Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் - 2021

தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் - 2021 22 members have voted

  1. 1. தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

    • மு.க. ஸ்டாலின்
    • எடப்பாடி க. பழனிசாமி
    • சீமான்
    • கமலஹாசன்
      0
    • டி.டி.வி.தினகரன்
      0
    • வேறு ஒருவர்
      0
  2. 2. அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி/கூட்டணி?

    • திமுக கூட்டணி
    • அதிமுக கூட்டணி
    • நாம் தமிழர் கட்சி
    • மக்கள் நீதி மய்யம்
      0
    • வேறு
      0
  3. 3. நாம் தமிழர் கட்சி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

  4. 4. திமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

    • 10 – 19 %
    • 20 – 29 %
      0
    • 30 – 39 %
    • 40 – 49 %
    • 50 % மேல்
    • 10% க்கு குறைவானது
      0
  5. 5. அதிமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

    • 10 – 19 %
    • 20 – 29 %
    • 30 – 39 %
    • 40 – 49 %
    • 50 % மேல்
    • 10% க்கு குறைவானது
      0
  6. 6. சீமான் தனது தொகுதியில் வெல்வாரா?

    • ஆம்
    • இல்லை
  7. 7. மு.க. ஸ்டாலின் தனது தொகுதியில் வெல்வாரா?

  8. 8. எடப்பாடி க. பழனிசாமி தனது தொகுதியில் வெல்வாரா?

  9. 9. கமலஹாசன் தனது தொகுதியில் வெல்வாரா?

    • ஆம்
    • இல்லை

This poll is closed to new votes

Poll closed on 04/05/21 at 14:47

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

தமிழகத்  தேர்தலில்... ஒரு தடவை,  சிவாஜி கணேசனின் வாக்கை... 
வேறொருவர் கள்ள வாக்காக, போட்டு விட்டு போய் விட்டாராம். 🤣

  • Replies 62
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

மூக்கில் விரலை வைப்பீர்கள். 🤣

உண்மைதான்.. நாத்தம் தாங்கமுடியாமல் இருக்கும்😂😂🤣

 

நம்ம யாழ்கள சபேசன் முகநூலில் இப்படி எழுதியிருந்தார்..

—-

பொட்டு அம்மான் பற்றி சீமான் பேசிய ஒலிப்பதிவு போலியானது என்று நாம் தமிழர்கள் தம்பிகள் சிலர் வாதிடுகிறார்கள். ஒரு காலத்தில் எம்மோடு இருந்தவர் என்கின்ற அன்பினால் சீமானுக்கு ஆதரவாக நான் எழுதிய பதிவிலும் வந்து, ஒலிப்பதிவு பொய்யானது என்று சண்டை பிடிக்கிறார்கள். திமுகவே இப்படி ஒரு பொய்யான ஒலிப்பதிவை தயாரித்தது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில் திமுக சீமானை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட சீமானைப் பற்றி பேசுகிறார்கள் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதிலேயே திமுக தனது முழுக் கவனத்தையும் செலுத்துகிறது.
சம்பந்தப்பட்ட ஒலிப்பதிவு உண்மையானது. அந்தக் குரல் சீமானுடையதுதான். போதை தெளியாத ஒரு நேரத்தில் வந்த எரிச்சலை தரக்கூடிய ஒரு தொலைபேசி அழைப்பில் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் சீமான் பேசி விட்டார் என்பதுதான் உண்மை.
சீமான்தான் பேசினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கக்கூடும். ஆதாரம் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் சீமானை வைத்துக் கொண்டு தம்பிகளின் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் தடா சந்திரசேகர் பேசியதுதான் ஆதாரம்.
'நாங்கள் எப்படி கட்சி நடத்த வேண்டும் என்பதை வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்கள் சொல்லித் தராதீர்கள், நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள், எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்' என்பதை ஈழத் தமிழர்களுக்கு உறைக்கும்படி 'நீ யாருடா எனக்கு சொல்ல, நீ சண்டை போட்டே, முடியலை இல்ல, எமக்குத் தெரியுண்டா என்ன செய்யணும்டு' என்று ஒரு அரை மணித்தியாலங்கள் தடா சந்திரசேகர் பொரிந்து தள்ளி விட்டார்.
அடுத்த நாள் தடா சந்திரசேர் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டார். மாவீரன் பிரபாகரனின் காதுகுத்து விழா சிறப்பாக நடைபெற்றது. இப்படியாக சில மாதங்கள் ஓடி விட்டன. அதனால் பலர் இந்த சம்பவத்தை மறந்து விட்டார்கள். சீமானின் மனதுக்குள் இருந்ததைத்தான் அன்றைக்கு தடா சந்திரசேகர் பேசினார். இன்றைக்கு சீமானும் போதையில் இன்னும் கடுமையாக சொல்லி விட்டார்.
மாத மாதம் பணம் அனுப்பும் உரிமையில் சீமானுக்கு தாம் வழிகாட்டலாம் என்று சில ஈழத் தமிழர்கள் நினைக்கக் கூடும். ஆனால் பிரபாகரனிசத்தையும் தாண்டி சீமானிசம் என்கின்ற மாபெரும் தத்துவத்தை தான் உருவாக்கி இருப்பதாக நம்பும் சீமானிடம் இதெல்லாம் எடுபடாது. அடுத்த முறை சீமானுக்கு தொலைபேசும் ஈழத் தமிழர்கள் தயவு செய்து பிரபாகரனின் பெயரை சொல்லாமல் இருப்பார்களாக!
https://www.facebook.com/100001155168574/posts/3800164253365376/?d=n

