Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

  • Replies 53
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

என்னைப் பொறுத்து..

எங்களுக்கும் தனக்குமான சவக்குழிகளை இந்தியாவே தோண்டி, அதில் எங்களை ஏற்கனவே கொன்று புதைத்தாகி ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதே தனக்கு தோண்டப்பட்ட குழியில் இறங்கி நின்றுகொண்டு, அவர்களின் குழி மண்ணால்தான் எங்களை மூடி சீல் வைத்தார்கள். இப்போது எங்களுக்குத் தோண்டப்பட்டபோது எங்சிய மண்ணால் சிங்களவனும் சீனனும்  அவனது குழியை மூடத் தொடங்கிவிட்டார்கள். இதை பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.... 😂😂😂😂🤪🤪🤣😂😂🤣🤣

கயவனுடன் பேசுவதால் பயனேதும் உண்டென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா.. ?

சாட்சிக்காறன் காலில் விழுவதைவிட, சண்டைக்காறன் காலில் விழலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்தியர்களை தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டுணர்ந்து அனுபம்மிக்க தாங்கள்...

உண்மையைக் கூறுங்கள்... (உண்மையான பதில் வேண்டும் 😡...😂)

நீங்கள் இந்தியனை நம்புவீர்களா..

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

சவக்குழியில் இருந்து மீள இருக்கும் எல்லாவாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் கற்பிதன். 

சில சமயங்களில், ஆசாபாச, தனிப்பட்ட பட்டறிவை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு bigger picture ஐ பார்த்தே ஆகவேண்டும். இனத்தின் ஒட்டுமொத்த நலன் கருதி. 

இதைநான் இப்படித்தான் பார்கிறேன். 

சண்டைகாரன் காலில் விழலாம் - சண்டைகாரன் காலில் விழுந்தால் கழுத்தை வெட்டமாட்டான் எனில்.

சண்டைகாரன் நாம் என்ன செய்தாலும் எப்படியும் கழுத்தை வெட்டியே தீருவான் எனும் போது, அவன் காலில் விழுவதும், ஒரு கத்தியை எடுத்து நாமே எம் தலையை சீவுவதும் ஒன்றுதான்.

தீர்வு எப்படியும் சண்டைகாரந்தான் தரவேண்டும். ஆனால் தனியே நாம் மட்டும் போய் கேட்டால் தலையை சீவிவிடுவான்.

யாரையாவது துணைக்கு கூட்டிபோனால்தான் தலையாவது தப்பும்.

துணைக்கு வருகிறீர்களா? என கேட்டால் திரும்பியாவது பார்ப்பவன் சுயநலக்கார கயவன் மட்டுமே. 

அவன் அப்படி செய்ய ஆயிரம் காரணம் இருக்கு, நம் நல்வாழ்வு அவன் நோக்கம் அல்ல, அவனை நம்பவே முடியாது என்பதை எல்லாம் விளங்கி கொண்டு, நாம் அவனுடன் டீல் பண்ணிதான் ஆகவேண்டும்.

ஏனென்றால் வேறு யாரும் எம்முடன் முகம் கொடுத்து கதைக்க கூட தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, சிங்களக் குடியேற்றங்களை அமைத்து முழுமையாகவே சிங்கள பெளத்த நாடாக மாற்ற நீண்டகாலத் திட்டத்துடன் கச்சிதமாக வேலைசெய்யும் சிங்களவர்களை நம்புவது எவ்வளவு மடைமை என்று அறியாத அளவுக்கு இந்திய வெறுப்பு ஊறியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை எவரையும் நம்பவேண்டியதில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளை தங்களை நம்பியே பெற்றுக்கொள்ளவேண்டும். உலகில் பலம்பொருந்திய மேற்குநாடுகளும், இந்தியா, சீனா போன்றவையும் தமது நலன்களுக்காக ஆடும் பகடையாட்டத்தில் வெட்டப்படும் காய்களாக இருக்காது பார்த்துக்கொள்ளவேண்டும். 

