Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் வெளியானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் வெளியானது!

 

image_ec4581cdbb.jpg

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவியானது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அந்த அமைச்சுப் பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் கண்டியில் இன்று இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  by : Dhackshala

http://athavannews.com/மைத்திரிக்கு-அமைச்சுப்-ப/

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு ஆளுநர் பதவி குடுக்க போறார்கள் என்று சொல்லினம்    

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலையே கேவலங்கெட்ட அரசியல் உள்ள நாடு எண்டால் சிறிலங்காதான்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உலகத்திலையே கேவலங்கெட்ட அரசியல் உள்ள நாடு எண்டால் சிறிலங்காதான்.

உலகத்திலேயே கேவலங் கெடடதுகள் எண்டால், தன் இனத்தை அழித்தவனை புகழ்ந்து அவனுக்கு சேவகம் செய்து மகிழ்வதுகள்.

20 minutes ago, குமாரசாமி said:

உலகத்திலையே கேவலங்கெட்ட அரசியல் உள்ள நாடு எண்டால் சிறிலங்காதான்.

நீங்கள் சொன்னது சரியான கருத்துதான். அதுக்குள் எங்களது தமிழ் பேசும் ஐயாக்களும் அடங்குவார்களா, இல்லை சிங்கள ஐயாக்கள் மட்டுமா?

 தொப்பி பிரட்டும் அரசியல் செய்யும் ஐயாக்களும் இருக்கிறார்கள், சிங்கள ஐயாக்களுக்கு ஆதரவாக பேசி வென்று அரசியல் செய்பவர்களும் இருக்கிறார்கள், தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்து வென்று இந்த பக்கமா அந்த பக்கமா எண்டு தெரியாமலே அரசியல் செய்பவர்களும் இருக்கிரார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவருக்கு ஆளுநர் பதவி குடுக்க போறார்கள் என்று சொல்லினம்    

 

உங்கள் அண்ணனும் ஆளுனர் என்றுதான் பட்சி சொல்லுகிறது. உண்மையோ 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

உங்கள் அண்ணனும் ஆளுனர் என்றுதான் பட்சி சொல்லுகிறது. உண்மையோ 🤔



ஏதோ ஒன்று கொடுப்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Robinson cruso said:

நீங்கள் சொன்னது சரியான கருத்துதான். அதுக்குள் எங்களது தமிழ் பேசும் ஐயாக்களும் அடங்குவார்களா, இல்லை சிங்கள ஐயாக்கள் மட்டுமா?

 தொப்பி பிரட்டும் அரசியல் செய்யும் ஐயாக்களும் இருக்கிறார்கள், சிங்கள ஐயாக்களுக்கு ஆதரவாக பேசி வென்று அரசியல் செய்பவர்களும் இருக்கிறார்கள், தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்து வென்று இந்த பக்கமா அந்த பக்கமா எண்டு தெரியாமலே அரசியல் செய்பவர்களும் இருக்கிரார்கள்.

சிறிலங்கா அரசியல் எண்டால் எங்கடை ஆக்களும் உள்ளடங்குவினம் தானே..😄

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசாங்கத்தில் மைத்திரிபால உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றம்.

(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திர கட்சியின் தலைவருமான  மைத்திரிபால சிறிசேன,  பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், அஎஸ். பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, சுசில் பிரேமஜயந்த, விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு அமைச்சு பதவிகளோ, இராஜாங்க அமைச்சு பதவிகளோ வழங்கப்படவில்லை.

 9வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிவேனவை நியமிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அபிவிருத்தி அமைச்சு பதவியை அவருக்கு வழங்குவதாக வாக்குறுதி  வழங்கியுள்ளதாக சுதந்திர கட்சியின் தலைவவர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றும் நிகழ்வு இன்று தலதா மாளிகையின் வளாகத்தில் இடம்பெற்றது.

thumb_fd.jpg

அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 24 மாவட்ட  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுதலைவர் பதவி ஆகியவற்றுக்கான  நியமண பத்திரங்கள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட புதுமுகங்கள்.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். மற்றும் அமைச்சர் பதவி வகித்தவர்களுக்கு வழங்கப்பட்டன.

