Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் புதிய ஊடகப் பேச்சாளர் – செல்வம் மற்றும் சித்தார்த்தன் தயார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் புதிய ஊடகப் பேச்சாளர் – செல்வம் மற்றும் சித்தார்த்தன் தயார்!

 

 

TNA-1.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய ஊடகப்பேச்சாளர் பதவியை ஏற்பதற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளோட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் புதிய உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றக்குழுவை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதவி வகித்து வருகின்றார்.

இந்நிலையில், சுமந்திரன் அப்பதவியைப் பயன்படுத்தி வரைமுறைகள் அற்று செயற்படுவதாகவும் தம்முடன் கலந்துரையாடல்களின்றி முக்கிய விடயங்களை கையாள்வதாகவும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இதனையடுத்து, திருகோணமலையில் நடைபெற்ற ரெலோவின் மத்திய குழு கூட்டத்தில் பாராளுமன்றக்குழுவின் தலைவராக சம்பந்தன் நீடிப்பதற்கு இடமளிப்பதென்றும் ஏனைய செயலாளர் மற்றும் ஊடகப்பேச்சாளர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதென்றும் குறிப்பாக பங்காளிகளையும் உள்ளீர்த்தவாறு அமையவேண்டும் என்று வலியுறுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் அல்லது சித்தார்த்தன் ஊடகப்பேச்சாளர் பதவியை வகிப்பதற்கு தயாராகி வருவதாகவும்இந்த விடயத்தில் தங்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தாது விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்கு இணங்கி உள்ளதாகவும் இருகட்சிகளின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   by : Dhackshala

https://athavannews.com/கூட்டமைப்பின்-புதிய-ஊடகப/

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ! இப்ப றோ குழு பதறி அடிச்சுக்கொண்டு, சுமந்திரன் கிறிஸ்தவர் என்கிற படியால் ஊடகப் பேச்சாளர் பதவியை தட்டிப்பறிக்கினம் எண்டு போர் தொடுக்கப்போகுது.  அப்போ செல்வம் அடைக்கலநாதன் என்ன சமயமாம்? அதுபற்றி கவலையில்லை. சுமந்திரனைப் பற்றி கதைத்தாற்தான் றோ கோபம் கொள்ளும், நாடு பிடிக்கும். இங்குள்ள இலங்கைப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கினம். குண்டும் வெடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு.... “பென்சன்”  கொடுத்து விட்டார்களா⁉️

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு.... “பென்சன்”  கொடுத்து விட்டார்களா⁉️

அவர் இனி ஒட்டுக்குழுவின் பேச்சாளராகலாம். வீட்டைத்தான் மூழ்கடிச்சாச்சே.

Just now, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு.... “பென்சன்”  கொடுத்து விட்டார்களா⁉️

சுமந்திரனுக்கு தலைமை பதவியாம். அது சரி அடைக்கலம் என்ன கஞ்ச விட்பனை  தொடர்பான விடயங்களையா பேச போகிறார். அதையும் பார்க்க பேச்சாளர் இல்லாமலே இருக்கலாம். சித்தார்த்தன் ஓரளவு படித்த , மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனிதர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

அவர் இனி ஒட்டுக்குழுவின் பேச்சாளராகலாம். வீட்டைத்தான் மூழ்கடிச்சாச்சே.

ஹாஹாஹா.... வந்த வேலையை கச்சிதமாக முடித்து விட்டார்.

அமைச்சர் பதவி கிடைத்தாலும் கிடைக்கலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, satan said:

ஐயையோ! இப்ப றோ குழு பதறி அடிச்சுக்கொண்டு, சுமந்திரன் கிறிஸ்தவர் என்கிற படியால் ஊடகப் பேச்சாளர் பதவியை தட்டிப்பறிக்கினம் எண்டு போர் தொடுக்கப்போகுது.  அப்போ செல்வம் அடைக்கலநாதன் என்ன சமயமாம்? அதுபற்றி கவலையில்லை. சுமந்திரனைப் பற்றி கதைத்தாற்தான் றோ கோபம் கொள்ளும், நாடு பிடிக்கும். இங்குள்ள இலங்கைப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கினம். குண்டும் வெடிக்கலாம்.

வாழ்நாள் முழுவததும் நையாண்டி செய்வதில்தான் கழிப்பீர்களா சிந்திக்கவே மாட்டீர்களா 🤥

தயவுசெய்து சிந்திப்பதற்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Just now, குமாரசாமி said:

 

அப்படியென்றால் நல்லதுதான். இனியாவது அரச சார்பு கட்சிகளுக்கு கூடிய உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதனூடாக மக்களின் வாழ்வாதார, அன்றாட பிரச்சினைகளாவது தீர்த்து வைக்கப்படும். இருந்தாலும் என்ன , இன்னுமொரு 5 அல்லது 10 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

 

 

1 hour ago, Robinson cruso said:

சுமந்திரனுக்கு தலைமை பதவியாம். அது சரி அடைக்கலம் என்ன கஞ்ச விட்பனை  தொடர்பான விடயங்களையா பேச போகிறார். அதையும் பார்க்க பேச்சாளர் இல்லாமலே இருக்கலாம். சித்தார்த்தன் ஓரளவு படித்த , மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனிதர்.