 

  • கருத்துக்கள உறவுகள்

 

மேலே உள்ளதை கேட்டு விட்டு அதன் நியாய தன்மையை புரிந்துகொண்டு பின் தூக்குவது என்றால் தூக்கவும் ஏனென்றால் 60 ஆயிரம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள் இந்த பதிவு போட்டதில் இருந்து 12 ஆயிரத்துக்கு மேல்  பார்வையாளர் 24 மணிநேரத்துக்குள் இனி உங்கள் இஷ்ட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

உண்மைதான்.. நாத்தம் தாங்கமுடியாமல் இருக்கும்😂😂🤣

 

நம்ம யாழ்கள சபேசன் முகநூலில் இப்படி எழுதியிருந்தார்..

—-

பொட்டு அம்மான் பற்றி சீமான் பேசிய ஒலிப்பதிவு போலியானது என்று நாம் தமிழர்கள் தம்பிகள் சிலர் வாதிடுகிறார்கள். ஒரு காலத்தில் எம்மோடு இருந்தவர் என்கின்ற அன்பினால் சீமானுக்கு ஆதரவாக நான் எழுதிய பதிவிலும் வந்து, ஒலிப்பதிவு பொய்யானது என்று சண்டை பிடிக்கிறார்கள். திமுகவே இப்படி ஒரு பொய்யான ஒலிப்பதிவை தயாரித்தது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில் திமுக சீமானை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட சீமானைப் பற்றி பேசுகிறார்கள் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதிலேயே திமுக தனது முழுக் கவனத்தையும் செலுத்துகிறது.
சம்பந்தப்பட்ட ஒலிப்பதிவு உண்மையானது. அந்தக் குரல் சீமானுடையதுதான். போதை தெளியாத ஒரு நேரத்தில் வந்த எரிச்சலை தரக்கூடிய ஒரு தொலைபேசி அழைப்பில் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் சீமான் பேசி விட்டார் என்பதுதான் உண்மை.
சீமான்தான் பேசினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கக்கூடும். ஆதாரம் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் சீமானை வைத்துக் கொண்டு தம்பிகளின் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் தடா சந்திரசேகர் பேசியதுதான் ஆதாரம்.
'நாங்கள் எப்படி கட்சி நடத்த வேண்டும் என்பதை வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்கள் சொல்லித் தராதீர்கள், நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள், எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்' என்பதை ஈழத் தமிழர்களுக்கு உறைக்கும்படி 'நீ யாருடா எனக்கு சொல்ல, நீ சண்டை போட்டே, முடியலை இல்ல, எமக்குத் தெரியுண்டா என்ன செய்யணும்டு' என்று ஒரு அரை மணித்தியாலங்கள் தடா சந்திரசேகர் பொரிந்து தள்ளி விட்டார்.
அடுத்த நாள் தடா சந்திரசேர் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டார். மாவீரன் பிரபாகரனின் காதுகுத்து விழா சிறப்பாக நடைபெற்றது. இப்படியாக சில மாதங்கள் ஓடி விட்டன. அதனால் பலர் இந்த சம்பவத்தை மறந்து விட்டார்கள். சீமானின் மனதுக்குள் இருந்ததைத்தான் அன்றைக்கு தடா சந்திரசேகர் பேசினார். இன்றைக்கு சீமானும் போதையில் இன்னும் கடுமையாக சொல்லி விட்டார்.
மாத மாதம் பணம் அனுப்பும் உரிமையில் சீமானுக்கு தாம் வழிகாட்டலாம் என்று சில ஈழத் தமிழர்கள் நினைக்கக் கூடும். ஆனால் பிரபாகரனிசத்தையும் தாண்டி சீமானிசம் என்கின்ற மாபெரும் தத்துவத்தை தான் உருவாக்கி இருப்பதாக நம்பும் சீமானிடம் இதெல்லாம் எடுபடாது. அடுத்த முறை சீமானுக்கு தொலைபேசும் ஈழத் தமிழர்கள் தயவு செய்து பிரபாகரனின் பெயரை சொல்லாமல் இருப்பார்களாக!
https://www.facebook.com/100001155168574/posts/3800164253365376/?d=n