வரலாறு இதுவரையில் காணாத அளவிற்கு இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு சிறுபான்மைத் தேசிய இனங்களின் வாக்குத் தேவையற்றது என கோத்தபாய  வெளிப்படையாகப் பேசுகிற அளவிற்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் அரசியல் பலமில்லாதவர்களாக ஆகியுள்ளோம்.  இந்தியா போன்ற நாடுகள் அவர்களின் நலன்களை முன்வைத்தே எமது பிரச்சினையைக் கையாள்வார்கள் என்ற புரிதலோடு அரசியல் பலத்தைப் பெருக்க அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முனையவேண்டும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்களுக்கிருப்பது இந்தியா என்ற நாட்டினால் தமிழருக்கேற்பட்ட இழப்புக் குறித்த கோபமாக எனக்குத் தெரியவில்லை (அந்தக் கோபம் இங்கே நான் உட்பட பல யாழ் உறவுகளுக்கு இருக்கிறது). 

இது வேற பிரச்சினை, இனியும் என்வலப்பை எல்லை மீறித் தள்ளாமல் இருப்பது நல்லது கப்ரன்!🤐

இந்தியாவை நான் வெறுப்பதற்கு வேறு என்ன காரணம் எனக்கிருப்பதாக தாங்கள் எண்ணுகிறீர்கள்.. ? எனது கோபம் இந்தியா எமக்குச் செய்த துரோகத்தால் வந்தது. நிச்சயம் வேறு தனிப்பட்ட காரணங்களால் வந்தது அல்ல. ஏனென்றால் இந்தியா மீது நான் மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தேன். எல்லாம் போயிற்று.. 🤥

ஒவ்வொரு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களின் வாழும் சூழல், தேவை தொடர்பிலான பழக்க வழக்கங்கள் உள்ளன. அது அவர்களின் Survival என்கின்ற அடிப்படையில் வந்தது.  இந்த பழக்க வழக்கங்களோ தனி மனித தேவைகளோ எனது இந்தியா மீதான கோபத்திற்கும் அதனால் ஏற்படும் வெறுப்பிற்கும் காரணங்களல்ல என்பதை மிகத் தீர்மானமாக இங்கே குறிப்பிடுகிறேன். 👍

6 minutes ago, கிருபன் said:

தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, சிங்களக் குடியேற்றங்களை அமைத்து முழுமையாகவே சிங்கள பெளத்த நாடாக மாற்ற நீண்டகாலத் திட்டத்துடன் கச்சிதமாக வேலைசெய்யும் சிங்களவர்களை நம்புவது எவ்வளவு மடைமை என்று அறியாத அளவுக்கு இந்திய வெறுப்பு ஊறியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை எவரையும் நம்பவேண்டியதில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளை தங்களை நம்பியே பெற்றுக்கொள்ளவேண்டும். உலகில் பலம்பொருந்திய மேற்குநாடுகளும், இந்தியா, சீனா போன்றவையும் தமது நலன்களுக்காக ஆடும் பகடையாட்டத்தில் வெட்டப்படும் காய்களாக இருக்காது பார்த்துக்கொள்ளவேண்டும். 

வரலாறு இதுவரையில் காணாத அளவிற்கு இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு சிறுபான்மைத் தேசிய இனங்களின் வாக்குத் தேவையற்றது என கோத்தபாய  வெளிப்படையாகப் பேசுகிற அளவிற்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் அரசியல் பலமில்லாதவர்களாக ஆகியுள்ளோம்.  இந்தியா போன்ற நாடுகள் அவர்களின் நலன்களை முன்வைத்தே எமது பிரச்சினையைக் கையாள்வார்கள் என்ற புரிதலோடு அரசியல் பலத்தைப் பெருக்க அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முனையவேண்டும்.

 

 

சிங்களவனை நம்புகிறேன் என்று எங்கேயும் நான் கூறவில்லை. ஆனால் இந்தியாவை நம்புவதற்கில்லை என்பதை அழுத்தமாகக் கூறவே முனைந்துள்ளேன். 

எதிரிக்கும் துரோகிக்கும் வேறுபாடு தெரியாதவனல்ல.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

நான் ஒருபோதும் என்னை இலங்கையன் என்று கருதிக்கொண்டதில்லை. ஒரு காலத்தில் சிறிலங்கன் பாஸ்போர்ட் வைத்திருந்த காரணத்தால் இலங்கையனாக இருக்கமுடியாது. அது உணர்வில் வரவேண்டும். பல்வேறு கேள்விக்கொத்துகளில் ethnicity கேட்கப்படும்போது தமிழர் என்றே குறிப்பிடுவதுண்டு.

