Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நூலகம்: பிரபாகரனின் ஆணையில் புலிகளால் எரிக்கப்பட்டதா? - என்.சரவணன்

Featured Replies

48 minutes ago, goshan_che said:

துரையப்பா கொலையை நியாயப்படுத்தவில்லை. இராணுவ இலக்குகள் தவிர்ந்த எந்த இலக்கை கொல்வதையும் என்றும் நியாயப்படுத்தியதில்லை. அவை நிச்சயம் நீண்டகால நோக்கில் எதிர் வினையைதான் தரும் என்பதையும் நம்புகிறேன்.

ஆனால் துரையப்பாவுக்கும் இன்னொரு பக்கம் உண்டு. நிச்சயமாக தமிழ் தேசிய உணர்வை முளையில் கிள்ளி விடும் அரசியலையே அவர் செய்தார். தனது சுய நலனுக்காக இனத்தின் அடிமைதனத்தை உறுதி செய்யும் ஒரு சேவகனாகவே அவர் இருந்தார்.

அப்பாவி தமிழர் மீதான வன்முறை, இளைஞர்கள் மீதான போலீஸ் அராஜகம், தமிழாராய்சி மாநாட்டு படுகொலைகள் இவை எல்லாவற்றையும் செய்த அரசின் வடக்கிற்கான முகவராக அவர் இருந்தார். அதுவும் தமிழாராய்சி மாநாட்டு படுகொலைகளில் இவரை சம்பந்த படுத்த circumstantial evidence உள்ளதாகவே படுகிறது.

மீண்டும் சொல்கிறேன் அவர் கொலையை நியாயப்படுத்தவில்லை ஆனால் அவர் கரங்களும் இரத்தத்தில் தோய்ந்தவையே.

கூட்டணியின் உந்துதலால் உணர்சி வசப்படாத காலங்களிலும் இளைஞர்கள் கூட்டணி உட்பட பலரை இப்படி கொலை செய்தார்கள்.

ஆகவே கூட்டணியின் உணர்சி பேச்சை ஓரளவுக்கு மேல் இதற்கு காரணமாக காட்ட முடியாது.

என்னை பொறுத்தவரை இந்த கொலையும், அதன் பின் வந்த கலாச்சாரமும்  இலங்கை தீவில் எமது இனத்தின் நெடிய போராட்டத்தின் ஒரு அங்கம். இதில் தனியே சுட சொன்னவர்களையும், சுட்டவர்களையும், சுட்டு விட்டு வந்த போது சோடா உடைத்து கொடுத்தவர்களையும் மட்டும் குறை சொல்ல முடியாது. கைகட்டி வேடிக்கை பார்த்த நாமும் இதில் பங்குதாரார்தான். 

சிவகுமாரன் செய்ய முயற்சித்து தவறியதைதான் பிரபாகரன் செய்து முடித்தார். அதை சிவகுமாரன் சரியாக செய்திருந்தால் இந்த கொலையை செய்ய வேண்டிய தேவை தலைவருக்கு வந்திராது.

ஆனால் இதனோடும் சேர்த்துத்தான் இன்றும் இயக்க வேறுபாடுகளை மறந்து, சிலை எழுப்பி சிவகுமாரனை நினைவு கூறுகிறோம்.

சிவகுமாரன் செய்ததை ஒரு ஆற்றாமையின் விழிம்பில் நிற்கும் அடக்கபட்ட இனத்தின் இளைஞனின் எதிர்வினை என்று பார்ப்போம் ஆயின் ( பெரும்பாலனா தமிழர்கள் அப்படித்தான் பார்ப்பார்கள் என நினைகிறேன்), தலைவர் செய்ததையும் அப்படித்தான் பார்க்க முடியும்.

இதே போக்கை அயர்லாந்திலும் காணலாம். எம்மை போலவே அங்கேயும் மாறி மாறி அரசியல் கொலைகள் நடந்தது.  இப்போ போன மாதம் புர்ட்டெஸ்தாந்து, கத்தோலிக்க ஆயுத குழுக்கள், பிரிடிஸ் இராணுவம் எல்லாருக்கும் - அமைதி உடன் படிக்கைக்கு முன்னான செயலகளுக்கு பொது மன்னிப்பு வழங்க போவதாக தீர்மானித்துள்ளார்கள்.

என்ன அவர்கள் (மூன்று தரப்பும்) தாம் விட்ட தவறுகளில் இருந்து பாடம் படிக்கிறார்கள். நாம் ?

கோஷான் நீங்கள் கூறிய கருத்துகளில் எமக்கு பெரியளிவில் கருத்து வேறுபாடு இல்லை. அன்று துரையப்பா கொலையை ஊக்குவித்த அரசியல்வாதிகளும் பின்னர் அதே இளைஞர்களால் அரசியல் படுகொலை செய்யபட்டதே வரலாறு. 