 

கிருபன் அய்யா படுற பாடு.

அய்யா, எங்களுக்கு வோட்டு இல்லையய்யா. இது பத்தி கவலைப்பட. தமிழ் நாட்டில, பிரபாகரனை தெரிஞ்ச அளவுக்கு, பொட்டரை தெரியாதே.

அது இருக்கட்டும், எடப்பாடி, ஸ்டாலினுக்கு சோலியை, 5 ரூவா பேப்பரோட, முடிச்சு போட்டார்களாமே?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அது இருக்கட்டும், எடப்பாடி, ஸ்டாலினுக்கு சோலியை, 5 ரூவா பேப்பரோட, முடிச்சு போட்டார்களாமே?

இன்னும் அதன் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை பலர் . சுடாலின்  மண்கவ்வுவது உறுதியாகி விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் பொட்டரைத் தெரியாதவர்கள் இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழர்களில் இருக்கமாட்டார்கள். 

சீமான் தலைவர் பிரபாகரனையும் மோசமாகப் பேசினாலும் தம்பிகள் ஏற்றுக்கொள்வார்கள்.

சீன்மான் உளறியதை திமுக IT wing இன் சதி என்று சுத்த பல spin doctors தீயாக வேலை செய்கின்றார்கள். செய்யத்தானே வேணும்😂😂

8 minutes ago, Nathamuni said:

கிருபன் அய்யா படுற பாடு.

அய்யா, எங்களுக்கு வோட்டு இல்லையய்யா. இது பத்தி கவலைப்பட. தமிழ் நாட்டில, பிரபாகரனை தெரிஞ்ச அளவுக்கு, பொட்டரை தெரியாதே.

அது இருக்கட்டும், எடப்பாடி, ஸ்டாலினுக்கு சோலியை, 5 ரூவா பேப்பரோட, முடிச்சு போட்டார்களாமே?

 

4 minutes ago, பெருமாள் said:

இன்னும் அதன் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை பலர் . சுடாலின்  மண்கவ்வுவது உறுதியாகி விட்டது .

இதனால் அதிமுக மீது இன்னும் வெறுப்பும், பிஜேபி மீது இன்னும் கோபமும் வரக் கூடிய சந்தர்ப்பங்கள் தான் அதிகம். ஏற்கனவே மோடியும் அமித்ஷாவும் வந்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசி உள்ள ஆதரவையும் குறைத்துப் போட்டு போயுள்ளார்கள்.

யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்காது இன்னும் இருப்பவர்கள் மத்தியில் தான் இது செல்வாக்கு செலுத்தும். அது சாதகமா பாதகமா என கணிக்க முடியாது.

நாங்கள்மே 2 வரைக்கும் பொறுத்து இருக்க வேண்டியது தான்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அது இருக்கட்டும், எடப்பாடி, ஸ்டாலினுக்கு சோலியை, 5 ரூவா பேப்பரோட, முடிச்சு போட்டார்களாமே?

இதையும் ஒருக்கால் படியுங்கள்..

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இதனால் அதிமுக மீது இன்னும் வெறுப்பும், பிஜேபி மீது இன்னும் கோபமும் வரக் கூடிய சந்தர்ப்பங்கள் தான் அதிகம். ஏற்கனவே மோடியும் அமித்ஷாவும் வந்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசி உள்ள ஆதரவையும் குறைத்துப் போட்டு போயுள்ளார்கள்.

