Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு.!

156_image_1.jpg

முல்லைத்தீவு – நாகசோலை வனப்பகுதியில் அனுராதபுரம் யுகத்திற்கு சொந்தமான பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் சிலரால் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் யுகம் நிறைவடைந்த காலமான கிருஸ்து வருடம் 946 முதல் 954 ஆகிய யுகத்தில் அதனை ஆட்சி செய்த 4 ஆவது உதய மன்னருக்கு சொந்தமான பழமைவாய்ந்த கல்வெட்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த காலத்தில் குருந்த விகாரை என்ற பெயரில் அறியப்படும் இடத்தில் இருந்து குறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், புதையல் திருடர்களால் கல்வெட்டு இருந்த இடத்தில் அகழ்வும் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வளாகம் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக 78 ஏக்கர் தொல்பொருள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

https://thamilkural.net/newskural/news/104553/

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இடத்தில் டன்  கணக்கில் தங்கம் உதய மன்னரால் புதைக்கப்பட்டு  உள்ளதாம் என்ற புரளி போதும் .இரவோடு இரவாய் கல்வெட்டு காணமல் போய் விடும் .😀

தமிழர் பகுதிகளுக்குள் சிங்களம் புகுந்து கொள்ள செய்யும் ஏட்பாடுகள் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அந்த இடத்தில் டன்  கணக்கில் தங்கம் உதய மன்னரால் புதைக்கப்பட்டு  உள்ளதாம் என்ற புரளி போதும் .இரவோடு இரவாய் கல்வெட்டு காணமல் போய் விடும் .😀

தமிழர் பகுதிகளுக்குள் சிங்களம் புகுந்து கொள்ள செய்யும் ஏட்பாடுகள் .

அவர்களே... புதைத்து, அவர்களே.. எடுக்கிறார்கள்.
இனி அதில் ஒரு விகாரையும், சிங்கள குடியேற்றமும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

அவர்களே... புதைத்து, அவர்களே.. எடுக்கிறார்கள்.
இனி அதில் ஒரு விகாரையும், சிங்கள குடியேற்றமும் வரும்.

டன்கணக்கில்  தங்கம் தங்கம் 😀 சிறியன்னை .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

டன்கணக்கில்  தங்கம் தங்கம் 😀 சிறியன்னை .

பெருமாள்,  இன்னும்... ஒரு, பத்து, பதினைந்து வருடம் கழித்து...
சீனாக்காரன்,  அனுராதபுரம், கண்டி எல்லாம், 
சீன கல்வெட்டுகளை... கிண்டி எடுக்கும் போது,
சிங்களவன்...  முழி பிதுங்கி நிற்பான்.  :grin:

ஏற்கெனவே.. அனலை தீவில், 800 வருடங்களுக்கு முற்பட்ட...
சீன மட் பாண்டங்கள் கிடைத்துள்ளதாக, சொல்லிக் கொண்டு திரியுறான்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

பெருமாள்,  இன்னும்... ஒரு, பத்து, பதினைந்து வருடம் கழித்து...
சீனாக்காரன்,  அனுராதபுரம், கண்டி எல்லாம், 
சீன கல்வெட்டுகளை... கிண்டி எடுக்கும் போது,
சிங்களவன்...  முழி பிதுங்கி நிற்பான்.  :grin:

ஏற்கெனவே.. அனலை தீவில், 800 வருடங்களுக்கு முற்பட்ட...
சீன மட் பாண்டங்கள் கிடைத்துள்ளதாக, சொல்லிக் கொண்டு திரியுறான்.  🤣

சீன கடலோடிகளால் கட்டப்பட்ட(வாய்வழித் தகவல்கள்) கிணறு ஒன்றினை பூநகரி (தெற்கு), பொன்னாவெளிக்(பல்லவராயன்கட்டு) காட்டுக்குள் பார்த்துள்ளேன். முற்றுமுழுதாக அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்தக் கிணற்றினை ஒட்டி ஒரு ஒத்தையடிப்பாதை ஒன்று பூநகரியின் மேற்குக் கரையைச் சென்றடைகிறது. 

நீங்கள் கூறுவது போன்று இவைகள் உண்மையாகவே நடைபெறுவதற்கும் சாத்தியக்கூறுகள் உண்டு சிறியர்.. 😀

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

சீன கடலோடிகளால் கட்டப்பட்ட(வாய்வழித் தகவல்கள்) கிணறு ஒன்றினை பூநகரி (தெற்கு), பொன்னாவெளிக்(பல்லவராயன்கட்டு) காட்டுக்குள் பார்த்துள்ளேன். முற்றுமுழுதாக அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்தக் கிணற்றினை ஒட்டி ஒரு ஒத்தையடிப்பாதை ஒன்று பூநகரியின் மேற்குக் கரையைச் சென்றடைகிறது. 

நீங்கள் கூறுவது போன்று இவைகள் உண்மையாகவே நடைபெறுவதற்கும் சாத்தியக்கூறுகள் உண்டு சிறியர்.. 😀

 

கபிதன்...  ஒரு, 15 நிமிடம் ஒதுக்கி... இந்தக் காணொளியை பாருங்கள்.
சீனா... எவ்வளவு, சாதுர்யமாக.. காய் நகர்த்திக் கொண்டு இருக்கின்றது என்பது தெரியும். :)

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஈழத்தை ஆண்டவர்களே சோழர்களாகிய தமிழர்கள். சோழர்களின் வீழ்ச்சியின் பின் அனுராதபுரத்தை சிங்களவர்கள் ஆக்கிரமித்திருக்கலாம். 