ஆயுத இயக்கங்கள் அனைத்தும் தமிழ் தேசிய போராட்டத்திற்கு இழைத்த அநீதியுடன் ஒப்பிடும் போது அன்று துரையப்பா செய்த அரசியல் ஒன்றும் பெரிய துரோகம் அல்ல. அவர் ஒரு ஆளும் கட்சியின் அரசியல்வாதி. ஆளும் அரசாங்க கட்சியின் உறுப்பினரான மக்கள் யாழ் நகர மக்கள் செல்வாக்குடன் இருந்த அவரை படுகொலை செய்து தேசிய போராட்டத்தை ஆரம்பித்த வரலாறு  இன்று 45 வருடங்களின் பின்னர் 2020 ல்  துரையப்பா ஆதரித்த அதே  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளருக்கு மக்கள் மாவட்டத்திலேயே அதிக விருப்பு வாக்குகள் கொடுத்து தெரிவு செய்யும் நிலையை உருவாக்கியுள்ளது.

எதை பற்றியும் கவலைப்படாமல் அடுத்த தலைமுறைக்கு எமது கால தவறுகளை திணித்து ஒற்றை மனப்பான்மையுடன் எமது இயக்க விசுவாத்தை காட்ட எல்லா தவறுகளுக்கும் 100 வீதம் வக்காலத்து வாங்கி கொண்டு மிச்சமிருக்கும் எமது காலத்தை கழித்து விட்டு மண்டையை போடுவோம் என்பதே இன்றைய தமிழ் தேசியவாதிகளின் அரசியல் கொள்கை என்பதே எனது கருத்து.  இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். 

Edited by tulpen

  • Replies 79
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

ஒரு முள் ஒன்று வீதியில் கிடந்து மக்களை காயப்படுத்துகிறது. அதை 35 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் எரித்து விடுகிறார். 

35 வருடங்களுக்கு பிறகு அதை பற்றி பேசுவதால் எமக்கு விமோசனம் கிடைக்கும் என்பது சார்ந்து என்ன பாடத்தை படிக்க முடியும்??

இதே போல முட்களை எதிரெதிர் தரப்பிலும், தம் தரப்பிலும் அகற்றிய பல இனங்கள் - முட்கள் பற்றியும், அகற்றியமை பற்றியும், அகற்றிய முறை பற்றியும் ஆராய்ந்து பாடம் படித்தே போகின்றன.

ஆனால் இந்த இனத்தால் ஒரு போதும் இது முடியாது என்பது நான் அண்மையில் அடைந்த முடிவு. 

பிகு: ஒரு போதும் என்று எதையும் சொல்ல முடியாது - என் வாழ்நாளில்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

ரதி, கட்டுரையை முழுமையாக வாசித்தீர்களா?

 

நான் நன்றாக வாசித்தேன் ...நீங்கள் சொன்னப் பிறகு இன்னொரு தடவையும் வாசித்தேன் 
 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதே போல முட்களை எதிரெதிர் தரப்பிலும், தம் தரப்பிலும் அகற்றிய பல இனங்கள் - முட்கள் பற்றியும், அகற்றியமை பற்றியும், அகற்றிய முறை பற்றியும் ஆராய்ந்து பாடம் படித்தே போகின்றன.

ஆனால் இந்த இனத்தால் ஒரு போதும் இது முடியாது என்பது நான் அண்மையில் அடைந்த முடிவு. 

பிகு: ஒரு போதும் என்று எதையும் சொல்ல முடியாது - என் வாழ்நாளில்.

இன்று அதற்கான காலம் தான்.

ஆனால் அதை அந்த 35 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையில் இருந்து பார்க்கும் நிலையில் எம்மவர் இல்லை. 

அன்றைய நிலையில் ஒரு செயலை ஆரம்பித்து அதனை தொடர்ந்து பல லட்சம் இளைஞர்களை திரட்டி ஒன்றாக்கி முன்னெடுத்தது முட்டாள்தனம் என்பதிலிருந்து எந்த நடவடிக்கையும் ஆரம்பிக்க முடியாது கூடாது

3 minutes ago, ரதி said:

நான் நன்றாக வாசித்தேன் ...நீங்கள் சொன்னப் பிறகு இன்னொரு தடவையும் வாசித்தேன் 
 

என்ன ரதி வாசிப்பு பரீட்சை நடக்கிறதா? (just joke)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

 

நீங்கள் சொன்னதில் எனக்கும் அதிக மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரு சம்பவத்தை அதன் அத்தனை கனபரிமாணங்களோடும் பார்க்க வேண்டும் என்பதே நான் சொல்லியது.

மறும்படி 👇இதுதான் என் நிலைபாடு. 

13 minutes ago, goshan_che said:

ஆனால் இந்த இனத்தால் ஒரு போதும் இது முடியாது என்பது நான் அண்மையில் அடைந்த முடிவு. 

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

துரையப்பா கொலையை நியாயப்படுத்தவில்லை. இராணுவ இலக்குகள் தவிர்ந்த எந்த இலக்கை கொல்வதையும் என்றும் நியாயப்படுத்தியதில்லை. அவை நிச்சயம் நீண்டகால நோக்கில் எதிர் வினையைதான் தரும் என்பதையும் நம்புகிறேன்.

ஆனால் துரையப்பாவுக்கும் இன்னொரு பக்கம் உண்டு. நிச்சயமாக தமிழ் தேசிய உணர்வை முளையில் கிள்ளி விடும் அரசியலையே அவர் செய்தார். தனது சுய நலனுக்காக இனத்தின் அடிமைதனத்தை உறுதி செய்யும் ஒரு சேவகனாகவே அவர் இருந்தார்.

