Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நூறு ரூபாய் வைக்க மாட்டியா?’ - துரைமுருகன் பங்களாவில் கடுப்பாகி எழுதிய கொள்ளையர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes

துரைமுருகன் பங்களா

துரைமுருகன் பங்களா

துரைமுருகன் பங்களாவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், எதுவுமே சிக்காத கடுப்பில், ‘நூறு ரூபாய்கூட வைக்க மாட்டியா?’ என்று நக்கலாக எழுதிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குப் பெரிய சொகுசு பங்களா இருக்கிறது. துரைமுருகன் அடிக்கடி இங்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார், அவரின் மனைவி சங்கீதா இருவரும் பங்களாவில் தங்கி பராமரிப்பு வேலைகளைச் செய்துவருகிறார்கள்.

துரைமுருகன் பங்களா

 

துரைமுருகன் பங்களா

 

இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் துரைமுருகனின் பங்களாவுக்குள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்களுக்கு பணம், நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள் ஏதும் சிக்காததால், ஆத்திரமடைந்து மேல் தளத்திலிருந்த டிவி-யை உடைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார். இந்த நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஒருசில தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் எழுதிய வாசகம்

 

கொள்ளையர்கள் எழுதிய வாசகம்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:
துரைமுருகன் பங்களாவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், எதுவுமே சிக்காத கடுப்பில், ‘நூறு ரூபாய்கூட வைக்க மாட்டியா?’
 

திருடர்,  தேர்தல் முடிந்த நேரம் போனால்.... 
வீட்டில் பணத்தை வைத்திருப்பார்களா?

தேர்தல் கமிஷன்வந்து சோதனையிடும் என்று... 
ஏற்கெனவே வேறு இடங்களில் பதுக்கி வைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

துரைமுருகன் பங்களா

துரைமுருகன் என்றதும்

சாட்டை துரைமுருகனுக்கு பங்களாவும் இருக்கா?என்று தடுமாறிப் போனேன்.

3 hours ago, பெருமாள் said:

கொள்ளையர்கள் எழுதிய வாசகம்

இதை துரைமுருகனே செய்வித்தாரோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார், அவரின் மனைவி சங்கீதா இருவரும் பங்களாவில் தங்கி பராமரிப்பு வேலைகளைச் செய்துவருகிறார்கள்.

கொள்ளை நடந்த நேரம் இவர்கள் எங்கிருந்தார்கள் ?

19 hours ago, ஈழப்பிரியன் said:

இதை துரைமுருகனே செய்வித்தாரோ தெரியவில்லை.

தமிழ்நாட்டை சுரண்டுவதில் திமுகா AI டெக்னிகளை உபயோகப்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்ற நிறுவனம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, பெருமாள் said:

துரைமுருகன் பங்களாவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், எதுவுமே சிக்காத கடுப்பில், ‘நூறு ரூபாய்கூட வைக்க மாட்டியா?’ என்று நக்கலாக எழுதிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

கஞ்சப்பயல்....😁

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ அழிக்கப்பட்டிருக்கு, என்னவா இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

ஏதோ அழிக்கப்பட்டிருக்கு, என்னவா இருக்கும். 

வேற என்ன.... கிருபன் அய்யாவை கேட்டால் சொல்லுவார். வீ டம்ளர் எண்டு எழுதி, அழிச்சுப்போட்டினம் எண்டு...😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

ஏதோ அழிக்கப்பட்டிருக்கு, என்னவா இருக்கும். 

 

6 hours ago, Nathamuni said:

வேற என்ன.... கிருபன் அய்யாவை கேட்டால் சொல்லுவார். வீ டம்ளர் எண்டு எழுதி, அழிச்சுப்போட்டினம் எண்டு...😜

துரைமுருகன் வீட்டில்.... கொள்ளை அடிக்கப் போனவர்கள், தீம்கா வாகத்தானிருக்கும்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210416-125334.jpg

காசு இல்லை என்டு போர்டு எழுதி தொங்க விட்டால் என்ன குறைந்தா போய்விடுவினம்.?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20210416-125334.jpg

காசு இல்லை என்டு போர்டு எழுதி தொங்க விட்டால் என்ன குறைந்தா போய்விடுவினம்.?

சிலவேளை இனிமேல்த்தான்  பணத்தை பதுக்கப்போகிறார்கள் போல் உள்ளது களவு நடந்தபின் நாலு பேரை இரவு பகலா  காவல் போடுவது யாருக்கும் சந்தேகம் வராது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சிலவேளை இனிமேல்த்தான்  பணத்தை பதுக்கப்போகிறார்கள் போல் உள்ளது களவு நடந்தபின் நாலு பேரை இரவு பகலா  காவல் போடுவது யாருக்கும் சந்தேகம் வராது .

அட... இப்படியும், ஒரு  "ரெக்னிக்"  இருக்கா...
அது சரி.... அவங்கள், அப்ப  இருந்தே...  😎
கள்ளப்  பணத்தை பதுக்குவதில்....
பலே,  கில்லாடிகள் ஆச்சே...  :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.