Jump to content

நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா


Recommended Posts

  • Replies 219
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

DaRfRJeU0AUzkfG.jpg

தென்னங்குரும்பையில் தேர்

Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220521-073258.jpg

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

நாங்கள் வன்னியில விளையாடினது...

இவை 2000களின் மத்தியில்...

பொருட்கள் கொண்டு விளையாடுவது.

  • நடைவண்டி தள்ளுவது
  • ரயர் ஓட்டுவது
  • தண்ணித்துவக்கு 
  • பேப்பர் ரொக்கெற் - இரொக்கெட்டால வகுப்பறைக்குள் எறிபடுவது.
  • வண்டில் இழுப்பது - ஒரு பாட்டாவினை வெட்டி சில்லாகவும், ஒரு வகையான மருந்துப் போத்தலின் அடிப்பகுதியில் கம்பியைச் சொருகி அதை சில்லுக்குச் சொருகிவிட்டு அந்த மருந்துப் போத்தலின் வாயிலில் நீண்ட தடியைச் சொருகி கையைப் பிடிப்பதற்காகவும் பயன்படுத்தினோம். கொஞ்சம் செலவு செய்தால் அந்த வண்டிலின் பின்பக்கத்தில் இழுபொறிக்கு பூட்டுவது போன்ற சில்லுக்கொண்ட பெட்டியைப் பூட்டலாம். நல்ல விளையாட்டு.
  • ஆமியும் இயக்கமும் - நாங்கள் எப்படி விளையாடினாங்கள் எண்டால், ஒரு காவலரண் போன்ற ஒன்றை சிரட்டைகள் மற்றும் செங்கல்கள்/சீமந்துக்கல்கள் கொண்டு அடுக்கிக் கட்டிவிட்டு அதற்குள் இருந்தபடி ஆமியின் முன்னேற்றத்தைத் தடுப்பது போன்ற விளையாட்டு - கற்களால் எறிபடுவது, தண்ணியூற்றி மணலால் செய்யப்பட்ட கற்களை கூடுதலாகப் பயன்படுத்தினோம்; அவை பட்டால் உடைந்துவிடும். தடிகள் கொண்டு துவக்குகளும் உருவாக்குவோம்.  கதை எப்படியெண்டால், ஒரு கன்னை ஆமியாயும் இன்னொரு கன்னை இயக்கமாயும் இருக்கும். ஆமிக்கன்னை முன்னேறி வர அடிதான். பிறகு கன்னை மாறுவம், ஆனால் சில அறுவான்கள் கறுவியம் வைச்சுப்போடுவாங்கள். போன முறை எங்களிட்டை வாங்கினத்துக்கு இந்த முறை எங்களுக்குத் தருவாங்கள். பாவியள். 😂🤣😂🤣

 

கால்களால் விளையாடுவது

  • கீம்ஸ் - இதன் எழுத்தைச்சொல்லி விளையாடுவது. நானிது விளையாடுவது குறைவு. காலை மிதிச்சு மிதிச்சு விளையாடுவது. எனக்கு மறந்துவிட்டது.

 

தொட்டால் பிடிப்பது - ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவன் ஓடும் ஏனையோரில் ஆரேனும் ஒருவனை துரத்திச்சென்று தொட வேண்டும். பின்னார் அந்த தொடப்பட்டவனே பிடிப்பவர் ஆகுவார். இதில் பல விதிகள் உண்டு.

புளிச்சல் - பந்துகளால் ஒரு கன்னையைச் சேர்ந்தவர் மறு கன்னையைச் சேர்ந்தவர்களுக்கு எறிவது. பட்டுது எண்டால் நல்லாப் புளிச்சுப்போடும்.

பந்தை உயரத்திற்கு எறிந்து பிடிப்பது

 

 

 

அமர்ந்தபடி விளையாடுபவை

கைகளால் விளையாடுவது:- 

  • தக்காளி புக்காளி - இந்தப் பாடலிற்கு ஏற்ப கையை அகம் புறமாக திருப்பி எடுத்து விளையாடுவது. பாடல்: "தக்காளி புக்காளி தர்மத் தக்காளி கப்பல் வந்து பிரண்டடிக்க சுப்பையா." 
  • பென்சிலை வைச்சு ஒரு பாட்டு உள்ளது. அது மறந்துபோனன். அது கலர் பென்சிலின் எப்யரைச் சொல்லச்சொல்ல கைவிரல்களை அதற்கேற்ப மடிப்பது.
  • வாழைக்காய் தோழைக்காய் - இது ஆர் குசு விட்டது என்பதை கண்டுபிடிக்க பயன்படுத்துவது. பாடல்: "வாழைக்காய் தோழைக்காய் வண்டியில் ஏத்தற்காய் அஸ் பஸ் குஸ்." கடைசியாக நிற்பவனே அந்த நாறல் வேலையைச் செய்த நன்னாறிப்பயலாகக் கருதப்படுவான். 😂🤣.... ஐயோ பாவம்!

 

பொருட்கள் கொண்டு விளையாடுவது

  • ஆடுபுலி ஆட்டம்
  • மோட்டர் வைத்து விளையாடுவது

 

காட்ஸ் சேகரிப்பு:
கிரிக்கட் காட்ஸ், இந்த மல்யுத்தம் போன்ற சண்டையாளர்களின் படங்கள் பொறித்த காட்ஸ், அதைவிட இன்னபிற காட்ஸ் என்று பல விதமான காட்ஸை சேகரித்து அதை பிறருடன் பரிமாறிக்கொள்வது. இது 2008 இறுதியில் விளையாடத் தொடங்கினேன்.

பூவரசு பீப்பீ - பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதுவது.

 

Edited by நன்னிச் சோழன்
கூடுதல் பற்றியம் சேர்ப்பு
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள்.......நன்றி நன்னி........!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.