Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்? கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 
அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-
 
எமது செயல்பாடுகள் மூனறு கோணங்களில் அமையும்.
 
முதலாவது, கோத்தபாய அரசு கொண்டுவர எத்தனிக்கும் ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பை மக்களிற்கான அரசியல் விழிப்புணர்வூட்டல் மூலமும் மக்கள் அணிதிரள்வு மூலமும் எதிர்ப்போம்.
அதே வேளை , தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியவிதமாக ஒரு நாட்டுக்குள் தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் ஒரு தீர்வினை அடைவதற்கான அழுத்தங்கள், முயற்சிகளில் ஈடுபடுவோம்.
 
இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட இனப்படுகொலைக்கு சிறிலங்கா அரசை பொறுப்புக்கூற வைக்ககூடிய சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு கடுமையாக உழைப்போம்.
 
மூன்றாவதாக, தமிழர் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதார பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பகுதிகளுக்கு ஒப்பிடக்கூடிய அளவுக்கு சுயசார்பு பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு கடுமையாக உழைப்போம்.
 
அதாவது புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் முதலீடுகளை தமிழ் தேசத்தில் கொண்டுவந்து சிறிய நடுத்தர தொழிற்துறைகளை உருவாக்கும் செயற்றிட்டத்தில் ஈடுபடுவோம்.
இதனூடாக , எமது தாயகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் , தமிழ் குடும்பம் ஒவ்வொன்றினதும் பொருளாதார நிலையை உயர்த்தி பலப்படுத்தல் போன்றன ஏற்படும்.
 
தினக்குரல் :-(09/08/2020)
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:
முதலாவது, கோத்தபாய அரசு கொண்டுவர எத்தனிக்கும் ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பை மக்களிற்கான அரசியல் விழிப்புணர்வூட்டல் மூலமும் மக்கள் அணிதிரள்வு மூலமும் எதிர்ப்போம்.
அதே வேளை , தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியவிதமாக ஒரு நாட்டுக்குள் தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் ஒரு தீர்வினை அடைவதற்கான அழுத்தங்கள், முயற்சிகளில் ஈடுபடுவோம்.
 
இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட இனப்படுகொலைக்கு சிறிலங்கா அரசை பொறுப்புக்கூற வைக்ககூடிய சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு கடுமையாக உழைப்போம்.
 
மூன்றாவதாக, தமிழர் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதார பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பகுதிகளுக்கு ஒப்பிடக்கூடிய அளவுக்கு சுயசார்பு பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு கடுமையாக உழைப்போம்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.
புலம்பெயர் மக்களின்பங்களிப்பு சம்பந்தமாக உத்தியோகபூர்வ கட்டமைப்பை உருவாக்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

 

 
அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-
 
எமது செயல்பாடுகள் மூனறு கோணங்களில் அமையும்.
 
முதலாவது, கோத்தபாய அரசு கொண்டுவர எத்தனிக்கும் ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பை மக்களிற்கான அரசியல் விழிப்புணர்வூட்டல் மூலமும் மக்கள் அணிதிரள்வு மூலமும் எதிர்ப்போம்.


கோத்தபாயாவுக்கு இது கொசுக்கடி கூட இல்லை. கா,  கூ, என்று கத்திவிட்டு சாப்பாட்டுக்கு உழைக்க கட்சி ஆதரவாளர்கள் போய்விடுவார்கள். மக்களுக்கோ தம் அன்றாட பிரச்சினைக்கே நேரம் போதாது. ஒற்றையாட்சியை எதுவுமே அகற்றாது.

4 hours ago, nunavilan said:

 

 
அதே வேளை , தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியவிதமாக ஒரு நாட்டுக்குள் தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் ஒரு தீர்வினை அடைவதற்கான அழுத்தங்கள், முயற்சிகளில் ஈடுபடுவோம்.
 

