Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் போதனா வைத்தியசாலையில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்தது!

February 10, 2021

 

யாழ். போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்துள்ளது.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

இந்த அறுவைச் சிகிச்சையை விசேட வைத்திய நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் சுமார் 12 மணித்தியாலத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.
 

https://globaltamilnews.net/2021/156700/

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் முதல் முதல் ஆணை பெண்ணாக மாற்றிய அறுவைசிகிச்சை வெற்றி!

Untitled-27-800x445-1.jpg

இலங்கையில் முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஆண் ஒருவர் பெண்ணாக மாறிய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 இளைஞன் பெண்ணாக அறுவைச் சிகிச்சை மூலம் மாறியுள்ளார்.

சத்திரசிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் 12 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் ஆண் ஒருவரை பெண்ணாக மாறி வெற்றிகரமாக இந்த சத்திரசிகிச்சையை மேற் கொண்டுள்ளார்.

https://www.todayjaffna.com/227860

 

  • கருத்துக்கள உறவுகள்

சத்திர சிகிச்சை நிபுணர்... இளஞ்செழிய பல்லவனுக்கு, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 💐 👏

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியருக்கு வாழ்த்துக்கள்...சுப்பர்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

சத்திர சிகிச்சை நிபுணர்... இளஞ்செழிய பல்லவனுக்கு, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 💐👏

என்ன சிறித்தம்பி?  அறுத்து எறிஞ்சதுக்கும் பாராட்டா?  🤣
மக்களுக்கு காத்திரமான முக்கியமான சேவைகள் கனக்க இருக்கெல்லோ....😁

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்ன சிறித்தம்பி?  அறுத்து எறிஞ்சதுக்கும் பாராட்டா?  🤣
மக்களுக்கு காத்திரமான முக்கியமான சேவைகள் கனக்க இருக்கெல்லோ....😁

குமாரசாமி அண்ணை.... இலங்கையிலேயே முதன் முதலாக,

யாழ். போதனா வைத்தியசாலையில் தான், இந்த அறுவைச் சிகிச்சை தமிழனால் செய்யப் பட்டது என்பதற்காக அந்தப் பாராட்டு.

தமிழேன்டா.... 😁 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.... இலங்கையிலேயே முதன் முதலாக,

யாழ். போதனா வைத்தியசாலையில் தான், இந்த அறுவைச் சிகிச்சை தமிழனால் செய்யப் பட்டது என்பதற்காக அந்தப் பாராட்டு.

தமிழேன்டா.... 😁🤣

இந்த பரியாரியரின் தொடர்பு விபரம் எடுக்கேலுமே?

நம்பி வந்த அண்ணன் பிள்ளையை நாசம் செய்த, சித்தப்பு ஒருத்தருக்கு, அலுவல் கொஞ்சம் பார்க்க வேணும். 😡
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக இந்த  சிகிச்சை நடந்தது என்று  தெரியவில்லை

ஆனால்  அந்த  ஆணுக்கு  பெண்ணின் குணங்கள்  மற்றும் நடை உடை பாவனைகள்  இருந்திருந்தால்???

இதைப்பற்றி எழுத எனக்கு  தகுதியில்லை

மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம்

ஆண் ஒருவரோ தன்னை பெண்ணாக உணர்வதும், பெண் ஒருவர் தன்னை ஆணாக உணர்வதும்,தோற்றமளிப்பதும்  அவரவர் உடல் நிலை சார்ந்த, மருத்துவம் சார்ந்த விடயம். ஆனால் அவ்வாறு ஏற்றுக்கொள்ளாமல் ஒம்பது, அலி என்று மிக மோசமாக மட்டம் தட்டி அவர்களை அவமதித்து தமக்குள் இன்பம் காணும் வழக்கத்தை கொண்டவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சமூகத்தில் இப்படியான ஒரு மாற்றம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

திருநங்கைகள் வாழ்வு இனியாவது எம் சமூகத்தில் அக்கறைக்குரிய ஒன்றாக கருதப்பட தொடங்கும்.

யாழ்ப்பாணத்தில் திருநங்கை ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி இந்த தொடர் சொல்கின்றது. அந்த திரு நங்ககையே தன் அனுபவங்களைச் சொல்கின்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம்

ஆண் ஒருவரோ தன்னை பெண்ணாக உணர்வதும், பெண் ஒருவர் தன்னை ஆணாக உணர்வதும்,தோற்றமளிப்பதும்  அவரவர் உடல் நிலை சார்ந்த, மருத்துவம் சார்ந்த விடயம். ஆனால் அவ்வாறு ஏற்றுக்கொள்ளாமல் ஒம்பது, அலி என்று மிக மோசமாக மட்டம் தட்டி அவர்களை அவமதித்து தமக்குள் இன்பம் காணும் வழக்கத்தை கொண்டவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சமூகத்தில் இப்படியான ஒரு மாற்றம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

திருநங்கைகள் வாழ்வு இனியாவது எம் சமூகத்தில் அக்கறைக்குரிய ஒன்றாக கருதப்பட தொடங்கும்.