அப்பாவி தமிழர் மீதான வன்முறை, இளைஞர்கள் மீதான போலீஸ் அராஜகம், தமிழாராய்சி மாநாட்டு படுகொலைகள் இவை எல்லாவற்றையும் செய்த அரசின் வடக்கிற்கான முகவராக அவர் இருந்தார். அதுவும் தமிழாராய்சி மாநாட்டு படுகொலைகளில் இவரை சம்பந்த படுத்த circumstantial evidence உள்ளதாகவே படுகிறது.

மீண்டும் சொல்கிறேன் அவர் கொலையை நியாயப்படுத்தவில்லை ஆனால் அவர் கரங்களும் இரத்தத்தில் தோய்ந்தவையே.

கூட்டணியின் உந்துதலால் உணர்சி வசப்படாத காலங்களிலும் இளைஞர்கள் கூட்டணி உட்பட பலரை இப்படி கொலை செய்தார்கள்.

ஆகவே கூட்டணியின் உணர்சி பேச்சை ஓரளவுக்கு மேல் இதற்கு காரணமாக காட்ட முடியாது.

என்னை பொறுத்தவரை இந்த கொலையும், அதன் பின் வந்த கலாச்சாரமும்  இலங்கை தீவில் எமது இனத்தின் நெடிய போராட்டத்தின் ஒரு அங்கம். இதில் தனியே சுட சொன்னவர்களையும், சுட்டவர்களையும், சுட்டு விட்டு வந்த போது சோடா உடைத்து கொடுத்தவர்களையும் மட்டும் குறை சொல்ல முடியாது. கைகட்டி வேடிக்கை பார்த்த நாமும் இதில் பங்குதாரார்தான். 

சிவகுமாரன் செய்ய முயற்சித்து தவறியதைதான் பிரபாகரன் செய்து முடித்தார். அதை சிவகுமாரன் சரியாக செய்திருந்தால் இந்த கொலையை செய்ய வேண்டிய தேவை தலைவருக்கு வந்திராது.

ஆனால் இதனோடும் சேர்த்துத்தான் இன்றும் இயக்க வேறுபாடுகளை மறந்து, சிலை எழுப்பி சிவகுமாரனை நினைவு கூறுகிறோம்.

சிவகுமாரன் செய்ததை ஒரு ஆற்றாமையின் விழிம்பில் நிற்கும் அடக்கபட்ட இனத்தின் இளைஞனின் எதிர்வினை என்று பார்ப்போம் ஆயின் ( பெரும்பாலனா தமிழர்கள் அப்படித்தான் பார்ப்பார்கள் என நினைகிறேன்), தலைவர் செய்ததையும் அப்படித்தான் பார்க்க முடியும்.

இதே போக்கை அயர்லாந்திலும் காணலாம். எம்மை போலவே அங்கேயும் மாறி மாறி அரசியல் கொலைகள் நடந்தது.  இப்போ போன மாதம் புர்ட்டெஸ்தாந்து, கத்தோலிக்க ஆயுத குழுக்கள், பிரிடிஸ் இராணுவம் எல்லாருக்கும் - அமைதி உடன் படிக்கைக்கு முன்னான செயலகளுக்கு பொது மன்னிப்பு வழங்க போவதாக தீர்மானித்துள்ளார்கள்.

என்ன அவர்கள் (மூன்று தரப்பும்) தாம் விட்ட தவறுகளில் இருந்து பாடம் படிக்கிறார்கள். நாம் ?

கோசான் , நீங்களே இப்படி எழுதலாமா ?... நீங்கள் கடைசி வரை தோல்வியில் இருந்து பாடம் படிக்கவும் மாட்டீர்கள் ... முழு இனத்தையும் அழிக்காமல் விடவும்  மாட்டீர்கள் ...துரையப்பாவை புலிகள் சுட்டது பிழை அந்த நேரத்தில் தெரிந்தோ ,தெரியாமலோ யாருடைய தூண்டுதலின் பேரில் தலைவர்  போட்டு தள்ளினார் ...முழுக்க ,முழுக்க கூட்டமைப்புக்காய் செய்த கொலை ...இவரை கொலை செய்து  தங்களுக்கு புதைகுழியை புலிகள் அமைத்துக் கொண்டனர் ...இவரது மரணத்தால் கூட்டமைப்புக்குத் தான் லாபம் ...அந்த நேரத்திலேயே மக்கள் வோட்டு போட்டு சுயேட்சையாய் நின்று ஜெயித்தவர் இவர் ...அப்பாவி தமிழர்களின் கொலையில் இவருக்கு பங்கிருக்குது என்றால் எப்படி இவரால் சுயேட்சையாய் வெல்ல முடிந்தது ?...இவரது மரண வீட்டிற்கு எப்படி அவ்வளது சனம் கூடியது ?கடைசியில் யார் இவரை போட சொன்னார்களோ  அவரையும் புலிகள் போட்டு தள்ளினார்கள்.
ஒரு பிழை செய்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ....இப்பவும் அதற்கு நியாயம் கற்பித்து  மீண்டும் இன்னொரு புதை குழிக்கு மக்களை தள்ள வேண் டாம்
சிங்களவன் வரலாற்றை மாத்துறான் என்று கத்துறதிற்கும்,நீங்கள் செய்றத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

