Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

The Zen of Pistol Shooting

வவுனியாவில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்!

வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த மூவர், இராணுவத்தை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வில்பத்து வனப் பகுதியில் கடமைகளுக்காக சென்ற இராணுவத்தின் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த 20 20 வயதான செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்திய ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

http://athavannews.com/வவுனியாவில்-இராணுவத்திற/

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும் ஆயுத குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம்

வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த மூவர், இராணுவத்தை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.வில்பத்து வனப் பகுதியில் கடமைகளுக்காக சென்ற இராணுவத்தின் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வவுனியா செட்டிக்குளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த இளைஞர் நேற்று மாலை 5 மணியளவில் முசல்குத்தி காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முதலியார்குளம் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜெறின் வயது 36 என்ற நபரே படுகாயமடைந்துள்ளார்.துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.இதேவேளை சம்பத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்திய ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.(15)

 

http://samakalam.com/வவுனியா-−-செட்டிக்குளம்/

  • கருத்துக்கள உறவுகள்

அகா ...வந்துட்டாய்ங்கையா ..வந்துட்டாய்ன்க..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

The Zen of Pistol Shooting

வவுனியாவில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்!

வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த மூவர், இராணுவத்தை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வில்பத்து வனப் பகுதியில் கடமைகளுக்காக சென்ற இராணுவத்தின் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த 20 20 வயதான செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்திய ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

http://athavannews.com/வவுனியாவில்-இராணுவத்திற/

இது மழைகாலம் வவுனியாவிலும் மழை அதிகமாம், அங்கு நடைபெறும் நிகழ்வுகளைத் துல்லியமாக அறிய முடியாதவாறு... ஆதவனை, கருமைகொண்ட முகில் கூட்டங்கள் மறைத்து விட்டனவாம்.😵

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

அகா ...வந்துட்டாய்ங்கையா ..வந்துட்டாய்ன்க..

இனி... இராணுவம், பின்னங்கால் பிடரியில் பட....

துண்டை காணோம், துணியை காணோம் என்று...  தலை தெறிச்சு ஓடும். 😁 🤣

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

இனி... இராணுவம், பின்னங்கால் பிடரியில் பட....

துண்டை காணோம், துணியை காணோம் என்று...  தலை தெறிச்சு ஓடும். 😁🤣

ஜெனீவா வருதல்லோ எத்தினை அப்பாவியளைப் பலிக்கடா ஆக்கப்போறாங்களோ தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத மரக்கடத்தல் குழுவுக்கும் அருகில் இருந்த ராணுவ அணிக்கும் இடையேயான துப்பாக்கி மோதல் தான் இச்சம்பவம். முஸ்லிம் அமைச்சரின் ஆட்களோ அல்லது சிங்கள முதலாளிகள்ன் ஆட்களோ நடத்தியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

சட்டவிரோத மரக்கடத்தல் குழுவுக்கும் அருகில் இருந்த ராணுவ அணிக்கும் இடையேயான துப்பாக்கி மோதல் தான் இச்சம்பவம். முஸ்லிம் அமைச்சரின் ஆட்களோ அல்லது சிங்கள முதலாளிகள்ன் ஆட்களோ நடத்தியிருக்கலாம்.

காயப்பட்டவர் தமிழ் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

காயப்பட்டவர் தமிழ் தான்

அட... கடவுளே... அங்கேயும் தமிழனா. 😢

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சுடவில்லை; மரம் வெட்ட சென்று வந்த எம்மை இராணுவமே சுட்டது!

இராணுவத்தினரை நாம் சுடவில்லை எம்மை நோக்கி இராணுவத்தினரே துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள் என்று வவுனியா – செட்டிகுளம் காட்டுப்பகுதி துப்பாக்கி சூட்டுசம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (1) துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஒருவர் செட்டிகுளம் காட்டுபகுதியில் மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில் “காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குழு மீது பதிலுக்கு இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்தார் என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்ததாக” சில இணையங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இதனை மறுத்துள்ள பாதிக்கப்பட்டவர்கள், “மூன்று பேராக நேற்று முன்தினம் (31) பேராறு காட்டுப்பகுதிக்கு மரம் வெட்ட சென்று, நேற்று (1) மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இராணுவத்தை கண்டு ஓடினோம். இதன்போது தங்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டனர்” என தெரிவித்துள்ளனர்.

 
 

இன்று காலையே துப்பாக்கி சூட்டில் தம்மில் ஒருவர் காயமடைந்ததை அறிந்ததாகவும். தாம் சுடவில்லை என்றும், ஆயுதங்களும் வைத்திருக்கவில்லை எனவும், ஆனால் தாம் சுட்டதாகவே இராணுவத்தினர் கேஸ் கொடுத்துள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் சுடவில்லை; மரம் வெட்ட சென்று வந்த எம்மை இராணுவமே சுட்டது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

காயம் பட்டவர் கையில் பலாத்காரமாக ஆயுதத்தை திணித்து, படம் பிடித்து, நான் விடுதலைப்புலி, போராட்டத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கிறேன், வெளிநாட்டிலிருந்து எனக்கு பணம் அனுப்புகிறார்கள். என்றொரு அறிக்கையும் வெளிவரும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தமிழ் சிறி said:

The Zen of Pistol Shooting

வவுனியாவில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்!

கதை வசனம்  மியூசிக் டைரக்சன் ஆராய் இருக்கும்????? :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கதை வசனம்  மியூசிக் டைரக்சன் ஆராய் இருக்கும்????? :cool:

வேறை யார்... அமெரிக்க குடியுரிமை வைத்திருந்த  மகிந்தவின் தம்பி தான். :grin:

டிஸ்கி: இப்ப எல்லாம், சினிமா... கிசுகிசு பாணியில், கதைகள் போகுது. 🧐
என்ன காரணமாக இருக்கும். 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் துப்பாக்கி இல்லை; இராணுவமே சுட்டது- வவுனியாவில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிப்பு!

இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி இராணுவமே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக செட்டிக்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் பேராறு காட்டுப் பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.

குறித்த இளைஞன் உட்பட மூவர் கடந்த 31ஆம் திகதி பேராறு காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், தங்கள் மீது மறைந்திருந்த இராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையால் அவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்திருந்தது. எனினும், தாம் அவ்வாறு துப்பாக்கிகள் எதனையும் வைத்திருக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் மரங்களை அறுப்பதற்காகவே காட்டுப் பகுதிக்குச் சென்றதாகவும் மீண்டும் வீடுநோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இராணுவம் திடீரென தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்றொருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/எம்மிடம்-துப்பாக்கி-இல்ல/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

டிஸ்கி: இப்ப எல்லாம், சினிமா... கிசுகிசு பாணியில், கதைகள் போகுது. 🧐
என்ன காரணமாக இருக்கும். 😜

யாரையோ நம்பி ஏதோ ஒன்றுக்கு ஆயத்தப்படுத்துகின்றார்கள். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.