Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகப்புத்தகத்தில் அவமதித்ததால் வந்த வினை: கடத்தி சென்று சிலுவையில் அறையப்பட்ட இருவர் - சந்தேக நபர் தப்பியோட்டம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் அவமதித்ததால் வந்த வினை: கடத்தி சென்று சிலுவையில் அறையப்பட்ட இருவர் - சந்தேக நபர் தப்பியோட்டம்..!

(செ.தேன்மொழி)
முகப்புத்தகம் (பேஸ்புக்) ஊடாக தன்னை அவமதித்த இருவரை கடத்திச் சென்று சிலுவையில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மாந்திரீகர் தலைமறைவாகியுள்ள நிலையில் விசாரணைகளை பலகொல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

dada.jpg

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கண்டி - பலகொல்ல பகுதியில், நேற்று முன்தினம் 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகப்புத்தகம் ஊடாக தன்னை அவமதித்தமை தொடர்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான 30 வயதுடைய துஷ்மந்த என்ற மாந்திரீகர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அம்பிட்டிய மற்றும் மேலும் சில பகுதிகளில் மாந்திரீக நிலையங்களை நடாத்தி வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரை முக புத்தகத்தில் அவமதித்து பதிவுகளை வெளியிட்ட அவரது நண்பர்கள் இருவரை அம்பிட்டிய பகுதிக்கு அழைத்து சென்று  இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளார்.  மரக்கட்டைகளினாலான சிலுவையில் இருவரையும் அறைந்துள்ளார்.

சம்பவத்தில் பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரும் , கடுவெல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிருவரும் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எவ்வாறாயினும் பிரதான சந்தேக நபர் அந்த பகுதியிலிருந்து தப்பி சென்று தலைமறைவாகியுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/108300

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் ட்ரம் அந்த செய்தியை பார்க்க வாய்ப்பு இருக்காது அந்த மனிசன் பதவியில்  இருக்கும்மட்டும் அநேகர் அறிந்தோ அறியாமலோ தினமும் நையாண்டி பண்ணி கேலி சித்திரம்களும் அநாகரிக சொல்லாடலும் வந்த வண்ணமே இங்கு இப்படி .

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நான் யாரையாவது மனம் புண்படுத்தி இருந்தால் (அதென்ன இருந்தால் 🤣) இந்த பதிவை பொது மன்னிப்பு கோரலாக கருதி என்னை மன்னித்து விடவும்.

அல்லது @nunavilanமாரி திரிக்கு திரி துரத்தி வந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் என்னை தாக்கி எழுதினாலும் ஓகே.

சிலுவை எல்லாம் சுமக்க முடியாது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

யாழில் நான் யாரையாவது மனம் புண்படுத்தி இருந்தால் (அதென்ன இருந்தால் 🤣) இந்த பதிவை பொது மன்னிப்பு கோரலாக கருதி என்னை மன்னித்து விடவும்.

அல்லது @nunavilanமாரி திரிக்கு திரி துரத்தி வந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் என்னை தாக்கி எழுதினாலும் ஓகே.

சிலுவை எல்லாம் சுமக்க முடியாது🤣.

உங்களுக்கு ஒரு விதி மற்றவர்களுக்கு ஒரு விதி இருக்க முடியாது. யாரும் இணைப்பு கொடுக்கவில்லை அல்லது  எதுவாகினும்  குய்யோ முறையோ என ஓலமிடுபவர் நீங்கள். பின்னர் நீங்கள் எப்படி தெரிந்து கொண்டு விதியை மீறுகிறீர்கள் என்பதை தனிப்பட சொல்லாமல் பொதுப்படையாக உங்களுக்கு காட்டவே நான்  அப்படி செந்தேன். 
உங்களுக்காக என்னாலும் சிலுவையை சுமக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

யாழில் நான் யாரையாவது மனம் புண்படுத்தி இருந்தால் (அதென்ன இருந்தால் 🤣) இந்த பதிவை பொது மன்னிப்பு கோரலாக கருதி என்னை மன்னித்து விடவும்.

அல்லது @nunavilanமாரி திரிக்கு திரி துரத்தி வந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் என்னை தாக்கி எழுதினாலும் ஓகே.

சிலுவை எல்லாம் சுமக்க முடியாது🤣.