கோசான் , நீங்களே இப்படி எழுதலாமா ?... நீங்கள் கடைசி வரை தோல்வியில் இருந்து பாடம் படிக்கவும் மாட்டீர்கள் ... முழு இனத்தையும் அழிக்காமல் விடவும்  மாட்டீர்கள் ...துரையப்பாவை புலிகள் சுட்டது பிழை அந்த நேரத்தில் தெரிந்தோ ,தெரியாமலோ யாருடைய தூண்டுதலின் பேரில் தலைவர்  போட்டு தள்ளினார் ...முழுக்க ,முழுக்க கூட்டமைப்புக்காய் செய்த கொலை ...இவரை கொலை செய்து  தங்களுக்கு புதைகுழியை புலிகள் அமைத்துக் கொண்டனர் ...இவரது மரணத்தால் கூட்டமைப்புக்குத் தான் லாபம் ...அந்த நேரத்திலேயே மக்கள் வோட்டு போட்டு சுயேட்சையாய் நின்று ஜெயித்தவர் இவர் ...அப்பாவி தமிழர்களின் கொலையில் இவருக்கு பங்கிருக்குது என்றால் எப்படி இவரால் சுயேட்சையாய் வெல்ல முடிந்தது ?...இவரது மரண வீட்டிற்கு எப்படி அவ்வளது சனம் கூடியது ?கடைசியில் யார் இவரை போட சொன்னார்களோ  அவரையும் புலிகள் போட்டு தள்ளினார்கள்.
ஒரு பிழை செய்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ....இப்பவும் அதற்கு நியாயம் கற்பித்து  மீண்டும் இன்னொரு புதை குழிக்கு மக்களை தள்ள வேண் டாம்
சிங்களவன் வரலாற்றை மாத்துறான் என்று கத்துறதிற்கும்,நீங்கள் செய்றத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை 

அக்கா,

நான் இதில் எங்கே துரையப்பாவை கொன்றது சரி என எழுதினேன்?

துரையப்பாவின் இன்னொரு பக்கத்தையும் சுட்டி காட்டினேன். அந்த நேரத்தின் கொதிப்பை காட்ட சிவகுமாரனை சுட்டி காட்டினேன்.

மக்கள் தலைவர் துரையப்பாவை புலிகள் அநியாயமாக கொண்டார்கள்

Vs

துரோகி துரையப்பா கொல்லப்பட வேண்டியவர்.

இவை இரெண்டுக்கும் இடையில்தான் உண்மையான வரலாறு இருக்கிறது.

அதை மேலே தந்துள்ள அற்புதனின் தொடர்  சரியாகவே பதிவு செய்கிறது.

3 minutes ago, ரதி said:

கோசான் , நீங்களே இப்படி எழுதலாமா ?... நீங்கள் கடைசி வரை தோல்வியில் இருந்து பாடம் படிக்கவும் மாட்டீர்கள் ... முழு இனத்தையும் அழிக்காமல் விடவும்  மாட்டீர்கள் ...துரையப்பாவை புலிகள் சுட்டது பிழை அந்த நேரத்தில் தெரிந்தோ ,தெரியாமலோ யாருடைய தூண்டுதலின் பேரில் தலைவர்  போட்டு தள்ளினார் ...முழுக்க ,முழுக்க கூட்டமைப்புக்காய் செய்த கொலை ...இவரை கொலை செய்து  தங்களுக்கு புதைகுழியை புலிகள் அமைத்துக் கொண்டனர் ...இவரது மரணத்தால் கூட்டமைப்புக்குத் தான் லாபம் ...அந்த நேரத்திலேயே மக்கள் வோட்டு போட்டு சுயேட்சையாய் நின்று ஜெயித்தவர் இவர் ...அப்பாவி தமிழர்களின் கொலையில் இவருக்கு பங்கிருக்குது என்றால் எப்படி இவரால் சுயேட்சையாய் வெல்ல முடிந்தது ?...இவரது மரண வீட்டிற்கு எப்படி அவ்வளது சனம் கூடியது ?கடைசியில் யார் இவரை போட சொன்னார்களோ  அவரையும் புலிகள் போட்டு தள்ளினார்கள்.
ஒரு பிழை செய்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ....இப்பவும் அதற்கு நியாயம் கற்பித்து  மீண்டும் இன்னொரு புதை குழிக்கு மக்களை தள்ள வேண் டாம்
சிங்களவன் வரலாற்றை மாத்துறான் என்று கத்துறதிற்கும்,நீங்கள் செய்றத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை 

ரதி, நான் வாசித்து விளங்கியவரை கோஷானின் கருத்து எம்மிருவரின் கருத்தில் இருந்து பெரிதாக மாறுபடவில்லை. என்ன நாம் இருவரும் நேரடியாக தெரிவித்ததை தனக்கே உரிய  விசேட பாணியில்  diplomatic வார்த்தைகள், வசனங்களை உபயோகித்து  அவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரஞ்சித் said:

 

ஆனால், தமிழர்களைப் பலவீனப்படுத்தவும், பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கவும், தமது துரோகத்தை மறைக்க சிங்களவர்களுக்குச் சார்பாகவும் பேசும் ஒரு கூட்டம் இருக்கின்றது. அக்கூட்டத்திற்கு புலிகள் மீது வசைபாட, அவர்கள் மீது அவப்பெயரை உண்டாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே அக்கூட்டம் இந்தச் சிங்களைத் திரிப்பை இனிக் காவித் திரியும். இதுதான் உண்மை என்று தானும் நம்பி தனது சுற்றுவட்டத்தையும் நம்பவைக்கும். கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாதென்பதை அக்கூட்டம் ஏற்கப்போவதில்லை.  

