Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது – அரசாங்கம்

by Anu
இலங்கையில் சீனா மொழியின்  ஆதிக்கம்; தூக்கி எறியப்பட்ட தமிழ் மொழி!

இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சீன நாட்டு அபிவிருத்தி திட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன மொழிப் பெயர் பலகைகளை அகற்றுவதற்கான எந்த சட்ட ஏற்பாடுகளும் உள்நாட்டில் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவரான தர்மசேன கலன்சூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாக அரச கரும மொழிகளை மீறினால் மாத்திரமே அதற்கெதிராக நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சீன அல்லது வேறு நாடுகளின் தனிப்பட்ட பெயர் பலகைகள் காட்சிப்படுத்துகையில் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு போர்ட் சிற்றி என்கிற துறைமுக நகரம் ஆகிய பிரதேசங்களில் சீன மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பதாதைகள் மற்றும் விளம்பரங்கள் என்பவற்றை அந்தந்த நிறுவனங்களின் தீர்மானங்களின்படி காட்சிப்படுத்த இடமிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறுநாட்டு மொழிகளை இந்த நாட்டிற்குள் பயன்படுத்துவதாயின், இலங்கை அரசியலமைப்பிற்கு அது முரணான செயற்பாடாக அமையும் என்பது அரசியலமைப்பின் 4ஆவது பிரிவில் காணப்படுகின்றது.

இருந்த போதிலும் இந்த சட்டமானது, வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ள முடியாது என்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பிற்கு அமைவான ஏதாவதொரு அறிவிப்பு பலகையை காட்சிப்படுத்துவதாயின் அது சிங்களம், தமிழ் ஆகிய அரச கரும மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழி கூட்டு சேர்க்கப்பட்ட மொழியாக இணைத்துக் கொள்ளவும் முடியும் என்று தெரிவித்துள்ள அந்த திணைக்களம், அந்த சட்டமானது அரச மற்றும் அங்கீகாரம்பெற்ற நிறுவனங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

கொழும்பில் கொள்ளுபிட்டி,கொழும்பு 07,பம்பலப்பிட்டி,வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களில் சீன அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெறும் இடங்களிலும் சீன உணவகங்களிலும் சீன மொழி பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாட்டின் இதரபகுதிகளில் சீன நிறுவனங்களின் ஒப்பந்தம் நடைபெறும் இடங்களிலும் சீன பெயர்ப்பலகைகள் பெருமளவில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.pearlonenews.com/சீன-மொழி-பெயர்ப்-பலகையை-அ/?fbclid=IwAR2sWkeADuOrpmfgWseJL285L8mRu_ID8E4X3q4ZLP7J_wIiBbu22MEH_ks

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

சிங்களம், தமிழ் ஆகிய அரச கரும மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும்,

தமிழில் பெயர்ப்பலகை காட்சிப்படுத்தியதற்காக ஊழியாட்டம் ஆடிய விமல் வீரவன்ச, தமிழ் புறக்கணிக்கப்படும்போது தடுக்க வக்கில்லாத அரசு, திட்டமிட்டு அந்நாட்டு குடிகளின் தாய்மொழியை அழிக்கும் அரசு; சீனாவின் அதுவும் அதன் தயவில் வாழும் நாடு அதற்கெதிராக  நடவடிக்கை எடுப்பதாவது. ஜெனீவாவைச் சாட்டியே சீனா நாட்டை விழுங்கப்போகுது. கேட்டுப்பார்க்கட்டுமேன், அது தனது மொழியில் விசாரணையை இலங்கைக்கு எதிராக தொடங்கும். நக்கிட்டார் நாவிடார்.  

  • நிழலி changed the title to சீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்குச் சொல்லப்பட்ட சேதி. அவர்கள் கவலைப்படட்டும். 😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பெருமாள் said:

சீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது – அரசாங்கம்

உதுவும் நல்லதுக்குத்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

தமிழில் பெயர்ப்பலகை காட்சிப்படுத்தியதற்காக ஊழியாட்டம் ஆடிய விமல் வீரவன்ச, தமிழ் புறக்கணிக்கப்படும்போது தடுக்க வக்கில்லாத அரசு, திட்டமிட்டு அந்நாட்டு குடிகளின் தாய்மொழியை அழிக்கும் அரசு; சீனாவின் அதுவும் அதன் தயவில் வாழும் நாடு அதற்கெதிராக  நடவடிக்கை எடுப்பதாவது. ஜெனீவாவைச் சாட்டியே சீனா நாட்டை விழுங்கப்போகுது. கேட்டுப்பார்க்கட்டுமேன், அது தனது மொழியில் விசாரணையை இலங்கைக்கு எதிராக தொடங்கும். நக்கிட்டார் நாவிடார்.  