கவலை வேண்டாம் கோசான்-சே அவர்களே! எங்களுக்காகவே சிலுவை சுமந்து அதில் அறையப்படீர் என்று மக்கள் ஏசுபிரானைக் கடவுளாக ஏற்று வணங்குகிறார்கள்.😌

கருத்துக்களுக்காகவே சிலுவையில் அறையப்பட்டார் கோசான்-சே என்று, கருத்துக்கள உறவுகளாகிய நாங்கள், உங்களை யாழ்களத்தில் கடவுளாக ஏற்று வணங்குவோம்.🙏  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

யாழில் நான் யாரையாவது மனம் புண்படுத்தி இருந்தால் (அதென்ன இருந்தால் 🤣) இந்த பதிவை பொது மன்னிப்பு கோரலாக கருதி என்னை மன்னித்து விடவும்.

அல்லது @nunavilanமாரி திரிக்கு திரி துரத்தி வந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் என்னை தாக்கி எழுதினாலும் ஓகே.

சிலுவை எல்லாம் சுமக்க முடியாது🤣.

 

6 hours ago, nunavilan said:

உங்களுக்கு ஒரு விதி மற்றவர்களுக்கு ஒரு விதி இருக்க முடியாது. யாரும் இணைப்பு கொடுக்கவில்லை அல்லது  எதுவாகினும்  குய்யோ முறையோ என ஓலமிடுபவர் நீங்கள். பின்னர் நீங்கள் எப்படி தெரிந்து கொண்டு விதியை மீறுகிறீர்கள் என்பதை தனிப்பட சொல்லாமல் பொதுப்படையாக உங்களுக்கு காட்டவே நான்  அப்படி செந்தேன். 
உங்களுக்காக என்னாலும் சிலுவையை சுமக்க முடியாது.

சே......உங்களை நம்பி உங்களுக்காக கல்லறையில் இருந்து கொண்டுவந்த சிலுவையை இனி அடுப்பெரிக்கத்தான் பவிக்கணும் போல இருக்கு......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

 

சே......உங்களை நம்பி உங்களுக்காக கல்லறையில் இருந்து கொண்டுவந்த சிலுவையை இனி அடுப்பெரிக்கத்தான் பவிக்கணும் போல இருக்கு......!   😁

அவசரப்படக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

உங்களுக்கு ஒரு விதி மற்றவர்களுக்கு ஒரு விதி இருக்க முடியாது. யாரும் இணைப்பு கொடுக்கவில்லை அல்லது  எதுவாகினும்  குய்யோ முறையோ என ஓலமிடுபவர் நீங்கள். பின்னர் நீங்கள் எப்படி தெரிந்து கொண்டு விதியை மீறுகிறீர்கள் என்பதை தனிப்பட சொல்லாமல் பொதுப்படையாக உங்களுக்கு காட்டவே நான்  அப்படி செந்தேன். 
உங்களுக்காக என்னாலும் சிலுவையை சுமக்க முடியாது.

1. நீங்கள் இணைத்த குமார், 13ம் திருத்தம் பற்றிய நிக்சனின் குறிப்பில் எழுதியது யார் என கேட்டது சுட்டு விட்டது போலும்? உண்மையில் அது உங்களில் குறை சொல்வதற்க்காக கேட்கப்பட்டதல்ல. அந்த கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். அங்கே வந்தவர்கள் யார் என்பதை நியாபகம் படுத்த முடியவில்லை. அதுதான் கேட்டேன்.

2. நான் சாதாரண கருத்தாளர். நீங்கள் நிர்வாகி. என்னை நீங்கள் பொதுபடையாக சுட்டி காட்ட வேண்டிய அவசியமில்லை. அது நிர்வாக நடைமுறையும் இல்லை. நான் விதி மீறினால் - வெட்டி வீசி விட்டு போய்கிட்டே இருக்கலாம்.

3 hours ago, Paanch said:

கவலை வேண்டாம் கோசான்-சே அவர்களே! எங்களுக்காகவே சிலுவை சுமந்து அதில் அறையப்படீர் என்று மக்கள் ஏசுபிரானைக் கடவுளாக ஏற்று வணங்குகிறார்கள்.😌

கருத்துக்களுக்காகவே சிலுவையில் அறையப்பட்டார் கோசான்-சே என்று, கருத்துக்கள உறவுகளாகிய நாங்கள், உங்களை யாழ்களத்தில் கடவுளாக ஏற்று வணங்குவோம்.🙏  

ஆமென் 

54 minutes ago, suvy said:

 

சே......உங்களை நம்பி உங்களுக்காக கல்லறையில் இருந்து கொண்டுவந்த சிலுவையை இனி அடுப்பெரிக்கத்தான் பவிக்கணும் போல இருக்கு......!   😁

🤣 அண்ணா சுவையண்ணா ஏதோ பிளான் பண்றார்

 

48 minutes ago, சுவைப்பிரியன் said:

அவசரப்படக் கூடாது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.