 

இந்தா அமெரிக்காவில் இருந்து கப்பல் வருது என்ட மாதிரியா அல்லது ஆமி முல்லைத்தீவுக்கு வந்தால் நாங்கள் அனுராதபுரத்தில் நிற்போம் என்று சொன்ன மாதிரியா 

4 minutes ago, goshan_che said:

அக்கா,

நான் இதில் எங்கே துரையப்பாவை கொன்றது சரி என எழுதினேன்?

துரையப்பாவின் இன்னொரு பக்கத்தையும் சுட்டி காட்டினேன். அந்த நேரத்தின் கொதிப்பை காட்ட சிவகுமாரனை சுட்டி காட்டினேன்.

மக்கள் தலைவர் துரையப்பாவை புலிகள் அநியாயமாக கொண்டார்கள்

Vs

துரோகி துரையப்பா கொல்லப்பட வேண்டியவர்.

இவை இரெண்டுக்கும் இடையில்தான் உண்மையான வரலாறு இருக்கிறது.

அதை மேலே தந்துள்ள அற்புதனின் தொடர்  சரியாகவே பதிவு செய்கிறது.

ஓ ...மன்னிக்கவும் தவறாக புரிந்து கொண்டேன் 

5 minutes ago, tulpen said:

ரதி, நான் வாசித்து விளங்கியவரை கோஷானின் கருத்து எம்மிருவரின் கருத்தில் இருந்து பெரிதாக மாறுபடவில்லை. என்ன நாம் இருவரும் நேரடியாக தெரிவித்ததை தனக்கே உரிய  விசேட பாணியில்  diplomatic வார்த்தைகள், வசனங்களை உபயோகித்து  அவர் கூறினார்.

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

கோசான் , நீங்களே இப்படி எழுதலாமா ?... நீங்கள் கடைசி வரை தோல்வியில் இருந்து பாடம் படிக்கவும் மாட்டீர்கள் ... முழு இனத்தையும் அழிக்காமல் விடவும்  மாட்டீர்கள் ...துரையப்பாவை புலிகள் சுட்டது பிழை அந்த நேரத்தில் தெரிந்தோ ,தெரியாமலோ யாருடைய தூண்டுதலின் பேரில் தலைவர்  போட்டு தள்ளினார் ...முழுக்க ,முழுக்க கூட்டமைப்புக்காய் செய்த கொலை ...இவரை கொலை செய்து  தங்களுக்கு புதைகுழியை புலிகள் அமைத்துக் கொண்டனர் ...இவரது மரணத்தால் கூட்டமைப்புக்குத் தான் லாபம் ...அந்த நேரத்திலேயே மக்கள் வோட்டு போட்டு சுயேட்சையாய் நின்று ஜெயித்தவர் இவர் ...அப்பாவி தமிழர்களின் கொலையில் இவருக்கு பங்கிருக்குது என்றால் எப்படி இவரால் சுயேட்சையாய் வெல்ல முடிந்தது ?...இவரது மரண வீட்டிற்கு எப்படி அவ்வளது சனம் கூடியது ?கடைசியில் யார் இவரை போட சொன்னார்களோ  அவரையும் புலிகள் போட்டு தள்ளினார்கள்.
ஒரு பிழை செய்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ....இப்பவும் அதற்கு நியாயம் கற்பித்து  மீண்டும் இன்னொரு புதை குழிக்கு மக்களை தள்ள வேண் டாம்
சிங்களவன் வரலாற்றை மாத்துறான் என்று கத்துறதிற்கும்,நீங்கள் செய்றத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை 

நாம் படிக்க வேண்டிய மிக பெரிய பாடம், குறைந்த பட்சம் சக தமிழனையாவது மன்னிப்பது.

அத்தனை இயக்கங்களில் இருந்தவர்களும், அவர்களினால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்ட மக்களும், துணை குழுக்களும், அரச சேவகர்களும், ஒருவரை ஒருவர் மன்னிப்பதுதான் எமது முதல்படி.

ஆனால் மன்னிப்புக்கு உண்மை தேவை. Truth இல்லாமல் reconciliation இல்லை. 

நம்மிடம் உண்மையும் இல்லை, மன்னிக்கும் மனப்பாங்கும் இல்லை.

இதய சுத்தியாக ஓம் தவறுதான் என்று ஏற்கவே மாட்டோம்.

ஒன்றில் அப்படி நடக்கவில்லை என சொல்வோம், அல்லது அப்படி நடந்திராவிட்டால் இப்படி நடந்திருக்கும் என்று ஒரு நியாயம் சொல்வோம்.

மீண்டும், மீண்டும் பழைய ரணங்களை நோண்டியபடியே காலத்தை ஓட்டிவிட மட்டுமே இந்த இனத்தால் இயலும். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

ரதி, நான் வாசித்து விளங்கியவரை கோஷானின் கருத்து எம்மிருவரின் கருத்தில் இருந்து பெரிதாக மாறுபடவில்லை. என்ன நாம் இருவரும் நேரடியாக தெரிவித்ததை தனக்கே உரிய  விசேட பாணியில்  diplomatic வார்த்தைகள், வசனங்களை உபயோகித்து  அவர் கூறினார்.

