Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் நேசிக்கப்பட்ட கெளசல்யன்

கிழக்கு மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட, பிரபலமான ஒரு தலைவராக கெளசல்யன் விளங்கினார். கிழக்கின் பெரும் பணக்காரர்களும், இடைநிலை வசதிபடைத்தோரும் கெளசல்யனின் காணிச் சீர்திருத்தங்களை அவ்வளவாக விரும்பாவிட்டாலும், கிழக்கின் ஏழை விவசாய மக்கள் அவரை போற்றி வந்தார்கள். இந்த ஏழை மக்களாலேயே கிழக்கு மாகாணம் நிரம்பியிருந்தது. கெளசல்யனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான  இந்த ஏழைத் தமிழர்கள் அவர்மேல் கொண்ட பற்றினாலும், அவரது இழப்பினால் ஏற்பட்ட உண்மையான சோகத்தினாலும்தான் அங்கு வந்து தம்மால் நேசிக்கப்பட்ட ஒரு  தலைவனுக்கான அகவணக்கத்தினைச் செலுத்தினார்கள் என்றால் மிகையில்லை. அவரைப்பற்றிய விமர்சனங்கள் எப்படியாக இருந்தாலும், தனது பணியில் அவர் காட்டிய நேர்மையும், போராட்ட இலட்சியத்தின் மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியா பற்றுறுதியும் எந்த விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டது.

கெளசல்யனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் கருணா பிரதேசவாதச் சாயம் பூசிக்கொண்டு புலிகளை விட்டுப் பிரிந்து ராணுவத்துடன் இணைந்தபோது ஏற்பட்டது. தனது உயிருக்குக் கருணாவினாலும்ம் அவரது விசுவாசிகளாலும் நிச்சயம் ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்திருந்தபோதும், தலைமைக்கெதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட்டுவருவதை கெளசல்யன் கடுமையாக எதிர்த்தார். கிழக்கின் மைந்தனாக இருந்தபோதும் கருணாவின் இந்த துரோகத்தனத்தை வெளிப்படையாக அவர் விமர்சித்தார். கருணாவின் துரோகத்தனத்திற்கெதிரான கெளசல்யனின் கடுமையான விமர்சனமும், நிலைப்பாடும் அக்காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகவே, இதுபற்றி நாம் பேசுவது முக்கியமானது.


 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

"கேர்ணல்" கருணாவும் அவனது பிரதேசவாதப் புரட்சியும்

மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு, புலிகளின் தேனகம் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் முக்கிய தளபதிகள் , பொறுப்பாளர்களை கருணா கூட்டியிருந்தான். சுமார் 150 புலிகளின் தலைவர்கள் அடங்கிய அந்த கூட்டத்தை கருணாவே நடத்தினான். கிழக்கில் 1987 இல் இருந்து பிரபாகரனுக்கு விசுவாசமாக போர்நடத்திய அதே கருணா இன்று அதே தலைவருக்கு எதிராக பிரதேசவாதக் கோசத்தைப் பாவித்துப் புரட்சி செய்துகொண்டிருந்தான்.

அன்று அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினருக்கு தமது காதுகளையே அவர்களால் நம்பமுடியவில்லை. புலிகளின் தலைமைமீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் கருணா முன்வைத்துக்கொண்டிருந்தான். அவனது குற்றச்சாட்டுக்கள் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான், நிதித்துறைப் பொறுப்பாழர் தமிழேந்தி, காவல்த்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகிய புலிகளின் மிக முக்கிய தலைவர்கள் மீதே முன்வைக்கப்பட்டன. கருணா விடுத்த கோரிக்கையென்னவென்றால், இந்த மூவரையும் தவிர்த்து, கிழக்கு மாகாணத்திற்கென்று தனியான அதிகார பலம் கொண்ட, தன்னிச்சையாக இயங்கும் நிர்வாக அமைப்பொன்றுதான். "வன்னித்தலைமையின் கீழ் நாம் செயற்பட விரும்பவில்லை, வடக்கு மைய்யத்தைச் சுற்றி நாம் இயங்கப்போவதில்லை, அதனைத் தூக்கியெறிந்துவிட்டு கிழக்கிற்கென்று தனியான ஒரு அமைப்பை நாம் உருவாக்குவோம்" என்று அவன் அங்கு கூடியிருந்தவர்களிடம் கர்ஜித்தான்.

இதைக்கேட்ட அனைவருமே ஒருகணம் அதிர்ந்துபோயினர். பலரின் முகத்தில் விரக்தியும் விசனமும் ஒட்டிக்கொண்டது. ஆனால், கருணாவின் எண்னத்தை ஏற்கனவே அறிந்துவைத்திருந்த அவனுக்கு நெருக்கமானவர்கள் அமைதியாக இருந்து அவன் சொல்வதை ஆமோதிக்கத் தொடங்கினர். அவர்களில் பலர் கருணாவுடன் சேர்ந்து நிற்கப்போவதாக வெளிப்படையாகவே கூறினர். ஆனால், இதில் வேடிக்கையென்னவென்றால், அன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கப்போவதாகக் கூறிய பலர் பின்னர் வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் இணைந்துகொண்டதுடன், கருணாவின் துரோகத்தையும் கடுமையாகச் சாடத் தவறவில்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், அங்கிருந்த தளபதிகளில் ஒருவர் மட்டுமே கருணாவின் துரோகத்தை வேளிப்படையாக எதிர்த்தார். கிழக்கு மாகாணத்தின் தன்னிகரில்லாத் தளபதியெனும் மமதை தலைக்கேறிய கருணாவை தனியாளாக எதிர்த்து நின்றது கெளசல்யனே அன்றி வேறில்லை. மொத்தத் தமிழினத்தினதும் எதிர்கால இருப்பென்பது வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது என்று நிதானத்துடன் அவர் கருணாவை நோக்கிக் கூறினார். மேலும், நாம் பிரதேச ரீதியாகப் பிரிந்துபோவது எமது போராட்டத்தை முழுமையான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் கருணாவிடம் கூறினார். எமக்கிருக்கும் பிரச்சினைகளை நாம் பேசியே தீர்த்துக்கொள்ள வேண்டும், ஆகவே உங்களின் இந்த நாசகார முடிவினைக் கைவிட்டு விட்டு வன்னிக்குச் சென்று தலைவரிடம் நேரடியாகப் பேசுங்கள் என்று அவர் கருணாவைக் கேட்டுக்கொண்டார்.

கெளசல்யனை பேசவிடாது தடுத்து, அவரின் பேச்சை நிராகரித்து, அவரையும் தனது சூழ்ச்சிக்குப் பணியவைக்க கருணா முயன்றுகொண்டிருந்தான். அத்துடன், கிழக்கிலிருந்து புலிகளுக்கென்று சேர்க்கப்பட்ட பணம் எவ்வளவென்பதை நீ வன்னிக்கு சொல்லு என்று அவன் கெளசல்யனைப் பார்த்துக் கேட்டான். "எமது மண்ணில் சேர்க்கும் அனைத்துப் பணமும் பொன்னான கிழக்கு ஈழத்திற்காக மட்டுமே இனிமேல் பயன்படுத்தப்படும்" என்று கூறினான் கருணா. ஆனால், கெளசல்யனோ தனது முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. தன்னை கருணா எதுவும் செய்யலாம் என்கிற நிலையிருந்தும், அவர் கருணாவின் துரோகத்திற்கெதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருந்தார். இதனால் பொறுமையிழந்த கருணா, "இப்போதே வன்னிக்கு ஓடிப்போ, உன்ர மனுசியையும் கூட்டிக்கொண்டு ஓடு. இனிமேல் நான் உன்னை இங்கே பர்க்கக் கூடாது. அப்படிப்பார்த்தால் அந்த இடத்திலேயே உன்னைப் போடுவேன்" என்று கர்ஜித்தான். 