நாங்கள்மே 2 வரைக்கும் பொறுத்து இருக்க வேண்டியது தான்

உண்மையில் சுடாலின் தான் வருவார் இந்த தேர்தல் நேர்மையாக நடந்தால் எனக்கு  சுடாலின் பிடிக்காது என்றபடியால் வரமாட்டார் தோல்வியை தழுவுவார் என்று சொல்ல முடியாது யதார்த்தம் என்ற ஒன்று உண்டு அதன்படி பார்த்தால் சுடாலின் தான் ஆனால் பிஜேபி என்ன விலை கொடுத்தாவது அதிமுகாவை கொண்டு வரணும் எனும் வெறியில் நிக்கிறார்கள் என்ற செய்தி இந்த ஐந்து ரூபா பேப்பர் விளம்பரம் மூலம் செய்தியாக சொல்லப்பட்டுள்ளது எனவே ஒரு மாதம் வோட்டு மிஸினில் உள்ள செய்தி பிஜேபிக்கு முன்பே கிடைத்துவிடும் அதைவைத்து டீல்  நடக்கும் சிலவேளை எடப்பாடியை விட சுடாலின் அளவுக்கு அதிகமாய் விட்டு கொடுப்பு செய்வராய் இருந்தால் நிலைமை தலைகீழாகும் .

5 minutes ago, பெருமாள் said:

உண்மையில் சுடாலின் தான் வருவார் இந்த தேர்தல் நேர்மையாக நடந்தால் எனக்கு  சுடாலின் பிடிக்காது என்றபடியால் வரமாட்டார் தோல்வியை தழுவுவார் என்று சொல்ல முடியாது யதார்த்தம் என்ற ஒன்று உண்டு அதன்படி பார்த்தால் சுடாலின் தான் ஆனால் பிஜேபி என்ன விலை கொடுத்தாவது அதிமுகாவை கொண்டு வரணும் எனும் வெறியில் நிக்கிறார்கள் என்ற செய்தி இந்த ஐந்து ரூபா பேப்பர் விளம்பரம் மூலம் செய்தியாக சொல்லப்பட்டுள்ளது எனவே ஒரு மாதம் வோட்டு மிஸினில் உள்ள செய்தி பிஜேபிக்கு முன்பே கிடைத்துவிடும் அதைவைத்து டீல்  நடக்கும் சிலவேளை எடப்பாடியை விட சுடாலின் அளவுக்கு அதிகமாய் விட்டு கொடுப்பு செய்வராய் இருந்தால் நிலைமை தலைகீழாகும் .

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். எனவே யார் வந்தாலும் மத்திய அரசை பகைக்க மாட்டார்கள். காங்கிரஸ் காற்றில்லாத பலூன் போல ஆகிவிட்டதால் அடுத்த நாடாளுமன்ற் தேர்தலிலும் வெல்லப் போவதில்லை. ஆகவே திமுக வென்றாலும், எப்படியாவது மோடியை தாஜா பண்ணி அவர்களுடன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க முண்டியடிக்கும். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் சுமூகமாகவே நடந்து கொள்வர்.
 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

தமிழ் நாட்டில் பொட்டரைத் தெரியாதவர்கள் இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழர்களில் இருக்கமாட்டார்கள். 

சீமான் தலைவர் பிரபாகரனையும் மோசமாகப் பேசினாலும் தம்பிகள் ஏற்றுக்கொள்வார்கள்.

சீன்மான் உளறியதை திமுக IT wing இன் சதி என்று சுத்த பல spin doctors தீயாக வேலை செய்கின்றார்கள். செய்யத்தானே வேணும்😂😂

அவர்கள் தீயாக வேலை செய்கிறார்களோ இல்லையோ, நீங்கள் எரிமலையாக வேலை செய்கிறீர்கள். 😂😂

சரி திட்டிட்டு போகட்டும்.... தண்ணிய போட்டால், நானும் திட்டுவேன்.... முள்ளி வாய்க்காலில் முடிவுவருகிறது என்று தெரியாத புலனாய்வு!!

