Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை பயிர்ச் செய்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்களில் பயனாளியாகிய கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயி சிறந்த விவசாய நடைமுறையின் (GAP) கீழாக பழமரச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கான ஓர் வயல்விழா நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களின் வழிகாட்டலில் 21.08.2020 அன்று இடம்பெற்றது.

இதில் பல பழமரச் செய்கையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இதன்போது குறித்த பயனாளி உலக விவசாய ஸ்தாபனத்தின் உதவியால் 2017 இல் விவசாயத் திணைக்களத்தின் கீழ் வழங்கப்பட்ட 40 டொம் ஜேசி மாங்கன்றுகளை சிறப்பாக பராமரித்துள்ளார்.

மேலும் 20 புதிய மரங்களை தொடர்ச்சியாக கொள்வனவு செய்து நாட்டியுள்ளார். சாதராணமாக மாமரச் செய்கையின் இடைவெளியினை விடுத்து 5 மீற்றர் x 5 மீற்றர் இடைவெளியில் பயிரிட்டுள்ளார்.

தற்போது உரிய பயிற்றுவித்தல், கத்தரித்தல் செயற்பாட்டின் காரணமாக காய்கள் உருவாகி அறுவடைக்கு தயாராக உள்ளது. காய்களில் ஏற்படும் பழ ஈ தாக்கம், பொறிமுறைக்காயம் என்பவற்றை தவிர்க்கவும் தரமான கனியினைப் பெறவும் ஒவ்வொரு காய்களிற்கும் தனித்தனியே உறையிடப்பட்டிருந்தது. இதனால் தரமான, மஞ்சள் நிறக்கனிகளை பெறமுடியும்.

அத்துடன் PSDG 2019 திட்டத்தின் ஊடாக 75% மானிய அடிப்படையில் பெறப்பட்ட
இழையவளர்ப்பு கப்பல் இன வாழைக் கன்றுகள் செறிவான முறையில் நடுகை செய்யப்பட்டிருந்தது. இதில் 10 அடி × 5 அடி எனும் அளவில் பயிரிடப்பட்டிருந்தது. இதனால் 4 பரப்பில் 220 வாழைக்கன்றுகள் நட முடிகின்றது.

தற்போது உரியவாறு குட்டிகள் முகாமை செய்யப்பட்டுள்ள நிலையில் 6 மாத பயிரான வாழைகள் உள்ளது. இங்கு விசேட அம்சமாக சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீர் வழங்கப்படுகின்றது. இதனால் சாரசரி 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக நீர் விநியோகிக்க முடிகின்றது. இது Mini Spray வகைக்குரிய சொட்டு நீர்ப்பாசனமாகும்.

இதனால் அடைப்புகள் ஏற்படுவதும் குறைவு. நாளொன்றிற்கு 32 லிற்றர் நீர்
வாழைக்கு தேவையாகும். அடி மரத்திற்கு துளித்துளியாக நீர் கிடைப்பதாலும் கப்பலில் ஏற்படும் பனாமா நோய் பரம்பல் கட்டுப்படுத்துகின்றது. அத்துடன் நீர்க்காப்பு, போசணை இழப்பு தவிர்க்கப்படுகின்றது.

சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை பயிர் செய்வது கடினம் என விவசாயிகள் பலராலும் கூறப்படும் நிலையில் குறித்த விவசாயியின் முன்மாதிரி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்நிகழ்வானது முழங்காவில் பகுதி விவசாயப் போதனாசிரியர் ம. மகிலன தலைமையில் இடம்பெற்றது. இதில் விருந்தினர்களாக சிறந்த விவசாய நடைமுறைக்குரிய (GAP) விவசாய வியாபார ஆலோசகர் உத்தியோகத்தர திவாகரன், தொலைக்காட்சி பண்ணை ஒளிபரப்பு சேவை வடக்கு அலகு அபிவிருத்தி அலுவலகர் ந. குகதாசன், முழங்காவில் பிரதம வைத்திய அதிகாரி க. செல்வநாதன் மற்றும் முழங்காவில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. மேவின்ராஜ் ரோஸ்வேஜினி மற்றும் முழங்காவில் கமக்கார அமைப்பினர், பிரதான பழமரச் செய்கையாளர்கள், விவசாயிகள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தனர்.