அங்கு கூடியிருந்தவர் எல்லாம் ஸ்தம்பித்து நிற்க, கெளசல்யன் அந்த மணடபத்தை விட்டு அமைதியாக வெளியேறிச் சென்றார். உடனடியாக தனது வருங்கால மனைவியும், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவந்த மாணவியுமான புஷ்பாவை அழைக்க அம்பிலாந்துரைக்குச் சென்றார். அங்கிருந்து, உடனடியாக அவர் வன்னிக்குக்கிளம்பிச் சென்றார். வன்னியை வந்தடைந்த கெளசல்யனை வரவேற்ற தலைவர் கிழக்கில் நடந்துவரும் கருணாவின் பிரதேசவாத நாடகத்தின் விபரங்கள் தொடர்பாக அவருடன் நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். 

கருணாவின் துரோகத்தினை துணிவுடன் எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டுமே
ஆரம்பத்தில் கருணாவின் கீழ் செயற்பட்ட   தளபதிகளான ரமேஷ், ரமணன், ராம், பிரபா, கரிகாலன் ஆகியோர் பின்னர் அவனை விட்டு மீண்டும் வன்னிக்கே திரும்பிச் சென்றிருந்தாலும், ஆரம்பத்திலிருந்து கருணாவின் துரோகத்தினை துணிவாக எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டும் தான். கெளசல்யனின் விசுவாசத்தை மெச்சிய தலைவர், பின்னர் வந்த சில வாரங்களில் அவரது திருமண நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

முற்றும்

இணையம் : கொழும்பு டெயிலி மிரர்
ஆக்கம் : டி பி எஸ் ஜெயராஜ்


 

  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 20/9/2021 at 20:24, ரஞ்சித் said:

கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான தாக்குதல் குறித்த புலிகளின் அறிக்கை

முதலில் இக்கொடூரமான தாக்குதல் குறித்து புலிகள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். இத்தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று மறுக்காவிட்டாலும், இத்தாக்குதல் "மன்னிக்கமுடியாத, கடுமையான கண்டனத்திற்கு  உள்ளாக்கப்படவேண்டிய படுகொலைகள்" என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல், தாக்குபவர்களின் உண்மையான குறிக்கோள் எந்தளவு நியாயத்தன்மையினைக் கொண்டிருப்பினும், நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நியாயப்படுத்தப்படவோ முடியாதது என்றும் கூறியிருக்கிறார்கள்.

புலிகளின் அறிக்கை வருமாறு,

" அப்பாவிகள் பேரூந்துமீதான இத்தாக்குதலினை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கெப்பிட்டிக்கொல்லாவையில்,அப்பாவிகளை இலக்குவைத்துத் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான படுகொலை அரசியல் காரணங்களுக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவாவில் முடித்துக்கொண்டு புலிகளின் பேச்சுவார்த்தைக்குழு நாடு திரும்பியிருக்கும் தருணத்துடன் ஒன்றாக்கி நடத்தப்பட்டிருக்கும் இந்த அப்பாவிகளின் படுகொலை, இப்பழியினை புலிகள் மீது சுமத்தும் ஒற்றை நோக்கத்திற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசினாலோ அல்லது அவர்களால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழு ஒன்றினாலோ நடத்தப்பட்டிருக்கும் இந்த படுகொலையினைக் காரணமாகக் காட்டி இலங்கை அரசு வன்னிமீது தனது கொடூரமான வான் தாக்குதல்களையும் ஆரம்பித்திருக்கிறது.  ஆனால், துரதிஷ்ட்டவசமாக, அரசின் இந்த நயவஞ்சகப் பிரச்சாரத்திற்குள் அகப்பட்டிருக்கும் சர்வதேச செய்திநிறுவனங்களும், அமைப்புக்களும் புலிகள் மீது அநியாயமாக இத்தாக்குதலுக்கான பொறுப்பினைச் சுமத்துவது தெரிகிறது. தற்போது நடந்துவரும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் பொறுப்பாகவும், நிதானத்துடனும் செய்தி வெளியிடவேண்டும் என்று நாம் வேண்டுகிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களாக புலிகள் இயக்கத்தினால் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து வந்தது.  ஆனால், இப்போது சிங்கள மக்கள் மீது குறைந்தது 3 தாக்குதல்களையாவது புலிகள் செய்திருப்பதாகக்குற்றஞ்சாட்டுகிறது. இன்றுவரை சிங்கள அரசாலும், அதன் துணைராணுவக் குழுக்களாலும் தமிழ் மக்களும், சிறார்களும்  ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இத்தாக்குதல் ஒன்றின்போது கூட அரசோ அல்லது அதன் துணை ராணுவக் குழுக்களோ தமிழ் மக்கள் மீது தயவு தாட்சண்ணியம்பார்க்காமல், மிகவும் கொடூரமாகவே நடந்திருக்கின்றன. ஆகவே, இத்தாக்குதலிலும் கூட அரசும் அவர்களது துணைராணுவக் குழுவுமே பின்னால் இருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் சிங்கள மக்கள் மீது புலிகள்பெயரால் படுகொலையொன்றினை நிகழ்த்துவதன் மூலம், சர்வதேசத்தில் புலிகளுக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தவும், அவர்களைத் தனிமைப்படுத்தவுமே அரசு முயன்றிருக்கிறது" என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

@ரஞ்சித்அவர்களே, இந்தாருங்கள். இது செயலிழந்துபோன புதினம் வலைத்தளத்தில் இருந்து எடுத்த இத்தாக்குதல் தொடர்பான புலிகளின் சமதானச் செயலகத்தின் அறிக்கை. 

(வேண்டாததெனில் முறைப்பாடு மூலம் நீக்கிவிடவும்.)

 

மூலம்: http://www.eelampage.com/?cn=26875

மூல வலைத்தளம்: புதினம்

பழி சுமத்துவதற்காக கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதல்: விடுதலைப் புலிகள் கண்டனம்
[வியாழக்கிழமை, 15 யூன் 2006, 12:47 ஈழம்] [ம.சேரமான்]

அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவவில் பொதுமக்கள் பயணித்த பேரூந்து மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கை:

வவுனியாவிலிருந்து 23 கிலோ மீற்றர் தொலைவில் கெப்பிட்டிக்கொல்லாவவில் பொதுமக்கள் பயணித்த பேரூந்து மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதில் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் வாழ்க்கையை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது.

ஜெனீவா பேச்சுக்கள் நடைபெற்ற பெப்ரவரியிலிருந்து 24 குழந்தைகள் உட்பட 250 பேர் இதுவரை சிறிலங்கா இராணுவத்தினரால் வடக்கு - கிழக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் திரும்பியுள்ள நேரத்தில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது முழுப் பழியைச் சுமத்தும் நோக்குடன் நடத்தப்பட்டுள்ளது.

கிளைமோர் சம்பவத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நிர்வாக முல்லைத்தீவுப் பகுதியில் விமானக் குண்டுவீச்சை சிறிலங்கா விமானப் படையினர் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கிளைமோர்த் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனையும் நியாயப்படுத்துகிறது.

சர்வதேச ஊடகமும் சிறிலங்காவின் இந்த பொய்யான பரப்புரையில் வீழ்வது எதிர்பாராத ஒன்றாக உள்ளது. சர்வதேச ஊடகங்கள் தங்களது உயரிய மதிப்பீடுகளை செய்திகளை வெளியிடுவதில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 5 people and people standing
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே குடும்பம் ஒட்டுக்குழு பிள்ளையானை பயன்படுத்தி கோரமான பலவேறு சட்டவிரோத குற்ற செயல்களை கடந்த காலங்களில் செய்து இருக்கிறது .

