Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                             சுதந்திரம் எம் சுவாசம்.

 

"சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்".

 

மரத்தினின்று வீழ்ந்த 

பழுத்த சருகுகள் 

வேருக்கு உரமாகின்றன 

மரணித்த வீரனின் 

பாச நினைவுகள் 

மனதில் தடுமாறுகின்றன 

 

சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் 

அதை நோக்கி நாம் கொடும் 

பாலையில் அல்லவா நடக்கின்றோம் 

கண்தொடும் தூரம் கானல் நீர் 

 

நாம் எதைத் தொலைத்தோம் 

எங்கே தொலைந்து போனோம் 

எம் மூதாதையர் வாழ்ந்தார்களே 

நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே 

 

சுதந்திரமாய் வாழ நினைத்தோமே 

சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு 

கடத்திவிட முயன்றோமே 

யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் 

காக்கை வன்னியனும், கருணா  நிதியும் 

நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா 

சுதந்திரத்தை விற்பார்களா 

காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா 

 

ஓ ....வீரனே ......

திறந்திருக்கும் உன் விழிகளில்

இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி 

விழுந்து கிடக்கும் உன் உடல்கூட 

முட்களையும், கற்களையும்

ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு 

இனம் காட்டி விட்டல்லவா  விதையாகியது.......!

 

யாழ் அகவை 23 க்காக 

ஆக்கம் சுவி.........!

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

ஓ ....வீரனே ......

திறந்திருக்கும் உன் விழிகளில்

இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி 

விழுந்து கிடக்கும் உன் உடல்கூட 

முட்களையும், கற்களையும்

ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு 

இனம் காட்டி விட்டல்லவா  விதையாகியது.......!

இத்தனை வரிகளுக்குள்ளும் எமது போராட்டமே ஒழிந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

ஓ ....வீரனே ......

திறந்திருக்கும் உன் விழிகளில்

இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி 

விழுந்து கிடக்கும் உன் உடல்கூட 

முட்களையும், கற்களையும்

ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு 

இனம் காட்டி விட்டல்லவா  விதையாகியது.......!

வீரர்கள் இப்போது வரலாறாகிவிட்டனர். “எங்கள் தாத்தா ஒரு புலி வளர்த்தார்” என்ற நாடோடிக் கதை மட்டும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

வீரர்கள் இப்போது வரலாறாகிவிட்டனர். “எங்கள் தாத்தா ஒரு புலி வளர்த்தார்” என்ற நாடோடிக் கதை மட்டும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன்.....!

இங்கு நான் தனியாக எந்த இயக்கத்தின் வீரனையும் குறிப்பிடவில்லை.அதில் நான் மிகக் கவனமாக இருந்தேன்......!

அன்று அநேகமாக பல இயக்கத் தலைவர்களும் போராளிகளும் ஒற்றுமையாகவே இருந்தார்கள். அதிகம் ஏன் கோட்டையில் இருந்து இராணுவத்தை வெளியேற விடாமல் தடுத்ததில் அத்தனை இயக்கங்களின் பங்கும் இருக்கு..... பின்பு தலைவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்தபோது அவர்களும் பிரிந்தார்கள்.....!

ஆனால் அன்று ஒவ்வொரு போராளியும் எமக்கு ஒரு நாடு கிடைக்கும் என்னும் உத்வேகத்தில்தான் சென்றிருந்தார்கள்.ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் பெயர் தெரிந்த / தெரியாத பல வீரர்கள் விதையாகி இருக்கிறார்கள்......!

ஒரே வீட்டில் இருந்த ஒரு தாய் பெற்ற சகோதரங்கள் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து போராடியிருக்கின்றார்கள்.....இதுக்குமேல் சொல்ல ஒன்றுமில்லை..... எனக்கு எல்லோரையும் பிடிக்கும்......!

அவர்களுக்கானதே  இந்தக் கவிதை....!

(உங்களுக்கு புலிகள் மட்டும் நினைவுக்கு வருகின்றனர், எனக்கு எல்லோருமே நினைவுக்கு வருகின்றனர்).

