Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெயிட்டி ஜனாதிபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரீபியன் நாட்டின் தலைநகருக்கு வெளியே தனது தனியார் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் ஒரு ஆயுதமேந்திய தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார் என்று நாட்டின் செயல் பிரதமர் புதன்கிழமை தெரிவித்தார். முதல் பெண்மணி மார்ட்டின் மோஸும் அதிகாலை வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார்.

https://www.nydailynews.com/news/world/ny-haitian-president-jovenel-moise-killed-attack-home-20210707-q4dxxwwmnvfftp5atncwsterzm-story.html#nt=pf-double%20chain~top-version1~flex%20feature~curated~haiti-703a~Q4DXXWWMNVFFTP5ATNCWSTERZM~1~1~3~7~art%20yes

ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் புதன்கிழமை அதிகாலை தனது தனியார் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்டதாக நாட்டின் செயல் பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார்.
அதிகாலை 1 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் குழு மொய்சின் வீட்டைத் தாக்கி, அரச தலைவருக்கு படுகாயமடைந்தது என்று ஜோசப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஹைட்டியின் முதல் பெண்மணியும் சுட்டுக் கொல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். "கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல்" என்று அவர் விவரித்ததை பிரதமர் கண்டித்து அமைதியாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

"நாட்டின் பாதுகாப்பு நிலைமை ஹைட்டிய தேசிய காவல்துறை மற்றும் ஹைட்டிய ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மாநிலத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும், தேசத்தைப் பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன." மொய்ஸுக்கு 53 வயது. முன்னாள் வாழை ஏற்றுமதியாளர் கடந்த ஆண்டு பெரும்பகுதியை தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் எதிர்க்கட்சிகளுடன் அரசியல் போரை நடத்தினார்.
மொய்ஸ் தனது ஐந்தாண்டு கால அவகாசம் 2022 இல் முடிவடைய வேண்டும் என்று கூறினார் - இது அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க நாடுகளின் அமைப்பு ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வாதிட்டது, ஒரு ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவர் பதவியேற்கும்போது அல்லாமல், அந்தக் காலத்தின் கடிகாரத்தைத் தொடங்கும் அரசியலமைப்பு விதிகளை மேற்கோளிட்டுள்ளார்.

https://www.cnn.com/americas/live-news/haiti-president-assassinated-updates-intl/index.html

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

ஹைட்டியின் முதல் பெண்மணியும் சுட்டுக் கொல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

சுட்டுக்  கொல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவது சாத்தியமா? ஊடகங்கள் சிலவேளை கருத்துபிழைகளைப் பார்ப்பதில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சுட்டுக்  கொல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவது சாத்தியமா? ஊடகங்கள் சிலவேளை கருத்துபிழைகளைப் பார்ப்பதில்லை. 

ரஞ்சித்
ஆங்கில செய்தியை அப்படியே கூகிளில் மொழிபெயர்த்து காப்பி பேஸ்ட்.
அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சுட்டுக்  கொல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவது சாத்தியமா? ஊடகங்கள் சிலவேளை கருத்துபிழைகளைப் பார்ப்பதில்லை. 

அடையாளம் தெரியாத குழுவினரால் ஹைட்டிய ஜனாதிபதி படுகொலை!

நேற்று இந்தச் செய்தியை.. வாசிக்கும்  போது, 
இந்த வரி... எனது கண்ணில் படாமல்  போய் விட்டது. :grin:

இருந்தும்... 150 பேர், அதனை கவனிக்காமல் வாசித்து விட்டு போயிருக்கிறார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நேற்று இந்தச் செய்தியை.. வாசிக்கும்  போது, 
இந்த வரி... எனது கண்ணில் படாமல்  போய் விட்டது. :grin:

இருந்தும்... 150 பேர், அதனை கவனிக்காமல் வாசித்து விட்டு போயிருக்கிறார்கள். 🤣

இணைத்த எனது கண்ணுக்கே தெரியவில்லையே.!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

இணைத்த எனது கண்ணுக்கே தெரியவில்லையே.!

