Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைய சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றம்: ஆகஸ்ட் 20ஆம் தேதி கூட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  உத்தரவு - BBC News தமிழ்

சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைய சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – ஜனாதிபதி!

சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹா சிவாத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி இன்று (விாயழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மஹா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது.

அந்த கட்டுப்பாடுகளில் இந்த முறை சிறிது தளர்வு இருந்தாலும் கடந்த வருடத்தைப் போன்றே இந்த வருடமும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி மஹா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிப்பார்கள் என்று நம்புகிறேன்.

மஹா சிவராத்திரி தின தீப ஒளி இந்து மக்களின் ஆன்மீகத்தை ஒளியூட்டுவதைப் போன்றே சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும்” என ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/சமூகத்தில்-நல்லிணக்கம்-ம/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மஹா சிவராத்திரி தின தீப ஒளி இந்து மக்களின் ஆன்மீகத்தை ஒளியூட்டுவதைப் போன்றே சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும்” என ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான் வேதமோதுகிறது.

படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில். 

  • கருத்துக்கள உறவுகள்

சிவராத்திரிக்கு மின்சக்தியை துண்டித்து விளக்குகளை அலைந்து விட்டு, இரவோடிரவாக யாழ் கச்சேரியில் இருக்கும் நிலம் மற்றும் அசைய சொத்து உரிமை பத்திரங்களை அனுராதபுரத்திற்கு கொள்ளை அடித்தது போல காவிச் சென்று விட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kadancha said:

சிவராத்திரிக்கு மின்சக்தியை துண்டித்து விளக்குகளை அலைந்து விட்டு, இரவோடிரவாக யாழ் கச்சேரியில் இருக்கும் நிலம் மற்றும் அசைய சொத்து உரிமை பத்திரங்களை அனுராதபுரத்திற்கு கொள்ளை அடித்தது போல காவிச் சென்று விட்டார்கள்.

 கடஞ்சா... இது எப்ப நடந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி தினச் செய்தி

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி தினச் செய்தி

 

இந்து மக்களின் இந்தக் கலாசாரம் நாட்டின் கலாசாரத்திற்கும் மக்கள் சமூகத்திற்கும் சிறந்த பெறுமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மகா சிவராத்திரி தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியை மேலே காணலாம்.

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி தினச் செய்தி (adaderana.lk)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

சாத்தான் வேதமோதுகிறது.

படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில். 

சிங்கள ஜனாதிபதி சிவராத்திரி வாழ்த்து தெரிவித்த பிறகும்....

சம்பந்தன் ஐயா... வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது ஏனென்று புரியவில்லை.

சிலவேளை.... அவருக்கு,  இன்று சிவராத்திரி என்று, தெரியாமல் இருக்குமோ....

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

 கடஞ்சா... இது எப்ப நடந்தது. 

கடந்த கிழமை.

சிவராத்திரி என்று நான் சொன்னது, சிவராத்திரி அண்மித்த நாட்களில் கோத்தாவின் உள்ளிருக்கும் வேரறுக்கும் குரோதத்தை காட்டுவதற்கு.       

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

கடந்த கிழமை.

சிவராத்திரி என்று நான் சொன்னது, சிவராத்திரி அண்மித்த நாட்களில் கோத்தாவின் உள்ளிருக்கும் வேரறுக்கும் குரோதத்தை காட்டுவதற்கு.       

எந்த ஒரு ஊடகங்களும், இதனைப் பற்றி செய்தி வெளியிடாமல், மௌனம் காப்பது.... 

1) பயம்.

2) விலை போய் விட்டார்கள்.

என்றே.... கருத வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 இழந்துபோன உறவுகளையெண்ணி அழுது அழுது வாழ்வதால் பல லட்சம் தமிழர்களின் வாழ்வை தூங்கா இரவாக மாற்றி  தினம் தினம் சிவராத்திரியாக்கியவர் நீங்கள்.

அதனால் திரு கோத்தபாய அவர்களே சிவபெருமானைவிட பெரியவர் நீங்கள். அவரால் ஒருநாள்தான் சிவராத்திரி. உங்களால் எங்கள் வாழ்வில் ஒவ்வொருநாளும் சிவராத்திரி.

அவரைபோய் அருள் புரிய சொல்லி  கேக்குறீங்க, உங்க இமேஜ் டமேஜ் ஆகாதா?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

 இழந்துபோன உறவுகளையெண்ணி அழுது அழுது வாழ்வதால் பல லட்சம் தமிழர்களின் வாழ்வை தூங்கா இரவாக மாற்றி  தினம் தினம் சிவராத்திரியாக்கியவர் நீங்கள்.

அதனால் திரு கோத்தபாய அவர்களே சிவபெருமானைவிட பெரியவர் நீங்கள். அவரால் ஒருநாள்தான் சிவராத்திரி. உங்களால் எங்கள் வாழ்வில் ஒவ்வொருநாளும் சிவராத்திரி.

அவரைபோய் அருள் புரிய சொல்லி  கேக்குறீங்க, உங்க இமேஜ் டமேஜ் ஆகாதா?

இறக்கும் வரை எங்களுக்கு சிவராத்திரிதான்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

2) விலை போய் விட்டார்கள்.

உள்வீட்டு புல்லுருவிகளும், கோடரிக் காம்புகளும்   இல்லாமல்,  ஒருபோதும் இரவோடிரவாக செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

 கடஞ்சா... இது எப்ப நடந்தது. 

நிலம் மற்றும் அசையா சொத்துக்களின் பதிவுகள், கிழக்கில் இருந்தும் (அவை வழமையாக இருக்கும் காரியாலத்தை எவராவது தெரிந்தால் சொல்லவும்) அகற்றப்பட்டு, அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்பதும் நடந்திருக்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

ஏனெனில், ஒரே நேரத்திலேயே மின் துண்டிப்பு (வடக்கு, கிழக்கு) நடைபெற்று இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் கோவில்களை இடித்து நொருக்கியவர்கள்.. இன்று கோவில் நிலங்களை புராதன சின்னங்கள் என்று.. சிங்கள பெளத்த விகாரைகளாக்கும் இதே அரசு.. ஹிந்தியாவின் விருப்பு வெறுப்புக்கு இப்படியான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.