என்னத்தை சொல்வது, போங்கோ... 😵

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Seeman Vaiko GIF - Seeman Vaiko Naamtamilar - Discover & Share GIFs

முதலில்... சீமானை, முதலமைச்சர்  ஆக்கி காட்டுங்கள்.
அதுக்குப் பிறகு... நாங்கள் என்ன சொல்கிறோம், எனப் பார்த்து.. மூக்கில் விரலை வைப்பீர்கள். 🤣

தமிழ்  நாட்டில் 40%தெலுங்கர் ..தமிழ் பேசி.  வாழ்வதாய். ஒரு கணிப்பு  பார்த்தேன் உண்மையா ?மற்றைய  இனங்களும்  வாழலாம். இதன். கணிப்பீடுகள். எனக்குத்  தெரியாது.  ஆனால்  நாம் தமிழர்  கட்சி. என்றால். தமிழ்நாட்டில். வாழும். மற்றைய இனங்களின். வாக்கு. வேண்டாமென்று. அந்தக்கட்சியே. சொல்வதாகிறது.. மிச்ச  60%தில் வேறு  பல இனங்களுமுண்டு. தமிழர். முழுவதும். இவருக்கு  வாக்களிக்கப்போவதில்லை. இவர். ஒரு  பத்து. சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுவாரோ. தெரியவில்லை. எப்படி இவர் முதலமைச்சராய் வரமுடியும்.?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். எனவே யார் வந்தாலும் மத்திய அரசை பகைக்க மாட்டார்கள். காங்கிரஸ் காற்றில்லாத பலூன் போல ஆகிவிட்டதால் அடுத்த நாடாளுமன்ற் தேர்தலிலும் வெல்லப் போவதில்லை. ஆகவே திமுக வென்றாலும், எப்படியாவது மோடியை தாஜா பண்ணி அவர்களுடன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க முண்டியடிக்கும். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் சுமூகமாகவே நடந்து கொள்வர்.
 

பயப்படாதீங்கோ.... ஒரு மாசம் மெஷினேல்லாம் எங்கடை (IT) ஆக்கள் பொறுப்பு. வெட்டி ஆடுறம்.

ஸ்டாலினை முதல்வராக்கிறோம். 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சரி திட்டிட்டு போகட்டும்.... தண்ணிய போட்டால், நானும் திட்டுவேன்.... முள்ளி வாய்க்காலில் முடிவுவருகிறது என்று தெரியாத புலனாய்வு!!

 

நாதம்ஸ் இலவசக் கல்வி தந்த சிறிலங்கா அரசு மீது பேரபிமானம் கொண்டவர் என்று தெரியும் என்பதால் பொட்டரைத் திட்டினால்கூட வியப்பில்லை. ஆனால் கறி இட்லியை பொட்டர் வீட்டில் சாப்பிட்டவிட்டு பொட்டரை மயிர் என்பதை புலிகளின் தியாகங்களை மதிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

தமிழ்  நாட்டில் 40%தெலுங்கர் ..தமிழ் பேசி.  வாழ்வதாய். ஒரு கணிப்பு  பார்த்தேன் உண்மையா ?மற்றைய  இனங்களும்  வாழலாம். இதன். கணிப்பீடுகள். எனக்குத்  தெரியாது.  ஆனால்  நாம் தமிழர்  கட்சி. என்றால். தமிழ்நாட்டில். வாழும். மற்றைய இனங்களின். வாக்கு. வேண்டாமென்று. அந்தக்கட்சியே. சொல்வதாகிறது.. மிச்ச  60%தில் வேறு  பல இனங்களுமுண்டு. தமிழர். முழுவதும். இவருக்கு  வாக்களிக்கப்போவதில்லை. இவர். ஒரு  பத்து. சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுவாரோ. தெரியவில்லை. எப்படி இவர் முதலமைச்சராய் வரமுடியும்.?

இங்க லண்டனிலை, ஒரு மில்லியன் இருக்கிறம் எண்டு அடிச்சு விட்டுக்கொண்டு MP மாரை எங்களுக்கு பின்னாலை திரிய வைச்சோம்.

உங்கை கொஞ்சப்பேர், நடக்கிற சனத்தொகை கணக்கெடுப்பிலை, தமிழன் எண்டு போடு எண்டு சொல்லிப் போட்டினம். பிரச்சனை என்னெண்டா, முழுசனமும் அப்படி போடாவிடில் அல்லது போட்டும் ஒரு மில்லியன் இல்லை எண்டு தெரிஞ்சால், அட போங்கடா எண்டு அவையள் போயிடுவினம்.

இந்த கதை மூலமாக, தெலுங்கு 40% 'கணக்கையும்' பாருங்கோ. 

