Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.மாவட்ட மக்களிடம் பொறுப்புணர்வில்லை.! மாவட்டம் இன்று ஆபத்தில் இருப்பதற்கு மக்கள்தான் காரணம் - சவேந்திர சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்ட மக்களிடம் பொறுப்புணர்வில்லை.! மாவட்டம் இன்று ஆபத்தில் இருப்பதற்கு மக்கள்தான் காரணம் - சவேந்திர சில்வா

maxresdefault.jpg

யாழ்.மாவட்டத்தில் ஆங்காங்கே உருவாகியிருக்கும் கொரோனா கொத்தணிகளுக்கு யாழ்.மாவட்ட மக்களுடைய பொறுப்பற்ற செயலே காரணமாகும். என இராணுவ தளபதியும் தேசிய கொவிட்ட தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பருத்தித்துறை கொத்தணி தொடர்பில் கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது மிக கட்டாயமான ஒரு விடயமாகும். ஆனால் பெரும்பாலானோர் அதை மதிப்பதில்லை.

அதற்கு யாழ்ப்பாணமும் விதிவிலக்கல்ல. கொரோனா 1ம், 2ம் அலைகளின் தாக்கம் ஏற்பட்டிருந்தபோது யாழ்.மாவட்ட மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். ஆனால் 3ம் அலையின்போது யாழ்.மாவட்ட மக்களிடம் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளது.

இதனால் யாழ்.மாவட்டத்தில் 3ம் அலையினால் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், கொரோனா மரணங்களும் அதிகரித்திருக்கின்றது. பல இடங்களில் கொரோனா கொத்தணிகள் உருவாகி அந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் இருந்தும் தப்பி ஓடிய சிலர் வேறு பிரதேசங்களில் இரகசியமாக அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இராணுவம் மற்றும் பொலிஸார், சுகாதார பிரிவனரின் புலனாய்வு தகவல்கள் ஊடாக இந்த உண்மை அம்பலமாகியிருக்கின்றது.

எனவே யாழ்.மாவட்ட மக்கள் பெறுப்புடன் செயற்படவேண்டும். கொரோனா கட்டுப்பாட்டுக்காக போராடிவரும் முன்கள பணியாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும். யாழ்.மாவட்ட மக்களுக்கே அதிகளவான தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம்.

தொற்றாளர்கள் அதிகம் என்பதால் அதிகளவு தடுப்பூசியை வழங்கியுள்ளோம். மேலும் வழங்குவோம் என்றார்.

https://jaffnazone.com/news/27383

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதனால் யாழ்.மாவட்டத்தில் 3ம் அலையினால் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், கொரோனா மரணங்களும் அதிகரித்திருக்கின்றது. பல இடங்களில் கொரோனா கொத்தணிகள் உருவாகி அந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தமிழர் பகுதிகளுக்கு கொரோனா நோயாளிகளை அனுப்பி அங்குள்ள மக்களின் வாழ்க்கையைச் சீரழித்து மரணங்களையும் ஏற்படுத்தும் திட்டமும், நன்றாகவே நிறைவேறி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,994 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசு ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிசுமா அதிபர் அயித் ரோன கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலம் வரை 50,994 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50,994 X 10 ஆயிரம் = ?????🧐 அரசுக்குத்தான் என்ன வருமானம்!!🤩 சீனாவின் கடன் விரைவில் அடைக்கப்படும். 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,994 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசு ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிசுமா அதிபர் அயித் ரோன கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலம் வரை 50,994 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50,994 X 10 ஆயிரம் = ?????🧐 அரசுக்குத்தான் என்ன வருமானம்!!🤩 சீனாவின் கடன் விரைவில் அடைக்கப்படும். 🤣 

இன்று எனது சிங்கள நண்பர் சொன்னார் ....இரட்டை குடியுரிமை  வைத்திருப்பவர்....
மச்சான் நாட்டுக்கு போய் அங்கு வாழலாம் என்று இருந்தனான்....வங்கியில் காசு இருக்கு இந்த அரசாங்கம் காசை எடுத்து போடுவாங்களோ தெரியவில்லை .....சீனாக்காரனின் கடனை கட்டுவதற்கு...பயமாக இருக்கு அந்த காசை மெல்லமாக அவுஸ்ரேலியாவுக்கு மாற்றவேணும் என்று ....சொன்னார்..

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பாரபட்சங்களை ஏன் இந்தத் தமிழ் அரசியல்வாதிகள்கூடப் புள்ளவிபரங்களோடு வெளிக்கொண்டு வருகிறார்களில்லை. வீட்டிலிருந்து சையிக்கிள் வரைக்கும் ஒரே நிலையாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,994 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசு ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிசுமா அதிபர் அயித் ரோன கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலம் வரை 50,994 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50,994 X 10 ஆயிரம் = ?????🧐 அரசுக்குத்தான் என்ன வருமானம்!!🤩 சீனாவின் கடன் விரைவில் அடைக்கப்படும். 🤣 

இது…. விகாரை கட்டுவதற்கு சேர்க்கும் பணம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இது…. விகாரை கட்டுவதற்கு சேர்க்கும் பணம். 🤣

நான் சீனாக்காரனுக்கு என்று நினைத்தேன்..... பழசுகளை விட இளசுகளுக்கு புத்தி கூர்மை.😇

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்.மாவட்ட மக்களிடம் பொறுப்புணர்வில்லை.! மாவட்டம் இன்று ஆபத்தில் இருப்பதற்கு மக்கள்தான் காரணம் - சவேந்திர சில்வா

ஆரம்பம் முதல் சொல்கிறோம் சுகாதார திணைக்களம் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் செய்வதால்த்தான் இலங்கையில் கொரனோ  இன்னும் கட்டுக்குள் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் பணியாற்றிய பல தமிழ் வைத்தியர்களை பனாங்கொடைக்கு அனுப்பி.. இராணுவக கொவிட் தொற்றாளர்களை கவனிக்க வைச்சிருக்கினம். இப்படி பல விடயங்கள் உள்ளுக்கால ரகசியமாக நடத்தப்படுகுது. 

அங்கு சேவையாற்றிய வைத்தியதுறை சார்ந்தோரின் கூற்றுப்படி மக்களை விட இராணுவத்தால் இந்த வைரஸ் அதிகம் சமூகத்தொற்றாகி வருவதாக தெரிவிக்கிறார்கள்.

அந்த வகையில் தான் வடக்குக் கிழக்கு பகுதிகளிலும் இராணுவத்தாலும்.. இராணுவம் முன்னெடுக்கும் கொவிட் தடுப்பு மையங்களாலும் தான் இந்த தொற்றே அதிகரித்தது.. என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்.மாவட்டத்தில் ஆங்காங்கே உருவாகியிருக்கும் கொரோனா கொத்தணிகளுக்கு யாழ்.மாவட்ட மக்களுடைய பொறுப்பற்ற செயலே காரணமாகும். என இராணுவ தளபதியும் தேசிய கொவிட்ட தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தலைவர் சொன்னா சரியாதானிருக்கும். இவரது பொறுப்பான செயலாற்த்தான் எம்மக்கள் வகை தொகையின்றி அழித்தொழிக்கப்பட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.