அரசியல் மற்றும் இராணுவ கொலைகள் மட்டுமின்றி ராஜபட்ச குடும்பத்திற்கு விரோதமான பத்திரிகையாளர்கள் உட்பட பலரை கொன்று போட ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை பயன்படுத்திய விவகாரத்தை Daily Mirror அம்பலப்படுத்தி இருக்கின்றது

குறிப்பாக முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் ஜோஸ்ப் பரராஜசிங்கம் , ரவிராஜ் ,சந்திரநேரு உட்பட பல அரசியல் கொலைகளை பிள்ளையானை பயன்படுத்தியே கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் புலனாய்வு பிரிவு செய்து இருந்தது

அதே போல திருகோணமலையை சேர்ந்த மூத்த சிவில் செயல்பாட்டாளர் விக்னேஸ்வரன் உட்பட சிவில் சமூக பிரமுகர்களும் பிள்ளையானை வைத்தே கொலை செய்யப்பட்டனர்

பத்திரிகையாளர் நடேசன் போன்ற பத்திரிகை பிரமுகர்களையின் கொலைகளையும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கி இருந்த பிள்ளையானை வைத்தே கோத்தபாயா ராஜபக்சே செய்தார்

முன்னாள் துணைவேந்தர் ரவீந்தரநாத் அவர்களையும் ராஜபக்சே குடும்பத்துடன் நெருக்கிய தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் துணையுடனே பிள்ளையான் கடத்தி படுகொலை செய்தான்

இது தவிர, இலங்கை முழுவதும் தமிழ் வியாபாரிகள் பலரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட பிள்ளையானை கோத்தபாயா அனுமதி அளித்து இருந்தார் . இவ்வாறு கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்கள் வெலிகந்த மற்றும் கபரண இராணுவ முகாம்களில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர்

மேற்படி வர்தகர்களிடம் பறிக்கப்பட்ட பணம் பிள்ளையனிடம் மட்டுமின்றி மூத்த இராணுவ அதிகாரிகளிடம் பகிரப்பட்டு இருந்தது

மேற்படி கடத்தல் சம்பவங்களில் போது ராஜபக்சே சகோதரர்களுக்கு வேண்டப்படாத பத்திரிகையாளர்கள் உட்பட சிங்களவர்கள் பலர் கொண்டு வரப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை பிள்ளையான் கூட்டாளி அசாத் மௌலானா என்பவன் அம்பலப்படுத்தி இருக்கின்றான்

இது தவிர ,வெலிகந்தை உளவுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ மற்றும் தாகீர் போன்ற பொலிஸ் அதிகாரிகள் மேற்படி விவகாரங்களை தெரிந்து இருந்தாலும் பிள்ளையானுக்கு ராஜபக்ச குடும்பத்தில் இருந்த தொடர்பு காரணமாக அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை

அதே போல பிள்ளையானை பயன்படுத்தி பெண்களை கடத்தி இலங்கை இராணுவத்திற்கு விருந்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றன . குறிப்பாக திருகோணமலையில் கடற்படை உளவுப் பிரிவை சேர்ந்த கப்ரன் சுமித் என்பவருடன் இணைந்து பிள்ளையான் கும்பல் நடத்திய விருந்து தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன

6 வயது மாணவியான வர்ஜா யூட் றெஜி, , 8 வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் போன்ற குழந்தைகளை கூட ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தில் கப்பம் பெறுவதற்காக பிள்ளையான் கடந்து கொன்ற சம்பவங்கள் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு தெரிந்தே நடந்தது
2007 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் பொது பிள்ளையானை பயன்படுத்தி தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை கடத்திய பசில் ராஜபக்சே வாக்கெடுப்பில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களை பங்கெடுக்க அனுமதிக்கவில்லை

இது போதாதென்று மட்டக்களப்பில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்சே நியமித்த காணாமல் போனோர் ஆணைக்குழுவில் பிள்ளையானுக்கு எதிராக கண் கண்ட சாட்சியங்கள் பதிவாகி இருக்கின்றது

கோத்தபாயா ராஜபக்சே தலைமையிலான புலனாய்வு துறை அதிகாரிகள் வாழைச்சேனையில் ஒரு முஸ்லீம் ஆயுத குழுவை உருவாக்கி கருணா பிள்ளையான் குழுக்களுடன் இணைத்தே இயக்கி வந்தார்கள் . அதே போல முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கான பிரதான ஆயுத முகவராக பிள்ளையானையே பயன்படுத்தினார்கள்

அதே போல திரு அருண் தம்பிமுத்து அவர்களுக்கு சொந்தமான வீட்டை நாமல் ராஜபக்சே உதவிகளுடன் தான் பிள்ளையான் தக்க வைத்து இருக்கின்றான்

கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு நெருக்கமான முன்னாள் புலனாய்வு துறை தளபதியாக இருந்த மேஜர் ஜெனெரல் கபில ஹெந்தாவிதாரண அவர்களால் பிள்ளையானுக்கு மேற்படி வீடு பிள்ளையானுக்கு பெற்று கொடுக்கப்பட்டு இருந்தது

இந்த வீட்டு விவகாரத்தில் பிள்ளையான் போலி உறுதி தயாரித்து தேவராஜ் என்பவனுக்கு விற்று அவனிடம் வாங்குவது போல பாசாங்கு செய்து முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த மோசடி 7 வருட கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றம் என்கிற போதும் ராஜபக்சே குடும்ப தலையீடு காரணமாகவே இதுவரை நீதி வழங்கப்படவில்லை

அதே போல முதலமைச்சராக இருந்த போது பிள்ளையான், பிரதீபன் மற்றும் கண்ணன் ஆகியோர் சேர்ந்து புதூர் வங்கியில் 15 கோடி பெறுமதியான நகைக மற்றும் 35 லட்சம் பணத்தை கொள்ளையடித்து இருந்தனர்

இந்த கொள்ளையில் பிள்ளையானுக்கு இருந்த தொடர்பை இலங்கை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தி பிள்ளையானை கைது செய்ய முயன்ற போதும் ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை கைது செய்ய அனுமதிருக்க வில்லை

அதே போல அதே போல மட்டு-வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவியாக இருந்த 21 வயதேயான தனுஸ்கோடி பிறேமினி. என்கிற பெண்ணை சந்திவெளி இராணுவ முகாமை சேர்ந்த கலீல் (பிள்ளையானுடன் சிறையில் இருந்தவன் ) என்பவனின் உதவியுடன் வெலிகந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடத்திய பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான், சிந்துஐன், யோகன், புலேந்திரன், குமார், சிரஞசீவி ஆகியோர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர்.

மேற்படி கொலை தொடர்பாக தெளிவான சாட்சியங்கள் இருக்கின்ற போதும் ராஜபக்ச குடும்ப தலையீடு காரணமாக பிள்ளையான் கைது செய்யப்படவில்லை

அதேபோல பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக வைத்து கொண்டு பாசிக்குடாவில் பலவேறு சட்டவிரோத முதலீடுகளை பசில் ராஜபக்சே செய்து இருந்தார்

மேற்படி சம்பவஙக்ளின் தொடர்ச்சியாகவே இன்றைக்கும் பிள்ளையானும் அவன் கூட்டாளிகளும் வரிந்து கட்டி கொண்டு ராஜபக்சே குடும்பம் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள்.
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2022 at 03:39, தமிழ் சிறி said:
May be an image of 5 people and people standing
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே குடும்பம் ஒட்டுக்குழு பிள்ளையானை பயன்படுத்தி கோரமான பலவேறு சட்டவிரோத குற்ற செயல்களை கடந்த காலங்களில் செய்து இருக்கிறது .