  • IMG_3010.jpg?189db0&189db0
  • IMG_2983.jpg?189db0&189db0
  • IMG_2951.jpg?189db0&189db0
  • IMG_2928.jpg?189db0&189db0
  • IMG_2933.jpg?189db0&189db0
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை பயிர் செய்வது கடினம் என விவசாயிகள் பலராலும் கூறப்படும் நிலையில் குறித்த விவசாயியின் முன்மாதிரி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

 

  • IMG_3010.jpg?189db0&189db0
  • IMG_2983.jpg?189db0&189db0
  • IMG_2951.jpg?189db0&189db0
  • IMG_2928.jpg?189db0&189db0
  • IMG_2933.jpg?189db0&189db0

எங்கடை மக்கள் தாங்களும் புதுமையை தொழில்நுட்ப்பத்தை நம்பாதுகள் மற்றவர்களையும் பயமுறித்தி ஏளனம் செய்வார்கள்.பாராட்டுக்கள் அந்த விவசாயிக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சுவைப்பிரியன் said:

எங்கடை மக்கள் தாங்களும் புதுமையை தொழில்நுட்ப்பத்தை நம்பாதுகள் மற்றவர்களையும் பயமுறித்தி ஏளனம் செய்வார்கள்.பாராட்டுக்கள் அந்த விவசாயிக்கு.

காடாய் கிடக்கும் நிலங்களை மீண்டும்  இராணுவம் விவசாயத்திற்கு  பயன்படுத்த போறார்களாம் என செய்தி படித்தேன் நன்றாக பயிர் செய்கிறார்கள்  ( நில(ம்)ம அப்படி )  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

காடாய் கிடக்கும் நிலங்களை மீண்டும்  இராணுவம் விவசாயத்திற்கு  பயன்படுத்த போறார்களாம் என செய்தி படித்தேன் நன்றாக பயிர் செய்கிறார்கள்  ( நில(ம்)ம அப்படி )  

யானையை கட்டி தீனி போடா ஏலாது முனிவர்.

இந்த பெரிய ராணுவத்தினை வைச்சு, இந்த பெரிய பொருளாதார பிரச்சனைக்குள்ளும் சம்பளம், சாப்பாடு போடணுமே.

விவசாயம் ஆவது செய்து அந்த செலவையாவது காபந்து பண்ணுங்கோ எண்டது தான் நிலை.

உள்நாட்டு, வெளிநாட்டு பயமுறுத்துதல்கள் இல்லாத நிலையில் நீண்டகாலத்துக்கு, இந்த பெரிய பாதுகாப்பு படைகளை, வைத்து சமாளிக்கவே முடியாது.

ஒரு கோரோனோ வைரசு பிடித்திருக்கலாம் என்று குவாரிண்டனில் வைத்திருந்த, வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் தப்பிவிட, அவரை தேடிப்பிடிக்கும் போலீசுக்காரர்கள் செய்யும் வேலையினை செய்ய 19 ராணுவ அணிகளை அனுப்பி இருப்பதாக இராணுவ தளபதி சொல்லி கேலிக்கு உள்ளானார்.

வேலை இல்லாவிடில் என்ன தான் செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

யானையை கட்டி தீனி போடா ஏலாது முனிவர்.

இந்த பெரிய ராணுவத்தினை வைச்சு, இந்த பெரிய பொருளாதார பிரச்சனைக்குள்ளும் சம்பளம், சாப்பாடு போடணுமே.

விவசாயம் ஆவது செய்து அந்த செலவையாவது காபந்து பண்ணுங்கோ எண்டது தான் நிலை.

உள்நாட்டு, வெளிநாட்டு பயமுறுத்துதல்கள் இல்லாத நிலையில் நீண்டகாலத்துக்கு, இந்த பெரிய பாதுகாப்பு படைகளை, வைத்து சமாளிக்கவே முடியாது.

ஒரு கோரோனோ வைரசு பிடித்திருக்கலாம் என்று குவாரிண்டனில் வைத்திருந்த, வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் தப்பிவிட, அவரை தேடிப்பிடிக்கும் போலீசுக்காரர்கள் செய்யும் வேலையினை செய்ய 19 ராணுவ அணிகளை அனுப்பி இருப்பதாக இராணுவ தளபதி சொல்லி கேலிக்கு உள்ளானார்.

வேலை இல்லாவிடில் என்ன தான் செய்வது?

ஜோக்கடியாதேங்கோ நாதம்ஸ்.

உந்த விவசாயத்தில வாற வருமானத்தை வச்சு 30,000 ஆமிக்கு சாப்பாடு போட்டாலே பெரிய விடயம். ஆனா இதன் நோக்கம் அதுவல்ல - மறைமுக காணி பிடிப்பு. 2015 க்கு முன் நடந்ததுதான்.