வெற்றி பெறுவோம் என்று சொல்லாத நேர்மை பாராட்டத்தக்கது. முயன்று, ஏதோ முயன்றோம் என்று திருப்திபடுங்கள்.

4 hours ago, nunavilan said:

 

மூன்றாவதாக, தமிழர் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதார பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பகுதிகளுக்கு ஒப்பிடக்கூடிய அளவுக்கு சுயசார்பு பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு கடுமையாக உழைப்போம்.

ஏனைய பகுதிகள் பல வெளிநாட்டு அகதிப்பணம் பெறுவதில்லை. வடக்கு தமிழரிலும் பார்க்க இலங்கை வருமானத்தில் தங்கி இருக்கும் பரம ஏழைகள். அந்த பகுதிகளின் தரத்துக்கு பொருளாதாரம் இறங்கும் என்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:

வெற்றி பெறுவோம் என்று சொல்லாத நேர்மை பாராட்டத்தக்கது. முயன்று, ஏதோ முயன்றோம் என்று திருப்திபடுங்கள்.

தள்ளிப் படுத்தால் எப்படித் தான் பிள்ளைப் பெறுவது.

கொஞ்சம் விடுங்களேன்.

அதாவது இந்த 70 வருடங்களில் ஒருவருமே முயட்சி செய்யாததை , சொல்லாததை இப்போது கஜன் ஐந்து வருடங்களில் செய்யப்போகின்றார். இருப்பதையும் இழக்காமல் இருந்தாலே பெரிய காரியம். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 11 வருடங்களில் கூத்தமைப்பு இவர் கூறியதை செய்ய முயற்சியாவது மேற்கொண்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

 

32 minutes ago, MEERA said:

கடந்த 11 வருடங்களில் கூத்தமைப்பு இவர் கூறியதை செய்ய முயற்சியாவது மேற்கொண்டதா?

 

இவருக்கும் இன்னுமொரு முப்பது வருடங்களை கொடுத்தால் என்ன புதிதாக இழக்க வேண்டி இருக்கும்? ஒன்றுமில்லை. ஒற்றை ஆட்சியின் கீழ் மக்களெல்லாம் கொழும்பு தமிழர் போல சிங்களம் படித்து இரு மொழிப் புலமையுடன் தாமாகவே மொழிப் பிரச்சினைக்கு முடிவு கண்டு விடுவார்கள்.

பொன்னம்பலம் பரம்பரையும், விக்னேஸ்வரனும் சுமந்திரனும் நன்கு வெற்றியுடன் வாழ்ந்து காட்டிய பாதை சிங்களம் படித்து மொழிப்பிரச்சினையை தீர்ப்பது. அதை தொடர்ந்து விக்னேஸ்வரனின் பாதையில் சிங்களவரின் சம்பந்தியாக கலந்து இனப்பிரச்சினையையும் தீர்த்து கொள்ளலாம். விக்னேஸ்வரனின் பேரப்பிள்ளைகளுக்கு ஏது இனப்பிரச்சினை?

2 hours ago, ஈழப்பிரியன் said:

தள்ளிப் படுத்தால் எப்படித் தான் பிள்ளைப் பெறுவது.

கொஞ்சம் விடுங்களேன்.

சிங்களவருடன் தள்ளிப் படுக்காமல் பிள்ளை பெற்று அடுத்த 30 வருடத்துக்குள் இனப்பிரச்சினையும் தீர்ந்துவிடும்.🤠

 

Edited by கற்பகதரு

1 minute ago, கற்பகதரு said:

 

 

இவருக்கும் இன்னுமொரு முப்பது வருடங்களை கொடுத்தால் என்ன புதிதாக இழக்க வேண்டி இருக்கும்? ஒன்றுமில்லை. ஒற்றை ஆட்சியின் கீழ் மக்களெல்லாம் கொழும்பு தமிழர் போல சிங்களம் படித்து இரு மொழிப் புலமையுடன் தாமாகவே மொழிப் பிரச்சினைக்கு முடிவு கண்டு விடுவார்கள்.

