Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களிடையே ஒற்றுமையை உடனே ஏற்படுத்துங்கள் - இருப்பதை பாதுகாப்பதற்கு என்கிறார் ஜெய்சங்கர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.ராம்)

நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இருப்பதை தக்கவைத்து பாதுகாப்பதாக அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ்ப் பிரதிநிதிகளிடத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ்த்தரப்பிடையே அரசியல் மற்றும் கொள்கையளவில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், அதிகாரப்பகிர்வு விடயத்தில் மட்டுமாவது முதலில் இருப்பதை தக்கவைப்பதற்காக அனைவரும் பேதங்களை ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அறியமுடிகின்றது. விசேடமாக, மாகாண சபைகள் முறைமை நீடிக்க வேண்டும் என்பதிலும், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியாக இருந்தாலும் உள்நாட்டில் அதுபற்றிய அதிக கரிசனையை தமிழ்த் தரப்புக்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் அணைத்தும் ஒன்றிணைந்து மக்கள் ஆணை பெற்ற அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இரண்டு வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாதுள்ள நிலையில் அதனை முன்னெடுப்பதற்குரிய செயற்பாடுகளை தமிழ்த் தரப்புக்களை ஊக்கத்துடன் மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளர்.

மாகாண சபை விடயத்தில் அரசாங்கத்தின் சில தரப்பினரின் பிரதிபலிப்புக்கள் மாறுபட்டதாக இருக்கின்ற நிலையில், அவற்றுக்கான தேர்தலும் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாத நிலைலும் தற்போதுள்ளது.

இத்தகையதொரு தருணத்தில் தமிழ்த் தரப்புக்கள் பிரிந்து நிற்பதாலும், அல்லது தனித்தனியாக நின்று மாகாண சபைகள் பற்றி வலியுறுத்துவதாலும் நன்மைகள் எதிர்பார்க்குமளவிற்கு கிடைப்பதில் தாமதங்கள் நீடித்துச் செல்லும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்த் தரப்பில் ஒற்றுமையில்லாது பிரிந்து நிற்கின்றதால் ஏற்படுகின்ற பலவீன் மாகாண சபை முறைமை உட்பட அனைத்துவிடயங்களையும் அமுலாக்கதிருப்பதற்கான நியாப்படுதல்களுக்கான காரணங்களை கூறுவதற்கு வாய்ப்புக்களையே ஏற்படுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தாக மேலும் அறிய முடிகின்றது.

உங்களிடையே ஒற்றுமையை உடனே ஏற்படுத்துங்கள் - இருப்பதை பாதுகாப்பதற்கு என்கிறார் ஜெய்சங்கர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது போதும் முதலில் ஹிந்தியா   எங்கடை பிரச்சனையில் இருந்து விலகினாலே பாதி  பிரச்சனை முடிந்த மாதிரி .

தங்கடை  நாட்டில விவசாயிகளின்  பிரச்சனையை முடிக்க தெரியாதவங்கள் எங்களுக்கு அறிவுரை சொல்ல வந்திட்டாங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பதைப் பாதுகாப்பத்ற்கு ஒன்றுபடுங்கள்.... ம்ம்ம்🤥

இல்லாவிட்டால் எஞ்சிய கோவணமும் காணாமல் போய்விடும் என்கிறார். 😂

இதற்குப் பின்பும் இந்தியாவை யாரேனும் நம்புவார்களா.. ? 😏

  • கருத்துக்கள உறவுகள்

வளைவுகளின் பின்னால் இவர்கள் இருப்பதாக சந்தேகம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nunavilan said:

வளைவுகளின் பின்னால் இவர்கள் இருப்பதாக சந்தேகம் உண்டு.

புதிய கோணம்... ம்ம்ம்ம் 😧

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பிழம்பு said:

நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இருப்பதை தக்கவைத்து பாதுகாப்பதாக அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ்ப் பிரதிநிதிகளிடத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஈழ தமிழருக்கு பிரச்சனை இருக்கின்றது என்ற விடயத்தில் எல்லோரும் ஒரு புள்ளியில் தான் நிற்கின்றார்கள் என்பது ஜெய்சங்கருக்கு தெரியுமா? தெரியாதா?
குட்டையை குழப்பும் நாதாரி வேலைகளில் கிந்தியா மீண்டும் களத்தில் இறங்கி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழருக்கான சரியான பொறி. ஒரு போதும் இவர்கள் ஒற்றுமையாக ஒரு யோசனையை வைக்கவே மாட்டார்கள் 😡

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இது தமிழருக்கான சரியான பொறி. ஒரு போதும் இவர்கள் ஒற்றுமையாக ஒரு யோசனையை வைக்கவே மாட்டார்கள் 😡

தமிழரை பிரித்து அடிபட வைத்தவர்களும், பிரிந்து நிற்கவேண்டும் என்று செயற்படுபவர்களும் இவர்களே. வெளிக்கு உபதேசம். யோசனை கேட்ப்பவர்களும் அவர்கள் திட்டப்படியே செயற்படுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

1987 இல் விடுதலைப்புலிகள் இருந்த போது.. தமிழர்களை நிராகரித்ததை... இப்போ புலிகளை அழித்துவிட்டு.. தமிழர்கள் மீது திணிக்காதது போல் திணிக்க விளைகின்றனர்.

ஆனால்.. ஹிந்தியா எனி சொறீலங்காவில்.. ஒன்றையும் செய்ய முடியாது.

புலிகளை அழித்து.. ஹிந்தியா தன் மீது தானே மண் வாரிப் போட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, விசுகு said:

இது தமிழருக்கான சரியான பொறி. ஒரு போதும் இவர்கள் ஒற்றுமையாக ஒரு யோசனையை வைக்கவே மாட்டார்கள் 😡

17 minutes ago, satan said:

தமிழரை பிரித்து அடிபட வைத்தவர்களும், பிரிந்து நிற்கவேண்டும் என்று செயற்படுபவர்களும் இவர்களே. வெளிக்கு உபதேசம். யோசனை கேட்ப்பவர்களும் அவர்கள் திட்டப்படியே செயற்படுகிறார்கள். 

 

ஆசை காட்டி ஆசீர்வதித்து நாசம் செய்த நாசகாரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

ஆசை காட்டி ஆசீர்வதித்து நாசம் செய்த நாசகாரிகள்.

இவங்களுக்கு மோடி இன்னும் இரண்டுமுறை கிந்தியாவை ஆளனும் கடவுளிடம் வேண்டுவது அதுதான் . தானாகவே மாநிலங்கள் அனைத்தும் உடைந்து சிதறும் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

புலிகளை அழித்து.. ஹிந்தியா தன் மீது தானே மண் வாரிப் போட்டுள்ளது. 

இந்தியாவை தள்ளி வைக்க சீனாவை அழைத்த இலங்கையும், பாட்டி வடையை எடுத்து  நரியிடம் பறிகொடுத்த காக்கா போல முழிக்கப்போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.