Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

 

இதுவும் ஒரு மனிதப்பிறவி. அன்று கிழக்கில் மனோகணேசன் காப்பாற்றி அனுப்பினார். இன்று வடக்கில் சிங்களத்தின் படைகளே பெரும்பாடுபட்டு காப்பாற்றுது. இப்படி ஒரு பிழைப்பு வேண்டுமா? தேசியத்தலைவன் வாழ்ந்த மண்ணிலும் சில கேடுகெட்ட பிழைப்புகள் இதுக்கு பின்னால் எதுக்கோ ஆசைப்பட்டு நிக்கிதுகள். இது போதுமடா எவ்வளவு சிங்களம் சுற்றி நின்றாலும் “டேய் கள்ளா” “டேய் சுமந்திரன்” “கள்ளன் ஓடுடா” என காது கிழிய கத்தும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • Replies 119
  • Views 11.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கிருபன் said:

ப. தெய்வீகன் முகநூலில் எழுதியது. வாசிக்க விருப்பம் இல்லாதவர்கள் வேகமாக scroll செய்யவும்😀

 

ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி என்பது மிக மிக அதிகம். அதுவும் சுமந்திரனுக்கு எதிரான ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி அதிகமோ அதிகம். நேற்றிரவு யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தையும் அதையொட்டி முழுவீச்சில் நடைபெற்றுவரும் பிரச்சாரத்தையும் ஓரளவுக்கு இவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்.

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குக்கள் வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், எண்ணப்பட்ட வாக்குகள் பகுதி பகுதியாக அறிவிக்கப்படும். ஆனால், இறுதி அறிவிப்பு வரும்வரை எந்த முடிவுக்கும் வந்துவிடமுடியாது. இது உலகெங்கிலும் நடைபெறுகின்ற பொதுவான தேர்தல் வழமை. 

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா அவர்களது விடயத்தில் நடைபெற்றதும் இதுதான். இறுதியாக வரவிருந்த பல தொகுதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னர், அவர் 
மற்றவர்களைவிட முன்னிலையில் இருந்திருக்கலாம். முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்ட அவர், அதனை வெற்றியாகவே கண்டு பரவசப்பட்டிருக்கலாம். ஆனால், படிப்படியாக ஏனைய தொகுதி வாக்குகள் வந்து சேர்ந்தபோது, "அமைதிப்படை" படத்தில் 
சுயேட்சை வேட்பாளர் நாகராஜசோழனுக்கு வாக்கு எகிறிக்கொண்டுபோனதுபோல - நிலமை மாறி - கீழிருந்த சித்தார்த்தனும் சுமந்திரனும் மேலேறியிருக்கிறார்கள். அவ்வளவுதான். சின்னக்குழந்தையும் புரிந்துகொள்ளக்கூடிய சிம்பிளான தேர்தல் நடைமுறை இது. 

ஆனால், இவரது ஆத்திரம் ஆரோகணிப்பதற்கு காரணமாக அங்கு இன்னொரு சம்பவமும் நடத்துவிட்டது. 

கொழும்பிலிருந்துகொண்டு உள்ளடி வேலைகளினால் தனது வெற்றியை தீர்மானித்துக்கொண்டிருக்கிறார் என்று எதிர்த்தரப்பினர் மத்தியில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரச்சாரத்தை பொய் என்று நிரூபிப்பதற்காக, தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிட்டார் என்ற தகவல் உறுதியான பின்னர், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிலிருந்த சுமந்திரன், மத்திய கல்லூரி வளாகத்துக்கு வந்தார். 

இந்த நேரத்தில், தான் நம்பியிருந்த வெற்றி கைதவறிப்போன விரக்தியிலிருந்த சசிகலா அவர்களும் அவரது மகளும் வாக்கெண்ணுமிடத்திலிருந்து கோபத்தோடு வெளியேறியிருக்கிறார்கள். தங்கள் தோல்விக்கு சுமந்திரனே பொறுப்பென்று பொரிந்து தள்ளிவிட்டுப்போயிருக்கிறார்கள். 