முதல்ல வெறும் காணில ஆமி பயிர்செய்யும். பிறகு அதை சுற்றி ஒரு விகாரை, மூன்று கேம்ப். பிறகு ஒரு ராணுவ குடியிருப்பு. அதில் கொஞ்சம் குடும்பங்கள். பிறகு அவர்களுக்கு அடிப்படை சுகாதார, கல்வி மையங்கள். ஐந்து வருடத்தில் ஒரு cantonment ஆகிவிடும்.  இப்படி ஒரு 5-10 கண்டோன்மெண்டை ஒன்றினைத்து இரெண்டு கிராமசேவகர் பிரிவு. அடுத்து பிரதேச செயலகம். 

மணலாறு கபளீகரம் ஆனது இப்படித்தான்.

இப்போ  புல்மோட்டை முடிவில் தொடங்கி, கொக்கிளாய், கொக்குதொடுவாய், நாயாறு, அலம்பில் தாண்டி செம்மலை வரை வந்தாயிற்று.

நெடுங்கேணி, உயிலங்குளம், வாகரை அடுத்த இலக்குகள்.

பிகு: புத்தசாசனத்துக்கான பணத்தை வெட்டினாலும் கூட எந்த இலங்கை அரசும் பாதுகாப்பு செலவீனத்தை குறைக்க தயங்கும். இஸ்ரேலை போல் இலங்கை என்ற அடையாளமே தமது படையினரினால்தான் தக்கவைக்கப்படுகிறது என மக்கள் நம்புகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஜோக்கடியாதேங்கோ நாதம்ஸ்.

உந்த விவசாயத்தில வாற வருமானத்தை வச்சு 30,000 ஆமிக்கு சாப்பாடு போட்டாலே பெரிய விடயம். ஆனா இதன் நோக்கம் அதுவல்ல - மறைமுக காணி பிடிப்பு. 2015 க்கு முன் நடந்ததுதான்.

முதல்ல வெறும் காணில ஆமி பயிர்செய்யும். பிறகு அதை சுற்றி ஒரு விகாரை, மூன்று கேம்ப். பிறகு ஒரு ராணுவ குடியிருப்பு. அதில் கொஞ்சம் குடும்பங்கள். பிறகு அவர்களுக்கு அடிப்படை சுகாதார, கல்வி மையங்கள். ஐந்து வருடத்தில் ஒரு cantonment ஆகிவிடும்.  இப்படி ஒரு 5-10 கண்டோன்மெண்டை ஒன்றினைத்து இரெண்டு கிராமசேவகர் பிரிவு. அடுத்து பிரதேச செயலகம். 

மணலாறு கபளீகரம் ஆனது இப்படித்தான்.

இப்போ  புல்மோட்டை முடிவில் தொடங்கி, கொக்கிளாய், கொக்குதொடுவாய், நாயாறு, அலம்பில் தாண்டி செம்மலை வரை வந்தாயிற்று.

நெடுங்கேணி, உயிலங்குளம், வாகரை அடுத்த இலக்குகள்.

பிகு: புத்தசாசனத்துக்கான பணத்தை வெட்டினாலும் கூட எந்த இலங்கை அரசும் பாதுகாப்பு செலவீனத்தை குறைக்க தயங்கும். இஸ்ரேலை போல் இலங்கை என்ற அடையாளமே தமது படையினரினால்தான் தக்கவைக்கப்படுகிறது என மக்கள் நம்புகிறார்கள்.

 

நீங்கள் சொல்வது ஒரு வேறு பார்வை. நான் சொல்வது வேறு பார்வை. இரண்டும் சரியானது தல.

வடக்கு ராணுவ தளபதி ருவான் வணிகசூரிய வீடுகளுக்கு அடிக்கல் நடுவதும், வீடுகள் திறந்து வைத்து கையளிப்பதுமே தனது வேலை என்கிறார். தனது ஆட்கள் விவசாயத்துடன் வீடு கட்டுற வேலைதான் செய்கிறார்கள் என்கிறார்.

படைவீரர்கள் வெவசாயம் செய்வதும், தமது பாவனை போக மேலதிகமானதை வியாபாரம் செய்வதும்  கடந்த முறை மகிந்தா ஜனாதிபதியாக இருந்த போதே ஆரம்பித்து விட்டது.