அதேவேளை தமிழ்நாட்டுத் தமிழர் பலர் தம்மை இந்தியன் என்று பெருமையாக முதலில் நினைத்து அடுத்ததாக தமிழர் என்று உணர்வதும் தெரியும். அப்படியான இந்தியக் குடிமக்களாக உணர்பவர்களை காயப்படுத்தக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றேன். தேசிய உணர்வை, இனவுணர்வை வெறுப்புணர்ச்சியால் வளர்ப்பது ஆபத்தானது.

வன்னியன் ஐயா, நீங்கள் ஜெகத் கஸ்பாரின் காணொளியை இணைத்திருந்தீர்கள். அதில் தலைவர் பிரபாகரன் சிங்கள மக்களைப் பற்றி சொன்னதை கவனித்திருப்பீர்கள். சிங்கள மக்களில் எந்தவித கோபமும் இல்லை என்றுதான் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

இராசா..

தமிழ்நாட்டினரை (நான்) தமிழராகத்தான் பார்க்கிறேன். குறிப்பாக, தென்னாட்டினரென்றால் அதிக மரியாதை உண்டு. 

நீங்கள்,  உங்களை இந்தியராகக் கருதுவீர்களானால் அதையிட்டு நான் கருத்துச் சொல்ல முடியாது. அதற்காக நான் தமிழ்நாட்டினரை வெறுக்கப்போவதில்லை. 

ஏனென்றால் நான் உங்களை எனது சக தமிழனாகவேதான் பார்க்கிறேன். 👍👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, tulpen said:

 

நான் எழுதிய  கருத்து புரியாவிட்டாலும் வழமைபோல என்மீதான வெறுப்பை தீர்ககமட்டும் உங்களால் கூறப்பட்ட கருத்து இது. 


அன்புள்ள துல்பன்.  
நான் நல்ல சுகம்.நீங்களும் நல்ல சுகமாயிருக்க எல்லாம் வல்ல கோட்டை முனியப்பரை வேண்டுகின்றேன்.
உங்கள் மீது எனக்கு வெறுப்பா? எதை வைத்து சொல்கின்றீர்கள்? உடன் பதில் தரவும்.
உங்கள் பதிலை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன்.
அன்புடன்
குமாரசாமி
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

என்னைப்பொறுத்தவரை.....
இலங்கை தமிழர்கள் இந்தியாவை இரண்டாவது தாய் நாடாகத்தான் பார்த்தார்கள்.என்று கிந்திகள் தமது சுயரூபத்தை காட்ட வெளிக்கிட்டார்களோ அன்றிலிருந்து  தமிழ்நாடு மட்டும் இலங்கை தமிழர்களுக்கு தனியாக தெரிந்தது( தமிழ் அரசியல் வியாபாரிகளை தவிர)

உங்களுக்கு எப்படி இலங்கை வானொலி பெரிதாக தெரிந்ததோ.... அதுபோல் வடபகுதி மக்களுக்கு திருச்சி, திருச்சிராப்பள்ளி வானொலியும் சென்னை வானொலியின் தேன்கிண்ணமும் பெரிதாக தெரிந்தது.

என்னால் தமிழ்நாட்டு மக்களை இந்தியராக பார்க்க முடியவில்லை. அதே போல் நான் சிறிலங்கன் அல்ல.தமிழீழத்தவன்.

இன்னும் நிறை எழுதலாம்.....
 

4 hours ago, Kapithan said:

என்னைப் பொறுத்து..

எங்களுக்கும் தனக்குமான சவக்குழிகளை இந்தியாவே தோண்டி, அதில் எங்களை ஏற்கனவே கொன்று புதைத்தாகி ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதே தனக்கு தோண்டப்பட்ட குழியில் இறங்கி நின்றுகொண்டு, அவர்களின் குழி மண்ணால்தான் எங்களை மூடி சீல் வைத்தார்கள். இப்போது எங்களுக்குத் தோண்டப்பட்டபோது எங்சிய மண்ணால் சிங்களவனும் சீனனும்  அவனது குழியை மூடத் தொடங்கிவிட்டார்கள். இதை பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.... 😂😂😂😂🤪🤪🤣😂😂🤣🤣

கயவனுடன் பேசுவதால் பயனேதும் உண்டென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா.. ?

சாட்சிக்காறன் காலில் விழுவதைவிட, சண்டைக்காறன் காலில் விழலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்தியர்களை தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டுணர்ந்து அனுபம்மிக்க தாங்கள்...

உண்மையைக் கூறுங்கள்... (உண்மையான பதில் வேண்டும் 😡...😂)

நீங்கள் இந்தியனை நம்புவீர்களா..