மத்திய கல்லூரி வளாகத்திற்குள் சசிகலா அவர்கள் கூறியதுபோலவும் - பின்னர் அவரது மகள் முகநூலில் பதிவுசெய்துள்ளதுபோலவும் - இந்த விடயத்தை சற்று ஆழமாக பார்த்தால் - 

சுமந்திரனும் சயந்தனும் வாக்கெண்ணும் இடத்துக்கு வந்து அதிகாரிகளுக்கு அருகிலிருந்துகொண்டார்கள் என்றும் சுமந்திரனுக்கான வெற்றியை தன்னிடமிருந்து பறிந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். 

1) யாழ் தேர்தல் களம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை முன்னதாகவே தெரிந்து, கண்ணுக்குள் எண்ணைவிட்டுக்கொண்டு பணிபுரிகின்ற அதிகாரிகள் மத்தியில் இது சாத்தியமா?

2) அப்படியே ஒரு சம்பவம் இடம்பெறக்கூடிய சூழ்நிலை அங்கு நிலவியது என்று எடுத்துக்கொண்டாலும், சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகள் 27 734. அடுத்த இடத்திலுள்ள சித்தார்த்தனுக்கு கிடைத்த வாக்குகள் 23 740. சசிகலா அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அதற்கும் கீழ்தானிருக்கவேண்டும். கிட்டத்தட்ட நாலாயிரம் வாக்குகள் வித்தியாசம். வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் கோத்தபாய ராஜபக்ஷவே வந்தால்கூட 4000 வாக்குகளை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு போட்டு, வெற்றியை பறிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? 

3) அப்படியே சசிகலாவுக்கு வாக்கு முறைகேடு நடைபெற்றிருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு அருகிலிருக்கும் சித்தார்த்தன்தானே அவரது முதல் குற்றவாளியாக இருக்கமுடியும். ஏன் சுமந்திரனை குற்றப்படுத்துகிறார்?

எது எப்படியோ, சுமந்திரன் அங்கு அதிரடிப்படையினர் சமேதராக வந்து இறங்க - சுமந்திரனின் வெற்றியென்பது எப்போதும் முறைகேடாக மாத்திரமே அவருக்கு கிடைப்பதற்கு சாத்தியமுள்ளது என்று தீராத நம்பிக்கைகொண்ட "இனிய தோழர்கள் கூட்டம்" அவரைக்கண்டவுடன் குதூகலமாக -  சசிகாலா அவர்களும் மகளும் அந்தநேரம் பார்த்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேற - அத்தனை கமராக்களும் அது அறுசுவையாகிப்போனது. 

ஆனால், இங்குள்ள மிக முக்கியமான விடயம் - சசிகலா அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர். அவரே சுமந்திரனுக்கு எதிராக இவ்வாறு நடந்துகொண்டதானது, தேர்தலில் கூட்டமைப்பு அடைந்துள்ள சரிவோடு இன்னமும் கூடுதல் கறையை ஏற்படுத்தியிருக்கிறது. It was truly an ugly event.

சசிகலா அவர்கள் தனக்கு உண்மையிலேயே இந்தத்தேர்தலில் துரோகமிழைக்கப்பட்டிருக்கிறது என்று கருதினால், இதனை நேரடியாக நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லலாம். அவரது வாக்குப்பெட்டி மீண்டும் பிரிக்கப்பட்டு எண்ணுவதற்கு நீதிமன்ற உத்தரவைப்பெறலாம். வழியில்லாமல் இல்லை.

இவை எதையும் கிஞ்சித்தும் தெரிந்துகொள்ளாமல், அவரின் அறியாமையை தங்களது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்தி, சுமந்திரனின் மீது சேறடிக்கும் கூட்டத்துக்கு சசிகலா அவர்கள் பலியாடாகவேண்டியதில்லை.

தேர்தல் முடிவுகளை கேட்டபடி கடைவாய்நீர் வடிய அப்படியே நித்திரையான சிலது, தூக்க கலக்கத்தில் எழுந்து நின்று "சுமந்திரனாம் அடியுங்கடா... அடியுங்கடா" - என்று கத்தியபடி அரைகுறையாக ஓடுவதை பார்த்தால், கொரோனாவே அஞ்சப்போகிறது.

