Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2021 at 17:36, கற்பகதரு said:

ஏனண்ணை சரணடைஞ்சவை? அழிப்பாங்கள் எண்டு விளக்கமிருக்கேலையோ? 

 

2 hours ago, பெருமாள் said:

அப்ப  என்ன செய்ய சொல்ல வருகிறீர்கள் ?

வெண்டிருக்கலாம் இல்லையோ? தலைவர் உலகத்திலேயே சிறந்த இராணுவத்தளபதி. வரலாறு காணாத இராணுவ திபுணர். இப்படியிருக்க இவங்கள் சரணடைஞ்சு இப்படி எல்லாத்தையும் தோத்துப்போக செய்திட்டாங்களே…

  • Replies 75
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

ஜேபி & சமாதான நீதவான்  இரண்டுக்கும் என்ன வித்தியாசம் கோஷான்?

இரெண்டு ஒண்டுதான் உடையார்.

ஜஸ்டிஸ் ஒவ் த பீஸ் என்பதன் சுருக்கம்தான் ஜேபி.

ஆனால் இங்கிலாந்தில் இவர்களில் மிக பெரும்பான்மையானோர் மஜிஸ்றேட் கோர்ட்களில், மஜிஸ்ரேட்டாக கடமை புரிவர். 6 மாதம் வரை சிறைக்கு அனுப்பும் சிறு குற்றங்களை விசாரிப்பர். இங்கே மஹிஸ்ரேட் ஆக சட்ட படிப்பு தேவையில்லை.

ஆனால் இலங்கையில் மஜிஸ்ரேட் ஆக சட்டப்படிப்பு அவசியம்.

இலங்கையில் 3 வகை ஜேபி உண்டு.

1. உத்தியோக பற்றற்ற மஜிஸ்ரேட் ஜேபி -இவர்கள்  சட்டத்தரணிகள். மஜிஸ்ரேர்ட்க்கு வரமுடியாத நேரத்தில் மஜிஸ்ர்ரெட்டாக இவர்கள் தற்காலிகமாக செயல்படலாம்.

2. அகில இலங்கை ஜேபி - இவர்கள் சட்டதரணிகள் அல்ல. ஒப்பம் இடல், அத்தாட்சி படுத்தல் அதிகாரம் மட்டும் உடையோர்.

3. மாவட்ட ஜேபி - 2ஐ போலவே ஆனால் ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிகாரம் உள்ளோர்.

10 hours ago, குமாரசாமி said:

கோதாரிவிழ என்னெண்டப்பா எல்லாத்தையும் ஞாபகம் வைச்சிருக்கிறியள்?😂
நானே மறந்து போனன்... 🤣

🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இரெண்டு ஒண்டுதான் உடையார்.

ஜஸ்டிஸ் ஒவ் த பீஸ் என்பதன் சுருக்கம்தான் ஜேபி.

ஆனால் இங்கிலாந்தில் இவர்களில் மிக பெரும்பான்மையானோர் மஜிஸ்றேட் கோர்ட்களில், மஜிஸ்ரேட்டாக கடமை புரிவர். 6 மாதம் வரை சிறைக்கு அனுப்பும் சிறு குற்றங்களை விசாரிப்பர். இங்கே மஹிஸ்ரேட் ஆக சட்ட படிப்பு தேவையில்லை.

ஆனால் இலங்கையில் மஜிஸ்ரேட் ஆக சட்டப்படிப்பு அவசியம்.

இலங்கையில் 3 வகை ஜேபி உண்டு.

1. உத்தியோக பற்றற்ற மஜிஸ்ரேட் ஜேபி -இவர்கள்  சட்டத்தரணிகள். மஜிஸ்ரேர்ட்க்கு வரமுடியாத நேரத்தில் மஜிஸ்ர்ரெட்டாக இவர்கள் தற்காலிகமாக செயல்படலாம்.

2. அகில இலங்கை ஜேபி - இவர்கள் சட்டதரணிகள் அல்ல. ஒப்பம் இடல், அத்தாட்சி படுத்தல் அதிகாரம் மட்டும் உடையோர்.

3. மாவட்ட ஜேபி - 2ஐ போலவே ஆனால் ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிகாரம் உள்ளோர்.

🤣

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

பிரெஞ்சு சிஸ்டம் பற்றி எனக்கு போதிய அறிவில்லை அண்ணை.