யாழ்ப்பாணத்தில் திருநங்கை ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி இந்த தொடர் சொல்கின்றது. அந்த திரு நங்ககையே தன் அனுபவங்களைச் சொல்கின்றார்.

 

ஒன்றை பற்றிய அறிவு தெளிவு இல்லாமைதான் சில சிக்கல்களை உருவாக்கி கொள்கின்றன 
அவற்றை பற்றிய தெளிவு உண்டாகும்பொது எல்லாம் ஏற்றுக்கொள்ள படும் என்றே எண்ணுகிறேன். 

சாதியின் பெயரால் எவ்வளவோ கொடுமைகள் செய்யப்பட்டு 
ஒரே வழியாக இருந்த கல்வியை கூட இடை நிறுத்திய பல சகோதர்களும் சகோதரிகளும் 
எம் கண்முன்னே இருக்கிறார்கள் 

இப்போதும் வெளிநாடுளில் கூட்டி துடைக்கும் ஒரு கூட்டம் சாதி என்று தூக்கிப்பிடித்துக்கொண்டு இருக்கிறதுதானே? இருப்பது அது ஒன்று அதையும் கைவிட்டால் என்ன செய்வது என்ற மன தயக்கம் என்றே எண்ணுகிறேன். எல்லாவற்றுக்கும் அடிப்படை என்னமோ அறிவின்மை ஒன்றுதான். 

திரிக்கு தேவையற்றது .... ஒரு நடுப்புரீதியான கருத்தாடலாக எழுதுகிறேன் 
பலபேர் சிங்களவர்கள் மூடர் இல்லை என்று எழுதும்போது நான் அடிக்கடி மனதுக்குள் நினைப்பேன் 
அப்படி அவர்கள் அறிவாளிகளாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நீண்ட நாள் கனவே 
அவர்கள் மொட்டு சிரத்தார்த்தங்களை கைவிட்டாலே போதும் இன பிரச்சனை என்ற ஒன்றுக்கே தேவை இருக்க  வாய்ப்பிருக்காது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பிரதேசங்களில் முதலாவதாக/முக்கியமாக களையப்பட வேண்டியது சாதிக்கொடுமைகள்.இலங்கையில் களையப்பட வேண்டியது இனப்பிரச்சனைகள்.
திருநங்கை பிரச்சனைகளும் தான்......அதற்கு முன் வீதிக்கு வீதி அலையும் நாய்களுக்கும் மாடுகளுக்கும் சரணாலயம் அமைத்து அதன் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்..சும்மா வீதிகளில் படுத்திருந்து போக்குவரத்திற்கு அளௌகரிகமாக இருக்கின்றன.பல விபத்துக்களை உருவாக்குகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த பரியாரியரின் தொடர்பு விபரம் எடுக்கேலுமே?

நம்பி வந்த அண்ணன் பிள்ளையை நாசம் செய்த, சித்தப்பு ஒருத்தருக்கு, அலுவல் கொஞ்சம் பார்க்க வேணும். 😡
 

அதுக்கு தமிழ் சிறி ஐயாவின் பாக்குவெட்டி போதுமே. எதற்கு நுணுக்கமான சத்திரசிகிச்சை வைத்தியம் தேவை?☺️

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

இந்த பரியாரியரின் தொடர்பு விபரம் எடுக்கேலுமே?

நம்பி வந்த அண்ணன் பிள்ளையை நாசம் செய்த, சித்தப்பு ஒருத்தருக்கு, அலுவல் கொஞ்சம் பார்க்க வேணும். 😡
 

 

10 hours ago, கிருபன் said:

அதுக்கு தமிழ் சிறி ஐயாவின் பாக்குவெட்டி போதுமே. எதற்கு நுணுக்கமான சத்திரசிகிச்சை வைத்தியம் தேவை?☺️

tenor.gif

இதுக்கு ஏன்... ஆஸ்பத்திரிக்கு போகவேணும். :grin:
இரண்டு இடத்திலை... "மாவு கட்டு"  போட்டா  போச்சு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா வைத்தியசாலை ஆசியாவில் உள்ள வைத்தியசாலைகளில் முக்கியமான ஓர் இடத்தில் உள்ளது. இதன் வளர்ச்சியின் பின்னால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், தாதிகள், உட்பட பல்வேறு துறைசார் மக்களின் கடின உழைப்பு உள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் பிரமாண்டம் பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் அல்லது அதனுடன் தொடர்புடையவர்களுடன் உரையாடினால் அறிந்து கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.