Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு

Featured Replies

(நா.தனுஜா)

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது.

வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

அதனை மேற்கோள் காண்பித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிடப்பட்டிருக்கிறது.
சீனாவின் கொள்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கும் வகையிலான இலங்கையின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம்.

சீனாவும், இலங்கையும் மூலோபாய அடிப்படையில் நெருங்கிய பங்காளர்களாக உள்ள அதேவேளை இருநாடுகளும் பரஸ்பரம் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றன.

எமது உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/83226

  • தொடங்கியவர்
12 minutes ago, ampanai said:

அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது.

புது டெல்லிக்கு சொல்லப்பட்ட செய்தி?  " இலங்கையில் இந்தியா தலையிடுவதை சீன அரசு அனுமதிக்காது". 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

புது டெல்லிக்கு சொல்லப்பட்ட செய்தி?  " இலங்கையில் இந்தியா தலையிடுவதை சீன அரசு அனுமதிக்காது". 

செய்தி அதுவல்ல அம்பானையார்.

யுத்தக்குற்ற விசாரணை அது இது எண்டு தாரும் வந்தால், இந்த சப்பட்டை மூக்கன் பாத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான் என்று சொல்லுறார். 

டெல்லிக்காரனும் அந்த நிலை எண்டபடியால், அவர்களது வாயிலும் அல்வா தானே இருக்கும்...

இதை தான் (டெல்லி)திருடனுக்கு தேள் கொட்டின கொடுமை என்பது...😎

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
3 hours ago, Nathamuni said:

செய்தி அதுவல்ல அம்பானையார்.

யுத்தக்குற்ற விசாரணை அது இது எண்டு தாரும் வந்தால், இந்த சப்பட்டை மூக்கன் பாத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான் என்று சொல்லுறார். 

டெல்லிக்காரனும் அந்த நிலை எண்டபடியால், அவர்களது வாயிலும் அல்வா தானே இருக்கும்...

இதை தான் (டெல்லி)திருடனுக்கு தேள் கொட்டின கொடுமை என்பது...😎

13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்க சொல்லி வற்புறுத்தினால்? 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ampanai said:

13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்க சொல்லி வற்புறுத்தினால்? 

அதென்னே புதுசே...

சும்மா அப்பப்ப, பொழுது போகாட்டில் ஓதுவினம்...

தாரும் காது கொடுத்து கேட்கமாட்டினம் எண்டு தெரியுமே.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ampanai said:

13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்க சொல்லி வற்புறுத்தினால்? 

அதெப்படி முடியும். கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினவர்கள் எப்படி இலங்கையை வற்புறுத்த முடியும். ☹️

  • தொடங்கியவர்
54 minutes ago, Kapithan said:

அதெப்படி முடியும். கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினவர்கள் எப்படி இலங்கையை வற்புறுத்த முடியும். ☹️

அரசியலில் அதெல்லாம் சாகசமப்பா   🙂 

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் வழமையான சரவெடிதான்.

சீனா எப்போது எங்கு தான் நீதியின் பக்கம் நின்றிருக்கிறது. இப்போ ஹிந்தியா தான் நெருக்கடியில்.. சுற்றிவர எதிரிகளை தனதாக்கியது தான் மிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

இதெல்லாம் வழமையான சரவெடிதான்.

சீனா எப்போது எங்கு தான் நீதியின் பக்கம் நின்றிருக்கிறது. இப்போ ஹிந்தியா தான் நெருக்கடியில்.. சுற்றிவர எதிரிகளை தனதாக்கியது தான் மிச்சம். 

உண்மை ச‌கோத‌ரா

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nedukkalapoovan said:

இதெல்லாம் வழமையான சரவெடிதான்.

சீனா எப்போது எங்கு தான் நீதியின் பக்கம் நின்றிருக்கிறது. இப்போ ஹிந்தியா தான் நெருக்கடியில்.. சுற்றிவர எதிரிகளை தனதாக்கியது தான் மிச்சம். 