கூகிள், சிலவேளை... பயங்கரமாக கவிழ்த்து விடும். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை ; 28 கொலையாளிகள் அடையாளம்

வெளிநாட்டில் பயிற்சி பெற்ற 28 கொலையாளிகளைக் கொண்ட ஒரு குழு இந்த வார தொடக்கத்தில் ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்சை படுகொலை செய்ததாக அந் நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

அவர்களில் 26 பேர் கொலம்பியர்கள், மற்றைய இருவர் ஹெய்ட்டி வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் என காவல்துறைத் தலைவர் லியோன் சார்லஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

சந்தேக நபர்களில் 8 பேரை இன்னும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுன்ன. அதே நேரத்தில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

VZ5bPzyM.png

மீதமுள்ள சந்தேக நபர்கள் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலைத் திட்டமிட்டவர் யார் அல்லது அதைத் தூண்டியது எது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

53 வயதான மொய்ஸ் புதன்கிழமை அதிகாலையில் அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் 15 நாள் அவசரகால நிலை நடைமுறையில் உள்ளது.
 

https://www.virakesari.lk/article/109072

 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு கூலிப்படையினரே ஹெய்ட்டி அதிபரை கொலை செய்ததாக தகவல்

 

800 வெளிநாட்டு கூலிப்படையினரே ஹெய்ட்டி அதிபரை கொலை செய்ததாக தகவல்

கரீபிய நாடான ஹைட்டி(Haiti) அதிபர் ஜோவானெல் மோசேகொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிநாட்டவர்களின் சதி இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கரீபியன் கடல்பகுதியில் உள்ள தீவு நாடு ஹைதி. இதன் அதிபரான ஜோவானெல் மோசே, போர்ட்டா பிரின்ஸ் நகரில் தனிப்பட்ட வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன் தினம் ஆயுதங்களோடு அவரது வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சுட்டுக் கொலை செய்தது. இதனை அடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதிபர் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், வெளிநாட்டவர்கள் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. கொலம்பியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் 26 பேர் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றியுள்ளனர் எனக் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், மற்றவர்களை தேடி வருவதாக கூறியுள்ளனர்

 

https://www.ilakku.org/haitian-presiden-killed-suspects/

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

வெளிநாட்டு கூலிப்படையினரே ஹெய்ட்டி அதிபரை கொலை செய்ததாக தகவல்

 

800 வெளிநாட்டு கூலிப்படையினரே ஹெய்ட்டி அதிபரை கொலை செய்ததாக தகவல்

கரீபிய நாடான ஹைட்டி(Haiti) அதிபர் ஜோவானெல் மோசேகொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிநாட்டவர்களின் சதி இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கரீபியன் கடல்பகுதியில் உள்ள தீவு நாடு ஹைதி. இதன் அதிபரான ஜோவானெல் மோசே, போர்ட்டா பிரின்ஸ் நகரில் தனிப்பட்ட வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன் தினம் ஆயுதங்களோடு அவரது வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சுட்டுக் கொலை செய்தது. இதனை அடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதிபர் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், வெளிநாட்டவர்கள் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. கொலம்பியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் 26 பேர் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றியுள்ளனர் எனக் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், மற்றவர்களை தேடி வருவதாக கூறியுள்ளனர்

 

https://www.ilakku.org/haitian-presiden-killed-suspects/

 

செட் பண்ணி அனுப்பினவர்கள், தப்பி விடுவார்கள், இவர்கள் உள்ள அல்லது வெடி விழும்....

***

அடேய் வெண்ணெய்களா....

ஒப்பரேஷன் சக்ஸஸ், டாக்டர் முடிஞ்சார் கதை போல.... வேலை முடிகிறதுக்கு பிளான் போட முதல், தப்பி ஓட பிளான் போட்டிருக்கவேணும். 😁

நம்ம வடிவேலு சொல்லி இருக்கிறார்...

பிக்காளித்தனம் பண்ணுவதனாலும், பிளான் பண்ணி பண்ணனும்... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

செட் பண்ணி அனுப்பினவர்கள், தப்பி விடுவார்கள், இவர்கள் உள்ள அல்லது வெடி விழும்....

***

அடேய் வெண்ணெய்களா....

