Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி பலி.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி பலி.!

chengalpattu-4311897-1620177331.jpg

சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

இந்தியாவில் கொரோனா 2வது அலை கடுமையாக வீசி வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு தீவிரம் அடைபவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, ரெமிடிசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

சரியான நேரத்தில் ஆக்சிஜன் உதவி கிடைக்காமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலரும் இறந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணத்தில் அடக்கம்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தினம் ஆயிரத்து 500க்கும் மேற்போட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 நோயாளிகள் பலி

இந்நிலையில் நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.

அடுத்தடுத்து பலி

அதற்குள் மேலும் அடுத்தடுத்து சிலர் இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

ஆட்சியர் ஆய்வு

இதையடுத்து, சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன் பின் அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும்' என்றார்.

https://tamil.oneindia.com/news/chennai/11-covid-patients-died-in-chengalpattu-govt-hospital-due-to-oxygen-shortage-419860.html

டிஸ்கி :

வடவர்களைவிட தமிழ்நாடு கட்டமைப்பு ஆஹா ஓஹோ என்றினம்.. எனக்கென்னவோ இது ட்ரையல் மாதிரி தெரிகிறது.😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்.... சோகமான செய்தி. 😢

தமிழ் நாட்டில்.... ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறப்பு ஏற்படும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. 😮

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

காலையில்.... சோகமான செய்தி. 😢

தமிழ் நாட்டில்.... ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறப்பு ஏற்படும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. 😮

உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசன் முக்கால்வாசிக்கு மேல் வட இந்தியாவுக்கு அனுப்பினால் என்ன நடக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலினுக்குச் சனி ஆரம்பித்தது. எடப்பாடி தப்பித்தார். பாவம் தமிழ்நாட்டு மக்கள். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நிலைமையும் மோசமடையும் போல தென்படுகிறது.

☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இலங்கையின் நிலைமையும் மோசமடையும் போல தென்படுகிறது.

☹️

இலங்கையில் நிலமை மோசமடையணும் என்று சிறீலங்கா அரசு எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது ☹️

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இலங்கையில் நிலமை மோசமடையணும் என்று சிறீலங்கா அரசு எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது ☹️

உண்மையில் அப்படியல்ல. அரசு மிகவும் கலக்கத்தி இருப்பதாக நம்பப்படுகிறது. பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி மிக வேகமாகச் செல்கிறது. 

பொருட்களின் விலையும் தினசரி அதிகரித்துச் செல்கிறது. 

மக்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

இன்னும் மூன்று மாதங்களில் தாக்கம் வெளித்தெரிய ஆரம்பிக்கலாம்..

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, விசுகு said:

இலங்கையில் நிலமை மோசமடையணும் என்று சிறீலங்கா அரசு எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது ☹️

 இதனால் பரிதாபம்,பணம் எல்லாம் வருமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லஷணத்தில் ஸ்டாலின் அறிவாலயத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் யோசனையில் உள்ளார் என்கிறது விகடன்.

ஈழத்தில் சிங்களர் நச்சு குண்டுகள் போட்டது போல், தமிழர் பகுதியில் அதிகம் பரவவிட்டு, சிகிச்சையில் பாராமுகமாக இருப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

 இதனால் பரிதாபம்,பணம் எல்லாம் வருமா?

அதே. சுனாமி நல்ல அறுவடை??

44 minutes ago, Kapithan said:

உண்மையில் அப்படியல்ல. அரசு மிகவும் கலக்கத்தி இருப்பதாக நம்பப்படுகிறது. பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி மிக வேகமாகச் செல்கிறது. 

பொருட்களின் விலையும் தினசரி அதிகரித்துச் செல்கிறது. 

மக்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

இன்னும் மூன்று மாதங்களில் தாக்கம் வெளித்தெரிய ஆரம்பிக்கலாம்..

☹️

அன்பளிப்பு மற்றும் வட்டி அற்ற கடன்கள் வரும். அவை வடகிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களுக்கு பயன்படுத்தப்படும் 

வழமை அது தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.