Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்டாயப்படுத்தி கலியாணம் செய்ய முடியாது..! கஜேந்திரன்கள் குறித்து உறுதியான தீர்மானம் எடுங்கள், தமிழ் தேசிய கட்சிகள் கூட்டத்தில் காரசாரம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயப்படுத்தி கலியாணம் செய்ய முடியாது..! கஜேந்திரன்கள் குறித்து உறுதியான தீர்மானம் எடுங்கள், தமிழ் தேசிய கட்சிகள் கூட்டத்தில் காரசாரம்..

TNAlieue.jpg

தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் கூடி தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலை அனுட்டிப்பது தொடர்பாக இன்று மாலை ஆராய்ந்துள்ள நிலையில் குறித்த கூட்டத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கின்றது.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சிகள் சிலர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இந்தச் செயற்பாட்டிற்கு தமது கடுமையான கண்டனத்தை தொிவித்திருக்கின்றனர். குறிப்பாக யாரையும் கட்டாயப்படுத்தி கலியாணம் செய்து வைக்க முடியாது.

கஜேந்திரன்களின் உறுதியான தீர்மானம் என்ன என்பதை அறியுங்கள். அவர்களுக்காக ஒவ்வொரு கூட்டங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு காத்திருக்க முடியாது என பகிரங்கமாகவே கூறியுள்ளன.

இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமைகள் தமிழ் தேசிய கட்சிகளின் பல கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கவில்லை. என கூறப்படுகிறது.

https://jaffnazone.com/news/21703

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வணக்கத்திலேயே ஒன்று சேரமுடியாதவர்கள் எப்படித் தீர்வுத் திட்டத்தில் ஒன்று சேர்வார்கள்... ☹️

 

இப்படியானவர்களை எங்கள் அரசியல் தலைவர்களாக வைத்துக்கொண்டு சிங்களத்தை ஏசுவது முட்டாள்த்தனத்திலும் முட்டாள்த்தனம். 

😡

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

இப்படியானவர்களை எங்கள் அரசியல் தலைவர்களாக வைத்துக்கொண்டு சிங்களத்தை ஏசுவது முட்டாள்த்தனத்திலும் முட்டாள்த்தனம். 

பொறுங்கோ கபிதன். அவை இப்ப ஒருத்தருக்கு எதிராக ஒருத்தர்  வழக்கு போடுறதில பிஸி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/pirabakaran.tamil/videos/3462285023839584/

 

 

https://www.facebook.com/pirabakaran.tamil/videos/3462285023839584/

Link to comment
Share on other sites

7 hours ago, Kapithan said:

மாவீரர் வணக்கத்திலேயே ஒன்று சேரமுடியாதவர்கள் எப்படித் தீர்வுத் திட்டத்தில் ஒன்று சேர்வார்கள்... ☹️

 

இப்படியானவர்களை எங்கள் அரசியல் தலைவர்களாக வைத்துக்கொண்டு சிங்களத்தை ஏசுவது முட்டாள்த்தனத்திலும் முட்டாள்த்தனம். 

😡

முளைச்சு நாலு நாளக்குவதட்குள் கட்சிக்குள் அடிதடி , வழக்கு, இடைக்கால தடை எண்டு ஏகப்படட புடுங்குப்பாடு. இதுகள்தான் மாற்றுதலமை எண்டு அலைந்தவர்கள். இவர்களுக்குள்ள இந்த சின்ன பிரச்சினையையே தீர்க்க முடியாதவர்கள் எப்படி தமிழர் பிரச்சினைளை கொண்டு செல்லப்போகிறார்கள். பொன்னம்பலன்கள் அந்த நாள் தொடக்கம் தமிழர்க்கு பிரச்சினைதான். சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பார்களே. அதுதான் இதுவோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்தை  அறிய முன்னர்

 புலிகள்  மற்றும்  மாவீரர்கள் சார்ந்து

தமிழ் தேசிய கட்சிகளின் உறுதியான  நிலைப்பாட்டை  அறிய வேண்டும்

கறிவேப்பிலை விளையாட்டென்றால்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதொன்றும் கூட்டம் போட்டுக் கூட்டிப் பேசி செய்யுற விடயம் அல்ல. இதயபூர்வமாக தன்னிச்சையாக இணைந்து செய்யுற விடயம். 

சிங்களவன்.. எவ்வளவு விரைவாக தடைகளை பெற முடியுமோ.. அவ்வளவு விரைவாக எடுக்கிறான்.. இவை இப்பதான் கூட்டம் கூடிப் பேசிக் காலம் கழிச்சுக்கிட்டு இருக்கினம்.

செய் அல்லது செய்யாமல் கிட. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்தை  அறிய முன்னர்

 புலிகள்  மற்றும்  மாவீரர்கள் சார்ந்து

தமிழ் தேசிய கட்சிகளின் உறுதியான  நிலைப்பாட்டை  அறிய வேண்டும்

கறிவேப்பிலை விளையாட்டென்றால்?????

இவர்கள் கதைக்கிறார்கள்

அவர்கள் களத்தில் வேலை செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.