எனக்கு அடி வாங்கிதாற பிளான் போல🤣.

ஆனால் நாம் எவரும் இதில் ஒத்த கருத்து உள்ளவர்கள் இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு spectrum த்தின் வேறு வேறு கோடுகளில் நிற்கிறோம் எனக்கு வலப்பக்கம் விசுகு அண்ணை இடப்பக்கம் நீங்கள்.  

2 minutes ago, goshan_che said:

எனக்கு அடி வாங்கிதாற பிளான் போல🤣.

ஆனால் நாம் எவரும் இதில் ஒத்த கருத்து உள்ளவர்கள் இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு spectrum த்தின் வேறு வேறு கோடுகளில் நிற்கிறோம் எனக்கு வலப்பக்கம் விசுகு அண்ணை இடப்பக்கம் நீங்கள்.  

ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களில் இருப்பது தான் உலகில் இயல்பானது. அதுவே ஒரு கருத்து களத்தின் பெறுமதியை உயர்த்தும். ஜதார்ததபூர்வமான ஒரு பொதுக்கருத்தை உருவாக்கும். 

 எம்மிருவரினதும் கருத்துக்கள் நூறு வீதம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை. அப்படியான template ஆக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை ஆபத்தானது. அதையே நானும் சுட்டிக்காட்டுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

துரையப்பா கொலை போல எத்தனையோ துன்பியல் சம்பவங்களைத்தாண்டித்தான் தமிழீழப் போராட்டம் முன்நகர்த்தப்பட்டது. அந்த நேரத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், துரையப்பாவை முக்கியமாக கொலை செய்யத் திரிந்தார்கள். அதைப் பற்றி அலசி ஆராயாமலா செய்தார்கள்? பஸ்தியாம்பிள்ளை போன்ற தமிழ் பொலிஸ்காரர்களும் இக்கொலைகளில் அடக்கம். இவையெல்லாம் இப்போதைய ஜனநாயகத்தை நேசிக்கும் கண்களுக்கு வேறு மாதிரித் தோன்றலாம். ஆனால் அந்த நேரத்தில் அப்படி பலருக்கும் பிழையான செயல் மாதிரித் தெரியவில்லை. கொலைகளுக்கு போட்டிபோட்டு உரிமைகோரி இயக்கங்களை வளர்க்கவே முனைந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

துரையப்பா கொலை போல எத்தனையோ துன்பியல் சம்பவங்களைத்தாண்டித்தான் தமிழீழப் போராட்டம் முன்நகர்த்தப்பட்டது. அந்த நேரத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், துரையப்பாவை முக்கியமாக கொலை செய்யத் திரிந்தார்கள். அதைப் பற்றி அலசி ஆராயாமலா செய்தார்கள்? பஸ்தியாம்பிள்ளை போன்ற தமிழ் பொலிஸ்காரர்களும் இக்கொலைகளில் அடக்கம். இவையெல்லாம் இப்போதைய ஜனநாயகத்தை நேசிக்கும் கண்களுக்கு வேறு மாதிரித் தோன்றலாம். ஆனால் அந்த நேரத்தில் அப்படி பலருக்கும் பிழையான செயல் மாதிரித் தெரியவில்லை. கொலைகளுக்கு போட்டிபோட்டு உரிமைகோரி இயக்கங்களை வளர்க்கவே முனைந்தார்கள்.

நிச்சயமாக. இந்த கொலைகளை வரவேற்றவர்கள், விரும்பாமல் ஆனால் ஒரு பெரிய நன்மைக்கான விலை என மெளமாக  ஏற்றவர்கள் எல்லாரும் இதில் பாத்திரதாரர்தான்.

எமக்கு 2009க்கு பின்தான் துரையப்பா கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை.  ஆனால் 2009 வரை சும்மாதான் இருந்தோம்.

இதே போன்ற விடயங்கள்தான் அயர்லாந்திலும், தென்னாபிரிக்காவிலும் நடந்தன - ஆனால் அவர்கள்  போராட்டங்கள் வென்றதாலோ என்னமோ - அவர்களால் இலகுவில் பரஸ்பரம் மன்னித்து முன் செல்ல முடிகிறது.

புலிகள் சுரேஸ் போன்றோரை உள்வாங்கியதும் இப்படி ஒரு நகர்வாக இருக்கலாம். 

10 minutes ago, goshan_che said:

இதே போன்ற விடயங்கள்தான் அயர்லாந்திலும், தென்னாபிரிக்காவிலும் நடந்தன - ஆனால் அவர்கள்  போராட்டங்கள் வென்றதாலோ என்னமோ - அவர்களால் இலகுவில் பரஸ்பரம் மன்னித்து முன் செல்ல முடிகிறது.