அடுத்தது, இடங்கள் பிடிப்பது அவர்களுக்கு என்ன பெரிய வேலையா... நம்ம ஆட்களே சத்தமில்லாமல் வித்து விட்டு நாட்டினை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதைத்தான் சொன்னேன், சந்தை விலையிலும் கூடுதலாக காசைக் கொடுத்து, கிளப்பி அனுப்புகின்ற்னர்.

இதனையே கிழக்கில் செய்தார்கள். இப்போது, தடுக்கப்படுள்ளது.

ஆட்கள் இல்லாத வீடுகளில் இங்கே கூட வெளியாட்கள் புகுந்து தங்குவதும், 10 வருட காலத்துக்கு ஒருவருமே வாடகை வாங்காவிடில், அந்த வீடு சொந்தமாவதும் இங்கும் உண்டு தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்னதான் சொல்கிறீர்கள்.சொட்டு நீர் முலம் வாழை வளர்க்கலாமா இல்லையா.

  • கருத்துக்கள உறவுகள்

உயர் தொட்டிகளில்.. மழை நீரை சேமிச்சு.. அதன் மூலம் சொட்டு நீர் பெறுவது.. கிணறை இறைத்து தொட்டிகளில்.. நிரப்பிட்டு.. சொட்டு நீராக்குவதிலும் சிறந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இப்ப என்னதான் சொல்கிறீர்கள்.சொட்டு நீர் முலம் வாழை வளர்க்கலாமா இல்லையா.

இல்லை, வளர்கப்படாது.... கிணத்தைக் சுத்தி வாழை வைச்சு, குளிக்கிற தண்ணிய விட்டு, சேறு சகதியாக்கி, நுளம்புகள் வளர்ச்சிக்கு உதவிற நம்ம முறைய விடேலுமே.😤

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இல்லை, வளர்கப்படாது.... கிணத்தைக் சுத்தி வாழை வைச்சு, குளிக்கிற தண்ணிய விட்டு, சேறு சகதியாக்கி, நுளம்புகள் வளர்ச்சிக்கு உதவிற நம்ம முறைய விடேலுமே.😤

தோப்பு வாழை கேள்ளி பட்டிருக்கன். இதுதான் சோப்பு வாழையோ🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

தோப்பு வாழை கேள்ளி பட்டிருக்கன். இதுதான் சோப்பு வாழையோ🤣

ஊரிலை கூடுதாலாய் கிணத்தடியிலை வாழைமரம் நிக்கிறது வழமைதானே. என்ரை வீட்டை கிணறு இல்லை துரவுதான்.இருந்தாலும் துரவை சுத்தி வாழை,பப்பாசி,மாதுளை,எலுமிச்சை எண்டு ஒரே அமர்க்களம் கண்டியளோ.....
🌼
🌼
🌼
🌼
🌼
🌼
🌼
🌼
🌼
🌼
🌼
🌼
🌼
🌼
ஒரு நந்தியாவட்டையும் நிக்கிது.😎 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

யானையை கட்டி தீனி போடா ஏலாது முனிவர்.

இந்த பெரிய ராணுவத்தினை வைச்சு, இந்த பெரிய பொருளாதார பிரச்சனைக்குள்ளும் சம்பளம், சாப்பாடு போடணுமே.

விவசாயம் ஆவது செய்து அந்த செலவையாவது காபந்து பண்ணுங்கோ எண்டது தான் நிலை.

உள்நாட்டு, வெளிநாட்டு பயமுறுத்துதல்கள் இல்லாத நிலையில் நீண்டகாலத்துக்கு, இந்த பெரிய பாதுகாப்பு படைகளை, வைத்து சமாளிக்கவே முடியாது.

ஒரு கோரோனோ வைரசு பிடித்திருக்கலாம் என்று குவாரிண்டனில் வைத்திருந்த, வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் தப்பிவிட, அவரை தேடிப்பிடிக்கும் போலீசுக்காரர்கள் செய்யும் வேலையினை செய்ய 19 ராணுவ அணிகளை அனுப்பி இருப்பதாக இராணுவ தளபதி சொல்லி கேலிக்கு உள்ளானார்.

வேலை இல்லாவிடில் என்ன தான் செய்வது?

ராணுவத்தினரிடம் ஒப்படைத்து விட்டதாக செய்திகள் சொல்லுது தரிசா கிடக்கும் காணிகள் மற்றும் ஆட்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் காணிகள் 

ஆட்களை குடியேற்றுங்கள் அல்லது காணி இல்லாஹவர்களுக்கு கொடுங்கள் இல்லாவிட்டால் அரசு கையகப்படுத்தும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.