அரசியல் மற்றும் இராணுவ கொலைகள் மட்டுமின்றி ராஜபட்ச குடும்பத்திற்கு விரோதமான பத்திரிகையாளர்கள் உட்பட பலரை கொன்று போட ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை பயன்படுத்திய விவகாரத்தை Daily Mirror அம்பலப்படுத்தி இருக்கின்றது

குறிப்பாக முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் ஜோஸ்ப் பரராஜசிங்கம் , ரவிராஜ் ,சந்திரநேரு உட்பட பல அரசியல் கொலைகளை பிள்ளையானை பயன்படுத்தியே கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் புலனாய்வு பிரிவு செய்து இருந்தது

அதே போல திருகோணமலையை சேர்ந்த மூத்த சிவில் செயல்பாட்டாளர் விக்னேஸ்வரன் உட்பட சிவில் சமூக பிரமுகர்களும் பிள்ளையானை வைத்தே கொலை செய்யப்பட்டனர்

பத்திரிகையாளர் நடேசன் போன்ற பத்திரிகை பிரமுகர்களையின் கொலைகளையும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கி இருந்த பிள்ளையானை வைத்தே கோத்தபாயா ராஜபக்சே செய்தார்

முன்னாள் துணைவேந்தர் ரவீந்தரநாத் அவர்களையும் ராஜபக்சே குடும்பத்துடன் நெருக்கிய தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் துணையுடனே பிள்ளையான் கடத்தி படுகொலை செய்தான்

இது தவிர, இலங்கை முழுவதும் தமிழ் வியாபாரிகள் பலரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட பிள்ளையானை கோத்தபாயா அனுமதி அளித்து இருந்தார் . இவ்வாறு கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்கள் வெலிகந்த மற்றும் கபரண இராணுவ முகாம்களில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர்

மேற்படி வர்தகர்களிடம் பறிக்கப்பட்ட பணம் பிள்ளையனிடம் மட்டுமின்றி மூத்த இராணுவ அதிகாரிகளிடம் பகிரப்பட்டு இருந்தது

மேற்படி கடத்தல் சம்பவங்களில் போது ராஜபக்சே சகோதரர்களுக்கு வேண்டப்படாத பத்திரிகையாளர்கள் உட்பட சிங்களவர்கள் பலர் கொண்டு வரப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை பிள்ளையான் கூட்டாளி அசாத் மௌலானா என்பவன் அம்பலப்படுத்தி இருக்கின்றான்

இது தவிர ,வெலிகந்தை உளவுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ மற்றும் தாகீர் போன்ற பொலிஸ் அதிகாரிகள் மேற்படி விவகாரங்களை தெரிந்து இருந்தாலும் பிள்ளையானுக்கு ராஜபக்ச குடும்பத்தில் இருந்த தொடர்பு காரணமாக அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை

அதே போல பிள்ளையானை பயன்படுத்தி பெண்களை கடத்தி இலங்கை இராணுவத்திற்கு விருந்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றன . குறிப்பாக திருகோணமலையில் கடற்படை உளவுப் பிரிவை சேர்ந்த கப்ரன் சுமித் என்பவருடன் இணைந்து பிள்ளையான் கும்பல் நடத்திய விருந்து தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன

6 வயது மாணவியான வர்ஜா யூட் றெஜி, , 8 வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் போன்ற குழந்தைகளை கூட ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தில் கப்பம் பெறுவதற்காக பிள்ளையான் கடந்து கொன்ற சம்பவங்கள் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு தெரிந்தே நடந்தது
2007 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் பொது பிள்ளையானை பயன்படுத்தி தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை கடத்திய பசில் ராஜபக்சே வாக்கெடுப்பில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களை பங்கெடுக்க அனுமதிக்கவில்லை

இது போதாதென்று மட்டக்களப்பில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்சே நியமித்த காணாமல் போனோர் ஆணைக்குழுவில் பிள்ளையானுக்கு எதிராக கண் கண்ட சாட்சியங்கள் பதிவாகி இருக்கின்றது

கோத்தபாயா ராஜபக்சே தலைமையிலான புலனாய்வு துறை அதிகாரிகள் வாழைச்சேனையில் ஒரு முஸ்லீம் ஆயுத குழுவை உருவாக்கி கருணா பிள்ளையான் குழுக்களுடன் இணைத்தே இயக்கி வந்தார்கள் . அதே போல முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கான பிரதான ஆயுத முகவராக பிள்ளையானையே பயன்படுத்தினார்கள்

அதே போல திரு அருண் தம்பிமுத்து அவர்களுக்கு சொந்தமான வீட்டை நாமல் ராஜபக்சே உதவிகளுடன் தான் பிள்ளையான் தக்க வைத்து இருக்கின்றான்

கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு நெருக்கமான முன்னாள் புலனாய்வு துறை தளபதியாக இருந்த மேஜர் ஜெனெரல் கபில ஹெந்தாவிதாரண அவர்களால் பிள்ளையானுக்கு மேற்படி வீடு பிள்ளையானுக்கு பெற்று கொடுக்கப்பட்டு இருந்தது

இந்த வீட்டு விவகாரத்தில் பிள்ளையான் போலி உறுதி தயாரித்து தேவராஜ் என்பவனுக்கு விற்று அவனிடம் வாங்குவது போல பாசாங்கு செய்து முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த மோசடி 7 வருட கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றம் என்கிற போதும் ராஜபக்சே குடும்ப தலையீடு காரணமாகவே இதுவரை நீதி வழங்கப்படவில்லை

அதே போல முதலமைச்சராக இருந்த போது பிள்ளையான், பிரதீபன் மற்றும் கண்ணன் ஆகியோர் சேர்ந்து புதூர் வங்கியில் 15 கோடி பெறுமதியான நகைக மற்றும் 35 லட்சம் பணத்தை கொள்ளையடித்து இருந்தனர்

இந்த கொள்ளையில் பிள்ளையானுக்கு இருந்த தொடர்பை இலங்கை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தி பிள்ளையானை கைது செய்ய முயன்ற போதும் ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை கைது செய்ய அனுமதிருக்க வில்லை

அதே போல அதே போல மட்டு-வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவியாக இருந்த 21 வயதேயான தனுஸ்கோடி பிறேமினி. என்கிற பெண்ணை சந்திவெளி இராணுவ முகாமை சேர்ந்த கலீல் (பிள்ளையானுடன் சிறையில் இருந்தவன் ) என்பவனின் உதவியுடன் வெலிகந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடத்திய பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான், சிந்துஐன், யோகன், புலேந்திரன், குமார், சிரஞசீவி ஆகியோர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர்.

மேற்படி கொலை தொடர்பாக தெளிவான சாட்சியங்கள் இருக்கின்ற போதும் ராஜபக்ச குடும்ப தலையீடு காரணமாக பிள்ளையான் கைது செய்யப்படவில்லை

அதேபோல பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக வைத்து கொண்டு பாசிக்குடாவில் பலவேறு சட்டவிரோத முதலீடுகளை பசில் ராஜபக்சே செய்து இருந்தார்

மேற்படி சம்பவஙக்ளின் தொடர்ச்சியாகவே இன்றைக்கும் பிள்ளையானும் அவன் கூட்டாளிகளும் வரிந்து கட்டி கொண்டு ராஜபக்சே குடும்பம் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள்.

மிக்க நன்றி சிறி !

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

கருணாவின் கூட்டாளியான பிள்ளையானின் துரோகச்செயலகளைப் பட்டியலிடும் முன்னாள் போராளி:

தகவல்களைச் சேகரப்படுத்திக்கொள்ளவும்.

 

குறிப்பாக சாவொறுப்புப்பெற்ற தேசவஞ்சகன் இனிதனின் ஆட்கள் மேற்கொண்ட கோழைத்தனமான தாக்குதலொன்றையும் குறிப்பிடுகின்றார்.

https://eelam.tv/watch/க-ல-க-ள-ள-கப-பம-ஆள-கடத-தல-ல-ஈட-பட-ட-ப-ள-ள-ய-ன-உண-ம-ய-உட-த-த-ம-ன-ன-ள-ப-ர-ள_xgNP1eckFfP4vRh.html

 

(தங்களின் திரிக்கு வலுச்சேர்ப்பதாக இருக்குமென்று எண்ணுகிறேன். )

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

கருணா குழுவினர் நடாத்திய மற்றொரு வஞ்சகம்

24.08.2006 அன்று மட்டக்களப்பில் 

 

அ. ம. இசைவழுதி எழுதிய கடற்கரும்புலி கப்டன் இயல்வாணனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து...