12 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ் இலவசக் கல்வி தந்த சிறிலங்கா அரசு மீது பேரபிமானம் கொண்டவர் என்று தெரியும் என்பதால் பொட்டரைத் திட்டினால்கூட வியப்பில்லை. ஆனால் கறி இட்லியை பொட்டர் வீட்டில் சாப்பிட்டவிட்டு பொட்டரை மயிர் என்பதை புலிகளின் தியாகங்களை மதிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

இலங்கை அரசு மீது அல்ல. இலங்கை மீது.

நீங்கள் என்னத்தை தான் சொன்னாலும், நீங்கள் இலவச கல்வி மூலம் பயன் அடைந்தீர்கள் என்பதை மறுப்பீர்களா? சும்மா கதை விடக்கூடாது? அல்லது இல்லை, நான் பிரைவேட் ஸ்கூலில் தான் படித்தேன் எண்டாவது சொல்லுங்கள்.

இந்த மிமிக்கிரி எண்டு ஒண்டு இருக்குதே தெரியுமா? ஸ்டாலின் எப்படி பேசுவார் என்று சீமான், மேடை, மேடையாக பேசுவார் கவனித்தீர்களா?

சரி, இந்த முறை ஸ்டாலின் வெல்லுவார், கவலை படாதீங்கோ. சரியோ.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ் இலவசக் கல்வி தந்த சிறிலங்கா அரசு மீது பேரபிமானம் கொண்டவர் என்று தெரியும் என்பதால் பொட்டரைத் திட்டினால்கூட வியப்பில்லை. ஆனால் கறி இட்லியை பொட்டர் வீட்டில் சாப்பிட்டவிட்டு பொட்டரை மயிர் என்பதை புலிகளின் தியாகங்களை மதிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

IT இல் உள்ள நீங்களே இதை நம்பி காவித் திரிவதை நினைக்க கஸ்டமாக உள்ளது.

எப்போதோ நடந்ததை இவ்வளவு நாட்களாக பொத்தி பாதுகாத்து தேர்தல் நேரத்தில் வெளியிடுகிறார்கள்.

நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

இதையும் ஒருக்கால் படியுங்கள்..

 

கிருபனும் - மின்னம்பலம் போல பல்லாண்டு வாழ்க என்று இனி எங்கவாது கலியாணத்துக்கு போனால் வாழ்த்த தான் இருக்கு. 🤦‍♂️

அட, விடுங்கப்பா.... அவர்களை எங்களுக்கு ப்ரோமோட் பண்ணுறதை விடுங்கப்பா. அல்லது ஷேர் இருக்குதோ? 😜

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் இதையும் படியுங்கள்.  நாதம்ஸ் படிக்கமாட்டார். ஆனால் உள்ளே என்ன இருக்கின்றது என்பதை புரிந்துகொள்வார்😁

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

ஈழப்பிரியன் இதையும் படியுங்கள்.  நாதம்ஸ் படிக்கமாட்டார். ஆனால் உள்ளே என்ன இருக்கின்றது என்பதை புரிந்துகொள்வார்😁

 

இந்த குப்பைகளை இங்கே தயவு செய்து ப்ரோமோட் பண்ணாதீர்கள் அய்யா. 🤦‍♂️

திமுக வை பத்தி, நேற்று காலை பேப்பரில் போட்டு நாற பண்ணி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். அதெல்லாம் நான் வாசிக்க போவதில்லை. 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்போதோ நடந்ததை இவ்வளவு நாட்களாக பொத்தி பாதுகாத்து தேர்தல் நேரத்தில் வெளியிடுகிறார்கள்.

அப்ப சீமான் பொட்டரை மயிர் என்று சொன்னது (எந்தக் காலம் என்றாலும்) சரியாகத்தான் தோன்றுகிறதா?🤔

1 minute ago, Nathamuni said:

இந்த குப்பைகளை இங்கே தயவு செய்து ப்ரோமோட் பண்ணாதீர்கள் அய்யா. 🤦‍♂️

படிக்காமலேயே நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று தெரியும் நாதம்ஸ்😜

நான் பதிவது சுயபுத்தி உள்ளவர்களுக்கு.😬

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அப்ப சீமான் பொட்டரை மயிர் என்று சொன்னது (எந்தக் காலம் என்றாலும்) சரியாகத்தான் தோன்றுகிறதா?🤔

படிக்காமலேயே நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று தெரியும் நாதம்ஸ்😜

நான் பதிவது சுயபுத்தி உள்ளவர்களுக்கு.😬

உங்களுக்கு சுஜ புத்தி இருந்தால், நீங்களாக எழுதி பதியுங்கள். மதிப்போம், வாசிப்போம்.