ஒப்பரேஷன் சக்ஸஸ், டாக்டர் முடிஞ்சார் கதை போல.... வேலை முடிகிறதுக்கு பிளான் போட முதல், தப்பி ஓட பிளான் போட்டிருக்கவேணும். 😁

நம்ம வடிவேலு சொல்லி இருக்கிறார்...

பிக்காளித்தனம் பண்ணுவதனாலும், பிளான் பண்ணி பண்ணனும்... 😁

எனக்கென்னவோ எங்கட மாலைதீவு  தான் ஞாபகத்துக்கு  வந்து  தொலைக்குது??🙂

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. அமைப்பு- அமெரிக்காவிடம் உதவி கோரும் ஹெய்டி!

 

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு பிறகு, அங்கு ஏற்பட்டுள்ள அதிகார மோதலினால் நிலவி வரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. அமைப்பு மற்றும் அமெரிக்காவிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது.

அரசியல் ரீதியிலான குழப்பம் மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை கட்டுப்படுத்த படைகளை அனுப்பும் படை இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக நாட்டின் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த படைகளை அனுப்பி உதவும்படி ஐ.நா. மற்றும் அமெரிக்காவுக்கு நாட்டின் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த படைகளை அனுப்பி உதவும்படி ஐ.நா. மற்றும் அமெரிக்காவுக்கு ஹெய்டி அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளது.

படைகளை அனுப்பும்படி ஹெய்டி அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையை நிராகரித்துள்ள அமெரிக்கா தற்போதைய சூழ்நிலையில் படைகளை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது.

ஆனால், ஜனாதிபதி கொலை தொடர்பாக விசாரணைக்கு எஃப்.பி.ஐ. (தேசிய புலனாய்வு அமைப்பு) மற்றும் உட்துறை அமைச்சகம் அதிகாரிகளை ஹெய்டிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

அதேபோல், ஐ.நா. அமைதிப்படையை ஹெய்டிக்கு அனுப்ப ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளில் சம்பதம் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2021/1227818

  • கருத்துக்கள உறவுகள்

ஹெய்டி ஜனாதிபதி படுகொலைக்கு முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி படுகொலைக்கு முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெய்டி பொலிஸ் தலைமை அதிகாரி லியோன் சர்லஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஹெய்டியில் பிறந்து அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் குடியேறியவர் ஆவார். மருத்துவரான இவர் அரசியல் நோக்கங்களுடன் தனி விமானம் மூலம் ஹெய்டி வந்துள்ளார்.

ஜனாதிபதி ஜோவனல் மோயிசை கைது செய்வதே தங்களின் முதல் திட்டமாக இருந்ததாகவும், பின்னர் அது மாறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும், இது பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என கூறினார்.

இதனிடையே, ஹெய்டியின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் நேற்று முன்தினம் ஹெய்டி சென்றனர்.

இவர்கள் ஹெய்டியின் ஆட்சித் தலைவர் என தங்களை கூறி வரும் 3 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக ஜனாதிபதியின் படுகொலையை தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் ஹெய்டி அரசாங்கம் கோரிக்கை வைத்ததும், அதனை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் அமைந்துள்ள தீவு நாடான ஹெய்டியின் ஜனாதிபதி 53 வயதான ஜோவனல் மோஸ், தனது பதவிக்காலம் முடிந்த போதும், ஓராண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்தார்.

இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில் கடந்த 7ஆம் திகதி தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள அவர் தனது வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த ஆயுத கும்பல், ஜனாதிபதி ஜோவனல் மோஸ் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்தியது.

இதில் ஜனாதிபதி ஜோவனல் மாய்சே உயிரிழந்தார். அவரது மனைவி மார்ட்டின் மோஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில், 28பேருக்கு தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 26பேர் கொலம்பியாவையும், 2பேர் ஹெய்டி தீவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க நாட்டவர்கள்.

அத்துடன், இந்த 28பேரில் 15கொலம்பியர்கள், 2அமெரிக்கர்கள் என மொத்தம் 17பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 3 கொலம்பியர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். எஞ்சிய 8பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது

https://athavannews.com/2021/1228311

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.