"சர்வதேசக் கடற்பரப்பில் இருந்து விடுமுறையில் சென்று மீண்டும் ஆழக்கடலில் ஆழத்தை அளவிடத் தயாராக மீண்டும் கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் தலைமையிலான போராளிகள் தயார் நிலையில் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அப்போது நேரம் நெருங்கியது தமக்குரியவற்றை செய்தார்கள்.

அங்கே தமது விநியோகத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கு செல்வதற்காக ஒவ்வொரு தயார் படுத்தலை ஒவ்வோர் முனையிலும் இருந்து செயற்படுத்தத் தொடங்கினார்கள்.

ஆனால், அன்று இராணுவ நெருக்கடிகள், துரோகத்தின் கொலை வெறிபிடித்த பார்வைக்கும் மத்தியில் ஓரளவு சீராக தம் போரியல் திரவியங்களை (வழங்களை) தென் தமிழீழத்தின் ஓர் பகுதியில் தரவிறக்கம் செய்துவிட்டு கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலினியன்) தலைமையில், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விநியோகப்பிரிவுப் போராளிகள் வன்னி நோக்கி தமக்கு உரிய இடத்திற்கு செல்ல தொலைத்தொடர்பின் மூலம் வருகையை அறிவித்து விட்டு புறப்படத் தயாரானார்கள்.

ஏனைய விடை கொடுத்த விழிகள் கடலைப் பார்ப்பதும் வருவதுமாய் இவர்களின் பயணத்தின் திசையைப் பார்த்தவண்ணம் இருந்தது அந்த சீரற்ற காலத்தில் பல ஏக்கங்களுடன்…… ஆனால், அங்கே குறிப்பிட்ட மணித்தியாலத்தில் சேரும் இடத்தைத் தாண்டவுமில்லை, நேரம் வழமையை விட அதிகரித்து சென்றது தொடர்பை எதிர்பார்த்த மனங்கள் பலதை எண்ணி ஏங்கித் தவித்த வண்ணம் இருந்தன.

அவர்களின் பயணத்தின் போது………………………

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை – நகர்வுகளை 2004ம் ஆண்டிற்கு பின்னர் சிறிலங்கா அரசுகளுடன் இணைந்து துரோக சக்திகளும் (துரோகி கருணா குழு) முடக்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பல முடக்க வேலைகளையும் – மூட்டுகட்டைகளையும் தரைவழியாக கடமைகளை மேற்கொண்ட போராளிகளுக்கு செய்து வந்த துரோக சக்திகள் அன்று கடற்புலிகளின் வரலாற்றில் மாபெரும் துரோகத்தை விதைத்து பல விழுதின் வேர்களை அந்த கரை மணலில் சாய்த்தார்கள்.

அப்போது அந்த போராளிகளின் படகை துரோகிகள் (துரோகி கருணா குழு) சூழ்ந்து, போராளிகளை நிராயுத பாணிகளாக கைது செய்து கரையில் கொண்டு சென்றார்கள். அதிலும் சில பழகிய முகங்கள் அங்கு துரோக சக்தியாக மனம் தாங்குமா? ஆயினும் அனைத்தையும் கடந்து அவர்கள் துரோகிகள் எம் விடுதலைக்கு எதிராகவே அவர்கள் கரங்களில் ஆயுதங்கள் ஆயினும் போராளிகள் அடிபணிவதாக இல்லை. அப்போது மறு திசையில் இவர்களின் வரவை அவதானித்தும் காத்திருந்த குரல்கள் தொடர்பலை இவர்களின் தொலைபேசியில் கூவிய வண்ணம் இருந்தது.

இங்கே துரோகிகள் புடைசூழ போராளிகளின் கைகள், கால்கள் கட்டபப்ட்டு விசாரணை ஆரம்பமாகியது.

எங்கிருந்து வருகின்றீர்கள்?

எங்கே செல்கின்றீர்கள்?

எங்கே எத்தனைபேர் என புதிய திட்டங்கள் மாற்றங்கள் விபரங்கள் போன்றவற்றை அறியும் முனைப்புடன் தொடுத்தார்கள் விசாரணையை….

ஆயினும் போராளிகளின் வாய்கள் மௌனம் காத்தன.

பொறுமையிழந்த துரோகிகள் கோழைத்தனமான (சித்திரவதை) தாக்குதலை தொடுத்தார்கள். (அதை இங்கே எழுத்துருவில் வடிக்கும்போது என் கண்களே பனிக்கின்றது) குருதி தொய்ந்து வலிகள் தொடர்ந்தாலும்…., முன்னைய காலத்தில் ஒன்றாக ஓர் அணியில் இருந்து ஓர் தட்டில் உணவுண்டு பழகிய நட்புகள் இளைத்த துரோகம் இன்னும் வேதனையை கூட்டியது அப்போது…………

தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் உயிர் காக்கப்பட வேண்டும் அவர்கள் மூலம் தொடர்ந்து தங்களின் பணி தொடரவேண்டும் என்ற மனநிலையில் அங்கும் அவர்கள் போராட்ட மரபைக் கடைப்பிடித்து மெல்ல மெல்ல உயிரும் விட்டு பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது………..

ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த சக தோழர்கள் – சகோதரன் சாவதைப் பார்ப்பது எவ்வளவு கொடுமை அதுவே அங்கே…………. துரோகியால் கட்டையால் அடித்து அடித்தே ஓர் வீரனை சாகடித்தனர் அவனது உயிரும் அந்த அலைவந்து தாலாட்டும் கரை மண்ணில் கடலைப் பார்த்தவண்ணம் உயிர் பிரிந்து அவன் சாய்த்து சருகாகி விழுந்து போனான். எந்த ஒரு வைர நெஞ்சமும் கலங்கும் படி அங்கே நடந்த சம்பவம் ஏனையவன் மேல் துரோகிகளின் கோழைத்தனம் பாய்வதற்கு கைது செய்யப்பட்ட போராளிகளின் படகின் கட்டளை அதிகாரியின் முன் தொலைத்தொடர்பை வைத்து யாரையாவது இங்கு அழை என கூறினார்கள்.

அப்போது, கட்டளை அதிகாரி தன்னுடன் விடுதலைக்காக வேண்டி உழைத்தவன் இந்த கோழைகளினால் மற்றைய தோழன்போல் சாகடிகக்ப்படுவதா? என சற்று காலநிலை மாற்றத்துடன் கூடிய அந்த கடற்காற்றுடன் கலந்து இவரின் குரலும் மறுதிசையில் ஒலித்தது. ஆயினும் சில பின்னணி சத்தங்களை வைத்து ஊகிப்பார்கள் என அவர் நினைத்தார். ஆனால் அங்கு இயற்கையும் அவர்களுக்கு இசைவாகவே இருந்தது. ஆதலால் காத்திருந்தவர்களால் ஊகிக்க முடியவில்லை. துரோகிகள் அவர்களை படகின் இயந்திரம் பழுதடைந்தது விட்ட ஓர் மாயத்தை தோற்றுவித்து கதைக்கக் வைத்தார்கள். நாம் அன்றைய காலநிலையில் கடமைகள் செய்யும் பிரதேசம் எமக்கு சாதகம் அற்ற பிரதேசம். ஆதலால் சற்று வேகமாகவும் துரிதமாகமும் முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட இடத்திலிருந்து இவர்கள் கூறிய இடத்துக்கு செல்ல சற்று வேகம் கூடிய படகே தேவை ஆதலால் அப்போது கரும்புலிப் படகு மட்டுமே புறப்படுவதற்கு தயார் செய்தார்கள். கரும்புலிப் படகு கடலின் குறுகிய பரப்பில் எதிரியின் அவதானிப்பு இல்லை என்று உறுதிப்படுத்திவிட்டு படகின் வழமையான திசைக்கு கருவிமூலம் அறிந்து அங்கே விரைந்தார்கள் அங்கே…………….