அடுத்தவன் எழுத்துக்களை வெட்டி ஒட்டி, அதனை, ஆகோ, ஓகோ என்று சொல்லாதீர்கள்.

ஸ்டாலின் மிசா காலத்தில் உள்ளே போனது வேறு காரணமாக. ஆனால் சோலை என்பார் எழுதினாராம்.... தியாக செம்மல் போல... 

அதனால் தான் சொல்கிறேன்... கிருபன் மினக்கெட்டு எழுதினால், தனது கருத்தினை சொன்னால், வாசிக்க தயார், விவாதிக்க தயார்.

அடுத்தவன் காசை வாங்கிக் கொண்டு எழுதிக் கொட்டுவதை, எங்களுக்கு தந்து பிரயோசனம் இல்லை.

நாமும் ஓட்டலாம். வெட்டுவார்கள் என்பதால் பிரயோசனம் இல்லை.

***

நெஞ்சில் படுத்து, பாட்டில் தூங்கும் தனது மகனை மிஸ் பண்ணுகிறேன் என்று சீமான் சொன்னதை வெட்டி, பிரபாகரன் தனது நெஞ்சில் படுத்து உறங்கினார் என்று சொன்ன கூட்டம், இப்போது இன்னோரு ஆடியோ உடன் வருகிறது.

அதனை இங்கே இணைக்கிறீர்கள். எங்களுக்கு தாராளமாக சுஜ புத்தி இருக்கிறது அய்யா.

நிழலியும் அதனை கண்டும், காணாமல் போகிறார். என்னத்தை சொல்வது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

அப்ப சீமான் பொட்டரை மயிர் என்று சொன்னது (எந்தக் காலம் என்றாலும்) சரியாகத்தான் தோன்றுகிறதா?🤔

கிருபன் நான் சொல்வது இப்படி நடந்திருந்தால் இவ்வளவு காலமும் பொத்தி வைத்திருப்பார்களா?

சீமானின் குரலில் நடித்துக் காட்டிய எத்தனையோ ஒலி ஒளி நாடாக்கள் பார்த்திருப்பீர்கள்.அப்படி இருந்தும் இது ஏதோ சிக்கிவிட்டது என்பதற்காக பொய் என்று தெரிந்தாலும் விடமாட்டீர்கள் என்பது தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

கிருபன் நான் சொல்வது இப்படி நடந்திருந்தால் இவ்வளவு காலமும் பொத்தி வைத்திருப்பார்களா?

சீமானின் குரலில் நடித்துக் காட்டிய எத்தனையோ ஒலி ஒளி நாடாக்கள் பார்த்திருப்பீர்கள்.அப்படி இருந்தும் இது ஏதோ சிக்கிவிட்டது என்பதற்காக பொய் என்று தெரிந்தாலும் விடமாட்டீர்கள் என்பது தெரிகிறது.

தமிழ் நாட்டில் ஒர கட்சியை. நீங்கள் ஆதரிககும்போது...அதுவும்  மிகக் குறைநத. ஆதரவு வீதத்தையுடைய  கட்சியை. ஆதரிக்குமபோது. ....உஙகளை அறியாமாலே. தமிழ்நாட்டிலுள்ள  பெருமபான்மைத்தமிழரை. எதிரியாக்கிறிர்கள்.....இது தேவையா?...இலஙகைத்தமிழனே கசைஅனுப்பு  உதவியைச்செய்..இங்குளள...நிலமை. உனக்குத்தெரியாது..யாருக்கு  வாக்குப்போடுவது  என்பதை. நாம. பார்த்துக்கொள்வோம் ...நீங்கள்.  உங்கள். வேலையைப பாருங்கள்  எனறுகூறும்போது.... தமிழ்நாட்டுத்தமிழனும். உங்களைப்  பார்த்து  இப்படிககூறினால்.  என்ன செயவீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

தமிழ் நாட்டில் ஒர கட்சியை. நீங்கள் ஆதரிககும்போது...அதுவும்  மிகக் குறைநத. ஆதரவு வீதத்தையுடைய  கட்சியை. ஆதரிக்குமபோது. ....உஙகளை அறியாமாலே. தமிழ்நாட்டிலுள்ள  பெருமபான்மைத்தமிழரை. எதிரியாக்கிறிர்கள்.....இது தேவையா?...இலஙகைத்தமிழனே கசைஅனுப்பு  உதவியைச்செய்..இங்குளள...நிலமை. உனக்குத்தெரியாது..யாருக்கு  வாக்குப்போடுவது  என்பதை. நாம. பார்த்துக்கொள்வோம் ...நீங்கள்.  உங்கள். வேலையைப பாருங்கள்  எனறுகூறும்போது.... தமிழ்நாட்டுத்தமிழனும். உங்களைப்  பார்த்து  இப்படிககூறினால்.  என்ன செயவீர்கள்?

