Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய அரசால் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை கேட்கிறது இராணுவம்..! கடிதமும் அனுப்பட்டது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசால் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை கேட்கிறது இராணுவம்..! கடிதமும் அனுப்பட்டது..

Indian-culrar.jpg

இந்திய அரசாங்கத்தினால் யாழ்.நகரில் அமைக்கப்பட்டிருக்கும் கலாசார மண்டபத்தை படையினரிடம் கையளிக்கும்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான நிலத்தில் இந்திய அரசினால் 100 கோடி இந்திய ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டிடத்தினை பராமரிப்பதற்கு சில துறைசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், பொறியிலாளர்கள் உட்பட 60 வரையான பணியாளர்கள் தேவைப்படுவதோடு இந்த பணித் தொகுதிக்கு கட்டிடத்தை அமைத்த இந்தியக் குழுவால் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு புதிய ஆளணியை நியமித்து அவர்களிற்கு பயிற்சி அளிக்கும் ஏற்பாட்டிற்கான காரணங்களால் அதிக காலதாமதம் ஏற்படலாம் .

அதுவரை கொழும்பு தாமரைத் தடாகத்தை நிர்வகிக்கும் படையினரிடம் கையளிக்க படையினர் இந்தியக் குழுவினரிடம் பயிற்சியை பெற்றுக்கொள்வார்கள்.

 மாநகர சபைக்கான நிரந்தர ஆளணி நியமிக்கும்போது அவர்களிற்கான பயிற்சியை குறித்த படையினர் வழங்குவர் என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.ரி.கொடிகாரவினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2021-01-26 ஆம் திகதிய கடிதம் மூலம் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சாழ அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தின் பிரதி பிரதமரின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், மாநகர முதல்வர், மாவட்டச் செயலாளர், மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/23192

டிஸ்கி:

IMG-20210211-090706.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா  இராணுவத்துக்கு.... வெட்கம், ரோசம், சூடு, சுரணை... ஓன்றுமேயில்லையா 
தமிழரின் விவசாய நிலம்  வேணும்,  
கோயில் வேணும், 
கலாச்சார மண்டபம் வேணும் என்றால்....
எங்கை போய்... முட்டிக் கொள்ள.
வாற ஆத்திரத்துக்கு... வாயிலை, எக்கச் சக்கமாக வருகுது. 😡

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா  இராணுவத்துக்கு.... வெட்கம், ரோசம், சூடு, சுரணை... ஓன்றுமேயில்லையா 
தமிழரின் விவசாய நிலம்  வேணும்,  
கோயில் வேணும், 
கலாச்சார மண்டபம் வேணும் என்றால்....
எங்கை போய்... முட்டிக் கொள்ள.
வாற ஆத்திரத்துக்கு... வாயிலை, எக்கச் சக்கமாக வருகுது. 😡

இலங்கை சிங்கள, பவுத்த நாடாமுங்கோ. இங்க இருக்கிறதெண்டா வாயை மூடிக்கொண்டு, அவையள் செய்யிறதை பாத்துக்கொண்டு இருக்க வேணுமாமுங்கோ. உங்கட வீட்டுக்கை அவன் கக்கூசுக்கு இருந்தாலும் நீங்கள் மூக்கைக் கூட  பொத்தக்கூடாதாமுங்கோ.    

ADB , வேர்ல்ட் பேங்க் திட்ட்ங்கள் அமுல் படுத்தப்படும்போது இப்படியான பிரச்சினைகள் எழுவது குறைவு. ஒரு திடடம் நடைமுறைப்படுத்தப்படட பின்னர் அது யாருக்கு சொந்தம், யார் பராமரிப்பது இப்படியான கேள்விக்கெல்லாம் பதில் கூற வேண்டும். அப்போதுதான் அந்த திடத்தை நடைமுறைப்படுத்த அனுமதிப்பார்கள்.