 

 

சசிகலாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏதோ தேர்தல் நடைமுறை/சட்டங்கள் தெரியாத மாதிரியும் இலங்கையில் இதுதான் முதல் தேர்தல் என்ற மாதிரியும் கதை போகின்றது. விசயம் தெரியாத சசிகலாவும் ஆதரவாளர்களும் என புனைகின்றார் இந்த எழுத்தாளர்.

எல்லாம் ஆளுக்கொரு முகநூல் வந்ததின் வினை.

⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் திரு ரவிராஜ் அவர்கள் நடமாடிய வீட்டுக்குள் அங்கயன் எனும் ஆமை புகுந்துவிட்டது. இனிமேல் என்ன பல மாவீரர்களையும் தேசியத்தலைவரது பிரந்த வீட்டையும் அபகரிச்ச அங்கயன் சசிகலாவை உண்டு இல்லை எனச்செய்யுடுவார்கள். அனேகமாக சசிகலா அவர்கள் மகிந்த கலில் சீக்கிரம் வீழ்ந்துவிடுவா. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

மாமனிதர் திரு ரவிராஜ் அவர்கள் நடமாடிய வீட்டுக்குள் அங்கயன் எனும் ஆமை புகுந்துவிட்டது. இனிமேல் என்ன பல மாவீரர்களையும் தேசியத்தலைவரது பிரந்த வீட்டையும் அபகரிச்ச அங்கயன் சசிகலாவை உண்டு இல்லை எனச்செய்யுடுவார்கள். அனேகமாக சசிகலா அவர்கள் மகிந்த கலில் சீக்கிரம் வீழ்ந்துவிடுவா. 

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கற்பகதரு said:

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

 உங்கடை சகுனி செய்த சாணக்கியமானவேலை ஒன்றை கூறமுடியுமா ?

வரலாற்று பாடத்தை கற்றுக்கொடுத்தது சரி தலைவருடன் சமமாக இங்கு யாரைக்கொண்டுவந்து நிறுவுகிறீர்கள் ? சுமத்திரனா ?

சுமத்திரனை  இயங்குவதே றோ  என்ற விடயமே தெரியாத அப்பாவியாக இருக்கிறீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

 

மாமனிதர் ரவிராஜின் பெயரை விற்றுவிடுவார்களா 🤥

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணெளியை பார்த்தா ஒருவருக்கு இப்ப தான் தலைவர் புலிகள் தேவைப்படுகிறார்கள்.

14 minutes ago, Kapithan said:

மாமனிதர் ரவிராஜின் பெயரை விற்றுவிடுவார்களா 🤥

கொழும்புக்கு போனால்த் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

உங்களுக்கு விளக்கம் குறைவு.

சசிகலாவின் வீட்டில் சிவாஜிலிங்கமும் அனந்தியும் இருந்த வேளையில் அங்கஜன் என்றி கொடுத்திருக்கிறார்.

கூட்டணியினரும் அங்கஜன் தரப்பும் தூண்டில் போடுகின்றனர் சசிகலாவை தம் பக்கம் இழுக்க.

  • கருத்துக்கள உறவுகள்

117339321_1682328998596770_6422896815239

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, nunavilan said:

 

 

மெய் ஒரு நாள் வெல்லும்.
விழித்திருங்கள். பாதுகாப்புடன் இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

 

நுனாவிளான், இந்த இணைப்புக்கு நன்றி.