அண்ணை,

முள்ளிவாய்க்கால் அவலத்திலேயே நாடகமாடியவர்கள், இனியும் வரப்போவதுமில்லை, வரவேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில் எம்மிடம் இழப்பதற்கு வேறு எதுவுமே இல்லை.

எமது ஆதரவு,  அவர்கள் எமக்கு, இனியும் உதவுவார்கள் என்று அல்ல. இந்த நாடக கம்பெனியாரிடம் இருந்து, எமது சக தமிழர்களும், அவர்களது பிரதேச வளங்களும் பாதுகாக்கப் படவேண்டும் என்று ஒரே ஒரு உணர்வு மட்டுமே.

வைக்கோ சரியாகவே சொன்னார். ஸ்டாலினுக்கு, இலங்கைப் பிரச்சனை குறித்த எந்தவித புரிதலும் கிடையாது என்று. அதுவா, அந்த சிலோன் மாற்றரா என்பார் என்று.

நம்மவர்கள், ஸ்டாலினை லண்டன் அழைத்து இருந்தார்கள். ஆங்கிலம் தெரியாத அவருக்கு உதவியாக டி ஆர் பாலுவும் வந்தார்.

அவருடன் பேசியவர்கள் சொன்னதும், வைக்கோ சொன்னதை சரி என்றே உறுதிப்படுத்தியது. அவர் எதிர்காலத்தில் முதல்வர் ஆவார், உதவலாம் என்றே அழைத்தவர்கள் கருதினார்கள். மீண்டும் அழைத்த போது, கடைசி நிமிடத்தில் கான்செல் செய்து, வர மறுத்து விட்டார்.

ஆகவே, எமக்கு உதவுவார்கள் என்ற எண்ணத்தை விடுத்து, தமிழகத்தினை, தனித்தே நோக்குங்கள். கிருபன் அய்யா போல இரண்டினையும் குழப்பாமல், பார்த்தீர்களானால், எமது பார்வை புரியும்.

****

ஒன்று மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் யாழ்ப்பாண ராஜதானி, தென்னிந்திய சேர, சோழ, பாண்டிய தமிழர் அரசுகள் இருந்த போது, சிங்களம் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாது இருந்தது.

1520 ஆண்டளவில் விஜய நகர பேரரசு தமிழகத்தினை பிடித்துக் கொண்ட பின்னர், போர்த்துகேயர்கள் இலகுவாக யாழ்பாணத்தினை பிடித்துக் கொண்டார்கள்.

இன்று வரை தமிழகம் தமிழர்கள் கையில் இல்லை. அவ்வாறு நடக்கும் வரை, நீங்கள் எதிர்பார்க்கும் உதவியும் கிடைக்க போவதில்லை.

இது வரலாறு சொல்லும் பாடம். எனது கருத்து அல்ல.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kandiah57 said:

தமிழ் நாட்டில் ஒர கட்சியை. நீங்கள் ஆதரிககும்போது...அதுவும்  மிகக் குறைநத. ஆதரவு வீதத்தையுடைய  கட்சியை. ஆதரிக்குமபோது.

உள்ளதை வைத்து கணிப்பிடாமல் எதிர்காலத்தை நினைத்து செயற்படுங்கள்.

நீங்களோ நானோ கிருபனோ குத்தி முறிந்து தமிழகத்தில் எதுவுமே நடக்கப் போவதில்லை.

அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் போதே உலகம் முழுவதும் இருந்து யார் வெல்வார்கள் என்று கணக்குப் பார்க்கும் போது எமது இனத்துக்கிடையில் நடக்கும் தேர்தலில் எமக்கென்று விருப்பு வெறுப்பு இருக்கக் கூடாதா?

சரி உங்களுக்கு யார் மீதாவது விருப்பு இருந்தால் உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்.நாங்கள் வந்து வேண்டாம் என்று குத்தி முறியவா போகிறோம்?

ஏன் நாங்கள் விரும்புதை கூடாது என்று தடி ஓட்டுகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.