Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு - கிழக்கு தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு! தமிழ்த் தேசிய தரப்பு கூட்டாக அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு - கிழக்கு தழுவிய முழு கதவடைப்புக்கு தமிழ்த் தேசியத் தரப்பு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், வடக்கு - கிழக்கு சிவில் சமூகத்தினர் மற்றும் மதத் தலைவர்கள் கூட்டாக குறித்த அழைப்பை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.

இதன்போது அங்கு சென்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமைக்கு நீதிகோரி எதிர்வரும் 11ஆம் திகதி வடக்கு,கிழக்கு தழுவிய ரீதியிலான ஹர்த்தால் போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

அனைத்துத் தரப்பினரும் குறித்த கலந்துரையாடலில் இருந்தமையால் உடனடியாகவே மாணவர்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு ஊடகச் சந்திப்பில் தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், செல்வராசா கஜேந்திரன்,சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் மாணவப் பிரிநிதிகளும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் நாளைமறுதினம் திங்கட்கிழமை வடக்கு - கிழக்கு தழுவியதாக பூரணஹர்த்தால் போராட்டத்துக்கு வர்த்தக சங்கத்தினர், பஸ் உரிமையாளர்கள்உள்ளடங்கலாக அனைவரையும் ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

https://www.tamilwin.com/politics/01/266023?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு, தாயகம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

January 9, 2021

Tamil-National-Parties.jpg

நாளை மறுநாள் திங்கட்கிழமை (11.01.20) வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை 09.01.20) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் மற்றும் ஜெனீவா விடயங்களை கையாள்வதற்கு பொறிமுறையை உருவாக்குவதற்கான கூட்டத்தில் குறித்த தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட சம்பவத்தை ஒன்றிணைந்து வெளிப்படுத்தம் வகையில் வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய ரீதியில் கதவடைப்புப் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் அழைப்பதாகவும், குறித்த போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ளுமாறும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தைத் தெளிவூட்டும் ஊடக சந்திப்பில் 8 கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் இணைந்து இந்த அழைப்பினை விடுத்திருந்தனர்.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்காங்கிரஸ் சார்பில் செ.கஜேந்திரன், தமிழ் தேசியக் கட்சி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைக் சுட்டணி சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈழத் தமிழர் சுயாட்சிகக் கழகம் சார்பில் அனந்தி சசிதரன், தமிழ் மக்கள் கூட்டணியினர், மற்றும் சிவில் அமைப்புக்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் ஊடக சந்திப்பின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளனர்.

அதற்கு அமைவாக வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய ரீதியில் வர்த்தக செயற்பாடுகளை நிறுத்தியும், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை பகிஷ்கரித்தும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2021/155450/

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களும் வடக்கு, கிழக்கில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ரிஷாட்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும்  வடக்கு, கிழக்கில் நாளை (11) ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.

இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் விடுத்துள்ளன.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/95066/rishad.jpg

 

எனவே, நாளை இடம்பெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களாக இலங்கைச் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகக் குறைந்தது உயிரிழந்தோரை நினைவுகூரவும், நல்லடக்கம் செய்யவும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மறுக்கப்படுகின்றன. 

இவற்றுக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகள் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும்.

முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்த் தலைமைகள் குரல் கொடுத்து வருவதை நாம் மறக்க முடியாது.

எமக்குள் உள்ள சிறிய சிறிய பேதங்களை மறந்து ஒன்றுபடுமளவுக்கு பேரினவாதம், சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்குவதாகவே நாம்  கருதுகிறோம்.

எனவே, நாளை வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் பூரணமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நமது நாட்டில், இந்த அரசினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்விலும் முஸ்லிம்கள் இந்த ஹர்த்தாலை ஆதரிப்பது அவசியம்.

ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகளிலிருந்து நமது சமூகங்கள் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான அரசியல் அடித்தளங்கள், இந்த ஒத்துழைப்புக்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும் என நான் நம்புகின்றேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களும் வடக்கு, கிழக்கில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ரிஷாட் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தாலுக்கு முஸ்லிம் தேசிய கட்சிகள் இரண்டு ஆதரவு!

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி இடித்தழிக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு, கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

நீண்டகால இடைவெளிக்கு பின்னர் தமிழர்களின் போராட்டத்திற்கு முஸ்லிம் தேசியக் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹர்த்தாலுக்கு முஸ்லிம் தேசிய கட்சிகள் இரண்டு ஆதரவு! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லீம் அமைப்பு ஆதரவு

யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு யாழ் முஸ்லீம் இளைஞர் கழகம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

muslim-organisation-223x300.jpg
உயிரிழந்த உறவுகளை நினைகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை அகற்றியமையினால் உறவுகளை இழந்து வாழும் சகோதா உறவுகளின் மனங்கள் எவ்வளவு கவலையடைந்திருக்கும் என்பதை நாம் அறிவோம் என யாழ் முஸ்லீம் இளைஞர் கழகம் அவ்உறவுகளின்துயரத்தில் முஸ்லீம் மக்களாகிய நாம் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்க ஊழியர்கள் அனைவெவம் வேலைக்கு போவார்கள் அது போக நாளை பாடசாலைகள் ஆரம்பம் கொரானா வேற ஊரெல்லாம் 

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய கதவடைப்பிற்கு முஸ்லிம் மக்களும் முழு ஆதரவளிக்க வேண்டும்: ரிஷாத்  பதியுதீன் அழைப்பு! - Tamil Page

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கர்த்தால் அன்று மக்கள் கூடுவதைத் தடுக்க அரசாங்கத்திற்கு கொரோனா ஆயுதமாகப் பயன்படும்.😲

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையும் அவனோடுதானே நிற்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.