Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டுபாயில் திறக்கப்படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் திறக்கப்படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று! | Athavan  News

டுபாயில் திறக்கப்படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று!

உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று டுபாயில் திறந்து வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த செயற்கை நீரூற்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டுபாய் நகரின் பால்ம் ஜுமைரா பகுதியில் திறக்கப்படவுள்ள குறித்த நீரூற்று ‘த பாய்ண்ட்’ (The Pointe) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்த புதிய நீரூற்றானது கடல் பகுதியில் 14000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் 105 மீற்றர்  உயரம் வரை செல்லும் எனவும் 3000 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமையினால் பல வண்ணத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/டுபாயில்-திறக்கப்படுகின/

  • கருத்துக்கள உறவுகள்

துபாயின் புது சுற்றுலா அம்சம் போல இருக்கு..

வெள்ளி விடுமுறையில் நாளில் போய் பார்க்கணும்..!

  • கருத்துக்கள உறவுகள்

நீரூற்று என்பதுக்கு அர்த்தம் தெரியாத 
லூசுப் பையல்காளாக இருக்கிறார்கள் 
செய்தி எழுதுபவர்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்

இதை நீரூற்று என்று சொல்லமுடியாது. சுனை அல்லது ஊறணி என்பது பொருந்துமா என்பதை தமிழ் பண்டிதர்கள் தான் சொல்லவேண்டும். நீரூற்று என்பது நீர் சுரப்பது ஊறணி என்பது நீர் மேல் நோக்கி சீறி அடிப்பது.

துபாயில் இந்த புதிய சுற்றுலா தலம் கின்னஸ் உலக சாதனைகளில் பதிவாக வேண்டும் என்பதற்காகவே கட்டப்படுள்ளது.  இந்த சுற்றுலாத தலம் கடலில் விடப்பட்டிருக்கும் இரண்டு மிதவைகளில் கட்டப்பட்டுள்ளதாக இணையதளம் தெரிவிக்கிறது. துபாயில் Palm Jumeirah என்ற செயற்கைத் தீவுப்பகுதியில் உள்ள கடலில் இது அமைக்கப்பட்டுள்ளது.

https://www.thepointe.ae/en

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/10/2020 at 05:32, தமிழ் சிறி said:

டுபாயில் திறக்கப்படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று! | Athavan  News

டுபாயில் திறக்கப்படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று!

உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று டுபாயில் திறந்து வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த செயற்கை நீரூற்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டுபாய் நகரின் பால்ம் ஜுமைரா பகுதியில் திறக்கப்படவுள்ள குறித்த நீரூற்று ‘த பாய்ண்ட்’ (The Pointe) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்த புதிய நீரூற்றானது கடல் பகுதியில் 14000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் 105 மீற்றர்  உயரம் வரை செல்லும் எனவும் 3000 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமையினால் பல வண்ணத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/டுபாயில்-திறக்கப்படுகின/

எல்லாம் எண்ணை செய்யிற கொழுப்பு வேலை......எல்லாம் வத்த  கொட்டு/கொழுப்பு இறங்கும்...😁

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் "செயற்கை நீரூற்று" என்று சொல்வது.....!  🤔

On 8/10/2020 at 09:48, Maruthankerny said:

நீரூற்று என்பதுக்கு அர்த்தம் தெரியாத 
லூசுப் பையல்காளாக இருக்கிறார்கள் 
செய்தி எழுதுபவர்கள் 
 

நானும் செயற்கை நீருற்று என்றவுடன் பிரமிப்புடன் பார்கக வந்து ஏமாந்தேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2020 at 00:59, ராசவன்னியன் said:

துபாயின் புது சுற்றுலா அம்சம் போல இருக்கு..

வெள்ளி விடுமுறையில் நாளில் போய் பார்க்கணும்..!

இப்பவே போய்ப் பாருங்க.
நாளானால் பணம் வசூலிக்க தொடங்கிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இப்பவே போய்ப் பாருங்க. நாளானால் பணம் வசூலிக்க தொடங்கிவிடுவார்கள்.

நீரூற்றின் செயல்பாடு இன்னமும் ஆரம்பிக்கவே இல்லையே.. திறப்புவிழா இம்மாதம் 22 திகதி என்று போட்டிருக்கிறது.

இந்த நீரூற்று அமைந்துள்ள பாம் ஜூமெய்ரா செயற்கை தீவு, துபாய் நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ தூரம். விடுமுறை நாட்களில்தான் பார்க்க இயலும்.

palm-island-drive.jpgPalm_Island_aerial.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

நீரூற்றின் செயல்பாடு இன்னமும் ஆரம்பிக்கவே இல்லையே.. திறப்புவிழா இம்மாதம் 22 திகதி என்று போட்டிருக்கிறது.

இந்த நீரூற்று அமைந்துள்ள பாம் ஜூமெய்ரா செயற்கை தீவு, துபாய் நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ தூரம். விடுமுறை நாட்களில்தான் பார்க்க இயலும்.

palm-island-drive.jpgPalm_Island_aerial.jpg

தகவலுக்கு நன்றி வன்னியர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.