Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் : சட்டத்தரணி மணிவண்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.நியூட்டன்)  

 

தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்

யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடாத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகள் மீது திடீரென பொங்கிய பாசம் தேர்தல் நெருங்குகின்றது தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் என்ற கருத்தினையே தொக்கி நிற்கின்றது.

தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு கொடுப்பது மற்றும் கோத்தபாய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்றம், அவர்களுக்கு தமது கட்சியில் இடம் கொடுப்போம் என்றும், போராளிகள் தியாகங்கள் செய்தவர்கள் என்றும்  கூறியுள்ளார்.

அவருடைய இந்த கருத்துக்கள் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லுகின்றது. தேர்தல் நெருங்கிவிட்டது ஆகவே நாங்கள் ஏமாற்றுவதற்காக வந்துவிட்டோம் என்பதாகும்.

முன்னாள் போராளிகள் தியாகிகள் என்று சுமந்திரன் கூறுவது வேடிக்கையான விடயம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையோ அல்லது அவரிகள் அரசியல் போராட்டத்தையோ தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் வேலையில்லாத காரணத்தினால் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள் என்று விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய அவர்தான் இன்று போராளிகளை அரசியலில் இணைத்துக் கொள்ளப் போகின்றேன் என்று கூறுகின்றார்.

இவ்வாறு பேசிய சுமந்திரன் இன்று போராளிகள் தொடர்பில் வெளியிடும் கருத்து தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான முனைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூறகின்ற எந்த ஒரு நிகழ்வுகளில் கலந்து கொண்டிராத சுமந்திரன் திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம் தேர்தல் நெருங்கிவிட்டது என்ற விடயம் மட்டும்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

இவர்கள் போன்ற ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இவர்களை அரசியல் அரங்கில் இருந்து மக்கள் அகற்ற வேண்டும்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசு ஏற்றுக் கொண்டால் தாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்மைப்போடு, மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் இதையத்தான் ஒன்றிணைந்த நிலையிலும் சர்வதேசம் மற்றும் பராளுமன்றத்தில் அந்த அரசுக்கு எதிரான எழுந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முழுமையான ஆதரவை வழங்கியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

இருப்பினும் அரசியல் தீர்வையும், அடிப்படைப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் போன்ற எந்த ஒரு விடயத்தையும் அவர்களால் செய்து முடிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் மீண்டும் கோத்தாவின் அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது, ஏற்கனவே கோத்தாபாய அரசின் காலில் விழுந்து, இரகசிய உடன்படிக்கையை செய்துவிட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை மண்ணுக்குள் புதைக்கும் நடவடிக்கைகளையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடாக இருக்கப் போகின்றது. எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

தமிழர்களின் அரசியலும், வாழ்வியலும் தொடர்ந்து நிலைக்க வேண்டுமாகா இருந்தால், தமிழ் இனஅழிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் இந்த வரைபடத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீக்கப்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/83887

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகள் மீது திடீரென பொங்கிய பாசம் தேர்தல் நெருங்குகின்றது தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் என்ற கருத்தினையே தொக்கி நிற்கின்றது.

தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு கொடுப்பது மற்றும் கோத்தபாய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவர்களுக்கு தமது கட்சியில் இடம் கொடுப்போம் என்றும், போராளிகள் தியாகங்கள் செய்தவர்கள் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

அவருடைய இந்த கருத்துக்கள் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லுகின்றது. தேர்தல் நெருங்கி விட்டது. ஆகவே நாங்கள் ஏமாற்றுவதற்காக வந்துவிட்டோம் என்பதாகும்.

முன்னாள் போராளிகள் தியாகிகள் என்று சுமந்திரன் கூறுவது வேடிக்கையான விடயம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையோ அல்லது அவரிகள் அரசியல் போராட்டத்தையோ தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் வேலையில்லாத காரணத்தினால் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள் என்று விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய அவர்தான் இன்று போராளிகளை அரசியலில் இணைத்துக் கொள்ளப் போகின்றேன் என்று கூறுகின்றார்.

இவ்வாறு பேசிய சுமந்திரன் இன்று போராளிகள் தொடர்பில் வெளியிடும் கருத்து தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான முனைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூறகின்ற எந்த ஒரு நிகழ்வுகளில் கலந்து கொண்டிராத சுமந்திரன் திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம் தேர்தல் நெருங்கிவிட்டது என்ற விடயம் மட்டும்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

சுமந்திரன் போன்ற ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இவர்களை அரசியல் அரங்கில் இருந்து மக்கள் அகற்ற வேண்டும்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசு ஏற்றுக் கொண்டால் தாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் என்று சுமந்திரன் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்மைப்போடு, மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் இதையத்தான் ஒன்றிணைந்த நிலையிலும் சர்வதேசம் மற்றும் பராளுமன்றத்தில் அந்த அரசுக்கு எதிரான எழுந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முழுமையான ஆதரவை வழங்கியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

இருப்பினும் அரசியல் தீர்வையும், அடிப்படைப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் போன்ற எந்த ஒரு விடயத்தையும் அவர்களால் செய்து முடிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் மீண்டும் கோத்தாவின் அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது, ஏற்கனவே கோத்தாபாய அரசின் காலில் விழுந்து, இரகசிய உடன்படிக்கையை செய்துவிட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை மண்ணுக்குள் புதைக்கும் நடவடிக்கைகளையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடாக இருக்கப் போகின்றது. எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

தமிழர்களின் அரசியலும், வாழ்வியலும் தொடர்ந்து நிலைக்க வேண்டுமாக இருந்தால், தமிழ் இனஅழிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் இந்த வரைபடத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீக்கப்பட வேண்டும் என்றார்.

https://www.pagetamil.com/129632/

  • கருத்துக்கள உறவுகள்

அகற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும், அகற்றிப்போட்டு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்🤔

இப்ப யார் யாரை விற்பது என்பதில்தான் போட்டி 😏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம்

நாங்கள் ஏமாளிகள் என்று யாரோ சொல்லிபோடானுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்

அதுக்கு சரியான கொள்கைகளை மக்கள் முன் வைத்து அவர்களை வழி நடாத்துங்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராளிகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டதல்ல. சிங்கள தேசத்திலான தமிழ் தேசத்தின் அரசியலை முன்னெடுக்க உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டமைப்பு.  தமிழ் மக்களுக்கு இலங்கைத் தீவில் உள்ள சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதே அதன் தலையாய கொள்கை. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்கனும் என்று நினைப்பது மிகத்தவறான அணுகுமுறை. பதிலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் நபர்கள் கட்சிகளை அதில் அல்லது அரசியல் களத்தில் இருந்து அகற்றுவதே சிறந்தது. அதுவே சரியான காலத்திற்கு உகந்த அணுகுமுறையாக இருக்க முடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.