவை இல்லை என்ற உறுதிமொழி வழங்குவது 
கடந்த 20 வருடமாக ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

அதுக்கு பதிலாக கிளிண்டன் தொடங்கி எல்லா அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியாவுக்கு சார்பாக ஒரு அறிக்கை விடுவார்கள் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது இதை சீனா கருத்தில் கொள்ளவேண்டும் என்று.

இந்த அறிக்கை வந்ததும் அதை டாலாய் லாமா (நாடு கடந்த தீபெத் அதிபர்) உடனே  சி என் என் னில் தோன்றி  
இந்த பகுதியை எவ்வளவு அடக்குமுறையாக சீனா வலு கட்டாயமாக பிடித்து வைத்திருக்கிறது என்று ஒரு விளக்கம்  கொடுப்பார்.

பின்பு நியூயோர்க்கில் இருக்கும் யூ என் னில் இது பற்றி ஒரு வாதம் நடக்கும்  
பின்பு இறுதி விவாதத்துக்கு சீனாவுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இறுதி விவாதத்துக்கு சீனாவும் வரும்  ........வந்து நாம் என்ன இல்லை என்றா சொல்கிறோம் 
நாம் அருணாச்சல பிரதேசத்தை விடுவிக்கிறோம் அதுபோல இந்தியாவும் எமது பிரதேசத்தை திருப்பி தரவேண்டும்  என்று கூறும். இவர்கள் அதே அளவு நில பரப்பை அருணாச்சல பிரதேசத்தில் சீனா எடுத்து கொள்ளலாம்  என்று கூறுவார்கள். சீனா கண்ணுக்கு கண் என்று ஆடம் பிடிக்கும்  

பின்பு நீங்கள் பகிடியாக எழுதினாலும்  வடிவேல் போலதான் .........
நீயும் இந்தப்பக்கம் வரப்படாது 
நானும் அந்தப்பக்கம் வர மாடடேன் 
என்று இந்திய சார்பு பக்கம் கொஞ்சம் அழுத்தி கூறும் அவ்வளவுதான்.  

நீங்கள் என்னத்தைக் கூறினாலும் அருணாச்சல் பிரதேசம் சீனாவுக்குத்தான் சொந்தம். காஷ்மீர் முழுவதும் பாகித்தானுக்குச் சொந்தம். சீனா விரும்பினால் கேரளத்தையும் எடுத்துக்கொள்ளலாம். 😎

நாட்டாமை கப்பித்தானின் தீர்ப்புதான் இறுதியானது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் இந்தியர்கள் உலகமே தெரியாத முட்டாள்கள் என்பதற்கு இக்காணொளியும் ஓர் உதாரணம்.

போல்.... அவர்களே, 
"நச்சென்று..."  இரண்டு வரியில்,  
எழுதிய... உங்கள் கருத்து,  உண்மையானது. :)

 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2020 at 15:16, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இவங்கள இப்படியே இருக்க விடுவதுதான் நல்லது. கற்பனையிலேயே 2020யில் உலக மகா வல்லரசான நாடல்லவா 😂

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.