கரையில் எமது படகு இருப்பதை அறிந்து கரும்புலிப் படகு கரைநோக்கி தொலைத்தொடர்பில் அறிவித்த படி மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது. ஆயினும் படகின் அமைதி ஓர் சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. துரோகிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட தயாரானார்கள். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மறுகணம் ஓர் புத்தரின் (பற்றைக்குள்) மறைவில் இருந்து கரும்புலிப் படகை நோக்கி R.P.G ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி கூவிவந்தது. உடனே லாபகமாக திருப்பி நிலையை உடனே உணர்ந்து வேகம் கூட்டி உயரப் பறந்தது கரும்புலிப் படகு. ஆயினும் அதிலிருந்தவர்கள் விழிகள் ஓர் திசையில் எம் வீரர்கள் கைது செய்யப்பட்டும், ஓர் உடல் சாய்த்தும் கிடப்பதை அவதானித்து நிலைமையை அறிவித்துக் கொண்டு சென்றது.

அப்போது கரும்புலிப் படகில் இருந்து அறிவிக்கப்பட்டது………….

நாங்க…………… நாங்கள் உயர நல்லா இழுக்கிறோம்……………….

இழுக்கிறோம் ஆக்களை நீங்க…………………. வந்தால் சாத்தலாம்…….

உடனே துரோகிகளின் சில படகுகள் எங்கிருந்தோ வந்து அவர்களை தொடர்ந்தது அப்போது கரும்புலிப் படகு உயரப்பறந்ததின் காரணம் அவர்களை உயர இழுத்து செல்ல மறு முனையின் இருந்து எம்மவர்களின் படகு வந்து ஓர் களம் விளையாடும் திட்டத்தில்………..

இல்லை…………… இல்லை………….. இப்ப வேண்டாம்………………

நிலைமை சரியில்லை………………. சற்று விளங்கும் தானே நிலைமை………………

சண்டைக்கு ஓர் அனுமதியும், ஓர் களத்தித் திறக்கவும் உத்தரவை வேண்டிக் காத்திருந்தார்கள்.

ஆனால் அது எமக்கு சாதகமற்ற சூழ்நிலையும் – இடமும் அந்நேரம் என்னதான் செய்வது……………………….?

அவர்களின் இறுதித் தருணத்தில் கூட பதில் கூற முடியாதவர்களாய் நாங்கள் அன்று இருந்தோம்.

பின்பு கரும்புலிப்படகு கடலில் திசைமாற்றி சென்று அவர்களின் கண்ணில் இருந்து மறைந்து சற்று மணித்தியாலம் கழித்தே தளம் வந்து சேர்ந்தது.

ஆத்திரமும் – குரோதமும் நிறைந்து அவர்களை இப்படியாக அடித்தே அந்த அலைகடல் மணலில் சாய்த்தனர் துரோகிகள். அதில் இதுநாள் வரையில் அருகாய் இருந்த எங்கள் கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலியன்), கடற்கரும்புலி கப்டன் இயல் வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆயிரம் கனவுகளுடன் பூவின் வாழ்வுபோல் உதிர்ந்து போனார்கள்."

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

கருணா குழுவினர் நடாத்திய மற்றொரு வஞ்சகம்

24.08.2006 அன்று மட்டக்களப்பில் 

 

அ. ம. இசைவழுதி எழுதிய கடற்கரும்புலி கப்டன் இயல்வாணனின் வரலாற்றிலிருந்து...

"சர்வதேசக் கடற்பரப்பில் இருந்து விடுமுறையில் சென்று மீண்டும் ஆழக்கடலில் ஆழத்தை அளவிடத் தயாராக மீண்டும் கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் தலைமையிலான போராளிகள் தயார் நிலையில் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அப்போது நேரம் நெருங்கியது தமக்குரியவற்றை செய்தார்கள்.

அங்கே தமது விநியோகத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கு செல்வதற்காக ஒவ்வொரு தயார் படுத்தலை ஒவ்வோர் முனையிலும் இருந்து செயற்படுத்தத் தொடங்கினார்கள்.

ஆனால், அன்று இராணுவ நெருக்கடிகள், துரோகத்தின் கொலை வெறிபிடித்த பார்வைக்கும் மத்தியில் ஓரளவு சீராக தம் போரியல் திரவியங்களை (வழங்களை) தென் தமிழீழத்தின் ஓர் பகுதியில் தரவிறக்கம் செய்துவிட்டு கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலினியன்) தலைமையில், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விநியோகப்பிரிவுப் போராளிகள் வன்னி நோக்கி தமக்கு உரிய இடத்திற்கு செல்ல தொலைத்தொடர்பின் மூலம் வருகையை அறிவித்து விட்டு புறப்படத் தயாரானார்கள்.

ஏனைய விடை கொடுத்த விழிகள் கடலைப் பார்ப்பதும் வருவதுமாய் இவர்களின் பயணத்தின் திசையைப் பார்த்தவண்ணம் இருந்தது அந்த சீரற்ற காலத்தில் பல ஏக்கங்களுடன்…… ஆனால், அங்கே குறிப்பிட்ட மணித்தியாலத்தில் சேரும் இடத்தைத் தாண்டவுமில்லை, நேரம் வழமையை விட அதிகரித்து சென்றது தொடர்பை எதிர்பார்த்த மனங்கள் பலதை எண்ணி ஏங்கித் தவித்த வண்ணம் இருந்தன.

அவர்களின் பயணத்தின் போது………………………

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை – நகர்வுகளை 2004ம் ஆண்டிற்கு பின்னர் சிறிலங்கா அரசுகளுடன் இணைந்து துரோக சக்திகளும் (துரோகி கருணா குழு) முடக்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பல முடக்க வேலைகளையும் – மூட்டுகட்டைகளையும் தரைவழியாக கடமைகளை மேற்கொண்ட போராளிகளுக்கு செய்து வந்த துரோக சக்திகள் அன்று கடற்புலிகளின் வரலாற்றில் மாபெரும் துரோகத்தை விதைத்து பல விழுதின் வேர்களை அந்த கரை மணலில் சாய்த்தார்கள்.

அப்போது அந்த போராளிகளின் படகை துரோகிகள் (துரோகி கருணா குழு) சூழ்ந்து, போராளிகளை நிராயுத பாணிகளாக கைது செய்து கரையில் கொண்டு சென்றார்கள். அதிலும் சில பழகிய முகங்கள் அங்கு துரோக சக்தியாக மனம் தாங்குமா? ஆயினும் அனைத்தையும் கடந்து அவர்கள் துரோகிகள் எம் விடுதலைக்கு எதிராகவே அவர்கள் கரங்களில் ஆயுதங்கள் ஆயினும் போராளிகள் அடிபணிவதாக இல்லை. அப்போது மறு திசையில் இவர்களின் வரவை அவதானித்தும் காத்திருந்த குரல்கள் தொடர்பலை இவர்களின் தொலைபேசியில் கூவிய வண்ணம் இருந்தது.

இங்கே துரோகிகள் புடைசூழ போராளிகளின் கைகள், கால்கள் கட்டபப்ட்டு விசாரணை ஆரம்பமாகியது.

எங்கிருந்து வருகின்றீர்கள்?

எங்கே செல்கின்றீர்கள்?

எங்கே எத்தனைபேர் என புதிய திட்டங்கள் மாற்றங்கள் விபரங்கள் போன்றவற்றை அறியும் முனைப்புடன் தொடுத்தார்கள் விசாரணையை….

ஆயினும் போராளிகளின் வாய்கள் மௌனம் காத்தன.