எம்ம‌வ‌ர் 2005ம் ஆண்டும் இந்தியாவுட‌ன் ந‌ல் உற‌வை பேன‌வே விரும்பினார்க‌ள் , அத‌ ப‌ல‌ வ‌டிவ‌த்தில் எடுத்தும் சொன்னார்க‌ள் /

எம்ம‌வ‌ர் இருந்து இருக்க‌னும் இந்தியாவுக்கு பாதுகாப்பாய் இருந்து இருப்பின‌ம் /

இந்தியா எப்ப‌வும் த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்டு தானே ப‌ழ‌க்க‌ம் /

2009ம் ஆண்டுட‌ன் இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது 😠😡

  • கருத்துக்கள உறவுகள்

Dfg.jpg

குல சேகர பட்டணத்தில் ரோகேற் ஏவுதளம் , தஞ்சையில் புதிய விமான படை தள விரிவாக்கம் என்டு கிந்தியனும் அவனால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கான்.. 👍

தெற்கில் தமிழீழம் இருந்தால் சீனனுக்கோ அல்லது வேறு நாட்டு  இந்தியாவை தாக்குவதற்கு முன் தடுப்பு முன்னரங்கு அதுவாகதான் இருந்து இருக்கும் . 

அது இல்லாமல் போக இப்போ கொஞ்சம் எக்ஸ்றன் பண்ணி தமிழ்நாடுக்கு வந்து இருக்கான் . முதல் அடி இங்கு தான் விழும் 

கொஞ்சம் யோசித்தால் பலி ஆவது பாக் ஜல சந்தி இரு பக்கத்தில் உள்ள தமிழர்களே..அவன் எஸ்கேப் ..

கிந்தியனுக்கு அடி மேற்கில் பாகிஸ்தான் , வடக்கே சீனன்  இருந்து நேரடியாக விழ தமிழர் தரப்பு சேதாரம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.. 👌

மற்றும் கிழக்கில் பங்களாதேஸ்/பர்மா ..அவை இருந்தும் ஒன்றுதான் இல்லாம இருப்பதும் ஒன்றுதான்..

11 hours ago, ampanai said:

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது.

இந்தியனுக்கு ஆப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பையன்26 said:

எம்ம‌வ‌ர் 2005ம் ஆண்டும் இந்தியாவுட‌ன் ந‌ல் உற‌வை பேன‌வே விரும்பினார்க‌ள் , அத‌ ப‌ல‌ வ‌டிவ‌த்தில் எடுத்தும் சொன்னார்க‌ள் /

எம்ம‌வ‌ர் இருந்து இருக்க‌னும் இந்தியாவுக்கு பாதுகாப்பாய் இருந்து இருப்பின‌ம் /

இந்தியா எப்ப‌வும் த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்டு தானே ப‌ழ‌க்க‌ம் /

2009ம் ஆண்டுட‌ன் இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது 😠😡

ஆனால் சீனாக்கார்னை விட இந்த இந்தியன் பிழையில்லை என நினைக்கிறேன்.....எம் இனத்தை அழித்தவர்கள் அதில் மாற்றுக்க்ருத்துக்கு இடமில்லை ....சீனாக்காரனின் கொள்கையுடன் தாக்குபிடிக்கமுடியாது...

இந்தியா உடைந்தால் சிங்களவன் சீனாக்காரனுடன் சேர்ந்து தமிழ்நாட்டை ஆளநினைப்பான்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, putthan said:

ஆனால் சீனாக்கார்னை விட இந்த இந்தியன் பிழையில்லை என நினைக்கிறேன்.....எம் இனத்தை அழித்தவர்கள் அதில் மாற்றுக்க்ருத்துக்கு இடமில்லை ....சீனாக்காரனின் கொள்கையுடன் தாக்குபிடிக்கமுடியாது...

இந்தியா உடைந்தால் சிங்களவன் சீனாக்காரனுடன் சேர்ந்து தமிழ்நாட்டை ஆளநினைப்பான்

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி புத்த‌ன் மாமா ,

பொறுத்து இருந்து பாப்போம் எதிர் வ‌ரும் கால‌ங்க‌ளில் என்ன‌ ந‌ட‌க்குது என்று 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2020 at 23:17, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Dfg.jpg

குல சேகர பட்டணத்தில் ரோகேற் ஏவுதளம் , தஞ்சையில் புதிய விமான படை தள விரிவாக்கம் என்டு கிந்தியனும் அவனால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கான்.. 👍

தெற்கில் தமிழீழம் இருந்தால் சீனனுக்கோ அல்லது வேறு நாட்டு  இந்தியாவை தாக்குவதற்கு முன் தடுப்பு முன்னரங்கு அதுவாகதான் இருந்து இருக்கும் . 

அது இல்லாமல் போக இப்போ கொஞ்சம் எக்ஸ்றன் பண்ணி தமிழ்நாடுக்கு வந்து இருக்கான் . முதல் அடி இங்கு தான் விழும் 

கொஞ்சம் யோசித்தால் பலி ஆவது பாக் ஜல சந்தி இரு பக்கத்தில் உள்ள தமிழர்களே..அவன் எஸ்கேப் ..