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தை கவிதையில் தந்துள்ளீர்கள், எங்கள் உறவினர்கள் பலரும் ஒவ்வொரு இயக்கத்திலிருந்து எமக்காக மரணித்துவிட்டார்கள், அவர்களின் கனவு எமது விடுதலை, அது என்றோ ஒரு நாள் நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2021 at 02:51, suvy said:

நாம் எதைத் தொலைத்தோம் 

எங்கே தொலைந்து போனோம் 

 

On 22/2/2021 at 02:51, suvy said:

சுதந்திரமாய் வாழ நினைத்தோமே 

சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு 

கடத்திவிட முயன்றோமே 

சுதந்திரமாய் வாழ நினைத்ததாலும், சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற ஒரேயொரு குற்றத்தினாலும்தான் எம் தலைமை எம்மைவிட்டு தொலைந்து போனது சுவியண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அண்ணா.

நல்லவற்றை விதைப்போம்

எம் கண் முன்னே நடந்த வரலாற்றை சொல்லி செல்வோம்.

அவரவர் தத்தமது புத்திக்கேற்ப எடுத்துக் கொள்ள இது ஒன்றும் புத்தக கதை அல்லவே. 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2021 at 18:51, suvy said:

சுதந்திரமாய் வாழ நினைத்தோமே 

சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு 

கடத்திவிட முயன்றோமே 

எனது மனதை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...!

சுதந்திரம் என்பது இயற்கையானது!

கூட்டிலிருக்கும் குருவி...இறக்கைகள் முளைத்ததும்....ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருப்பதில்லை..!

முட்டையிலிருந்து வெளி வந்த முதலைக் குட்டிகளும், ஆமைக் குஞ்சுகளும்....உடனேயே நீரை நோக்கியே  ஓடுகின்றன!

ஒரு நாயைக் கட்டி விட்டுப்  பாருங்கள்...! தன்னை  யாராவது அவிழ்த்து விடும் வரை...அது பாடிக்கொண்டேயிருக்கும்!

அதே போலத் தான்...எமது போராட்டமும்...!  ஏதோ ஒரு வடிவத்தில்...தொடர்ந்து  கொண்டேயிருக்கும்...!

இறுதி  முடிவு......அதன் மரணமாக இருந்தாலும் கூட..!

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். வலி மிகுந்த கவிதை 

  • கருத்துக்கள உறவுகள்

தொலைத்த இடத்திலேயே தேடவேண்டும் ஓசோவின் தத்துவ வார்த்தைகள்.

தொலைத்த இடத்தில் நாங்களும் இல்லை. தொலைந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தேடும் சக்தியும் இல்லை.

தர்மம் வெல்லும் என்ற சொல்லைக்காட்டிலும் வல்லவன் வாழ்வான் என்ற சொல்லே இக்காலத்தில் மிளிர்ச்சியாக இருக்கிறது. சுவியண்ணா.

 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2021 at 08:01, புங்கையூரன் said:

எனது மனதை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...!

சுதந்திரம் என்பது இயற்கையானது!

கூட்டிலிருக்கும் குருவி...இறக்கைகள் முளைத்ததும்....ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருப்பதில்லை..!

முட்டையிலிருந்து வெளி வந்த முதலைக் குட்டிகளும், ஆமைக் குஞ்சுகளும்....உடனேயே நீரை நோக்கியே  ஓடுகின்றன!

ஒரு நாயைக் கட்டி விட்டுப்  பாருங்கள்...! தன்னை  யாராவது அவிழ்த்து விடும் வரை...அது பாடிக்கொண்டேயிருக்கும்!

அதே போலத் தான்...எமது போராட்டமும்...!  ஏதோ ஒரு வடிவத்தில்...தொடர்ந்து  கொண்டேயிருக்கும்...!

இறுதி  முடிவு......அதன் மரணமாக இருந்தாலும் கூட..!

யதார்த்தமான கருத்து புங்கை.........சுதந்திரம் இயற்கையானது மட்டுமல்ல மிகவும் பெறுமதியானதும் கூட......!

வருகைக்கும் கருத்துக்களுக்கும் எல்லோருக்கும் மிகவும் நன்றிகள்......!  💐

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாய் வாழ நினைத்தோமே 

சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு 

கடத்திவிட முயன்றோமே 

யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் 

காக்கை வன்னியனும், கருணா  நிதியும் 

நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா 

சுதந்திரத்தை விற்பார்களா 

காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா 

அருமை யான கவிதை. மண்மீட்ப்புக்காய் சென்று விதையாகிப்போன அத்தனை தியாக தீபங்களையும் வணங்குகின்றேன்.

பல பிரிவுகளாக இருந்தாலும் நோக்கம் ஒன்றாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது.பின்பு எனோ இந்தநிலை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.