  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துமிக்க அமைச்சு பதவி வழங்கப்படும் என  எதிர்பார்க்கப்பட்டது. 9வது பாராளுமன்றத்தின் சபாநாயர் பதவியை  சுதந்திர கட்சியின் தலைவருக்கு  வழங்குமாறு ஆளும் தரப்பினர்     கோரிக்கை விடுத்தனர். மாகாவலி அபிவிருத்தி அமைச்சு பதவியை அவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுபதவியோ, இராஜாங்க  அமைச்சு பதவியோ, ஏன் மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி  கூட வழங்கப்படவில்லை. ஆனால் அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

 கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் 4வது இடம்வகித்த முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு  அமைச்சு பதவியோ, இராஜாங்க அமைச்சர் பதவியோ வழங்கப்படவில்லை. ஆனால் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் விருப்பு வாக்குப்பட்டியலில் இடம் வகித்தவர்களுக்கு  அமைச்சு மற்றும்  இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் கடந்த இடைக்கால அரசாங்கத்தில் காணி அமைச்சு பதவி வகித்த எஸ்.பி. திஸாநாயக்கவுக்கும்,  சர்வதேச உறவுகள்  இராஜாங்க  அமைச்சர் பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவுக்கும் எவ்வித  அமைச்சு பதவியோ, இராஜாங்க   அமைச்சு பதவிகளோ புதிய அரசாங்கத்தில் வழங்கப்படவில்லை  பாராளுமன்ற த்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள டிலான் பெரேராவிற்கு எவ்வித    பதவிகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளஅங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோருக்கு அமைச்சுபதவியோ, இராஜாங்க அமைச்சு பதவியோ வழங்கப்படவில்லை. இவ்விருவருக்கும்  மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்த   ஜோன் செனவிரத்ன,    மஹிந்தயாப்பா அபேவர்தன,    மஹிந்த சமரசிங்க, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கும் புதிய  அரசாங்கத்தில் எவ்வித   பதவிகளும் வழங்கப்படவில்லை.     9வது  பாராளுமன்றத்தின் சபாநாயகராக    மஹிந்த   யாப்பா  அபேவர்தனவை   நியமிக்கும் யோசனை       முன்வைக்கப்பட்டுள்ளது.

  ஸ்ரீ லங்கா   பொதுஜன   பெரமுனவின் தேசிய  பட்டியலில்   பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள  ஜி. எல். பீறிஷூக்கு  கல்வி அமைச்சு பதிவியும், அலி சப்ரிக்கு   நீதியமைச்சு பதவியும்,     திறன்கள் மற்றும் தொழினுட்ப விருத்தி  இராஜாங்க அமைச்சு பதவி  சீதா அரம்பேபொலவிற்கும்,   நிதி  சந்தைப்படுத்தல் அரச தொழிற்துறை   அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு பதவி    அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/87931

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

உங்கள் அண்ணனும் ஆளுனர் என்றுதான் பட்சி சொல்லுகிறது. உண்மையோ 🤔

தேர்தல் முடிவுகள் வந்த நாளில் இருந்து கதை அடிபடுது...மட்டு இணைப்பு செயலாளர் பதவியும் இன்னும் காலியாத் தான் இருக்கு ...பிள்ளையானுக்கு ஒரு பதவி கொடுப்பினம்...பொறுத்திருந்து பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

தேர்தல் முடிவுகள் வந்த நாளில் இருந்து கதை அடிபடுது...மட்டு இணைப்பு செயலாளர் பதவியும் இன்னும் காலியாத் தான் இருக்கு ...பிள்ளையானுக்கு ஒரு பதவி கொடுப்பினம்...பொறுத்திருந்து பார்ப்போம் 

