Jump to content

இறுதி வேளையில் சம்பந்தனை அழைத்துப் பேசிய டோவால் – பல விடயங்கள் குறித்தும் ஆராய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி வேளையில் சம்பந்தனை அழைத்துப் பேசிய டோவால் – பல விடயங்கள் குறித்தும் ஆராய்வு

 
sam-ajith.800-696x348.png
 39 Views

முத்தரப்புப் பாதுகாப்புப் பற்றிய பேச்சுக்களுக்காக கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் நேற்று நாட்டை விட்டுப் புறப்படவிருந்த சமயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அழைத்து மூடிய அறைக்குள் சுமார் முப்பது நிமிட நேரம் பேச்சு நடத்தினார்.

அஜித் டோவலின் கொழும்பு நிகழ்ச்சி நிரலில் முன்னர் அறிவிக்கப்படாத இந்தச் சந்திப்பு சத்தம் சந்தடியின்றி நேற்று நடைபெற்றிருக்கின்றது. அஜித் டோவல் கொழும்பை விட்டு நேற்று புறப்படுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்துக்கு சம்பந்தனை அழைத்து அவருடன் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார்.

இந்தப் பேச்சுகள் இடம்பெற்றமையை சம்பந்தனும் உறுதிப்படுத்தினார். “இலங்கையின் அபிவிருத்தி, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உட்படப் பல விடயங்கள் குறித்தும் பேசினோம்” என்றார் அவர்.

இலங்கை – மாலைதீவு – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் இலங்கை விஜய நிகழ்ச்சி நிரலை ஏற்கனவே இந்தியத் தரப்பு வெளியிட்டிருந்தது.

இலங்கைப் பிரதமர், இலங்கை ஜனாதிபதி, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் ஆகியோருடனான சந்திப்புக் குறித்தெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சம்பந்தனுடனான சந்திப்பு முன்னர் குறித்தொதுக்கப்படவில்லை. திடீரென – கடைசி நேரத்தில் – டோவல் புதுடில்லி புறப்படுவதற்கு முன்னர் அது நடைபெற்றிருக்கின்றது.

இலங்கையின் இனப்பிரச்சினைக் கான தீர்வு எத்தனம், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி ஆகியவை குறித்தெல்லாம் இந்தப் பேச்சில் ஆராயப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

 

 

https://www.ilakku.org/இறுதி-வேளையில்-சம்பந்தனை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப கற்பனை குதிரைய ஓட விட வேணாம் ..👍

Screenshot-2020-11-30-11-18-57-003-org-m

"துதல் அல்வா" என்டு எதையோ கின்டி குடுத்தினம் .. முடியல 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Robinson cruso said:

அப்ப தமிழர் பிரச்சினை பொங்கலுக்கு முன்னர் தீர்ந்துவிடும்.

அப்ப அவருடைய பிரச்சினை பொங்கலுக்கு முன்னர் தீர்ந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பங்களிப்பில் சம்பந்தனுக்கு முழு நம்பிக்கை - அஜித் டோவால் தெரிவிப்பு.!

Screenshot-2020-12-01-10-34-19-289-com-a 

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்திலும், ஐ.நா. தீர்மான விவகாரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் எடுத்துரைப்பார் என்று என்னுடனான சந்திப்பின் நிறைவில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் வாக்குறுதியளித்தார். இலங்கைத் தமிழர் விவகாரங்களில் இந்தியா வழங்கும் பங்களிப்பில் எமக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நாட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்துக்கு அழைத்து மூடிய அறைக்குள் சுமார் 30 நிமிடங்கள் பேச்சு நடத்தினார். சத்தம் சந்தடியின்றி நடைபெற்ற இந்தப் பேச்சு தொடர்பில் சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, புதிய அரசமைப்பு உருவாக்கம், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் உட்படப் பல விடயங்கள் குறித்து சுருக்கமாகப் பேசினோம்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கிய - எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றது எனவும், இந்த விடயத்தை இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் தான் நேரில் நடத்திய பேச்சுகளின்போதும் தெரிவித்திருந்தார் எனவும் அஜித் டோவால் என்னிடம் கூறினார்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/12/01/19835/

டிஸ்கி

அவரு பாட இவரு ஆட ..

hqdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, புதிய அரசமைப்பு உருவாக்கம், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் உட்படப் பல விடயங்கள் குறித்து சுருக்கமாகப் பேசினோம்.

சுமார் முப்பது நிமிடத்தில் இவ்வளவையும் எப்படி பேசி முடித்திருப்பார்கள்.

On 30/11/2020 at 13:55, உடையார் said:

சம்பந்தனை அழைத்து அவருடன் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, satan said:

சுமார் முப்பது நிமிடத்தில் இவ்வளவையும் எப்படி பேசி முடித்திருப்பார்கள்.

 

விடுகிறது... றீல் என்றாலும், நீளமாக இருந்தால் நல்லது தானே... 😁

அரசியல்ல... இதெல்லாம், சகசமப்பா.... 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

சுமார் முப்பது நிமிடத்தில் இவ்வளவையும் எப்படி பேசி முடித்திருப்பார்கள்.

 

05967aeb-feb1-4bdb-9cc8-dd2dd75c0c85-df2 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.