பொறுமையிழந்த துரோகிகள் கோழைத்தனமான (சித்திரவதை) தாக்குதலை தொடுத்தார்கள். (அதை இங்கே எழுத்துருவில் வடிக்கும்போது என் கண்களே பனிக்கின்றது) குருதி தொய்ந்து வலிகள் தொடர்ந்தாலும்…., முன்னைய காலத்தில் ஒன்றாக ஓர் அணியில் இருந்து ஓர் தட்டில் உணவுண்டு பழகிய நட்புகள் இளைத்த துரோகம் இன்னும் வேதனையை கூட்டியது அப்போது…………

தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் உயிர் காக்கப்பட வேண்டும் அவர்கள் மூலம் தொடர்ந்து தங்களின் பணி தொடரவேண்டும் என்ற மனநிலையில் அங்கும் அவர்கள் போராட்ட மரபைக் கடைப்பிடித்து மெல்ல மெல்ல உயிரும் விட்டு பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது………..

ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த சக தோழர்கள் – சகோதரன் சாவதைப் பார்ப்பது எவ்வளவு கொடுமை அதுவே அங்கே…………. துரோகியால் கட்டையால் அடித்து அடித்தே ஓர் வீரனை சாகடித்தனர் அவனது உயிரும் அந்த அலைவந்து தாலாட்டும் கரை மண்ணில் கடலைப் பார்த்தவண்ணம் உயிர் பிரிந்து அவன் சாய்த்து சருகாகி விழுந்து போனான். எந்த ஒரு வைர நெஞ்சமும் கலங்கும் படி அங்கே நடந்த சம்பவம் ஏனையவன் மேல் துரோகிகளின் கோழைத்தனம் பாய்வதற்கு கைது செய்யப்பட்ட போராளிகளின் படகின் கட்டளை அதிகாரியின் முன் தொலைத்தொடர்பை வைத்து யாரையாவது இங்கு அழை என கூறினார்கள்.

அப்போது, கட்டளை அதிகாரி தன்னுடன் விடுதலைக்காக வேண்டி உழைத்தவன் இந்த கோழைகளினால் மற்றைய தோழன்போல் சாகடிகக்ப்படுவதா? என சற்று காலநிலை மாற்றத்துடன் கூடிய அந்த கடற்காற்றுடன் கலந்து இவரின் குரலும் மறுதிசையில் ஒலித்தது. ஆயினும் சில பின்னணி சத்தங்களை வைத்து ஊகிப்பார்கள் என அவர் நினைத்தார். ஆனால் அங்கு இயற்கையும் அவர்களுக்கு இசைவாகவே இருந்தது. ஆதலால் காத்திருந்தவர்களால் ஊகிக்க முடியவில்லை. துரோகிகள் அவர்களை படகின் இயந்திரம் பழுதடைந்தது விட்ட ஓர் மாயத்தை தோற்றுவித்து கதைக்கக் வைத்தார்கள். நாம் அன்றைய காலநிலையில் கடமைகள் செய்யும் பிரதேசம் எமக்கு சாதகம் அற்ற பிரதேசம். ஆதலால் சற்று வேகமாகவும் துரிதமாகமும் முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட இடத்திலிருந்து இவர்கள் கூறிய இடத்துக்கு செல்ல சற்று வேகம் கூடிய படகே தேவை ஆதலால் அப்போது கரும்புலிப் படகு மட்டுமே புறப்படுவதற்கு தயார் செய்தார்கள். கரும்புலிப் படகு கடலின் குறுகிய பரப்பில் எதிரியின் அவதானிப்பு இல்லை என்று உறுதிப்படுத்திவிட்டு படகின் வழமையான திசைக்கு கருவிமூலம் அறிந்து அங்கே விரைந்தார்கள் அங்கே…………….

கரையில் எமது படகு இருப்பதை அறிந்து கரும்புலிப் படகு கரைநோக்கி தொலைத்தொடர்பில் அறிவித்த படி மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது. ஆயினும் படகின் அமைதி ஓர் சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. துரோகிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட தயாரானார்கள். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மறுகணம் ஓர் புத்தரின் (பற்றைக்குள்) மறைவில் இருந்து கரும்புலிப் படகை நோக்கி R.P.G ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி கூவிவந்தது. உடனே லாபகமாக திருப்பி நிலையை உடனே உணர்ந்து வேகம் கூட்டி உயரப் பறந்தது கரும்புலிப் படகு. ஆயினும் அதிலிருந்தவர்கள் விழிகள் ஓர் திசையில் எம் வீரர்கள் கைது செய்யப்பட்டும், ஓர் உடல் சாய்த்தும் கிடப்பதை அவதானித்து நிலைமையை அறிவித்துக் கொண்டு சென்றது.

அப்போது கரும்புலிப் படகில் இருந்து அறிவிக்கப்பட்டது………….

நாங்க…………… நாங்கள் உயர நல்லா இழுக்கிறோம்……………….

இழுக்கிறோம் ஆக்களை நீங்க…………………. வந்தால் சாத்தலாம்…….

உடனே துரோகிகளின் சில படகுகள் எங்கிருந்தோ வந்து அவர்களை தொடர்ந்தது அப்போது கரும்புலிப் படகு உயரப்பறந்ததின் காரணம் அவர்களை உயர இழுத்து செல்ல மறு முனையின் இருந்து எம்மவர்களின் படகு வந்து ஓர் களம் விளையாடும் திட்டத்தில்………..

இல்லை…………… இல்லை………….. இப்ப வேண்டாம்………………

நிலைமை சரியில்லை………………. சற்று விளங்கும் தானே நிலைமை………………

சண்டைக்கு ஓர் அனுமதியும், ஓர் களத்தித் திறக்கவும் உத்தரவை வேண்டிக் காத்திருந்தார்கள்.

ஆனால் அது எமக்கு சாதகமற்ற சூழ்நிலையும் – இடமும் அந்நேரம் என்னதான் செய்வது……………………….?

அவர்களின் இறுதித் தருணத்தில் கூட பதில் கூற முடியாதவர்களாய் நாங்கள் அன்று இருந்தோம்.

பின்பு கரும்புலிப்படகு கடலில் திசைமாற்றி சென்று அவர்களின் கண்ணில் இருந்து மறைந்து சற்று மணித்தியாலம் கழித்தே தளம் வந்து சேர்ந்தது.

ஆத்திரமும் – குரோதமும் நிறைந்து அவர்களை இப்படியாக அடித்தே அந்த அலைகடல் மணலில் சாய்த்தனர் துரோகிகள். அதில் இதுநாள் வரையில் அருகாய் இருந்த எங்கள் கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலியன்), கடற்கரும்புலி கப்டன் இயல் வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆயிரம் கனவுகளுடன் பூவின் வாழ்வுபோல் உதிர்ந்து போனார்கள்."

 

 

எம்மையழிக்க எதிரியுடன் கூடி நின்று, இறுதிவரை அவனுடன் கூடவிருந்து, ஈற்றில் எமது போராட்டம் முற்றாக அழிக்கப்படக் காரணமாயிருந்த இனத்துரோகிகளை தமிழினம் மறக்கப்போவதுமில்லை, மன்னிக்கப்போவதுமில்லை. இத்துரோகிகளின் சந்ததிகளும் இவர்களது துரோகத்தின் பெயரைக் காவிக்கொண்டிருக்கும்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
17 hours ago, ரஞ்சித் said:

இத்துரோகிகளின் சந்ததிகளும் இவர்களது துரோகத்தின் பெயரைக் காவிக்கொண்டிருக்கும்!

காலகாலத்திற்கும் காவுவார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

விதவைப் பெண்ணை வதைத்துக்கொலை செய்த கருணா கும்பல்

 

 

அது கருணா விதைத்துவிட்டிருந்த கிழக்கு பிரதேசவாதம் தலைவரித்தாடிக் கொண்டிருந்த காலகலட்டம். மட்டக்களப்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் நடமாடித் திரிந்து கொண்டிருந்தார்கள்.