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

ஆனால் நீங்கள் யாரையும் நம்ப மாடீர்கள். அந்தளவுக்கு உங்களுக்கு பிரச்சினை இருக்குதுபோல. எப்படியோ வாடா கிழக்கு அபிவிருத்தியில் இந்திய இப்போது ஒரு முக்கிய பங்காளி. நீங்கள் சொல்லி நிறுத்தப்போவதில்லை. மக்கள் இனியும் கொட்டிலில் வாழ தயார் இல்லை. எல்லோரும் கொட்டிலில் வாழ்ந்தால் பரவாயில்லை, அல்லது கொட்டிலில் இருந்துகொண்டு ஆலோசனை கூறினால் பரவாயில்லை. தமிழனின் பண்பாடு கொடுத்தவனுக்கு நன்றி சொல்வது. எடுத்துக்கொண்டு நன்றி சொல்லாமலிருப்பது நன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Robinson cruso said:

ஆனால்

1) நீங்கள் யாரையும் நம்ப மாடீர்கள்.

1.1) அந்தளவுக்கு உங்களுக்கு பிரச்சினை இருக்குதுபோல. எப்படியோ

2) வாடா கிழக்கு அபிவிருத்தியில் இந்திய இப்போது ஒரு முக்கிய பங்காளி. நீங்கள் சொல்லி நிறுத்தப்போவதில்லை. மக்கள் இனியும் கொட்டிலில் வாழ தயார் இல்லை. எல்லோரும் கொட்டிலில் வாழ்ந்தால் பரவாயில்லை, அல்லது கொட்டிலில் இருந்துகொண்டு ஆலோசனை கூறினால் பரவாயில்லை.

3) தமிழனின் பண்பாடு கொடுத்தவனுக்கு நன்றி சொல்வது. எடுத்துக்கொண்டு நன்றி சொல்லாமலிருப்பது நன்றல்ல.

1) நம்பக்கூடிய ஒருவரை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் 😜

1.1) காயம் பட்டவனுக்குத்தான் வலி. எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கும் எந்த அயோக்கியனுடனும் கூட்டுச் சேரலாம் என்பவனுக்கும் வலி தெரியாது. உங்களுக்கும் வலி இருக்குமென்று நம்புகிறேன். என் யூகம் சரிதானே... 😀

2) பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடுவது நல்ல விடயம்தானே வங்காலையான். இந்தியா மட்டுமென்ன சிறிலங்கா, சீனா செய்தாலும் நல்ல விடயமே. (இந்தியா மனமிரங்கி பிச்சையிடுவதுபோல போகிறது உங்கள் கதை 😂😂 செய்த துரோகத்திற்கு இந்தியா செய்துதானாக வேண்டும். அது எங்கள் உரிமை 😡)

3) வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று தமிழனுக்கே இடமில்லாது போனதுபோல...எத்தனை துரோகங்களைச் செய்தபோதும் பணிந்து, கூனிக்குறுகி, கூழைக்கும்பிடு போட்டு நன்றி சொல்ல நான் ஆயத்தம் அல்ல... 😡

நீங்கள் எப்படி... 😎

5 minutes ago, Kapithan said:

1) நம்பக்கூடிய ஒருவரை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் 😜

1.1) காயம் பட்டவனுக்குத்தான் வலி. எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கும் எந்த அயோக்கியனுடனும் கூட்டுச் சேரலாம் என்பவனுக்கும் வலி தெரியாது. உங்களுக்கும் வலி இருக்குமென்று நம்புகிறேன். என் யூகம் சரிதானே... 😀

2) பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடுவது நல்ல விடயம்தானே வங்காலையான். இந்தியா மட்டுமென்ன சிறிலங்கா, சீனா செய்தாலும் நல்ல விடயமே. (இந்தியா மனமிரங்கி பிச்சையிடுவதுபோல போகிறது உங்கள் கதை 😂😂 செய்த துரோகத்திற்கு இந்தியா செய்துதானாக வேண்டும். அது எங்கள் உரிமை 😡)

3) வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று தமிழனுக்கே இடமில்லாது போனதுபோல...எத்தனை துரோகங்களைச் செய்தபோதும் பணிந்து, கூனிக்குறுகி, கூழைக்கும்பிடு போட்டு நன்றி சொல்ல நான் ஆயத்தம் அல்ல... 😡

நீங்கள் எப்படி... 😎

காப்பி, நீங்கள் கூனி குறுகி நன்றி சொல்ல வேண்டாம். மக்கள் நன்றி சொல்லத்தான் போகிறார்கள். மாட மாளிகையில் இருப்பவர்களுக்கு இது புரியாது. கொட்டிலில் , மலையில் நனைந்து கொண்டிருப்பவனுக்குத்தான் இது புரியும்.