இல்லாவிடடாள் இப்படித்தான் பிச்சை எடுக்க வேண்டி வரும். இங்கு பிச்சை எடுத்தும் நடத்த முடியாமல் வேறொருவனுக்கு தரை வார்க்க வேண்டியுள்ளது.

இதைத்தான் after thought என்பதோ? அப்படி என்றால் அங்குள்ளவர்கள் அனுபவமற்றவர்களா? ஏன் முன்பே இதை பராமரிப்பதட்கு பயிட்சி வழங்குவதைப்பற்றி சிந்தித்து அதட்கு பணம் ஒதுக்கவில்லை. இதனை கோடி செலவு செய்யும்போது நிச்சயமாக அதட்கும் பணம் ஒதுக்கி இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா  இராணுவத்துக்கு.... வெட்கம், ரோசம், சூடு, சுரணை... ஓன்றுமேயில்லையா 
தமிழரின் விவசாய நிலம்  வேணும்,  
கோயில் வேணும், 
கலாச்சார மண்டபம் வேணும் என்றால்....
எங்கை போய்... முட்டிக் கொள்ள.
வாற ஆத்திரத்துக்கு... வாயிலை, எக்கச் சக்கமாக வருகுது. 😡

இனவாதத்திற்கு முன்னால் சூடாவது சுரணையாவது வெட்கமாவது.....😷

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

இனவாதத்திற்கு முன்னால் சூடாவது சுரணையாவது வெட்கமாவது.....😷

இல்லை கலாச்சார மண்டபத்தில் முழுக்க பவுத்த சிங்கள கலாச்சார விடயங்களை காட்சிப்படுத்த தான் இந்த மறைமுக ஏற்பாடு. குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சியில் கொழும்பு தொல்பொருள் திணைக்களம் என்ன செய்திருக்கெண்டு பார்த்தனீங்கள் தானே

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Robinson cruso said:

ADB , வேர்ல்ட் பேங்க் திட்ட்ங்கள் அமுல் படுத்தப்படும்போது இப்படியான பிரச்சினைகள் எழுவது குறைவு. ஒரு திடடம் நடைமுறைப்படுத்தப்படட பின்னர் அது யாருக்கு சொந்தம், யார் பராமரிப்பது இப்படியான கேள்விக்கெல்லாம் பதில் கூற வேண்டும். அப்போதுதான் அந்த திடத்தை நடைமுறைப்படுத்த அனுமதிப்பார்கள்.

இல்லாவிடடாள் இப்படித்தான் பிச்சை எடுக்க வேண்டி வரும். இங்கு பிச்சை எடுத்தும் நடத்த முடியாமல் வேறொருவனுக்கு தரை வார்க்க வேண்டியுள்ளது.

இதைத்தான் after thought என்பதோ? அப்படி என்றால் அங்குள்ளவர்கள் அனுபவமற்றவர்களா? ஏன் முன்பே இதை பராமரிப்பதட்கு பயிட்சி வழங்குவதைப்பற்றி சிந்தித்து அதட்கு பணம் ஒதுக்கவில்லை. இதனை கோடி செலவு செய்யும்போது நிச்சயமாக அதட்கும் பணம் ஒதுக்கி இருக்க வேண்டும்.

வல்வெட்டித்துறை நீச்சல்தடாகம் நினைவிற்கு வருகிறது.. 😂

கொடுமையான இனவெறியர்கள் யுத்த வெற்றி பெருமிதம், திமிருடன் ஆட்சியில் இருக்கும் போது இப்படியான நிகழ்வுகள் நடப்பது சகஜம். யாழ் மாநகரசபை தமிழ் அமைப்புகளின் உதவியுடன் இந்திய அரசுடன் பேசி இப்பிரச்சனையை தீர்க்க செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்.  தேவையெனில் சட்டத்தின் துணையையும் அணுகலாம். 

இன வெறியர்களின் ஆட்சி முடிவுக்கொண்டு வரும் வரை இப்படியான சிக்கல்ளை எதிர்கொள்த்தான் வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.