நடராஜா ரவிராஜ் பற்றி தமிழ் வைக்கிபீடியாவிலும் பார்க்க ஆங்கில வைக்கிபீடியாவில் நிறைய தகவல்கள் உள்ளன. அதை படியுங்கள். நேரமுள்ளவர்கள் தமிழ் வைக்கிபீடியாவில் விடுபட்ட தகவல்களை சேர்த்துவிட வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்ந்த குடும்பம். தமது வாக்குகளை அதிகரிக்க இந்த உயர்வான குடும்பத்தை சாக்கடை அரசியலுக்கு கொண்டு வந்து இப்படி சீரளித்தது கூட்டமைப்பு செய்த மிகவும் இழிவான செயல். சுமந்திரனின் வாக்கு எண்ணிக்கையிலும் வெற்றியிலும் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் சசிகலாவை வெல்ல வைக்கும் பொறுப்பு கூட்டமைப்பையே முழுமையாக சார்ந்துள்ளது. அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும். அரசியல் ரீதியில் அந்த பெரும்தன்மை சுமந்திரனுக்கு பலமைல் தூரம் உதவும். 100,000 எதிர்பார்த்து 50,000இல் இருந்து 27,000 ஆக குறைந்ததை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்வான குடும்பம். ரவிராஜுக்கு சொந்த செலவில் சிலை வைத்த சமந்திரன் இங்கு அவரின் எதிரிகளால் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பெரும்தன்மையுடன் உதவ முன்வர வேண்டும்.சிவாஜிலிங்கமே அனைத்துக்கும் காரணம். இப்போது அங்கஜனும் இறங்கி இருக்கிறார். காரணத்தை இந்த வைக்கிபீடியா இணைப்பு விளக்கும்,

https://en.m.wikipedia.org/wiki/Nadarajah_Raviraj#

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும்.

ஏற்கனவே மாவைக்கு வழங்கப்பட்டு அம்பாறை மாவட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே மாவைக்கு வழங்கப்பட்டு அம்பாறை மாவட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் தானே கிடைத்தது?

12 minutes ago, கற்பகதரு said:

நுனாவிளான், இந்த இணைப்புக்கு நன்றி.

நடராஜா ரவிராஜ் பற்றி தமிழ் வைக்கிபீடியாவிலும் பார்க்க ஆங்கில வைக்கிபீடியாவில் நிறைய தகவல்கள் உள்ளன. அதை படியுங்கள். நேரமுள்ளவர்கள் தமிழ் வைக்கிபீடியாவில் விடுபட்ட தகவல்களை சேர்த்துவிட வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்ந்த குடும்பம். தமது வாக்குகளை அதிகரிக்க இந்த உயர்வான குடும்பத்தை சாக்கடை அரசியலுக்கு கொண்டு வந்து இப்படி சீரளித்தது கூட்டமைப்பு செய்த மிகவும் இழிவான செயல். சுமந்திரனின் வாக்கு எண்ணிக்கையிலும் வெற்றியிலும் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் சசிகலாவை வெல்ல வைக்கும் பொறுப்பு கூட்டமைப்பையே முழுமையாக சார்ந்துள்ளது. அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும். அரசியல் ரீதியில் அந்த பெரும்தன்மை சுமந்திரனுக்கு பலமைல் தூரம் உதவும். 100,000 எதிர்பார்த்து 50,000இல் இருந்து 27,000 ஆக குறைந்ததை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்வான குடும்பம். ரவிராஜுக்கு சொந்த செலவில் சிலை வைத்த சமந்திரன் இங்கு அவரின் எதிரிகளால் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பெரும்தன்மையுடன் உதவ முன்வர வேண்டும்.சிவாஜிலிங்கமே அனைத்துக்கும் காரணம். இப்போது அங்கஜனும் இறங்கி இருக்கிறார். காரணத்தை இந்த வைக்கிபீடியா இணைப்பு விளக்கும்,

https://en.m.wikipedia.org/wiki/Nadarajah_Raviraj#

ஐயா கற்பகம், நீங்கள் இன்னமும் சுத்துமாத்திரனை புரிந்து கொள்ளவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

https://www.tamilwin.com/politics/01/253063?ref=imp-news

1 hour ago, MEERA said:

தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் தானே கிடைத்தது?

மீரா முழு செய்தியையும் இணைக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

117339321_1682328998596770_6422896815239

முள்ளில சேலை பட்டாலென்ன சேலையில் முள் பட்டாலென்ன சேலைக்குத்தான் சேதம். இது முள்ளில்லை கொள்ளிக்கட்டை. 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.