மன்னிக்கவும் கோஷான் அயர்லாந்திலும், தென்னாபிரிக்காவிலும் செய்தவை அனைத்தும் சரி என்ற முடிவுடன்  இறுதிவரை போராட்டம் நடத்தப்படவில்லை.  ஆயுதப்போராட்டத்தின் இடையிடையே தவறுகள் திருத்தப்பட்டு உலக அரசியலை கணித்து புதிய உத்திகளுடன் போராடியே வெற்றிபெற்றன. அதிலும் அயர்லாந்து போராளிகள் பல மாற்றங்களை போராடிய போதே உள்வாங்க தயாராகியிருந்தார்கள்.  நாம் போராடி தோற்ற பின்பும் அதற்கு தயாராகவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

மன்னிக்கவும் கோஷான் அயர்லாந்திலும், தென்னாபிரிக்காவிலும் செய்தவை அனைத்தும் சரி என்ற முடிவுடன்  இறுதிவரை போராட்டம் நடத்தப்படவில்லை.  ஆயுதப்போராட்டத்தின் இடையிடையே தவறுகள் திருத்தப்பட்டு உலக அரசியலை கணித்து புதிய உத்திகளுடன் போராடியே வெற்றிபெற்றன. அதிலும் அயர்லாந்து போராளிகள் பல மாற்றங்களை போராடிய போதே உள்வாங்க தயாராகியிருந்தார்கள்.  நாம் போராடி தோற்ற பின்பும் அதற்கு தயாராகவில்லை. 

போராட்டத்தின் போக்கை, உலக அரசியலுக்கு ஒப்ப மீள் பரிசீலனை செய்ததை நான் சொல்லவில்லை. அது சிக்கலான விடயம். தென்னாபிரிக்காவுக்கு, அயர்லாந்தின் இரு தரப்புக்கும் இருந்த வெளி ஆதரவு எமக்கு இருக்கவில்லை. ஏன் இருக்கவில்லை என்பது ஆராயப்பட வேண்டிய ஆனால் இந்த திரிக்கு வெளியான விடயம்.

அரசியலின் பொருட்டு செய்யப்பட்ட கொலைகள், காணாமல் ஆக்கல், கடுமையான தண்டனைகள்…தீர்வை நெருங்கும் வரை இரு இடங்களிலும் நிகழ்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களே தங்கள் கருவூலத்துக்கு தீ வைத்தார்கள்.. சிகரெட் பீடி சுருட்டு பத்த வைக்கும் பழக்கம் தமிழர்களிடம் இருந்தால்.. அது பத்திவிட்டது என்றும் எழுதுவார்கள்.. சிலர்..அதற்கும் ஆசுவாசமாக தம் ஆதரவை வைப்பார்கள்.  உலகெங்கும் இப்படியான conspiracy சித்தாந்தம் சிலரை கவர்ந்திழுப்பது புதிதல்ல. 

ஆனால்.. எமது விடுதலைப் போராட்டத்தின் முக்கிய எதிரிகள் நமக்குள்ளேயே என்பது தமிழினத்தின் சாபக்கேடு. அதுவே அந்த இனத்தை இந்தப் பூமியில் நிரந்தர அடிமைகளாக்கி விட்டது. மீட்சிக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. 

16 minutes ago, goshan_che said:

போராட்டத்தின் போக்கை, உலக அரசியலுக்கு ஒப்ப மீள் பரிசீலனை செய்ததை நான் சொல்லவில்லை. அது சிக்கலான விடயம். தென்னாபிரிக்காவுக்கு, அயர்லாந்தின் இரு தரப்புக்கும் இருந்த வெளி ஆதரவு எமக்கு இருக்கவில்லை. ஏன் இருக்கவில்லை என்பது ஆராயப்பட வேண்டிய ஆனால் இந்த திரிக்கு வெளியான விடயம்.

அரசியலின் பொருட்டு செய்யப்பட்ட கொலைகள், காணாமல் ஆக்கல், கடுமையான தண்டனைகள்…தீர்வை நெருங்கும் வரை இரு இடங்களிலும் நிகழ்ந்தது.

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ஆனால்.. எமது விடுதலைப் போராட்டத்தின் முக்கிய எதிரிகள் நமக்குள்ளேயே என்பது தமிழினத்தின் சாபக்கேடு. அதுவே அந்த இனத்தை இந்தப் பூமியில் நிரந்தர அடிமைகளாக்கி விட்டது. மீட்சிக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. 

அதை அவர்கள் உணரப்போவதே இல்லை 

அவர்களை முடிந்தவரை மக்களுக்கு இனம் காட்டுவதே இன்றைய தேவை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

தமிழர்களே தங்கள் கருவூலத்துக்கு தீ வைத்தார்கள்.. சிகரெட் பீடி சுருட்டு பத்த வைக்கும் பழக்கம் தமிழர்களிடம் இருந்தால்.. அது பத்திவிட்டது என்றும் எழுதுவார்கள்.. சிலர்..அதற்கும் ஆசுவாசமாக தம் ஆதரவை வைப்பார்கள்.  உலகெங்கும் இப்படியான conspiracy சித்தாந்தம் சிலரை கவர்ந்திழுப்பது புதிதல்ல. 

ஆனால்.. எமது விடுதலைப் போராட்டத்தின் முக்கிய எதிரிகள் நமக்குள்ளேயே என்பது தமிழினத்தின் சாபக்கேடு. அதுவே அந்த இனத்தை இந்தப் பூமியில் நிரந்தர அடிமைகளாக்கி விட்டது. மீட்சிக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. 