இங்கே மஜிஸ்ரேட்டாக வர நாங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களாக கூப்பிடுவதில்லை.

ஆனால் யூரி சேவைக்கு அவர்களாகவே கூப்பிடுவார்கள்.

மஜிஸ்ரேட் கோர்ட்டுக்கு மேல் பட்ட குற்ற வழக்குகள் யூரி சபை முறையில் நடத்தபடும்.

வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

உங்களுக்கு வந்த கடிதம் இது போன்றதா, அல்லது வேறு ஏதுமா என என்னால் சரியாக கூற முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

பிரெஞ்சு சிஸ்டம் பற்றி எனக்கு போதிய அறிவில்லை அண்ணை.

இங்கே மஜிஸ்ரேட்டாக வர நாங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களாக கூப்பிடுவதில்லை.

ஆனால் யூரி சேவைக்கு அவர்களாகவே கூப்பிடுவார்கள்.

மஜிஸ்ரேட் கோர்ட்டுக்கு மேல் பட்ட குற்ற வழக்குகள் யூரி சபை முறையில் நடத்தபடும்.

வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

உங்களுக்கு வந்த கடிதம் இது போன்றதா, அல்லது வேறு ஏதுமா என என்னால் சரியாக கூற முடியவில்லை.

அதே தான். 

யூரிகள் சபை என்பதை எழுத மறந்து விட்டேன்.

மக்களுக்கும் இதில் பெரிய அளவிலான தெளிவில்லாது விட்டாலும் உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார்கள்.

என்னுடைய பைல் கொஞ்சம்........ ஆனது என்பதால் கூடுதலாக யோசித்தேன். 

(வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

அதனால் தான் வெளியே சொல்வது குற்றம் என்று சொன்னேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

அதே தான். 

யூரிகள் சபை என்பதை எழுத மறந்து விட்டேன்.

மக்களுக்கும் இதில் பெரிய அளவிலான தெளிவில்லாது விட்டாலும் உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார்கள்.

என்னுடைய பைல் கொஞ்சம்........ ஆனது என்பதால் கூடுதலாக யோசித்தேன். 

(வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

அதனால் தான் வெளியே சொல்வது குற்றம் என்று சொன்னேன்.

ஓம், நடக்கும் விசயத்தை வெளியே சொல்லகூடாது. அடுத்த முறை வந்தால் கட்டாயம் போங்கள். இது ஒரு கடமை அத்தோடு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஓம், நடக்கும் விசயத்தை வெளியே சொல்லகூடாது. அடுத்த முறை வந்தால் கட்டாயம் போங்கள். இது ஒரு கடமை அத்தோடு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும்.

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

 

நாம விட்டாத்தான்  தம்பிமாரும் அவிட்டு  விடுகிறார்கள்😍

வாழ்த்துக்கள்

இதுவும் ஒரு அங்கீகாரம் தான்

 

 

45 minutes ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

ஆம்

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

நான் எதுவித தனியார் சம்பத்தப்பட்ட விடயங்களை பகிரவில்லை தானே ஸுவாமி.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

 வேலையில் இருந்து சம்பளத்தோடு விடுப்பு வேற கிடைக்கும். உங்கள் அதிஸ்டம் நல்லதொரு இண்டெரெஸ்டிங்கான வழக்கில் வேலை பார்த்துள்ளீர்கள். சில high profile வழக்குகளுக்கு ஹோட்டலும் புக் பண்ணி தருவார்கள்.

வழக்கு நடக்கும் போது எதையும் யாரிடமும் பகிர கூடாது.

வழக்கு முடிந்த பின் கோர்ட்டில் நடந்தவை பற்றி கதைக்கலாம், ஆனால் யூரி அறையில் நடந்தவை பற்றி அப்போதும் பேச முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி கோஷன். வேலை தளத்தில் இருந்து சம்பளம் தடையில்லாமல் வந்தது. 
ஜூரி கடமை செய்ததினால் ஒரு சிறிய (அளாவான்ஸ்) பணமும்  கிடைத்தது. 
வழக்கின் தீர்ப்புக்கு முதல்நாள் "டெலிபரேஷன்" ஒரு நாள் நடந்தது. அப்போது நீங்கள் சொன்னதை போல ஒரு நீதிமன்றத்துக்கு பக்கத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனிஅறையும் தந்தார்கள். 
தொலைக்காட்சி, கைத்தொலைபேசி, பத்திரிகை, மடிக்கணனி எதுவும் எங்களுடன் வைத்திருக்க தடை இருந்தது. ஒருவர புகை பிடிக்க வெளியே போனாலும் 13 ஐயும் பேரும் சேர்த்தே கூட்டிச்செல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 20:45, விசுகு said:

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Sasi_varnam said:

 

பிறகென்ன யூரி அனுபவத்தை பாட்டாகவே படித்து விட்டீர்கள்👏🏾👏🏾👏🏾.