கிந்தியனுக்கு அடி மேற்கில் பாகிஸ்தான் , வடக்கே சீனன்  இருந்து நேரடியாக விழ தமிழர் தரப்பு சேதாரம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.. 👌

மற்றும் கிழக்கில் பங்களாதேஸ்/பர்மா ..அவை இருந்தும் ஒன்றுதான் இல்லாம இருப்பதும் ஒன்றுதான்..

அதிர்ச்சி அலைகள்.. தஞ்சையில் கேட்ட பயங்கர சத்தம்.. பின்னணியில் சோனிக் பூம்.. பரபரப்பு தகவல்கள்! -உண்மை என்ன.?

maxresdefault.jpg

தஞ்சாவூர்: நேற்று தஞ்சாவூரில் பயங்கரமான சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த சத்தத்திற்கு காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் திடீர் என்று மதிய நேரத்தில் மிகப்பெரிய சத்தம் கேட்டது. பெரிய அளவில் வெடி வெடித்தது போல சத்தம் கேட்டது. பெங்களூர் முழுக்க பல்வேறு பகுதிகளில் சத்தம் கேட்டது.

இதனால் பெங்களூரில் எங்காவது வெடிகுண்டுகள் வெடித்துவிட்டதா என்று மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக இணையம் முழுக்க நிறைய விவாதங்கள் நடந்தது. பெங்களூருக்கு ஏலியன் வந்துவிட்டதா என்றும் கூட விவாதம் செய்தனர்.

உண்மை என்ன.?

இந்த நிலையில் பெங்களூரில் இப்படி மிக அதிகமாக பயங்கர சத்தம் கேட்க காரணம் சோனிக் பூம் என்று இந்திய விமானப்படை விளக்கம் அளித்தது. பொதுவாக விமானப்படை விமானங்கள் சப் சோனிக், சோனிக், சூப்பர் சோனிக், ஹைப்பர் சோனிக் என்று பல விதமான வேகங்களில் செல்லும்  திறன் கொண்டது. இதில் விமானம் சோனிக் வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் பறந்தால் பயங்கர சத்தம் கேட்கும்.

அதிர்ச்சி அலைகள் வரும்

விமானம் அல்லது ராக்கெட் காற்றை கிழித்து கொண்டு செல்லும் போது ஏற்படும் அதிர்ச்சி அலைகள் ஒன்றாக சேர்ந்து இப்படி சத்தம் கேட்கும். இதைத்தான் சோனிக் பூம் என்று கூறுவார்கள். பெங்களூரில் இப்படித்தான் அன்று சோனிக் பூம் கேட்டு இருக்கிறது. விமானப்படை புதிய வகை சோனிக் ரக விமானம் ஒன்றை வைத்து பயிற்சி மேற்கொண்ட நிலையில் இந்த பயங்கர சத்தம் கேட்டு இருக்கிறது.
காரணம்.

தஞ்சாவூர்

Brihadeeswarar-Temple-1-1.jpg

இந்த நிலையில் தஞ்சாவூரில் இதேபோல் சோனிக் பூம் சத்தம் கேட்டு இருக்கிறது. நேற்று தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுக்கூர், நாகப்பட்டினத்தில் சில பகுதிகளில் இந்த சத்தம் கேட்டு இருக்கிறது. பயங்கரமாக வெடி வெடிப்பது போல சத்தம் கேட்டது. இதனால் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதற்கும் சோனிக் பூம்தான் காரணம் என்கிறார்கள்.

விமானப்படை

தஞ்சையில் விமானப்படை சமீப நாட்களாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு இருக்கும் விமானப்படை தளத்திற்கு புதிய வகை விமானங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு சோனிக் ரக விமானங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு இப்படி சத்தம் கேட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக விமானப்படை இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

தயார் நிலை

கடந்த ஒரு மாதமாகவே நாடு முழுக்க விமானப்படை தீவிர பயிற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. தங்களின் விமானங்களை நாட்டுக்கு உள்ளேயே பறக்க வைத்து தீவிரமாக பயிற்சிகளை செய்து வருகிறது. இதனால் நாடு முழுக்க பல இடங்களில் அடிக்கடி சோனிக் பூம் சத்தங்கள் கேட்டு வருகிறது.

https://tamil.oneindia.com/news/thanjavur/the-huge-sound-heard-in-tanjore-sonic-boom-may-be-the-reason-387796.html

டிஸ்கி :

hqdefault.jpg

கோயில் இருக்கும் இடத்தில் குள்ள நரிக்கு என்ன வேலை.?

தூக்கி வேற இடத்திற்கு வையுங்கப்பா.😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.