கருணா குழுவினரோ வெலிகந்தைப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா இராணுவத்தினருரின் முகாம்மகளிலும் முகாம்களை அணடிய பிரதேசங்களிலும் களம் அமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு ஜனநாயக அரிதாரம் பூசிக்கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பிள்ளையான், சித்தா, யோகன், இந்துஜன், மார்க்கன், மங்களன், சின்னத்தம்பி, இனிய பாரதி, சீலன் போன்ற பிரமுகர்கள் அந்தக் காலகட்டத்தில் கடத்தல்கள், கப்பம் பெறும் நடவடிக்கைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், படுகொலைகள் என்று ஒரு கூலிப்படையை விட கேவலமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில்தால் யாழ்பாணத்தைச் சேர்ந்த அந்த விதவைப் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை என்ற கிராமத்தில் இரண்டு சிறு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சுதா என்ற இளம் விதவை இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.

கருணா குழு என்றும் பிள்ளையான் குழு என்றும், ரீ.எம்.வி.பி. என்றும் அழைக்கப்பட்ட குழுவே அந்தப் படுகொலையைச் செய்ததாக அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் பேச்சடிபட்டது.

அந்தப் பெண் பிள்ளையானின் சகாவான மங்களன் மாஸ்டர் என்பவரால் கடத்திச் செல்லப்பட்டு தீவுச்சேனையில் இருந்த ரீ.எம்.வி.பி. முகாமில் வைத்து 5 காடையர்களால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டாதாக இணையத்தளங்களில் செய்தியும் வெளியாகியிருந்தன.

அந்தப் பெண்ணை கடத்திச் செய்யமுற்பட்டபோது அந்த கடத்தலைத் தடுக்கச் சென்ற ரவீந்திரன் என்பவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://tamilnews.com/2023/05/26/eastern-region-plaintiffs-who-killed-a-jaffa-widow/

  • Sad 1
Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தேசத்துரோகி கருணாவின் குழுவில் முக்கியமான தேச வஞ்சகர்கள்

 

சரணடைந்து சாவொறுப்பு நிறைவேற்றப்பட்ட தேச வஞ்சகர்கள் (2004): இனிதன்/ ஜிம்கலி தாத்தா, ராபேட்/ரொபேட், துரை, விசு, கடாபி மாஸ்ரர், ஈஸ்வரநாதன், திருமால், சுதா, நிஷா, அக்கினோ, ராசாத்தி, 

சரணடைந்து சிறைப்படுத்தப்பட்டு சாவொறுப்பு நிறைவேற்றப்பட்ட தேச வஞ்சகர்கள் (2009): சப்தகி/ நிலாவினி/ சாளி, தீந்தமிழ், பிரேமினி, லாவண்யா

சரணடைந்து சாவொறுப்பு பெற்று விடுவிக்கப்பட்ட தேச வஞ்சகர்: சயந்தினி  

  • தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (கொழும்பில் வைத்து): குகனேசன், காஸ்ட்ரோ, கேசவன், ரூபன், அட்பரன், விக்கி, விமல்காந்த்
  • தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (காட்டுக்குள் வைத்து): ரெஜி , துமிலன், மற்றும் துமிலனுடனிருந்த அடிமட்ட கருணா குழு உறுப்பினரான எழில்
  • தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தை எல்லையூரான நாகஸ்தனையில் வைத்து) இயற்பெயர்: குணராசா ராஜேந்திரன், ரவிக்குமார் அ ஜூட் (ஈழநாதம் 12/10/2004)
  • தேடியழிப்பில் காயப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தை எல்லையூரான நாகஸ்தனையில் வைத்து) இயற்பெயர்: தவராசா கணபதிமூர்த்தி, கணபதிப்பிள்ளை ரவி, நல்லையா சிவராசா, கணபதிப்பிள்ளை சின்னராசா, ராஜன் அ ராஜா (ஈழநாதம் 12/10/2004)
  • தேடியழிப்பில் காயப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தைக்கு வடமேற்கே யுள்ளா தீவுச்சேனை ஊரில்) இயற்பெயர்: ஐயாத்துரை சதீஸ் (மங்களன் மாஸ்டர்) மற்றும் இவனின் மெய்க்காவலரான சின்னமுத்து ரவீந்திரராசா (மாறன்), கந்தசாமி தேவராசா (யாழ் களம் 2: 03-20-2005) 
  • தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தைக்கு வடமேற்கே யுள்ளா தீவுச்சேனை ஊரில்) 2 பேர் அழிக்கப்பட்டனர். எனினும் பெயர் விரிப்பு தெரியவில்லை

எஞ்சிய தேச வஞ்சகர்கள்: ஜெயம், மார்க்கன் (சுடப்பட்டு தப்பினான்), சின்னத்தம்பி, இனியபாரதி (சுடப்பட்டு தப்பினான்), ஜீவேந்திரன், ரஞ்சன், இளங்கீதன், வீரா, பிரதீபன்/ பிரதீப் மாஸ்ரர், பிள்ளையான், சிந்துஜன், அஜித் (சுமன்), மலரவன், மதுசன் (சித்தா), மங்களன்/ மங்களன் மாஸ்ரர், முகிலன், சூட்டிதரன், சுதன், ராஜசீலன், வித்தகன்  


 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தேசத்துரோகி வித்தகன் தான் அக்கரைப்பற்று பேருந்து நிலையத்தில் 09/10/2004 அன்று கப்டன் யூட் எ பார்த்தீசனை கைச்சுடுகலனால் சுட்டுக்கொன்றவன் (ஈழநாதம் 12/10/2004)

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ .  ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார்.  ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார்.  ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”.  “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார்.  பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?  பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா?  பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும்.  கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்......  கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : ஆம், ஒருவகையில்   1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
    • 50 புள்ளி வட்டி விகித குறைப்பு எதிர்பார்த்தவாறு 100 புள்ளிகள் அதிகரிப்பினை  S&P 500 இல் ஏற்படுத்தியுள்ளது, இந்தவட்டி விகித அதிகரிப்பு பரவலாக எதிர்பார்க்கப்பட்ட 25 புள்ளி அதிகரிப்பிற்கு பதிலாக 50 புள்ளி அதிகரிப்பு என்பது அமெரிக்க பொருளாதார மந்தநிலையினையினை குறிக்கிறது, அதனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்தவிலை அதிகரிப்பு ஒரு தற்காலிகமானதாக தெரியவில்லை (எனது கருத்து மட்டும்) குறித்த நாளில் ஏற்பட்ட விலை அதிகரிப்பின் விலை தளம்பல் ஏற்படவில்லை, ஆனால் பொதுவாக இவ்வாறன நிகழ்வு வார இறுதி விலை உச்சத்துடன் வார இறுதியினை எட்டும் ஆனால் விலை தற்போது மெதுவாக  இறங்குகிறது இவ்வாறு நிகழ்வது சற்று வித்தியாசமாக உள்ளது, ஆனால் Bullish flag போலொரு சந்தை அமைப்பினை ஒரு மணி நேர வரைபடத்தில் காட்சி அளிக்கிறது இந்த Bullish flag மேல் நோக்கி உடைத்தால் தற்போது உள்ள 5700 இலிருந்து 5800 வரை உயர வாய்ப்புள்ளது. 
    • இன்று இது பலிக்கடா! நாளை இது வளர்த்தகடா! இப்ப அரியத்தை ஆதரிக்கிற வாய்களெல்லாம் வெகு சீக்கிரத்தில் தூற்றுகின்ற காலம் வரும்!  
    • அனால் தற்போது வட்சப்பில் வந்த பேட்டியில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சொல்கிறார் சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை கொடுப்பதற்காக என்று சொல்கிறார்  காணொளியில் 2:30  
    • வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது,  ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.