12 minutes ago, Sasi_varnam said:

என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 

👆🏼இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே🤣

13 minutes ago, Sasi_varnam said:

இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள்

இங்கே குற்றம்சாட்ட பட்டவர் யூரியை நிராகரிக்க தகுந்த காரணம் சொல்லபட வேண்டும். இனம், நிறம், வேலை இப்படி சொல்ல முடியாது. ஆனால் இவர் செய்யும் வேலை (பத்திரிகையாளர்) ஏற்புடையதல்ல போன்றவை, வழக்கின் தன்மையை பொறுத்து ஜட்ஜால் ஏற்கப்படும்.

இலங்கையில் குற்றம் சாட்டபட்டவருக்கு யூரியை தேர்வதில் அதிக சலுகைகள் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் குற்றம் சாட்டபட்ட இராணுவ வீரர்கள் தனி சிங்கள யூரிகளை மட்டுமே கோருவார்கள்.

அமைதியற்ற சூழல் நிறைந்த வட அயர்லாந்தில் சில அரசியல் சாயம் உள்ள வழக்குகளுக்கு யூரி முறையையை கைவிட்டு 3 ஜட்கள் தீர்க்கும் முறை இருந்தது. யூரிகள் கத்தோலிக்கர், புரிட்டஸ்தாந்து என்ற அடிப்படையில் தீர்பளிக்ககூடாது என்பதால்.

13 hours ago, புங்கையூரன் said:

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

இங்கே அழைப்பு வரும் பத்திரத்தில் தக்க காரணம் சொன்னால் விலக்கு அளிப்பார்கள். விலக்கு கிடைக்காவிட்டால் அழைத்த திகதியன்று போய் ஜட்ஜிடமும் சொல்லலாம். 

சட்டம், காவல்துறை சம்பந்தபட்ட வேலைகளுக்கு தானியங்கி விலக்கு. நீங்கள் விரும்பினாலும் போக முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே🤣

அது ஒரு அயர்ச்சி தரும் சோதனை ... பிறகு எல்லாம் சரியாகி விடும்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

நன்றி சகோ. அடுத்து செல்லும் பலருக்கு உதவக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்.. தனது மக்களின் அரசியல் சமூகத் தேவை என்ன என்பதை கேடிட்டு காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறார். 

இவர் நோர்வே அரசியலிலும் சரி.. சர்வதேச அரசியல் அரங்கிலும் சரி.. இன்று ஓர் அனாதையானது எப்படி என்று அலசலாமே...!! இவர் இத்தனை பேரை சந்திச்சும்.. ஏன் தோல்வி அடைந்தார் உள்ளூரிலும்.. சர்வதேச அரங்கிலும்.

பிரபாகரன் இவரைப் போன்ற கையாலாகதவர்களின் வாக்குறுதியை நம்பியது தான் இறுதியில் அவருக்கு தோல்வியாக அமைந்துவிட்டது. அவர் தானாக முடிவெடுத்து செயற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் சவால்களை வென்றே வந்திருக்கிறார். 

மொத்தத்தில்.. பிரபாகரன் தனது மக்களின் அரசியல் சமூக தேவை என்ன என்பதை சரியாக விளங்கிக் கொண்டிருந்தார்.. ஆனால் சொல்கைம் போன்றவர்களுக்கு அந்த புரிதல் இல்லை. அதனால்.. சொந்த நாட்டிலும் தோல்வி.. சர்வதேச அரங்கிலும் தோல்வி. இதைப் பற்றி ஏன் செய்தியாளர்கள் ஆழமான கேள்விகளை தொடுக்கவில்லை..???! 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2021 at 10:10, Sasi_varnam said:


அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள்.

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?
 

On 9/7/2021 at 10:31, goshan_che said:

இலங்கையில் குற்றம் சாட்டபட்டவருக்கு யூரியை தேர்வதில் அதிக சலுகைகள் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் குற்றம் சாட்டபட்ட இராணுவ வீரர்கள் தனி சிங்கள யூரிகளை மட்டுமே கோருவார்கள்.

குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கேட்டு பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
 

23 hours ago, nedukkalapoovan said:

சொல்கைம் போன்றவர்களுக்கு அந்த புரிதல் இல்லை. அதனால்.. சொந்த நாட்டிலும் தோல்வி.. சர்வதேச அரங்கிலும் தோல்வி. இதைப் பற்றி ஏன் செய்தியாளர்கள் ஆழமான கேள்விகளை தொடுக்கவில்லை..???! 

நோர்வேஜியன் மொழியில் வரும் சொல்ஹைமுக்கு எதிரான கட்சிகளுக்கு சார்பான செய்தித்தாள்களில் இவ்வாறான கேள்விகள் வந்திருக்கும், நோர்வேயில் உள்ள தமிழர்களை கேட்டுப்பாருங்கள்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?
 

குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கேட்டு பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
 

நோர்வேஜியன் மொழியில் வரும் எதிர்க்கட்சிகளுக்கு சார்பான செய்தித்தாள்களில் இவ்வாறான கேள்விகள் வந்திருக்கும், நோர்வேயில் உள்ள தமிழர்களை கேட்டுப்பாருங்கள்.

1. கடவுளின் பெயரால் - என்பதற்கு பதிலாக உளப்பூர்வமாக என்று எந்த புத்தகத்திலும் கைவைக்காமல் உறுதிமொழி எடுக்கலாம்.

2. கேள்விபட்டதில்லை ஆனால் சிப்பாய்கள் தனி சிங்கள யூரிகளை கோருவதுபோல் தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கோர முடியும் என்றே ஊகிக்கிறேன். ஆனால் இது என்னை பொறுத்தவரை ஒரு சரியான நடைமுறை அல்ல - இருவருக்கும். அண்மையில் நடந்த வழக்கு ஒன்று trial at bar முறையில் ஜட்ஜுகள் மட்டுமே தீர்த்தது என நினைக்கிறேன். இதே போல் முன்பு தந்தை செல்வா மீதும் trial at bar முறையில் வழக்கு நடந்ததாக அறிந்துள்ளேன்.

https://www.bbc.co.uk/news/uk-24588854
 

The oath, still sworn by witnesses and defendants as they hold a holy book, has given the English language one of its most familiar sentences.

"I swear by Almighty God [to tell] the truth, the whole truth, and nothing but the truth."

Other faiths can take the oath on other books - Muslims on the Koran, Jews on the Old Testament, for example. 

Atheists are allowed to "solemnly, sincerely and truly affirm" instead of swearing.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?

யூரி சேவைக்கு அழைக்கப்பட்டால் அழைத்தவர்களிடம் கேட்டுப்பார்த்தால் விஷயம் தெளிவாச்சு.

On 10/7/2021 at 03:31, goshan_che said:

இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே

எதையோ வைச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணுகிற மாதிரி தெரியுது, அவிட்டு விட வேண்டியது தங்களின் அனுபவத்தை நாங்களும் ரசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2021 at 03:10, Sasi_varnam said:

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

அருமையான விளக்கத்துக்கு நன்றி..சசி!

 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2021 at 09:04, பெருமாள் said:

பலமுறை விளங்கப்படுத்தியும் விளங்காமல் நடிப்பது ஒரு கலை .

அப்படியல்ல பெருமாள்! தங்கள் கொள்கையை மற்றவர்கள் மேல் திணிக்கும்வரை விளங்காததுபோல் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 07:12, விசுகு said:

இப்பவும் என்ன?

அவர் வந்து வந்து எண்ணையை தானே விடுகிறார்?😂

இங்கு சிலர் தம் தலைக்கு பொருத்தமில்லாத தொப்பியை போட்டுகொண்டு உலவுகிறார்கள். சிலசமயம் தமது தலையை மறந்து சில கருத்துக்களால் குஷியாகி குதிக்கிற குதியில் தொப்பி கழண்டு விழுந்துடுது. இருந்தாலும்; அவர்களை பராக்கு பார்த்ததில் விழுந்துடுத்து என்று சொல்லி  மீண்டும் அதே தொப்பியை போட்டு தங்கள் தலையை மறைக்கப்பார்க்கிறார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்குது என்று  நாமும் கடந்து போவோம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.