இருந்தாலும் உங்கள் பிரச்சினை புரிகின்றது. அதட்கு தீர்வு கிடட எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

காப்பி, நீங்கள் கூனி குறுகி நன்றி சொல்ல வேண்டாம். மக்கள் நன்றி சொல்லத்தான் போகிறார்கள். மாட மாளிகையில் இருப்பவர்களுக்கு இது புரியாது. கொட்டிலில் , மலையில் நனைந்து கொண்டிருப்பவனுக்குத்தான் இது புரியும்.

இருந்தாலும் உங்கள் பிரச்சினை புரிகின்றது. அதட்கு தீர்வு கிடட எனது வாழ்த்துக்கள்.

மக்கள் நன்றி சொல்வது இருக்கட்டும்.. நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். இந்தியாவால் பயனேதும் பெற்றீர்களோ.. 😀

2 minutes ago, Kapithan said:

மக்கள் நன்றி சொல்வது இருக்கட்டும்.. நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். இந்தியாவால் பயனேதும் பெற்றீர்களோ.. 😀

எனக்கு இதுவரைக்கும் உங்களைப்போன்ற அந்த அனுபவம் ஏட்பட வில்லை. நான் வேலை செய்த இடத்திலிருந்து இந்தியர்களையே வெளியற்றி இருக்கிறேன். அது வேறு விடயம். கொட்டிலில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும்போது அதை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே நேரத்தில் இந்த கட்டிட திறப்பு விழாவில் பாராட்டு பாத்திரம் அங்குள்ள படித்தவர்களால் வழங்கப்படத்தான் போகிறது. இது உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று விளங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

எனக்கு இதுவரைக்கும் உங்களைப்போன்ற அந்த அனுபவம் ஏட்பட வில்லை. நான் வேலை செய்த இடத்திலிருந்து இந்தியர்களையே வெளியற்றி இருக்கிறேன். அது வேறு விடயம். கொட்டிலில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும்போது அதை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே நேரத்தில் இந்த கட்டிட திறப்பு விழாவில் பாராட்டு பாத்திரம் அங்குள்ள படித்தவர்களால் வழங்கப்படத்தான் போகிறது. இது உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று விளங்குகிறது.

உதவி பெறுபவர்கள் நன்றி சொல்லட்டும். ஆனால் நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். அதச்சொல்லுங்கள் முதலில்.. 

ஏன் நீங்கள் முன்னர் கூறியபடி கொட்டிலிலா இருக்கிறீர்கள்.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

... அது உணர்வில் வரவேண்டும். பல்வேறு கேள்விக்கொத்துகளில் ethnicity கேட்கப்படும்போது தமிழர் என்றே குறிப்பிடுவதுண்டு...

மிக்க நன்றி..🙏 We are in same page.

5 hours ago, Kapithan said:

..நீங்கள்,  உங்களை இந்தியராகக் கருதுவீர்களானால் அதையிட்டு நான் கருத்துச் சொல்ல முடியாது...

எனுங்க இந்த கொலைவெறி..? :)

4 hours ago, குமாரசாமி said:

..என்னால் தமிழ்நாட்டு மக்களை இந்தியராக பார்க்க முடியவில்லை. அதே போல் நான் சிறிலங்கன் அல்ல.தமிழீழத்தவன்.

மிக்க நன்றி, கு.சா.😔

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

எனுங்க இந்த கொலைவெறி..? :)

நான் தவறாக ஏதும் சொல்லவில்லையே.. 🤔

தெளிவின்மை இருந்தால் மன்னிக்கவும். குருபன், குசா. வின் நிலைப்படுதான் எனதும்.  