பொன்னம்பலம் பரம்பரையும், விக்னேஸ்வரனும் சுமந்திரனும் நன்கு வெற்றியுடன் வாழ்ந்து காட்டிய பாதை சிங்களம் படித்து மொழிப்பிரச்சினையை தீர்ப்பது. அதை தொடர்ந்து விக்னேஸ்வரனின் பாதையில் சிங்களவரின் சம்பந்தியாக கலந்து இனப்பிரச்சினையையும் தீர்த்து கொள்ளலாம். விக்னேஸ்வரனின் பேரப்பிள்ளைகளுக்கு ஏது இனப்பிரச்சினை?

சிங்களவருடன் தள்ளிப் படுக்காமல் பிள்ளை பெற்று அடுத்த 30 வருடத்துக்குள் இனப்பிரச்சினையும் தீர்ந்துவிடும்.🤠

 

70 வருடம் பொறுத்த நமக்கு இன்னும் ஒரு 5 பொறுத்திருப்பது பெரிய பிரச்சினையே இல்லை. பார்ப்பம், பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

 

 

இவருக்கும் இன்னுமொரு முப்பது வருடங்களை கொடுத்தால் என்ன புதிதாக இழக்க வேண்டி இருக்கும்? ஒன்றுமில்லை. ஒற்றை ஆட்சியின் கீழ் மக்களெல்லாம் கொழும்பு தமிழர் போல சிங்களம் படித்து இரு மொழிப் புலமையுடன் தாமாகவே மொழிப் பிரச்சினைக்கு முடிவு கண்டு விடுவார்கள்.

பொன்னம்பலம் பரம்பரையும், விக்னேஸ்வரனும் சுமந்திரனும் நன்கு வெற்றியுடன் வாழ்ந்து காட்டிய பாதை சிங்களம் படித்து மொழிப்பிரச்சினையை தீர்ப்பது. அதை தொடர்ந்து விக்னேஸ்வரனின் பாதையில் சிங்களவரின் சம்பந்தியாக கலந்து இனப்பிரச்சினையையும் தீர்த்து கொள்ளலாம். விக்னேஸ்வரனின் பேரப்பிள்ளைகளுக்கு ஏது இனப்பிரச்சினை?

ஐயா கற்பகம்,

வாக்களித்த மக்களுக்கு இது தெரியாமலா உள்ளது???

நீங்கள் எவ்வளவு கத்தினாலும் அங்குள்ள மக்களின் மனதில் நீங்க குறிப்பிட்ட இருவருக்கும் இடம் உள்ளது. மக்கள் புத்திசாலிகள். அது தான் சுத்துமாத்திரனை விட கஜேந்திரகுமாருக்கு அதிகமாக வாக்களித்துள்ளனர். 

28 minutes ago, MEERA said:

ஐயா கற்பகம்,

வாக்களித்த மக்களுக்கு இது தெரியாமலா உள்ளது???

நீங்கள் எவ்வளவு கத்தினாலும் அங்குள்ள மக்களின் மனதில் நீங்க குறிப்பிட்ட இருவருக்கும் இடம் உள்ளது. மக்கள் புத்திசாலிகள். அது தான் சுத்துமாத்திரனை விட கஜேந்திரகுமாருக்கு அதிகமாக வாக்களித்துள்ளனர். 

அங்கஜனுக்கு அதையும்விட அதிகம். என்ன இருந்தாலும், எப்படித்தான் எழுதினாலும் சாம் சும்மை உங்களால் தோற்கடிக்கமுடியவில்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

 

 
அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-
 
எமது செயல்பாடுகள் மூனறு கோணங்களில் அமையும்.
 

 

ஏதாவது அமைச்சுப் பொறுப்பை ஏற்று வாக்குப் போட்ட மக்களுக்கு  நல்லது செய்து கொன்டு உங்கள் அரசியலையும் தொருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.