அதெப்படி செல்வம் அடைக்கலநாதனுக்கு கஞ்சா பட்டம் கொடுக்கும் நீங்கள் சித்தார்த்தன் கொஞ்சம் படித்ததால் நல்லவர் , வல்லவர் ஆகி விட்டாரா?
புளட்டின் கொலை ,கொள்ளைகளுக்கு பொறுப்பானவர் சித்தார்த்தன் என்பதை இலகுவாக மறந்து விட்டீர்களா?

Just now, nunavilan said:

 



அதெப்படி செல்வம் அடைக்கலநாதனுக்கு கஞ்சா பட்டம் கொடுக்கும் நீங்கள் சித்தார்த்தன் கொஞ்சம் படித்ததால் நல்லவர் , வல்லவர் ஆகி விட்டாரா?
புளட்டின் கொலை ,கொள்ளைகளுக்கு பொறுப்பானவர் சித்தார்த்தன் என்பதை இலகுவாக மறந்து விட்டீர்களா?

இவர்கள் எல்லோருமே கொலை கொள்ளையில் ஈடுபடடவர்கள்தான். அந்த குற்றசாட்டு எல்லோருக்கும் பொருந்தும்.

ஆனால் அடைக்கலம் இப்போதும்  கஞ்சா தொழிலில்  இருக்கிறார். சித்தார்த்தன் அப்படி இல்லை. மற்றப்படி சித்தார்தனை நல்லவர் என்று சொல்லவில்லை. ஆனால் படித்த , மற்றவர்களுடன் புரிந்துணவுடன் வாழக்கூடிய ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

 



அதெப்படி செல்வம் அடைக்கலநாதனுக்கு கஞ்சா பட்டம் கொடுக்கும் நீங்கள் சித்தார்த்தன் கொஞ்சம் படித்ததால் நல்லவர் , வல்லவர் ஆகி விட்டாரா?
புளட்டின் கொலை ,கொள்ளைகளுக்கு பொறுப்பானவர் சித்தார்த்தன் என்பதை இலகுவாக மறந்து விட்டீர்களா?

செல்வம் தனது தம்பியின் போதைபொருள் கடத்தல் விற்பனைக்கு துணை நிற்பவர். 

சித்தார்த்தன்(பாவம் கெளதம புத்தர்) என்கின்ற பெயருக்கும் அவரது கடந்தகால செயல்களும் நேரெதிரானவை. வி.புலிகளின் புண்ணியத்திலும் தகப்பனாரின் பெயரிலும் அரசியல் நடாத்துகிறார். 

இறுதியில் எல்லோரும் அடிமட்ட அரசியல்வாதிகளே ☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

அதெப்படி செல்வம் அடைக்கலநாதனுக்கு கஞ்சா பட்டம் கொடுக்கும் நீங்கள் சித்தார்த்தன் கொஞ்சம் படித்ததால் நல்லவர் , வல்லவர் ஆகி விட்டாரா?
புளட்டின் கொலை ,கொள்ளைகளுக்கு பொறுப்பானவர் சித்தார்த்தன் என்பதை இலகுவாக மறந்து விட்டீர்களா?

அவர்களுக்கு கூட்டமைப்பு மீண்டுவருவது முக்கியமல்ல கள்ளவோட்டு சுமத்திரன் கட்சியில் முக்கிய பதவியில் இருக்கணும் அதுதான் றோவினால் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பட்ட பாடம் 😄 குதிரைக்கு கண் கட்டிவிட்டது  போல் அவர்களின் சிந்தனை பேச்சு எல்லாம் ஒரு தளத்தில் தான் நிக்கும் சொல்லிக்கொடுப்பட்டது அவ்வளவே சுய சிந்தனை என்றால் கிலோ என்னவிலை  என்று கேட்க்கும் ரகம் .

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Kapithan said:

சித்தார்த்தன்(பாவம் கெளதம புத்தர்) என்கின்ற பெயருக்கும் அவரது கடந்தகால செயல்களும் நேரெதிரானவை. வி.புலிகளின் புண்ணியத்திலும் தகப்பனாரின் பெயரிலும் அரசியல் நடாத்துகிறார். 

உவர் சித்தார்த்தன் பிரபாகரனை தம்பி தம்பி எண்டு  அடிக்கடி செல்லமாய் சொல்லுறாரம்.....என்ன விசயமாய் இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

உவர் சித்தார்த்தன் பிரபாகரனை தம்பி தம்பி எண்டு  அடிக்கடி செல்லமாய் சொல்லுறாரம்.....என்ன விசயமாய் இருக்கும்?

