Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா – ஆயுதங்களும் மீட்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா – ஆயுதங்களும் மீட்பு!

FB_IMG_1592644275348.jpg?189db0&189db0

 

பாகிஸ்தானினுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் கதுவா அருகே இன்று (20) காலை 5.10 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் குறித்த விமானம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பலவிதமான ஆயுதங்களை தாங்கிய இந்த விமானத்தில் இருத்து M4-கார்பின் மெசின் துப்பாக்கி, M4-தோட்டாக்கள் இரண்டு, 5.56-எம்எம் வகை தோட்டாக்கள் 60, கைக் குண்டுகள் 7 என்பன மீட்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன் : பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டம் - ராணுவம் திட்டவட்டம்

weapons-recovered-from-hexacopter-shot-down-could-ve-been-used-to-carry-out-a-major-terrorist-attack-bsf  

சனிக்கிழமை அதிகாலை ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் ஆயுதங்கள் நிரம்பிய பாகிஸ்தான் ட்ரோனை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதில் இன்னொரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கான ஆயுதங்கள் இருந்தன என்றும், இன்னொரு தாக்குதலுக்கான முயற்சியாக இருக்க வாய்ப்புள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இது குறித்து பிஎஸ்எஃப் தலைமை ஆய்வாளர் என்.எஸ். ஜம்வால் கூறும்போது, “வீழ்த்தப்பட்ட ஹெக்ஸாகாப்டரில் (ட்ரோன்) அமெரிக்கத் தயாரிப்பு எம்.4 இயந்திரத் துப்பாக்கி, ஆயுதங்கள், 7 கிரனேடுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

பாகிஸ்தான் பக்கத்திலிருந்து இந்தியப் பகுதிக்குள் இந்த ஹெக்சாகாப்டர் பறந்து வந்தது. இந்தியப் பகுதிக்குள் 200-250 மீ வந்த பிறகு நாம் சுட்டு வீழ்த்தினோம். அப்போதுதான் அதில் எம்-4 செமி ஆட்டோமேட்டிக் அமெரிக்க இயந்திரத்துப்பாக்கி, 60 ரவுண்டுகளுக்கான குண்டுகள், 7 கிரனேடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினோம்.

அந்த ட்ரோன் சுமார் 18 கிலோ எடை இருந்தது. அதில் 5-6 கிலோ எடைகொண்ட பொருட்கள் இருந்தன. இந்த ஹெக்சாகாப்டரின் பாகங்கள் சீன தயாரிப்பாகும்.

இதில் இருந்த ஆயுதங்கள் கிரெனேடுகளைப் பார்க்கும் போது இந்தியப் பக்கத்தில் ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் யாரோ இந்த ஆயுதங்களை பெறுவதற்கு காத்திருந்ததுபோல் தெரிகிறது. இதன் மூலம் பெரிய பயங்கரவாதத் தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம். ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல்முறை” என்றார்.

https://www.hindutamil.in/news/india/560326-weapons-recovered-from-hexacopter-shot-down-could-ve-been-used-to-carry-out-a-major-terrorist-attack-bsf-1.html

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டு வீழ்த்தப்பட்டதோ கே மார்ட்டில் வாங்கக் கூடிய 100 டொலர் ட்ரோன். ஆனால், அவர்கள் கண்டுபிடித்திருப்பதோ ராணுவ வீரர்கள் கைகளில் ஏந்திப் போரிடும் ரைபிள்!!!!!!! அப்போ, ட்ரோனில் ஒரு ராணுவ வீரன் ஏறிப் பவனி வந்தாரா???

ஸ்..ப்பா.....தாங்க முடியல!!!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரஞ்சித் said:

சுட்டு வீழ்த்தப்பட்டதோ கே மார்ட்டில் வாங்கக் கூடிய 100 டொலர் ட்ரோன். ஆனால், அவர்கள் கண்டுபிடித்திருப்பதோ ராணுவ வீரர்கள் கைகளில் ஏந்திப் போரிடும் ரைபிள்!!!!!!! அப்போ, ட்ரோனில் ஒரு ராணுவ வீரன் ஏறிப் பவனி வந்தாரா???

ஸ்..ப்பா.....தாங்க முடியல!!!

சிவகாசி பட்டாசு தொழில் ஏற்கனவே நலிவடைந்து போட்டுத்து அதுவும் இந்த கோரோனோ சீசன் ரொம்ப சுத்தம் ; எனக்குள்ள கேள்வி இவையளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது தோழர்  .?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

இதில் இருந்த ஆயுதங்கள் கிரெனேடுகளைப் பார்க்கும் போது இந்தியப் பக்கத்தில் ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் யாரோ இந்த ஆயுதங்களை பெறுவதற்கு காத்திருந்ததுபோல் தெரிகிறது. இதன் மூலம் பெரிய பயங்கரவாதத் தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம். ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல்முறை” என்றார்

எல்லையைக் கடந்து ஆயுதங்களைத் தருவிக்க எத்தனையோ ஓட்டைகள் இருக்கும்போது (கார்கிலில் ஊடுருவல், மும்பைக்குள் கடலால் ஊடுருவல்)  இப்போது ட்ரோன் மூலம் கடத்துகிறார்கள் போலும். சாதுரியமான வேலைதான். 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் கையால மொத்தின மொத்துக்கு மருந்து போடுகிறார்கள். நீங்க வேற.

புலிகள் அற்ற கடந்த 10 ஆண்டுகளில்.. ஹிந்தியாவுக்கு பிராந்திய நெருக்கடி மிக அதிகரித்துள்ளது.  கடந்த ஆண்டு.. பாகிஸ்தானிடம் ஏலவே மிக் உட்பட பல விமானங்களை இழந்ததை ஹிந்தியா மறந்துவிட்டது போலும்.

ஹிந்தியா சும்மா வெட்டி பந்தா. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சிவகாசி பட்டாசு தொழில் ஏற்கனவே நலிவடைந்து போட்டுத்து அதுவும் இந்த கோரோனோ சீசன் ரொம்ப சுத்தம் ; எனக்குள்ள கேள்வி இவையளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது தோழர்  .?

இந்திய திரைப்படங்களில் வரும் கதைகள் போலவே இராணுவ அதிகாரிகளும் சிந்திக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரஞ்சித் said:

சுட்டு வீழ்த்தப்பட்டதோ கே மார்ட்டில் வாங்கக் கூடிய 100 டொலர் ட்ரோன். ஆனால், அவர்கள் கண்டுபிடித்திருப்பதோ ராணுவ வீரர்கள் கைகளில் ஏந்திப் போரிடும் ரைபிள்!!!!!!! அப்போ, ட்ரோனில் ஒரு ராணுவ வீரன் ஏறிப் பவனி வந்தாரா???

ஸ்..ப்பா.....தாங்க முடியல!!!

இந்திய இராணுவத்தினர் தமது மக்களுக்கு காமன் (😜) சென்ஸ் இல்லை என்று நினைத்தால் அதற்கு யார்தான் பொறுப்பேற்க முடியும் 🤥

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இந்திய ஊடகஙடகளும் இப்படியான காலத்தில் பிலிம் காட்டுதல் எதிர் பாக்க ஒன்று தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.