Blood is thicker than water என்று சும்மாவா கூறினார்கள், இராசா.. 😀

👍

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

ஐயா, மன்னா! எனக்கும் ஒரு சந்தேகம்..... நீங்கள் ஆயிரந்தடவை வந்தே மாதரம் பாடினாலும், அவர்கள் உங்களை அந்த பாரதத் தாயின் பிள்ளைகளாக (மக்களாக) ஏற்றுக்கொள்கிறார்களா? என்னினம் அழியுதே, தடுத்து நிறுத்து! என நீங்கள் போட்ட கூக்குரலைக் கேட்டதா அந்தத் தாய்மனம்? மாறாக வெந்தழலை அல்லவா கொட்டி பழி தீர்த்தது. நீங்களும் அழுதீர்கள், புலம்பினீர்கள், துவண்டீர்கள். முடிவில் என்ன எண்ணி, சொல்லி  உங்களைத் தேற்றினீர்கள்? எதற்காக உம்மவர்  தீக்குளித்தனர் எமக்காக? அறிய ஆவல்!  

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

ஐயா, மன்னா! எனக்கும் ஒரு சந்தேகம்..... நீங்கள் ஆயிரந்தடவை வந்தே மாதரம் பாடினாலும், அவர்கள் உங்களை அந்த பாரதத் தாயின் பிள்ளைகளாக (மக்களாக) ஏற்றுக்கொள்கிறார்களா? என்னினம் அழியுதே, தடுத்து நிறுத்து! என நீங்கள் போட்ட கூக்குரலைக் கேட்டதா அந்தத் தாய்மனம்? மாறாக வெந்தழலை அல்லவா கொட்டி பழி தீர்த்தது. நீங்களும் அழுதீர்கள், புலம்பினீர்கள், துவண்டீர்கள். முடிவில் என்ன எண்ணி, சொல்லி  உங்களைத் தேற்றினீர்கள்? எதற்காக உம்மவர்  தீக்குளித்தனர் எமக்காக? அறிய ஆவல்!  

நான் உணர்வுக் கடலின் அடிமட்டத்தில் ஆரம்பிக்க நினைத்தால், நீங்கள் மேலிருந்து சருகுகளோடு நோக்குகிறீர்கள்..ஆழம் தெரியாது..!

9 hours ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

 

உங்கள் கேள்விகளுக்கு வரையறுக்கப்பட்ட விடைகள் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழர்களா இல்லை இந்தியர்களா என்றால் இரட்டை நிலைதான். அதேபோல் இலங்கைத் தமிழர்கள் இலங்கையர்களா இல்லை தமிழர்களா என்றால் அதுவும் இரட்டை நிலைப்பாடுதான். இரண்டு இடத்திலும் தமிழர்கள் என்ற வரையறுக்கப்பட்ட நிலைப்பாட்டுக்குள் ஏக மக்களும் வந்திருந்தால் தமிழ்நாடு தனிநாடாக இருந்திருக்கும் அதுபோல் ஈழமும் தனிநாடாக இருந்திருக்கும். ஒரு தரப்பு மக்களிடம் இருக்கும் இனம் சார்ந்த உணர்வை முன்வைத்து இவற்றை தீர்மானிக்கவும் முடியாது. ஏக மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வாதரா உறவுகள் இந்திய இலங்கை மத்திய அதிகார மையத்துடன் தொடர்புபடுகின்றது என்பதை பொறுத்துதான் இவற்றுக்கான பதில்கள் அமையும். ஒரு உதராணத்திற்கு ஈழப்போராட்ட தொடக்க காலத்தில் இருந்து முடியும் வரை வடகிழக்கில் இருந்த பள்ளிகள் ஆசிரியர்கள் என்னும் பலதரப்பட்ட அரச உத்தியோகத்வர்கள் இலங்கை அரச பொருளாதரத்தை அடிப்படையாகக் கொண்டு வழ்ந்தார்கள். மாணவர்கள் பலர் போராடி மடிந்தார்கள். போராட்டம் முடிந்த பின் அரசின் பொன்சன் பணத்தில் தொடர்ந்து வாழ்கின்றார்கள். அவர்கள் இலங்கையர்களா தமிழர்களா என்று கேட்டால் வரும் பதிலும் போரடி மடிந்தவர்கள் இலங்கையர்களா தமிழர்களா என்று கேட்டால் வரும் பதிலும் ஒரே பெறுமதியாக இருக்காது. 

சாதிய பொருளாதார ஏற்றதாழ்வுகளும் மத முரண்பாடுகளும் நிறைந்த ஒரு மக்கள் கூட்டம் இனம் என்ற ஒரு பொது தளத்திற்கு வந்த பிறகே இந்த கேள்விகளை கேட்க முடியும். அதனால் இப்படியான கேள்விகளும் அதற்கான வரையறுக்கப்பட்ட  விடைகளுக்குமான அவசியம் எந்தக் காலத்திலும் தேவைப்பாடாது. தமிழராக வாழ விரும்புகின்றவர்கள் தமிழராக வாழ்ந்திட்டு போகவேண்டியதுதான். 