ஆளுனராக வந்து மக்களுக்கு தன்னால் இயலுமான அனைத்தையும் செய்ய வேண்டி வாழ்த்துகிறேன். 🎁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, Kapithan said:

ஆளுனராக வந்து மக்களுக்கு தன்னால் இயலுமான அனைத்தையும் செய்ய வேண்டி வாழ்த்துகிறேன். 🎁

ஈழத்து மண்டேலா  செய்வார் எண்டு நான் நம்புறன் 😎

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சுக்கள்  போக மிச்சம் மீதி இருந்தால் பார்த்து ஆறுதலாக வழங்குவார். கோத்தபாய; யார் யாருக்கு என்னென்ன பதவி என்று ஏற்கெனவே தீர்மானித்து, இவர்களை ஓட விட்டிருப்பார். இது தெரியாமல் இவர்களும் ஓடி களைத்திருப்பார்கள். இனித்தான் உண்மை முகத்தை காண்பார்கள். என்ன செய்வது விழுந்தும் மண் ஒட்டிடவில்லை என்பார்கள். அடுத்த தேர்தலில் அங்கயனுக்கு பதிலாக ஒரு சிங்களவர் தேர்தலில் வடக்கில் நிற்பார். அப்போ அங்கயன் எங்கே நிற்பார்?

  • கருத்துக்கள உறவுகள்

துணைப்பிரதமர் என்றும் ஒரு கதை அடிபடுகுது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சுக்கள்  போக மிச்சம் மீதி இருந்தால் பார்த்து ஆறுதலாக வழங்குவார். கோத்தபாய; யார் யாருக்கு என்னென்ன பதவி என்று ஏற்கெனவே தீர்மானித்து, இவர்களை ஓட விட்டிருப்பார். இது தெரியாமல் இவர்களும் ஓடி களைத்திருப்பார்கள். இனித்தான் உண்மை முகத்தை காண்பார்கள். என்ன செய்வது விழுந்தும் மண் ஒட்டிடவில்லை என்பார்கள். அடுத்த தேர்தலில் அங்கயனுக்கு பதிலாக ஒரு சிங்களவர் தேர்தலில் வடக்கில் நிற்பார். அப்போ அங்கயன் எங்கே நிற்பார்?

நிச்சயமாக அங்கஜன்தான் வடக்கில் நிற்பார். ஆனால் என்ன....

அங்கஜன் சிங்களவராக மாறியிருப்ப்பார், தகப்பன் போல 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 அமைச்சரவை அமைச்சர்கள் -  24 சிங்களவர் ,1 தமிழர்,1 முஸ்லீம்.
 
39 இராஜாங்க அமைச்சர்கள் - 37 சிங்களவர், 2 தமிழர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த், டிலான் பெரேரா ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த விஜயதாச ராஜபக்‌ஷ, எஸ்.பி. திசாநாயக்க, சந்திம வீரகொடி ஆகியோருக்கும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

40 ஆவது ராஜாங்க அமைச்சர் தான் பிள்ளையான். சட்டப்பிரச்சனையால் இண்டைக்கு போகவில்லை.

9 hours ago, முதல்வன் said:

40 ஆவது ராஜாங்க அமைச்சர் தான் பிள்ளையான். சட்டப்பிரச்சனையால் இண்டைக்கு போகவில்லை.

விஜேதாஸ ராஜபக்சவுக்கும் ராஜாங்க அமைச்சர் (அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்) பதவி வழங்க இருந்ததாகவும் , அவர் அதனை எட்காமல் சென்று விட்ட்தாகவும் கூறப்படுகின்றது. அல்லது பிள்ளையானுக்கு ஒதுக்கப்படடதோ தெரியவில்லை. இருந்தாலும் மடடக்கலப்பு மாவடட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் பதவி வெற்றிடமாக இருப்பதால் அவருக்கு அது வழங்கப்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கின்றது. வியாழேந்திரனுக்கு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படட படியால் இவருக்கு சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.