இந்தக் கல்வெட்டு உண்மையில் முல்லைத்தீவில் மீட்கப்பட்டதா அல்லது இரவோடு இரவாக புதைத்துவிட்டு பகலில் தோண்டி எடுத்துவிட்டு முல்லைத்தீவையும் சிங்கள தேசம் என்று கபளீகரம் செய்யும் கெட்ட நோக்கமா..?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பெருமாள் said:

அந்த இடத்தில் டன்  கணக்கில் தங்கம் உதய மன்னரால் புதைக்கப்பட்டு  உள்ளதாம் என்ற புரளி போதும் .இரவோடு இரவாய் கல்வெட்டு காணமல் போய் விடும் .😀

தமிழர் பகுதிகளுக்குள் சிங்களம் புகுந்து கொள்ள செய்யும் ஏட்பாடுகள் .

3 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள்,  இன்னும்... ஒரு, பத்து, பதினைந்து வருடம் கழித்து...
சீனாக்காரன்,  அனுராதபுரம், கண்டி எல்லாம், 
சீன கல்வெட்டுகளை... கிண்டி எடுக்கும் போது,
சிங்களவன்...  முழி பிதுங்கி நிற்பான்.  :grin:

ஏற்கெனவே.. அனலை தீவில், 800 வருடங்களுக்கு முற்பட்ட...
சீன மட் பாண்டங்கள் கிடைத்துள்ளதாக, சொல்லிக் கொண்டு திரியுறான்.  🤣

 

உங்கள் இரண்டு பேருக்கும் என்ன பிறச்சனை? சிங்களவர்களும் வாழவேண்டும் அல்லவா? நாங்கள் அரசியல் ரீதியாக எல்லாவற்றையும் தீர்ப்போம்.(எப்பஎண்டது வேறை விசயம்) சீனர்களும் வரவேண்டூம்.அவர்களும் வாழவேண்டூம்.எங்களுக்கு எல்லோரும் சமம்.🤣

தமிழ் தமிழ் எண்டு என்னத்தை சாதிக்கப்போறீங்கள்? சீமானை மாதிரி நீங்களும் சத்தம் போட்டு  எங்கடை கனவை கலைக்கப்படாது. ஆகலும் மிஞ்சிப்போனியளெண்டால் சோறு தண்ணியில்லாமல் பாயை விரிச்சு இஞ்சையே  கிடந்துடுவம்.... 😎

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 

உங்கள் இரண்டு பேருக்கும் என்ன பிறச்சனை? சிங்களவர்களும் வாழவேண்டும் அல்லவா? நாங்கள் அரசியல் ரீதியாக எல்லாவற்றையும் தீர்ப்போம்.(எப்பஎண்டது வேறை விசயம்) சீனர்களும் வரவேண்டூம்.அவர்களும் வாழவேண்டூம்.எங்களுக்கு எல்லோரும் சமம்.🤣

தமிழ் தமிழ் எண்டு என்னத்தை சாதிக்கப்போறீங்கள்? சீமானை மாதிரி நீங்களும் சத்தம் போட்டு  எங்கடை கனவை கலைக்கப்படாது. ஆகலும் மிஞ்சிப்போனியளெண்டால் சோறு தண்ணியில்லாமல் பாயை விரிச்சு இஞ்சையே  கிடந்துடுவம்.... 😎

சிங்களவன் குடுத்த, எலும்புத் துண்டிற்கு.... விலை போன,
துரோகி  குமாரசாமி ... ஒழிக. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களவன் குடுத்த, எலும்புத் துண்டிற்கு.... விலை போன,
துரோகி  குமாரசாமி ... ஒழிக. 

எலும்புத்துண்டு ஓல்ட் மொடல்.
இப்ப பாங்க் எக்கவுண்ட்...😋

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

எலும்புத்துண்டு ஓல்ட் மொடல்.
இப்ப பாங்க் எக்கவுண்ட்...😋

Piragu Vadivelu GIF - Piragu Vadivelu Comedy GIFs

அட... இது, வேறை... நடக்குதா⁉️  

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

எலும்புத்துண்டு ஓல்ட் மொடல்.
இப்ப பாங்க் எக்கவுண்ட்...😋

அட உலகம் பூரா அந்த விடயம் தெரிந்து விட்டதாக்கும் . வாலுகள்  வாளுடன் வரப்போகினம் கவனம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, பெருமாள் said:

அட உலகம் பூரா அந்த விடயம் தெரிந்து விட்டதாக்கும் . வாலுகள்  வாளுடன் வரப்போகினம் கவனம் .

வரமாட்டார்கள்.ஏனென்றால்  பொய் பிரட்டுகள் இங்கே சரி வராது. அநுராதபுரம் தமிழர் பூமி என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இங்கே வந்து மூக்குடைபட மாட்டார்கள். 😎

  • கருத்துக்கள உறவுகள்

12 மே 1933 இல் வெளிவந்த இலங்கை வர்த்தமானியில் அன்றைய காணி மற்றும் விவசாய பிரதி அமைச்சர் ஜே.எல். கொத்தலாவல அவர்களால்  வெளியிடப்பட்ட அறிவிப்பு இலக்கம் 195/32 இன் படி குறித்த பிரதேசம் "குருந்தன்மலை காடு" என்ற தமிழ் பெயரால் அழைக்கப்பட்டு காணிகளுக்கான புராதன நில ஒதுக்கீடு பற்றிய அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதேயன்றி இவர்கள் கூறுவதுபோல "குருந்த விகாரை" என்று அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.