அடுத்த தலைவர்தான். வேறென்ன 😏

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

அவர்களுக்கு கூட்டமைப்பு மீண்டுவருவது முக்கியமல்ல கள்ளவோட்டு சுமத்திரன் கட்சியில் முக்கிய பதவியில் இருக்கணும் அதுதான் றோவினால் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பட்ட பாடம் 😄 குதிரைக்கு கண் கட்டிவிட்டது  போல் அவர்களின் சிந்தனை பேச்சு எல்லாம் ஒரு தளத்தில் தான் நிக்கும் சொல்லிக்கொடுப்பட்டது அவ்வளவே சுய சிந்தனை என்றால் கிலோ என்னவிலை  என்று கேட்க்கும் ரகம் .

🤥

முதலில் சுமந்திரன் மீது மிக மோசமான விமரிசனங்கள் செய்யப்பட்டன.. அதனால் இனி பயனில்லை என்றவுடன் சுமந்திரன் மீதான ஒழுங்குபடுத்தப்பட்ட தாக்குதலை விமரிசனம் செய்தவர்கள் மீது கோபம் காட்டப்படுகிறது. 

☹️

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அதனால் இனி பயனில்லை

யார் சொன்னது பயனில்லை என்று கள்ள வாக்கு  சுமத்திரன் "முடிந்தால் என்னை tna யே  வெளியே விடுங்கள் தானாக போகமாட்டேன்  என்று அடம்பிடித்து இருந்தவரை வெளியாலை அனுப்பும் அளவுக்கு அவரின் கட்சி காரரே  துணிந்துவிட்டார்கள் அது காணாதா ?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

யார் சொன்னது பயனில்லை என்று கள்ள வாக்கு  சுமத்திரன் "முடிந்தால் என்னை tna யே  வெளியே விடுங்கள் தானாக போகமாட்டேன்  என்று அடம்பிடித்து இருந்தவரை வெளியாலை அனுப்பும் அளவுக்கு அவரின் கட்சி காரரே  துணிந்துவிட்டார்கள் அது காணாதா ?

ஐயா, 

நாங்கள் எல்லோருமே கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள். சிறு சிறு விடயங்களோடு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். ☹️

யார் எவர் என்னத்தை கூறினாலும் சுமந்திரன் என்பவர் நா. உ ஆகிவிட்டார். எங்கள் ஒவ்வொருவினரதும் இலக்கு அந்த மனிதனின் செயற்பாடுகள் அனைத்தும் தமிழர் நலன் சார்ந்ததாக அமைவதற்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்க வேண்டுமேயொழிய எமக்கெதிராகத் திருப்புவதாக இருக்க முடியாது. புலத்தில் உள்ளவர்களின் நலனில் உண்மையான அக்கறையுள்ளவர்கள் இதனைத்தான் செய்வார்கள். 👍

ஆனால் எமது செயற்பாடுகள் நேர்மாறாக இருக்கின்றன என்பது கவலைக்குரியது. ☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

கூட்டமைப்பின் புதிய ஊடகப் பேச்சாளர் – செல்வம் மற்றும் சித்தார்த்தன் தயார்

இது என்ர "தனிப்பட்ட கருத்து" .. 👍என்டு சொல்லாத வரைக்கும் சந்தோசமே ..  👌

maxresdefault.jpg 

11 hours ago, Kapithan said:

ஐயா, 

நாங்கள் எல்லோருமே கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள். சிறு சிறு விடயங்களோடு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். ☹️

யார் எவர் என்னத்தை கூறினாலும் சுமந்திரன் என்பவர் நா. உ ஆகிவிட்டார். எங்கள் ஒவ்வொருவினரதும் இலக்கு அந்த மனிதனின் செயற்பாடுகள் அனைத்தும் தமிழர் நலன் சார்ந்ததாக அமைவதற்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்க வேண்டுமேயொழிய எமக்கெதிராகத் திருப்புவதாக இருக்க முடியாது. புலத்தில் உள்ளவர்களின் நலனில் உண்மையான அக்கறையுள்ளவர்கள் இதனைத்தான் செய்வார்கள். 👍

ஆனால் எமது செயற்பாடுகள் நேர்மாறாக இருக்கின்றன என்பது கவலைக்குரியது. ☹️

இந்த கூட்டமே பகல் கனவில் இருக்கிறது. அதை நாம் தடை செய்ய முடியுமா? வெற்று துப்பாக்கிகளை கொண்டு இனைய தல போராளிகள் சுட்டு ந்தள்ளுவார்கள். அதனால் எதாவது நடக்குமா? இல்லையே. சந்திரனை பார்த்து இவர்கள் ஊளையிடுவதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.