சாதாரண சிங்கள மக்களை அடையனும் அதுக்கு முகநூல் போன்றவை மூலம் பரப்புரை இலகுவாக சென்றடையும் .

4 hours ago, Kapithan said:

இந்தியாவுக்குச் சொல்லப்பட்ட சேதி. அவர்கள் கவலைப்படட்டும். 😏

மூன்று தீவுக்கும் விலை 12 மில்லியன் டொலர் என்கிறார்கள் அவ்வளவுக்கு சொறிலங்கா வங்குரோத்து நிலையாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் காலணி நாடுகளில் தங்கள் மொழியை புகுத்துவது இயல்பு..👍

  • கருத்துக்கள உறவுகள்

எது நடுநிலை வகிதத்தா?எனக்கு முக்குப் போனாலும் எதிரிக்கு(தமிழர்களுக்கு) சகுனம் பிழைக்கணும் என்று நினைப்பது இந்தியா. இந்தியாவே இந்தப் போரை நடத்தியது. அது எப்படி ஒத்துக் கொள்ளும். ஒருவேளை 1 வாக்கால் இலங்கை தோற்க வேண்டிய நிலை வந்தால் நடுநிலமையைக்கைவிட்டு  சீனா .பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும். இது வரலாறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விவசாயி விக் said:

இப்போது சீனா கட்டும் சில கொழும்பு திட்டங்களில் வெளியே இருக்கும் பலகையில் சீன மொழி மட்டுமே இருக்கும் பலகைகைளையும் கண்டேன்.  வேண்டும் என்றே வெள்ளவத்தையில் கொழும்பு"துரை" முகம் என்று தமிழில் பிழையாக எழுதி வைத்திருக்கிறார்கள்.  வினை விதைத்தால் திணையா விளையும்?

அவ்வளவுக்கு தமிழர்கள் மீது துவேசம் அதை யாழ்கள மனிதவுரிமைவாதிகள்  கண்டு கொள்ள மாட்டினம் அவைக்கு தமிழர்கள்  பிழை செய்வதுதான் அவர்களின் கண்களில் தெரியும் சிங்களம் அவர்களின் என்னவாக ..............................................

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஏறினாலென்ன, முழம் ஏறினாலென்ன? எமக்கு இல்லை என்கிற நாட்டில் சீனம் வந்தாலென்ன, ஹிந்தி வந்தாலென்ன, சிங்களம் போனால்தான் நமக்கென்ன?   இதில் கருத்துச் சொல்லவோ குத்தி முறியவோ என்ன  இருக்கிறது  நமக்கு? அது சிங்களவனே பிரச்சனையில்லை என்கிறான். அவன் கண்ணுக்கு ஒவ்வாதது எல்லாம் தமிழ். அதில் அவன் கவனமாயிருக்கிறான். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஏறினாலென்ன, முழம் ஏறினாலென்ன? எமக்கு இல்லை என்கிற நாட்டில் சீனம் வந்தாலென்ன, ஹிந்தி வந்தாலென்ன, சிங்களம் போனால்தான் நமக்கென்ன?   இதில் கருத்துச் சொல்லவோ குத்தி முறியவோ என்ன  இருக்கிறது  நமக்கு? அது சிங்களவனே பிரச்சனையில்லை என்கிறான். அவன் கண்ணுக்கு ஒவ்வாதது எல்லாம் தமிழ். அதில் அவன் கவனமாயிருக்கிறான். 

நீங்கள் கூறியதெல்லாம் சரிதான். விதிவிலக்காக இது மட்டும்...

"ஹிந்தி வந்தாலென்ன"..... 

இலங்கை யாருக்கும் நாட்டைப் பங்கு போடட்டும். பிரச்சனையில்லை. ஆனால் இந்தியன்... 😡

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியன் தலைகீழா நின்றாலும் இலங்கை ஹிந்தியை வரவிடமாட்டான், பலாத்காரமாக புகுந்தாலொழிய. அதற்கும் சீனா இருக்கிறது தடுப்பதற்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.