 

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சண்டமாருதன் said:

...சாதிய பொருளாதார ஏற்றதாழ்வுகளும் மத முரண்பாடுகளும் நிறைந்த ஒரு மக்கள் கூட்டம் இனம் என்ற ஒரு பொது தளத்திற்கு வந்த பிறகே இந்த கேள்விகளை கேட்க முடியும். அதனால் இப்படியான கேள்விகளும் அதற்கான வரையறுக்கப்பட்ட  விடைகளுக்குமான அவசியம் எந்தக் காலத்திலும் தேவைப்பாடாது. தமிழராக வாழ விரும்புகின்றவர்கள் தமிழராக வாழ்ந்திட்டு போகவேண்டியதுதான்.

என்னங்க சாமி, இப்படி பொசுக்குனு விரக்தியா சொல்லீட்டா எப்படி..? 😔

50களிலிருந்து அடிப்பட்டு வந்தவர்களுக்கு ஒரு விடியல் தோன்றி மறைந்ததுதானே..? மறுபடியும் ஏன் இன்னொரு உதயம் இருக்ககூடாது..?

காலம் சுழல, கிட்டாமலா போய்விடும்..?

10 hours ago, Kapithan said:

உதவி பெறுபவர்கள் நன்றி சொல்லட்டும். ஆனால் நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். அதச்சொல்லுங்கள் முதலில்.. 

ஏன் நீங்கள் முன்னர் கூறியபடி கொட்டிலிலா இருக்கிறீர்கள்.. 😂😂

காப்பி, கொட்டிலில் இருப்பது உங்களுக்கு அவமானமாக இருக்கலாம். நாங்கள் உங்களைப்போல  மாளிகையில்தான் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் இல்லை. தமிழனை தமிழன் எண்டு சொல்பவனே அவமானப்படுத்துறான். நன்றி சொல்வது தமிழனின் கடமை. இதுவும் சில வேளைகளில் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Robinson cruso said:

காப்பி, கொட்டிலில் இருப்பது உங்களுக்கு அவமானமாக இருக்கலாம். நாங்கள் உங்களைப்போல  மாளிகையில்தான் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் இல்லை. தமிழனை தமிழன் எண்டு சொல்பவனே அவமானப்படுத்துறான். நன்றி சொல்வது தமிழனின் கடமை. இதுவும் சில வேளைகளில் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கலாம்.

கொட்டிலில் இருப்பது அவமானம் அல்ல. ஆனால் கொட்டிலைப் பிரித்து எறிந்து, எரித்து, அழித்தவனின் காலடியில் வலிந்து போய் நெடுங்கிடையாக விழுந்து கிடப்பது அவமானம் என்று நம்புகிறேன்.

Just now, Kapithan said:

கொட்டிலில் இருப்பது அவமானம் அல்ல. ஆனால் கொட்டிலைப் பிரித்து எறிந்து, எரித்து, அழித்தவனின் காலடியில் வலிந்து போய் நெடுங்கிடையாக விழுந்து கிடப்பது அவமானம் என்று நம்புகிறேன்.

இப்படி எல்லாரும் அவன் காலடியில் விழுகிறோம், இவன் காலடியில் விழுகிறோம் என்று எழுதுவார்கள். அதுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது. ஆனால் ஐந்து சதம் கொடுக்கா மாடடார்கள். வாய் வீச்சில் வல்லவர்களடி.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

இப்படி எல்லாரும் அவன் காலடியில் விழுகிறோம், இவன் காலடியில் விழுகிறோம் என்று எழுதுவார்கள். அதுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது. ஆனால் ஐந்து சதம் கொடுக்கா மாடடார்கள். வாய் வீச்சில் வல்லவர்களடி.

நான் இன்னமும் அரசியல்வாதியாகவில்லை வங்காலையான். பயப்படாதீர்கள். 😀

Just now, Kapithan said:

நான் இன்னமும் அரசியல்வாதியாகவில்லை வங்காலையான். பயப்படாதீர்கள். 😀

காப்பி, அரசியல்வாதி எடுக்கத்தான் போவான், கொடுக்கப்போக மாடடான்.நீங்கள் எப்படி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.