நான் கடந்த பத்து வருடங்களாக  சிங்கள இனவாத அரசியல்வாதிகளை ஈழத்தமிழர்களின் எதிரிகளாக பார்ப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மன்னிக்கவும் கோஷான் அயர்லாந்திலும், தென்னாபிரிக்காவிலும் செய்தவை அனைத்தும் சரி என்ற முடிவுடன்  இறுதிவரை போராட்டம் நடத்தப்படவில்லை.  ஆயுதப்போராட்டத்தின் இடையிடையே தவறுகள் திருத்தப்பட்டு உலக அரசியலை கணித்து புதிய உத்திகளுடன் போராடியே வெற்றிபெற்றன. அதிலும் அயர்லாந்து போராளிகள் பல மாற்றங்களை போராடிய போதே உள்வாங்க தயாராகியிருந்தார்கள்.  நாம் போராடி தோற்ற பின்பும் அதற்கு தயாராகவில்லை. 

நானும் அந்தவிவாதத்தில் பங்கு கொள்ள தயார் கோசானுடன். 

@tulpen இதே அரசியல் அலசல் பகுதியில் திரி ஒன்றை திறந்து கற்றுகொள்ளவேண்டிய பாடங்கள், அல்லது இனி எவ்வாறான நடவடிக்கைகள் பலனைத்தரும் என்ற தலைப்பில் திரியை திறவுங்கள் விவாதிப்போம். அது பலருக்கும் பயனுள்ளதாக ஒரே திரியில் வாசிக்க கூடியதாக வரலாற்றை முன்னகர்த்தக்கூடியதாக இருக்கும்.

உங்கள் கேள்விகள், கருத்துகள் இன்னொரு பரிமாணத்தை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை அலட்சியமாக தாண்டி முன்னேற்றகரமாக எதையும் செய்துவிட முடியாது. 

போராடிய தரப்பை குறைசொல்வதால் மட்டும் எதுவும் மாறிவிடப்போவதுமில்லை, போராடிய தரப்பின் மீதான விமர்சனங்களை புறந்தள்ளுவதினாலும் எதுவும் நடந்துவிடப்போவதுமில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கு தெரிந்த வரையில் தனக்கு நியாயமான வகையில் போராட்டத்தை நடாத்தியது. அதற்கு தடைக்கற்களாக இருந்த தரப்புகளை எதிரிகளாக துரோகிகளாக அடையாளம் காட்டி போரிட்டது.  அந்த போரின் முடிவில் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போது தமிழ்மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை என்பது இதுவரை நடக்கும் அரசியல் நிகழ்வுகளில் கண்கூடு.அதற்கான காரணம் தமிழ்மக்களின் அரசியல் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு மேல் கட்டமைக்கப்பட்டமை தான். 

தொடர்ந்தும் விவாதிக்க ஆசை ஆனால் இந்த திரியில் அல்ல. 

23 minutes ago, விசுகு said:

அவர்களை முடிந்தவரை மக்களுக்கு இனம் காட்டுவதே இன்றைய தேவை. 

அப்படியில்லை விசுகு அண்ணை, துல்பன் போன்றவர்கள் தான் இப்போ எமக்குத்தேவை. அவர் புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கிறார் என்றால், நிச்சயமாக அவர் புலிகள் மீது அளவுகடந்த பற்றும், நம்பிக்கையும் வைத்திருந்தமையே காரணம். 

அவர்கள் அவ்வளவு செய்தும் தமிழ் மக்களுக்கு விடிவுகிடைக்கவில்லையே என்ற ஆதங்கங்கள் அவரை புலிகள் எங்கே பிழைவிட்டார்கள் என்ற தேடலையும் கேள்விகளையும் முன்வைக்க உந்துகிறது. 

நாங்கள் உண்மையான எதிரிகளை இனங்காணாது கேள்வி கேட்பவர்களை எதிரியாக்குகின்றோம். அவர் தமிழ் மக்களின் விடிவு என்ற கொள்கைக்கு எதிரானவர் அல்ல. அதற்கு இப்போ என்ன தேவை என்ற தேடலுக்கு விடைதேடுபவர். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே இப்போ இருந்தாலும் துல்பன் போன்றவர்கள் தான் புலிகளுக்கு இப்போ அவசியமாக தேவையானவர்கள் கண்மூடிதனமாக ஆதரிப்பவர்களைவிட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

அந்த நேரத்திலேயே மக்கள் வோட்டு போட்டு சுயேட்சையாய் நின்று ஜெயித்தவர் இவர்

 செல்வி ரதி அவர்களே! தனிமனித செல்வாக்கு என்ற ஒரு விடயம் உண்டு.எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்?

 

4 hours ago, ரதி said:

இவரது மரண வீட்டிற்கு எப்படி அவ்வளது சனம் கூடியது ?

 செல்வி ரதி அவர்களே! தனிமனித செல்வாக்கு என்ற ஒரு விடயம் உண்டு.அனைத்து தமிழினமும் அங்கு திரண்டு நிற்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, முதல்வன் said:

போராடிய தரப்பை குறைசொல்வதால் மட்டும் எதுவும் மாறிவிடப்போவதுமில்லை, போராடிய தரப்பின் மீதான விமர்சனங்களை புறந்தள்ளுவதினாலும் எதுவும் நடந்துவிடப்போவதுமில்லை.

ரத்தினச்சுருக்கம்.👏🏾

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.